Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Thursday, 25 July 2013

கம்ப்யூட்டர் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி காணும்

- 0 comments
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 121.10 லட்சமாக அதிகரிக்கும். இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 8சதவீதம் அதிகம் என, தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு (எம்.ஏ.ஐ.டி.,) தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டர்சந்தையில், "டேப்லெட்' வகை கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சி சிறப்பான அளவில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இவ்வகை கம்ப்யூட்டர் விற்பனை, 424சதவீதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில், 113.10 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டு விற்பனையுடன் (108.20 லட்சம்) ஒப்பிடுகையில், 5சதவீதம் அதிகமாகும்.

சென்ற நிதியாண்டில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் விற்பனை, 1சதவீதம் வளர்ச்சி கண்டு, 67.69 லட்சமாக உயர்ந்துள் ளது. இதன் மூலம் கிடைத்த வருவாய் 13,468 கோடி ரூபாயாக இருந்தது. இவை, இதற்கு முந்தைய நிதியாண்டில், முறையே, 67.12 லட்சம் மற்றும் 13,527 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன.
மேலும், நோட்புக் கம்ப்யூட்டர் விற்பனை, 16சதவீதம் வளர்ச்சி கண்டு, 37.24 லட்சத்திலிருந்து (ரூ. 10,318 கோடி வருவாய்), 43.08 லட்சமாக (ரூ.11,804 கோடி வருவாய்) உயர்ந்துள்ளது.அதேசமயம், சென்ற நிதியாண்டில், செர்வர் விற்பனை, 2சதவீதம்சரிவடைந்து, 90,699 என்ற எண்ணிக்கையிலிருந்து (ரூ.1,637 கோடி வருவாய்), 89,075 ஆக (ரூ.1,610 கோடி வருவாய்) குறைந்து உள்ளது என, எம்.ஏ.ஐ.டி., மேலும் தெரிவித்து உள்ளது.

ஜூலை 25,2013 தினமலர்
[Continue reading...]

Saturday, 22 June 2013

தமிழகத்தில் பள்ளிகளின் நேரம் மாற்றியமைப்பு school time are changed in tamilnadu

- 0 comments

பள்ளி மாணவர்,
போக்குவரத்து நெரிசலில்
சிக்கி தவிப்பதை தவிர்க்கும் வகையில்,
அரசு பள்ளிகள் துவங்கும் நேரம்
மாற்றப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது,
அரசு பள்ளிகள் காலை, 9:30
மணிக்கு துவங்குகின்றன. அதே நேரத்தில்,
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சேர்ந்த
ஊழியர்களும், அலுவலகங்களுக்கு செல்ல
வேண்டியுள்ளது. இதனால், கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால்,
பள்ளி மாணவர், குறித்த நேரத்தில்,
பள்ளிக்கு செல்வதில் சிக்கல்
இருந்து வருகிறது. இதையடுத்து,
திங்கட்கிழமை முதல், பள்ளிகள், காலை, 9:00
மணிக்கு துவங்கும் என,
பள்ளி கல்வி துறையால் வெளியிடப்பட்டுள்ள,
2013-14ம் கல்வி ஆண்டிற்கான,
நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அட்டவணையில், காலை, 9:30
மணிக்கு பள்ளிகள் துவங்கும்; மாலை, 4:30
மணிக்கு முடியும். புதிய அட்டவணைபடி,
காலை, 9:00 மணிக்கு பள்ளிகள் துவங்கும்,
மாலை, 4:15க்கு முடியும். இதில், 12:10 -
12:25க்கு, யோகா, 12:25 -
12:40க்கு நீதி கதை, நீதி போதனை, உடல்
நலம் மற்றும் சுகாதாரம், கல்வி, கலை கல்வி,
முதல் உதவி, தற்காப்பு கலை, 1:10 -
1:25க்கு, வாய்ப்பாடு; 1 - 5ம் வகுப்பு வரை,
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்,
இரண்டு சொற்களை எழுத சொல்ல வேண்டும்;
6 - 9 வரை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
வாக்கியம் அமைக்க கற்று தர வேண்டும்; 9ம்
வகுப்பு மாணவர்கள், தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில், இரண்டு நிமிடம்
பொது அறிவு எழுதுதல், குழு விவாதம்
ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய அட்டவணையின் படி,
திங்களன்று பொது வழிபாடும், செவ்வாய்
முதல் வெள்ளி வரை, வகுப்பில் மாணவர்களின்
திறமைகளை வெளிப்படுத்தும் விதமான
செயல்திட்டங்களும் இருக்கும். மேலும், புதிய
அட்டவணையில், 9ம்
வகுப்பு மாணவர்களுக்கான நேரம்
மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 10,
11, 12ம் வகுப்பு பற்றி எதுவும்
தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும்
மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க
மாநில பொது செயலர்,
சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: புதிய
நடைமுறையில், பள்ளிகள்
திறப்பதை அடுத்து, மாணவர்கள் நலன் கருதி,
போக்குவரத்து வசதியை அதிகளவில்
ஏற்படுத்த வேண்டும். மதிய
உணவு இடைவேளைக்கு, 30 நிமிடம்
போதுமானதாக இருக்காது. சத்துணவு மற்றும்
விடுதி உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு,
இந்த நேரம் போதாது.
யோகா கல்வியை அறிமுகப்படுத்தியது
வரவேற்கத்தக்கது.

[Continue reading...]

Sunday, 2 June 2013

ஆயிரத்தில் ஒருவன் - ஏன் என்ற கேள்வி பாடல் வரிகள்

- 0 comments

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

காலா காலத்துக்கு இப்படியே ஒழசிக்கிட்டே இருந்து
இந்த கன்னி தீவு மண்ணுகே எரு ஆக வேண்டியாது தானா ?
நம்ப சொந்த ஊருக்கு போவது எப்போ ?
இளவரசி முகத்த பார்ப்பது எப்போ ?
புள்ள குட்டி மொகத்த பார்ப்பது எப்போ ?
இன்னும் எத்தன நாளைக்கு தான் பொறுமையா இருப்பது ?

ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே
நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
வரும் காலத்திலே நம் பரம்பரைகள்
நாம் அடிமை இல்லை என்று முழங்கட்டுமே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

பூங்கொடி , சீக்கிரமே இந்த தீவு சொர்க்க பூமி ஆகிவிடும் போல் இருக்கின்றது
எல்லாம் இந்த அடிமைகளின் உழைப்பால் தானே ?
சந்தேகம் என்ன ?
நமக்கு வாய்த்த அடிமைகள் மிக மிக திறமைசாலிகள்
ஆனால் வாய் தான் காது வரை இருக்கிறது

நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே

ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை

http://www.youtube.com/watch?v=vDuUhSxzSdA

திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger