Tuesday 13 August 2013

அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் Parades mark Indian Independence Day in America

- 0 comments

Parades mark
Indian Independence Day in America

அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள்
இந்திய சுதந்திரதின
விழா கொண்டாட்டத்தை வார விடுமுறையில்
சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
அணி வகுப்பு ஊர்வலங்களும், வண்ணமயமான
மிதவை வண்டிகளும், இந்திய
உணவு வகைகளுடன் கூடிய விருந்தும்
இந்திய நாட்டின் பாரம்பரியத்தையும்,
கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம்
கொண்டாடப்படுகின்றது.
நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில்
கடந்த 32 வருடங்களாக நடைபெறும்
சுதந்திரதின அணிவகுப்பு இந்த வருடமும்
வரும் ஞாயிறன்று நடைபெற உள்ளது.
இது அங்கு நடைபெறும் நீண்ட அணிவகுப்பாக
அமையும். இதுதவிர, நியுயார்க்கின் புறநகர்ப்
பகுதியான லாங் ஐலண்டில்
ஒரு அணிவகுப்பும், நியுஜெர்சியில்
ஒரு ஊர்வலமும் நடத்தப்படும்.
ஹிக்ச்விலே நாஸு கவுண்டியில் உள்ள
லிட்டில் இந்தியா எனப்படும் புதிய
குடியிருப்பில் சென்ற ஞாயிறன்று இந்தக்
கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ஏர்
இந்தியா உட்பட வண்ணமயமான அலங்கார
வண்டிகள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றன.
இதில் அந்தப் பகுதியின்
நிர்வாகி எட்மாங்கனோ, ஹிந்தி திரைப்பட
நட்சத்திரம் ஆர்த்தி சப்ரியா, 2005 ஆம்
ஆண்டின் யுஎஸ்ஏ அழகியான
செல்சியா கூலி போன்றோர்
கலந்து கொண்டனர். தேசபக்தி கொண்ட
இந்திய நாட்டவராக இதில் கலந்துகொள்வதில்
பெருமை அடைவதாக சப்ரியா தெரிவித்தார்.

[Continue reading...]

பாகிஸ்தானுடன் நட்பையும் கூட்டுறவையும் உறுதிபடுத்த இந்தியா விரும்புகிறது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி Pranab Mukerjee wishes friendly ties with Pakistan

- 0 comments

பாகிஸ்தானுடன் நட்பையும் கூட்டுறவையும்
உறுதிபடுத்த இந்தியா விரும்புகிறது:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி Pranab Mukerjee
wishes friendly ties with Pakistan

பாகிஸ்தானின் 67வது சுதந்திர தினம்
நாளை (14ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது.
இதனையொட்டி இந்திய ஜனாதிபதி பிரணாப்
முகர்ஜி, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப்
அலி சர்தாரிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த செய்தியில் அவர் கூறியுள்ளதாவது:-
பாகிஸ்தானின் சுதந்திர தின
விழாவையொட்டி பாகிஸ்தான் அரசுக்கும்,
மக்களுக்கும் எங்களின்
நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில்
மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த இனிய தருணத்தில் பாகிஸ்தான் மூலம்
நட்புறவையும் கூட்டுறவையும்
பலப்படுத்தி நமது பிராந்தியத்தில்
அமைதியையும், நமது மக்களின் வாழ்வில்
முன்னேற்றத்தையும் வளத்தையும் ஏற்படுத்த
விரும்பும் இந்தியாவின்
அர்ப்பணிப்பை மீண்டும் தெளிவுபடுத்த
விரும்புகிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

[Continue reading...]

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற நரேந்திர மோடிக்கு அழைப்பு Narendra Modi gets invite to visit Britain

- 0 comments

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற
நரேந்திர மோடிக்கு அழைப்பு Narendra Modi
gets invite to visit Britain

பா.ஜனதா கட்சியின் தேர்தல்
பிரச்சாரக்குழு தலைவரும் குஜராத்
முதல்வருமான நரேந்திர மோடி,
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்ற
அழைக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து எதிர்க்கட்சியின் இந்திய
தொழிலாளர் நண்பர்கள் குழு தலைவர்
பேரி கார்டினர் எம்.பி. கடந்த வாரம் ஒரு கடிதம்
அனுப்பியிருந்தார். அதில், நவீன இந்தியாவின்
எதிர்காலம் என்ற தலைப்பில்
பாராளுமன்றத்தில் உரையாற்ற
வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.
இதேபோல் கன்சர்வேட்டிவ் கட்சியின் இந்திய
நண்பர்கள் குழு தலைவர் சைலேஷ்
வாரா எம்.பி.யும் தனியாக ஒரு கடிதம்
அனுப்பியுள்ளார்.
2002-ல் நடந்த குஜராத்
கலவரங்களுக்கு பிறகு அமெரிக்காவைப்
போன்று இங்கிலாந்து அரசும்
மோடியை புறக்கணித்து வந்த நிலையில்,
இப்போது இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள்
ஒன்றுபட்டு மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger