Thursday 3 November 2011

சுனாமிக்கு பலிய��ன ரமணியின் கேமரா

- 0 comments


கடந்த 22 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஆர்வி ரமணியின் என் கேமராவும் சுனாமியும் என்கிற ஆவணப்படம் பார்த்தேன். விசேஷமான கேமராவெல்லாம் ஏதுமில்லை. ஓரளவு வசதிபடைத்த எல்லோரிடமும் இருப்பதுமாதிரியான ஹேண்டி கேம்தான். படத்தில் இருக்கும் பலகாட்சிகள்கூட எல்லோர் வீட்டிலும் பொதுவாகப் பார்க்கக்கிடைக்கும் பையனின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள். அவன் வளர்வது. வெவ்வேறு தருணங்களில் அவனது பிரத்தியேக சுட்டித்தனங்கள். உறவினர்கள். அவர்களின் மழலைகள் அடிக்கும் லூட்டிகள். வெளிநாட்டுப் பயணங்களின்போது விமானத்திலிருந்து வெளியில் தெரியும் வான் காட்சிகள். வெளிநாட்டில் சந்திக்க நேரும் [...]

http://meena-tamilsexstory.blogspot.com



  • http://meena-tamilsexstory.blogspot.com

  • [Continue reading...]

    பா.ராகவனின் RSS – அ��்சத்துக்கும் ஆர���வத்துக்கும் இடையே (பகுதி 1)

    - 0 comments


    ”ஹிந்துக்களின் மிகப் பெரிய காவலன் என்று அவர்கள் சொல்வார்கள். இந்தியாவின் மிகப் பெரிய அபாயம் என்று இவர்கள் சொல்வார்கள். எது உண்மை? நடுநிலையுடன் ஆராய்கிறது இந்நூல்” என்று புத்தகத்தின் அட்டையிலேயே கொட்டை எழுத்தில் பிரகடனம் செய்துவிட்டுத்தான் நூல் துவங்குகிறது. அதாவது இந்தியாவின் மிக முக்கியமான சமூக இயக்கமான ஆர்.எஸ்.எஸ். குறித்து ஒருபக்கச் சார்பின்மையுடன் எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம் என்பது இது சொல்லவரும் கருத்து. ஆனால், நூலின் துவக்கத்திலேயே நூலாசிரியர் பா.ராகவனின் நடுநிலை தெரியத் துவங்கிவிடுகிறது. “ஆதியிலே அந்த [...]

    http://meena-tamilsexstory.blogspot.com



  • http://meena-tamilsexstory.blogspot.com

  • [Continue reading...]

    பா.ராகவனின் RSS – அ��்சத்துக்கும் ஆர���வத்துக்கும் இடையே (பகுதி 2)

    - 0 comments


    முதல் பகுதி பொதுவாக ஆர்.எஸ்.எஸ். குறித்து உருவாக்கப்பட்டுள்ள எதிரிடையான பிம்பத்துக்கும், அதன் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை நெருங்கும்போது ஏற்படும் அனுபவங்களுக்கும் பெருத்த வேறுபாடு காணப்படும். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ். அல்ல; அதன் எதிர்ப்பாளர்கள்தான். எந்த ஒரு பிரதிபலனும் பாராமல், தூஷிப்பவர்கள் பற்றிய கவலையின்றி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆற்றும் அரும்பணிகளால்தான் அதன் வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்.சின் நற்பணிகள் பலவற்றை மழுப்பலின்றி இந்நூலில் காட்டி இருக்கிறார் பா.ராகவன். அதற்கு ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். எனினும் இதிலுள்ள [...]

    http://meena-tamilsexstory.blogspot.com



  • http://meena-tamilsexstory.blogspot.com

  • [Continue reading...]

    அடிமை வெறியும், அபார கண்டு பிடிப்���ும் - உயிர்காத்த���ரை மறந்த ஊடகங்க��்

    - 0 comments


       ஐ பேட் , ஐ பாட் போன்றவற்றை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவை ஊடகங்கள் " கொண்டாடியதை " கவனித்து இருப்பீர்கள். ஆப்பிள் என்றால் முன்பெல்லாம் ஆதான் , ஏவாள் மற்றும் நியூட்டன் நினைவுக்கு வருவார்கள்.இனிமேல் இவர்தான் ஸ்டீவ் ஜாப்ஸ்தான் நினைவுக்கு வருவார் என உருகினார்கள் இவர்கள்..

    அவர் திறமைசாலி என்பதில் சந்தேகம் இல்லை.. ஆனால் இந்தியர்கள் என்ற முறையில் , தமிழன் என்ற முறையில் நம் வாழ்வை மேம்படுத்தும் கண்டுபிடிப்பு எதையும் அவர் நிகழ்த்தவில்லை.. ஒட்டு மொத்த மனித குலம் என்று பார்த்தாலும் , அவர் கண்டுபிடிப்பால் மனித வாழ்வுக்கு பெரிய மாற்றம் வந்து விடவில்லை..

    பெரிய அளவிலான வியாபாரத்துக்கு உதவி இருக்கிறார் என்பதே அவர் பிரத்தியேக பலம். இந்த அடிப்படையில் , அயல்னாட்டு மீடியா செய்யும் அலப்பறையை பின் பற்றி நம் மீடியாக்களும் அலப்பறை செய்தன.. அடிமை புத்தி என்பதை தாண்டி அடிமை வெறிதான் இதில் தெரிந்தது..

    அயல் நாட்டுக்காரர் செய்த நன்மைகளை பாராட்டக்கூடாது என்பதன்று நம் கருத்து. நன்மை செய்தால் மட்டுமே பாராட்ட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. ஆனால் நம் மீடியாக்கள் விளம்பர அடிப்படையில் ஒருவரை பாராட்டுகின்றவே அன்றி, அவர் செய்த நன்மைகள் அடிப்படையில் அல்ல.

     உண்மையிலேயே நல்லது செய்த ஒருவர் இதே கால கட்டத்தில் ( செப் 27ந்தேதி ) இறந்தார்..அவரை நம் மீடியாக்கள் கண்டு கொள்ளவில்லை.. மாற்று ஊடகமாக உருவெடுத்து வரும் பதிவுலகமாவது அவருக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த இடுகை.



    **************************************************
    Wilson Greatbatch
    லட்சக்கணக்கானோர் உயிரை காப்பாற்றிய ( இதய நோயாளிகளுக்கான )பேஸ்மேக்கர் கருவியை கண்டுபிடித்தவர்
    வில்சன் கிரேட்பாட்ச் - இதுதான் இந்த மாமனிதரின் பெயர்.இவர் வாழ்க்கை வ்ரலாற்றை கண்டிப்பாக படித்து பாருங்கள். மனத்துக்கு புத்துணர்ச்சி பிறக்கும்.
    இவரது பூர்வீகம் பிரிட்டன். பிறந்தது அமெரிக்காவில்.( செப் 6 , 1919 )  சிறு வயதில் வானொலித்துறையில் ஈடுபாடு காட்டினார். அதை ஒரு ஹாபியாக வைத்து இருந்தார் . அது பிற்காலத்தில் அவருக்கு உதவியது.
        இரண்டாம் உலகப்போர் நடந்த போது அமெரிக்க ராணுவத்தில் பணி புரிந்தார். விமானப்படையில் தலைமை வனொலி இயக்குனராக இருந்தார். மேலும் பல பணிகளை செய்தார். ராணுவத்தில் கிடைத்த அனுபவங்கள் அவரை ஆன்மீக ரீதியாக பக்குவப்படுத்தின. தோல்வியில் துவளாத இதயத்தை அவர் இங்குதான் பெற்றார்.

                நியூயார்க்கில், எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் படித்தார். அதே பல்கலைக்கழகத்தில் வானொலி சார்ந்த பணிகள் செய்து வருவாய் ஈட்டினார். பகுதி நேர பணியாற்றிய நிறுவனத்தில் , பேஸ் மேக்கர் கருவி பற்றிய யோசனையை முன் வைத்தார் .. அவர்கள் அதை ஏற்கவில்லை.

         1956ல்தான், இந்த கருவி அமைக்கப்பட முடியும் என்ற எண்ணம் அவருக்குள் உறுதிப்பட்டது.. அது தொடர்பாக ஆய்வுகள் நடத்தினார்.

         தன் மேல் இருந்த நம்பிக்கையால், தன் பணியை ராஜினாமா செய்து விட்டு, தன் சேமிப்பான 2000 டாலருடன் முழு மூச்சாக இதில் இறங்கினார். 1960ல் ஒரு 70 வயது நோயாளிக்கு இந்த கருவி பொருத்தப்பட்டது. மரணம் அடையும் நிலையில் இருந்த அந்த நோயாளி மேலும் சில மாதங்கள் வாழ்ந்து இந்த கருவியின் வெற்றிக்கு சாட்சியாக இருந்தார்.

       அதன் பின் பேட்டரிகளில் மாற்றங்கள் செய்து, பத்தாண்டுகள் உழைக்க கூடிய  பேஸ்மேக்கர்க்ள் உருவாக்கினார்.

    இதனால் லட்சக்கணக்கானோர் பலன் அடைந்தனர்.

    உலகின் சிறந்த பத்து கண்டு பிடிப்புகளில் ஒன்றாக இது மதிப்பிடப்படுகிறது.

    கடும் உழைப்பே வெற்றிக்கு வழி என்பார் இவர்.

    பத்து முயற்சிகள் செய்தால் ஒன்பது தோல்வி அடையும். ஒன்றுதான்ஜெயிக்கும்.. ஆனால் இந்த ஒன்றின் வெற்றி, மற்ற ஒன்பது தோல்விகளுக்கான இழப்பை ஈடு செய்து விடும் என்பார் இவர்.
        தன் வேலைகளில் கடவுளின் ஆசி இருப்பதாக நம்பினார். தோல்வி என்பது , எதிர்கால வெற்றிக்கு கடவுள் தரும் சிக்னல் என நினைத்தார்.

    330 காப்புரிமைகள் பெற்று இருந்தார். மனிதர்கள் மேல் பேரன்பு கொண்டு இருந்தார்.

    தன் 92 வயதில் , 27 செப்டம்பர் 2011 ல் உலகை விட்டு பிரிந்தார்.

    அவர் இறந்தாலும், அவரை  பல நல் இதயங்களால் மறக்க இயலாது.






    http://maangaai.blogspot.com



  • http://maangaai.blogspot.com

  • [Continue reading...]

    கண் கலங்க வைத்த மிஷ்கின்

    - 0 comments


    ஒரு புத்தகத்தை வாங்கி விட்லாம். ஆனால் அதை எப்போது படிக்க வேண்டும் என அந்த புத்தகம்தான் முடிவு செய்ய முடியும்.
    புத்தக கண்காட்சியில் கை நிறைய புத்தகங்கள் வாங்கி செல்பவர்கள் அதை பெரும்பாலும் படிப்பதில்லை. நேரமின்மை போன்ற பல காரணங்கள்.

    நான் ஆசைப்பட்டு வாங்கிய புத்தகங்களில் ஒன்று நத்தை போன் பாதையில் என்ற ஹைக்கூ புத்தகம்.

    ஆனால் அதை படிக்காமல் குப்பையில் தூக்கி போட்டு இருந்தேன்..

    ஏனென்றால் அதை எழுதியவர் மிஷ்கின்.

    அவர் மேல் ஏன் இந்த வெறுப்பு  என்பதையெல்லாம் விளக்கி மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க விரும்பவில்லை.

    இப்போது பிரச்சினை முடிந்து விட்ட நிலையில், அந்த புத்தகத்தை எடுத்தேன்.

    மிக சிறிய புத்தகம். ஐந்து நிமிடத்தில் படித்து விடலாம் என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பித்த நான் திகைத்து போனேன். ஒவ்வொரு பக்கமும் மனதை ஸ்தம்பிக்க வைத்தது.  வேகமாக செல்ல முடியவில்லை. அதன் சாரத்தை உள்வாங்குவது ஒரு தியானம் போல இருந்தது. அதற்கு நேரம் தேவைப்பட்டது.

     இலக்கியத்தை மொழி பெயர்ப்பது சிரமம். அதுவும் கவிதையை மொழி பெயர்ப்பது இயலாத ஒன்று.. ஆனால் இதில் மிக சிறப்பாக மொழி ஆக்கம் செய்து இருக்கிறார் மிஷ்கின்.

    சில கவிதைகள் கண்களை நனைய வைத்தன.

    களவாடிய வீட்டில் திருடன்
    விட்டு சென்றது
    ஒரு ஜன்னல் நிலா

    தும்பியின்
    கண்களில் தெரியும்
    தூரத்து மலைகள்

    மலர்களே அந்த
    தோட்டக்காரனுக்கு கொஞ்சம்
    சுதந்திரம் கொடுங்கள்


    என்று ஒவ்வொரு கவிதையும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது..

    இந்த ஹைக்கூ நூல் எழுதப்பட்ட பின்னணியை பிரபஞ்சன் வெகு அழகாக முன்னுரையில் சொல்லி இருக்கிறார்..

    நிலவை தோழமை ஆக்குவதை காட்டிலும், ஒரு புத்தகம் வேறு என்ன செய்ய வேண்டும் மனிதர்களுக்கு என அவர் சொல்லி இருப்பது 100% உண்மை

    படிக்க வேண்டிய புத்தகம்..

    நத்தை போன பாதையில் - ஹைக்கூ கவிதைகள்
    தமிழில்  , மிஷ்கின்
    வம்சி புக்ஸ் வெளியீடு
    விலை - ரூ 100 




    http://maangaai.blogspot.com



  • http://maangaai.blogspot.com

  • [Continue reading...]

    எழுத்தாளர் சுஜா��ா குறித்து போராளி முத்துக்குமரன�� நச் கவிதை

    - 0 comments



    எது நல்ல கவிதை என்பதை யாரும் வரையறுக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவிதை பிடிக்கும். என்னைப் பொறுத்த ஒரு கவிஞர் தன் உணர்ச்சிகளை தன் உணர்வுகளைத் துல்லியமாக வாசகனுக்கு கடத்தி விட்டார் என்றால் அது நல்ல கவிதை.

    போராளி முத்துக்குமரன் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர்தம் மரண சாசனத்தில் ஒவ்வொரு வரியையையும் செதுக்கி இருப்பார். ஞானிகள்தாம் தம் மரணத்தை திட்டமிட்டு வரவழைக்க முடியும் என்பார்கள். உணர்ச்சி வசப்படாமல் ஒரு முடிவு எடுத்து , இப்படி ஒரு தியாகத்தை இந்த முறையில் செய்தவர்கள் வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை.

    இவர்தம் கவிதை நூலை படிக்க ஒரு வித தயக்கம் இருந்தது. மாமனிதர் என்பது வேறு. ஆனால் கவிதை என்பது வேறு துறை. ஒரு கவிஞராக எப்படி இருப்பார் என்பது தெரியாததால் படிப்பதை ஒத்தி போட்டுக்கொண்டே இருந்தேன்.

    ஒரு நாள் என் தோழி ஒருவரைப்பார்த்து பேசி கொண்டிருந்த போது தற்செயலாக என் பையில் நெஞ்சத்து நெருப்புத் துணுக்கு என்ற புதியவன் கு. முத்துக்குமரனின் ( இந்த பெயரில்தான் அவர் ஒரு கவிஞராக அடையாளப்பட விரும்பினார் ) கவிதை புத்தகத்தை பார்த்தார்.
    அந்த தோழிக்கு கவிதை, அரசியல் என எதிலும் ஆர்வம் இல்லை. அட்டைப்படத்தை பார்த்து விட்டு, இதில் முத்துக்குமார் யார் என கேட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

    புத்தகத்தை கேஷுவலாக புரட்டியவர் ஆங்காங்கு நிறுத்தி படிக்க ஆரம்பித்தார்.

    அதன் பின் , " படித்து விட்டு நாளை தரட்டுமா " என்றார்.

    ஆச்சர்யமாக இருந்தது. முதல் முறையாக கவிதை படிக்கிறார் . நல்லது என இரவல் கொடுத்தேன்.

    மறு நாள் புத்தகம் கொடுத்து விட்டு, பாராட்டி பேசினார். அப்போதுதான் எனக்கும் படிக்கும் ஆவல் ஏற்பட்டது ( இதில் இணைக்கப்பட்டுள்ள கடைசி அறிக்கையை இப்போதுதான் முழுமையாக் படிக்கிறார் . கலங்கி விட்டார் )


    அதன் பின் நான் படிக்க ஆரம்பித்தேன்.

    படித்த பின்பு , முத்துக்குமாரைப்பற்றி புதிய பார்வை கிடைத்தது. அவருக்குள் லட்சிய நெருப்பு எப்போதுமே இருந்து வந்து இருக்கிறது. அதே சமயம் நுண்ணிய ரசனைகள், நகைச்சுவை உணர்வு, காதல் என எல்லாமும் இருந்து இருக்கிறது. முழுக்க முழுக்க சீரியசான, பிரச்சார பாணியில் கவிதை நூல் இருக்கும் என நினைத்த எனக்கு இது ஒரு சர்ப்ரைஸ்

    தாய் மடி என்ற கவிதை

    செருப்பை உதறி விட்டு நடக்கிறேன்
    இது என் தாய் மண்ணல்ல
    தாய் மடி

    இவை வெறும் சொற்கள் அல்ல. அவரது நம்பிக்கை. உணர்வு.

    இதை முன்னுரையில் அழகாக விளக்குகிறார் கவிதாசரண்.

    இப்படி தீவிரமான உணர்வுடன் கவிதை எழுதிய அவரே , மிக லைட்டான கவிதைகளும் படைத்து இருக்கிறார்.

    உருவம் காட்டி

    சகியே
    இமைகளை
    சிமிட்டாதே
    நான் என்
    முகம் பார்க்க
    வேண்டும் உன் கண்ணில்

    வாங்க, ஆவியைப் பற்றி பேசலாம் என்ற தலைப்பில் நகைச்சுவை கவிதை ஒன்று, ரஜினியை வம்புக்கிழுக்கும் கவிதை, இலங்கை பிரச்சினை, தீக்குளிப்பு, செய்தி விம்ர்சன கவிதை, காற்றையும் காதலியையும் ஒப்பிடும் கவிதை என எல்லாமே ரசிக்க வைக்கின்றன.

    நான் மிகவும் ரசித்தது இந்த கவிதை

    உன் வீட்டு 
    குப்பை தொட்டியை
    பற்றி சொல் - நான்
    உண்மையில் சொல்வேன்
    உன்னைப்பற்றி

    ஞெகிழி
    குப்பையா? - நீ
    மத்திய வர்க்க
    சுகவாசி

    காகித
    வெங்காய 
    குப்பையா? - நீ
    அன்றாடங் காய்ச்சி

    புதிய 
    கவிஞர்களின்
    முறிந்த சிறகுகள் குப்பையாகவா?

    மன்னிக்கவும்
    நீங்கள்தான்
    " மாண்புமிகு எழுத்தாள்ர்"
    சுஜாதா

    இதில் இவரது இறுதி அறிக்கையை இணைத்து இருப்பது சிறப்பு. முன்னுரையும் அருமை

    கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். கவிதைகள் பிடிக்காது என்பவர்கள்கூட முத்துக்குமரனை அறிந்து கொள்ள இதை படிப்பது அவசியம்

    வெளியீடு : கவிதாசரண் பதிப்பகம்
    விலை    : ரூ 50 







    http://maangaai.blogspot.com



  • http://maangaai.blogspot.com

  • [Continue reading...]

    புத்தர் சிரிக்க��றார் ( சவால் சிறு���தை 2011 )

    - 0 comments




    பூட்டை உடைத்து உள்ளே சென்ற அவர்களை , போட்டோவில் இருந்த  புத்தர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்இறைந்து கிடந்த புத்தகங்கள்பீர் பாட்டில்கழுவப்படாத பாத்திரங்கள் ,  , ம்யூசிக் சிஸ்டம் என ஒரு பேச்சுலர் ரூமுக்கு உரிய அம்சங்களுடன் அந்த அறை இருந்த்து.

                " சார்.. எங்களை ஏன் அவசரமா வர சொன்னீங்கஇந்த அறையில என்ன செய்ய போறோம் ? " இளைஞன் ஒருவன் கேட்டான்.

     சாகுல் ஹமீது அவனை கனிவாக பார்த்தார். " என்ன விஷ்யம்னு தெரியாம , உடனே கிளம்பி வந்தியேஅந்த நம்பிக்கையை நான் பெரிய கவுரமா நினைக்கிறேன்இங்கே வந்து இருக்குற மத்தவங்களுக்கு என்ன விஷ்யம்னு ஓரளவு சொல்லிட்டேன் . உனக்கு மட்டும்தான் இன்னும் சொல்லல.. தம்பி ரவி..என்ன விஷ்யம்னு இவனுக்கு கொஞ்சம் சொல்லு "


     இருக்கையில் அமர்ந்தார் சாகுல்.

    ரவி பேச ஆரம்பித்தான்.

      " இந்த அறையில் வசித்து வந்தவன் விஷ்ணுமர்ம்மான முறையில்  மருத்துவ மனைல இறந்துட்டான்ஏனோ தெரியலஇவன் மரணத்தை  ரகசியமா வச்சு இருப்பதில் அரசு இயந்திரம் தீவிரமா இருக்குமுன்னாள் காவல் துறை அதிகாரி என்ற முறையில் சாகுல் சாருக்கு இது தெரிஞ்சு போச்சுஅவனோட அதிகார பூர்வ இல்லம் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்குஇது அவன் தனிப்ப்பட்ட நண்பர்கள்இலக்கிய சந்திப்புக்கு  பயன்படுத்திய அறைஇது வேற யாருக்கும் இது வரை தெரியாதுஇதை சோதனையிட்டா ஏதேனும் விஷ்யம் கிடைக்குமா அப்படீனு பார்க்கத்தான்நம்மை மாதிரி சில நம்பிக்கையான இளைஞர்களுடன் சாகுல் சார் இங்கே வந்து இருக்கார் "

    சாகுல் ஆமோதிப்புடன் தலை அசைத்தார்.

    "  நான் நேத்தே இங்கு வந்து பார்த்துட்டேன்என் ஒருவனால இங்கே இருக்கும் எல்லா பேப்பர்களையும் படிக்க முடியலஅதனாலதான் உங்களை கூப்பிட்டேன்அவன் தன் தகவல் தொடர்புகள் எல்லாத்தையும் பிரிண்ட் எடுத்து வச்சு இருக்கான்,. தனக்கு வந்த கடிதங்கள் மட்டும் இல்லாமல் , தான் அனுப்பிய கடிதங்களையும் பிரிண்ட் எடுத்து வைத்து இருக்கிறான். போன் உரையாடலை ரிக்கார்ட் செஞ்சு வச்சு இருக்கான்.. இதை வச்சு உண்மை அறிவது நம் நோக்கம் ஓகே?"

     " ஓக்கே சார்டீவியை கொஞ்சம் ஆன் பண்ணுங்ப்பா . அதையும் ஒரு பார்வை பார்த்துக்கலாம்நான் புத்தக செக்ஷன் பார்க்குறேன் . ஆளுக்கு ஒண்ணு எடுத்துக்கோங்கப்பா"

    இங்கே ரெண்டு துண்டு சீட்டு கிடக்கு.. என்ன அர்த்தம்னு தெரியலஒரு போன் வேற இருக்கு "
    எதையும் அலட்சியப்படுத்தக்கூடாதுஅது யார் போனுனு தெரியலஇன்னொரு போன் இங்கே கிடக்குகொஞ்சம் இரு .. இந்த போன் நம்பர் என்ன்னு , இந்த போனில் இருந்து என் போனுக்கு கால் செஞ்சு கண்டு பிடிக்க்றேன். "

    கண்டு பிடிச்சுட்டேன்சரிநான் சொல்ற நம்பருக்கு அதில் இருந்து கால் பண்ணு. வடகரை குமார் காலிங்னு வருதுவிஷ்ணுவோட நண்பன் போல.. சரிநான் கால் பண்றேன்என்ன டிஸ்ப்ளே ஆகுதுனு பாரு"




    விஷ்ணு இன்ஃபார்மர் காலிங்னு வருது. "
    ஹேய்.. இன்ஃபார்மர்னா போலீஸ் இன்ஃபார்மர் இல்லை… அவன் நட்த்திய சிற்றிதழ்தான் இன்ஃபார்மர்இதோ என்னிடம் அதன் தொகுப்பு இருக்கு . படிக்றேன் பாருங்க"
    தொலைக்காட்சியில் பாராளுமன்ற விவாதம் ஓடிக் கொண்டிருக்க , இவர்கள் எல்லாவற்றையும் படிக்க ஆரம்பித்தார்கள்


    ******************************************************************

    ன்பார்ந்த வாசகர்களேஇல்ல , நண்பர்களேவேண்டாம்சகோதர்களே.. இல்ல இல்லநண்பர்களேயே இருக்கட்டும்.
    இன்ஃபார்மர் இதழின் முதல் பிரதி உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டு இருக்கிறதுஇதை நல்ல நாள் பார்த்துதான் துவக்கி இருக்கிறேன்ஆம்இந்த நாளில்தான் இந்திய திரு நாட்டின் முதல் அணுகுண்டு சோதனை நிகழ்த்தி ,  நம் திறனை உலகுக்கு காட்டினோம்என்னை வழி நட்த்தும் புத்தரின் பெயர் இதில் பயன்படுத்தப்பட்ட்து எனக்கு கூடுதல் மகிழ்ச்சிபுத்தர் சிரிக்கிறார் என்பதே இதில் பயன்படுத்தப்பட்ட ரகசிய வார்த்தை
    நம் இதழில் ஆக்க பூர்வமான தகவல்கள் மட்டுமே இடம் பெறும்படித்து விட்டு கருத்து சொல்லுங்கள்.


    ******************************************************************
    அன்புள்ள அம்மா,
    நான் இங்கு செட்டில் ஆகி விட்டேன்என் டி டி துறையில் வேலை கிடைத்துள்ளதுஓய்வு நேரத்தில் சிற்றிதழும் நட்த்தி வருகிறேன்.
    ***********************************************************
    அன்புள்ள விஷ்ணு,
    ரொம்ப சந்தோஷம்டா.  உன் அப்பா அந்த காலத்துலயே என்னென்னவோ எழுதுவார்அதே ரத்தம்தானே நீநீயும் எழுவதில் ஆச்சர்யம் இல்லைநல்லா இருப்பாஎன்னவோ என் டீ டினு சொன்னியே.. என்ன அதுசாப்பாட்டுக்கு என்ன செய்ற?
    ***************************************************************
    அன்புள்ள அம்மா,
    என் டீ டினாதொழிற்சாலைகளில் ஒரு பொருளின் தரத்தை சோதிக்கும் ஒரு முறைவெண்டைக்காய் வாங்குனா , அதை கிள்ளி பார்த்து வாங்குறோம்இதனால வெண்டைக்காய் சேதம் ஆய்டும்தேங்காய் வாங்குனா தட்டிப்பார்த்து வாங்குவோம்இதில் தேங்காய் சேதம் ஆகாதுஇப்படி ஒரு பொருளை சேதப்படுத்தாமல் சோதிக்கும் ஒரு முறைதான் நான் டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங் , என் டி டி.
    ************

    விஷ்ணுவின் டைரி குறிப்பு
    லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்பதில் எனக்கு நம்பிக்கை இருந்ததில்லைஆனால் நேற்று நடந்த ஒரு கருத்தரங்கில் சந்த்தித்த பெண் என்னை என்னவோ செய்து விட்டாள்அவளிடம் சென்று ஹாய் சொன்னேன்ஆனால் அவள் பிசியாக இருந்தாள் . பேச இயலவில்லைகையில் இருந்த இன்ஃபார்மர் இதழ்களை கொடுத்து விட்டு வந்த்தேன்
    ************************************************

    தோழர் விஷ்ணு அவர்களுக்கு,
    என்னை உங்களுக்கு நினைவு இருக்கும் என நினைக்கிறேன்கருத்தரங்கு ஒன்றில் நாம் சந்த்தித்தோம்ஆனால் பேச நேரமில்லைநீங்கள் எனக்களித்த இன்ஃபார்மர் இதழ்களை படித்தேன்உங்கள் எழுத்தில் உங்கள் நல்லெண்ணம் தெரிகிறதுஆனால் அணு சக்தி குறித்து உங்கள் புரிதலில் சில தவறுகள் இருக்கின்றன.


    தோழமையுடன் , தமிழ் ராணி
    ********************************************************************




    அன்புடன்தமிழ்ராணி
    அன்புள்ள ராணி,
    உங்கள் கருத்துகளுக்கு நன்றி. நிறைய படித்து வருகிறேன். புரிந்து கொள்ள முயல்கிறேன்
    *******************************
    தோழர் விஷ்ணு,
    சிலவற்றை படித்து தெரிந்து கொள்ள முடியாது. அனுபவித்தில்தான் தெரிந்து கொள்ள முடியும். இன்றிலிருந்து சில  நாட்களுக்கு நம்மை சுற்றி நிகழும் சராசரி விஷ்யங்களை மட்டும்  கவனியுங்கள். அதை மட்டுமே இன்ஃபார்மர் இதழில் பிரசுரியுங்கள் நம்மை பற்றிய ஒரு புரிதலை அது அளிக்கும். அணு சக்தியை நம்மால் கையாள முடியுமா என்பதற்கும் அது விடையளிக்கும்- உங்களுக்கும், உங்கள் வாசகர்களுக்கும்.
    -       த ரா
    ******************************************************************

    படித்த்தில் பிடித்த்து..
    ஒரு பிரபல பதிவரின் சமீபத்திய இடுகை உங்கள் பார்வைக்கு.

    ஒரு நாள் அவசரமாக வண்டலூர்  செல்ல வேண்டி இருந்த்து. திருனீர்மலை அருகேயிருந்து கிளம்ப வேண்டிய நிலை. பல்லாவரம் வழியாக சென்றால் நேரமாகும்.. எனவே பைபாஸ் பாலத்தில் ஏறி செல்ல நினைத்தேன். அந்த பாலத்தில் ஏற , ஓர் இட்த்தை உடைத்து விட்டு இருந்தார்கள். அதன் வழியாக ஏறினேன். ஏறிய பின் , நான் வலது புறமாக செல்ல வேண்டும்.  நான் ஏறிய இட்த்தில் இருந்து வலது புறம் செல்ல முடியாது. இட்து புறம் இரண்டு கிலோ மீட்டர் சென்று , யூ டர்ன் எடுத்தால்தான் , வலது புறம் செல்ல முடியும்.  நான் எப்போதுமே அவசரக்காரன். நேரத்தை வீணாக்க மாட்டேன். எனவே ஒன் வேயாக இருந்தாலும் பரவாயில்லை என முடிவெடுத்து, ஏறிய இட்த்தில் இருந்தே வலது புறம் வண்டியை பறக்க விட்டேன். எதிர் திசையில் வந்த சிலர் என்னை முறைத்தவாறு சென்றனர். ஒரு மிடில் கிளாஸ்  பைக் ஆசாமி ஒரு கணம் என்னை எதிர்பார்க்காமல் திணறி விட்டார். என்னவோ திட்டினார். நானும் பதிலுக்கு திட்டினேன். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் , சாலையின் எதிர்பக்கம் செல்ல , வழி இருப்பது எனக்கு தெரியும். அங்கு சென்று சரியான திசையை அடைவது என் திட்டம்.
    அந்த இட்த்தில் கட் செய்கிறேன், டீக்கடையில் இருந்த ஒரு டிராபிக் போலீஸ் என்னை பாய்ந்து வந்து நிறுத்தினார். நோ எண்ட்ய்ரியில் ஏன் வந்தாய்? டாக்குமெண்ட் எடு , லைசன்ஸ் எடு என மிரட்டினான்.ங்கொய்யால, எனக்கு என்ன நோ எண்ட்ரியில் வர வேண்டும் என வேண்டுதலா? அவசர வேலை என சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்கவில்லை. நான் முன் கோபக்காரன்.ஆனாலும் அவசரமாக போக வேண்டி இருந்த்தால், மேலும் சண்டையை வளர்க்காமல் , நூறு ரூபாயை விட்டெறிந்து விட்டு கிளம்பினேன். ஒரு நூறு ரூபாய்க்காக இப்படி அலையும் காவலர்களை நினைத்தால் வேதனையாக இருந்த்து. இதற்காகவே அவன் டீக்கடையில் காத்து இருப்பானாம். தயவு செய்து அந்த சாலையில் செல்லும்போது , எச்சரிக்கையாக இருங்கள். ஒன் வேயில் செல்ல நேர்ந்தால், அந்த டீக்கடை அருகே கட் செய்யாதீர்கள். அதற்கு முன்பாகவே , ஓர் இட்த்தில் சாலையை பிரிக்கும் தடுப்பை உடைத்து இருப்பார்கள். அதில் ரோட்டை கிராஸ் செய்யுங்கள். முடியாத பட்சத்தில், சாலையின் கடைசி வரை சென்று , இறுதியில் கிராஸ் செய்யுங்கள்.

    தமிழ் நாட்டின் பெரும்பாலான  நெடுஞ்சாலை விபத்துகளுக்கு காரணம் , பொறுப்பற்ற முறையில், ஆங்காங்கு நிறுத்தி வைக்கபடும் வாகனங்கள்தான் – ஆய்வு கட்டுரை



    செல்போன் பேசியபடி தொடர் வண்டியை இயக்கி, விபத்துக்கு காரணமான ஓட்டுனர் கைது- செய்தி
    ***********************************************************************************
    ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பேர் போன ஜப்பானிலேயே அணு உலை விபத்து நடந்தால், பொறுப்பின்மையை வீர செயலாக கருதும் இந்தியாவில் அணு உலைகள் கதி என்ன ? -  மக்கள் அச்சம்




    ***********************************************************
    மற்றவர்களை குறை சொல்கிறீர்களே. தமிழ் உணர்வு மிக்கவராக காட்டி கொள்ளும் நீங்கள் உங்கள் இதழுக்கு இன்ஃபார்மர் என ஆங்கிலத்தில் எந்த *** ருக்கு பெயர் வைத்தீர்கள் – பிரபல பதிவர் வாசகர் கடிதம்
    *********************************************
    அன்புள்ள ராணிக்கு,
    கடந்த சில வாரங்கள் என்னை முழுதும் மாற்றி விட்டன. அதை எல்லாம் பேச நேரமில்லை. விரைந்து செயல்பட்டு கூட்ங்குளம் திட்ட்த்தை நிறுத்தியாக வேண்டும்.  நான் உட்பட அனைத்து தமிழர்களும் , இந்தியர்களும்  ஒரு குழந்தையை போல நல்லவர்களாகவும், முதிர்ச்சி இன்றியும் இருக்கிறோம். அணு தொழில் நுட்பம் எல்லாம் இருக்கட்டும். சாலையில் செல்வது, போன் பேசுவது போன்ற அடிப்படை விஷயங்கள் கூட நமக்கு தெரியவில்லை . பொறுப்பற்ற மக்கள்,கையாலாகாத நிர்வாகம் .  இங்கு அணு உலை திட்டம் என்பது , குழந்தை கையில் துப்பாக்கி கொடுப்பது போன்றது. இன்றைய முட்டாள் தலைமுறையின்  தவறுகள் வரக்கூடிய புத்திசாலித்தலைமுறையை அழித்து விடக்கூடாது. 


    வழக்கமான போராட்டம் வேலைக்கு ஆகாது. அணு உலைக்கு பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் நம் அரசு இயந்திரம் இல்லை என உணர்த்தும் பொருட்டு ஒரு திட்டம் தயாரித்து இருக்கிறோம்.
    நண்பர்கள் சிலர் உதவியுடன் சூட்கேஸ் அணு குண்டு தயாரித்து , அனைவர் கண்களிலும் மண்ணை தூவி விட்டு, பாராளுமன்ற கூட்ட்த்தொடர் நடக்கும் போது , ஒரு பத்திரிக்கையாளராக உள்ளே எடுத்து சென்று , திடீரென எடுத்து காட்டுவோம். லஞ்சம் கொடுத்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலையில், யார் வேண்டுமானாலும் , அணு உலைக்கு ஆபத்து விளைவித்து தமிழ் நாட்டை அழிக்க முடியும் என்ற செய்தி அப்போதுதான் அவர்கள் மனதில் பதியும்.இதற்கு போலீஸ் அதிகாரி எஸ் பி கோகுல் உதவ இருக்கிறார்.
    *******************************************************************
    தோழர் விஷ்ணு,
     நான் ராணியின் சகோதரன். உங்கள் முயற்சிகளை ராணி மூலம் அறிந்தேன். ஆனால், சூட்கேஸ் அணுகுண்டை காட்டுவதுடன் நிற்க போவதில்லை. அதை வெடிக்க செய்யவும் போகிறேன் என எஸ் பி கோகுல் சொல்வதாக நெருங்கிய வட்டாரங்கள் மூலம் கேள்வி பட்டேன். அதற்கான குறியீட்டையும் கொடுத்து இருக்கிறீர்களாமே. இதனால் நமக்கு கெட்ட பெயர்தான் மிஞ்சும்.
    *******************************************************
    Sir,
    எஸ் பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்து இருக்கிறேன். கவலை வேண்டாம் . 
    *******************************************************
     


    கோகுல் பாஸ்வேர்ட் கேட்டதை  மறுக்க முடியவில்லை. கொடுக்கவும் விரும்பவில்லை எனவே தவ்றான குறியீட்டை கொடுத்து அவரை சமாதானம் செய்ய முடிவெடுத்தேன். S W H2 SF இது அவருக்கு நான் கொடுக்க போவது. ஆனால் S W H2 SP என்பதே சரியானது.


    ********************************************************************88

    அன்புள்ள ராணி,
    இது நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்க கூடும். கதிர் வீச்சை பயன்படுத்தி , சோதனை செய்யும் ரேடியோகிராபி டெஸ்டிங்கில் நான் வேலை செய்வது உனக்கு தெரியும். சரியான பாதுகாப்பு இல்லாமல் இதில் ஈடுபட்டு, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு விட்டேன். நான் இறப்பது உறுதி. சாவதற்கு கவலைப்படவில்லை. என் உடலை சரியான முறையில் பிரேத பரிசோதனை செய்து, அணு சக்தி எப்போதுமே அழிவு சக்திதான் என தமிழ் நாட்டுக்கு எடுத்து சொல்.


    **************************************************
    " ஹலோ, வடகரை கோபால் ? "
    " ஆமாண்டா விஷ்ணு. உன் ரூம்லதான் இருக்கேன் . சீக்கிரம் வா "
    " நான் வர லேட் ஆகும்டா. ஹாஸ்பிடல் போறேன். என் மேஜை டிராயர்ல , ஒரு கவர் இருக்கும். அதை எஸ் பி கோகுல் சாரிடம் சேர்க்கணும் "
    " டேய் . இதில் ரெண்டு கவர் இருக்கு ..எந்த கவர் ? "
    "  சிவப்பு கலர் கவர்.. ஊதா மையில் முக்வரி எழுதி இருக்கும். அதைத்தான் கொடுக்கணும். ஊதா கலர் கவர்ல, சிவப்பு மைல அட்ரஸ் எழுதுன கவர் அங்கேயே இருக்கட்டும்.  கொடுக்க வேண்டியது சிவப்பு கவர், சிவப்பு மை- சாரி- ஊதா அட்ரஸ். ஊதா கவர், சிவப்பு மை அட்ரஸ் அங்கேயே இருக்கட்டும் "


    ************************************************************************
    சாகுல் பெருமூச்சு விட்டார்.

    " அதாவது கதிர் வீச்சால பாதிக்கப்பட்டு, விஷ்ணு இறந்துட்டான், இந்த நேரத்துல இது வெளியானா பிரச்சினைனு எல்லோரும் மறைக்கிறாங்க. தமிழ் ராணி என்ன செய்றாங்கணு தெரியல. சரி, டீவிய கவனியுங்க. பிரதமர் பேச்சு முடிய போகுது. சூட்கேஸ் அணுகுண்டை  நம் ஆட்கள் காட்டபோறாங்க.. "

    " சார்..இங்கே பாருங்க. " திகிலுடன் அலறினான் ரவி.
    அனைவர் பார்வையும் அவன் மேல் பதிந்த்து.

    " சார்.  நம் வசம் இருக்கும் சீட்டில் S W H2 SF அப்படீனு இருக்கு. அதாவது தவறான சீட்டு இங்கேயே இருக்கு. சரியான குறியீடு கோகுலிடம் போய்டுச்சு. சிவப்பு கலர் கவர்.. ஊதா மையை கொடுப்பதற்கு பதில், பதட்ட்த்தில் ஊதா கவர், சிவப்பு மையை அந்த குமார் கொடுத்துட்டான். "
    சாகுல் அதிர்ந்தார்.
    " இன்னும் சில நொடிகளில் கோகுல் அதை வெடிக்க செய்வார். இதை தடுப்பது நம் கடமை.. நான் நாட்டுப்பற்று மிக்க , அரசு அதிகாரியாக இருந்தவன். ஆனால் இதை எல்லாம் பார்த்த பிறகு, தடுக்க விரும்பல. ஆனால் நீங்க யாராவது ஒருத்தர் இதை தடுக்க சொன்னால், உடனே ஆக்‌ஷன் எடுப்பேன்.. தடுக்க நினைப்பவர்கள் கை தூக்குங்க"

    ஒரு கை கூட உயரவில்லை.அடுத்து நடப்பதை பார்க்க விரும்பாமல் டிவியை அணைத்தார்கள் 

    போட்டோவில் புத்தர்  சிரித்து கொண்டு இருந்தார்



    http://maangaai.blogspot.com



  • http://maangaai.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger