Saturday 3 March 2012

இணையத்தில் சம்பாதிக்கலாம் வாங்க ( BEST CPM PAYOUTS )

- 0 comments
நீங்களும் இணையத்தில் சம்பாதிக்கலாம்.  அதற்கு உங்களுக்கு ஒரு பிளாக்கர் கணக்கு மற்றும் edomz.com அக்கௌன்ட் இருந்தால் போதும்


தினமும் ரூபாய் 300 to  ரூபாய் 1000  வரை நீங்கள் சம்பாதிக்கலாம் . 


edomz.com அக்கௌன்ட் பெற  இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உங்கள் பிளாக்கர் கணக்கில் HTML SCRIPT ல்  edomz ஸ்க்ரிப்டை add  செய்யவும்
இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இணையத்தில் சம்பாதிக்கலாம்

உதாரணத்திற்கு என்னோட அக்கௌன்ட் பாருங்கள்  






[Continue reading...]

எமது உரிமைகளை வென்றெடுக்க ஓருமித்த குரல் கொடுப்போம் – புலிகளின்குரல் (பாடல்கள் இனைப்பு)

- 0 comments

எமது உரிமைகளை வென்றெடுக்க ஓருமித்த குரல் கொடுக்கும் நேரம் இது. எமது அனைத்து வேற்றுமைகளையும் கழைந்து, அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு, உலகத்தின் கண்களையும் காதுகளையும் எங்கள் பக்கம் திருப்புவோம்.
எமது போராட்டத்தின் முக்கியமான கால கட்டத்தில் இப்போது நாம் நிற்கின்றோம். பல பரிமாணங்களை கடந்து, இன்று உலகவாழ் தமிழர்களின் பலத்தை ஒன்றுதிரட்டி, சிறிலங்கா அரசாங்கத்தின் கொலையாட்சியை அடியோடு அழித்தொழிக்கும் கடமை புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.

இன்றைய எமது பணியின் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்து ஐ.நா முன்றலில் நாம் ஒரு மாபெரும் சக்தியாக ஒன்று திரண்டு எமது மக்களுக்காக நீதி கேட்டு ஒங்கி எழுவோம்.
எமது எழிச்சி எதிரியின் வீழ்ச்சியாக அமையட்டும் !

புலிகளின்குரல் நிறுவனம்
03.03.2012.

"நீதி தேடி ஐ.நா நோக்கி" நிகழ்வுக்காக புலிகளின்குரல் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இரு பாடல்கள் .

படை படை படை இது புலிப்படை
வெற்றி என்பது வெளிப்படை

நட நட நீ நட கட கட தடை கட
எழ எழ நீ எழ விழ விழ பகை விழ

எழுந்திரு எழுந்திரு ஈழம் எமது எழுந்திரு
நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் எதிர்ப்புகள்
எல்லாம் தவிடாகும்.

[Continue reading...]

போர் குற்றம்.. ஜெனீவா நெருக்கடி: இலங்கையை காப்பாற்ற இந்தியா முடிவு!

- 0 comments
 
 
 
போர் என்ற பெயரில் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
 
'குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு' எதிராக ஐ.நா. மனித உரிமைக் குழுவில் கொண்டு வரப்படும் தீர்மானங்களை ஆதரிக்க மாட்டோம் என்று இந்தியா தெரிவித்திருப்பதன் மூலம், இலங்கையைக் காக்க இந்தியா முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
 
எனவே போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை இந்தியா ஆதரிக்காது என்ற தைரியம் இலங்கைக்கு வந்திருக்கிறது.
 
ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 19வது கூட்டம் பிப்ரவரி 27-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது இலங்கை ராணுவத்தினர் புரிந்த போர்குற்றம் தொடர்பாக இதில் விவாதிக்கப்பட உள்ளது.
 
போர்க் குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில், வியாழக்கிழமை நடந்த மனித உரிமைக் குழுக் கூட்டத்தின்போது, இந்தியா சார்பில் வாசிக்கப்பட்ட அறிக்கையில், "குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானங்கள், மனித உரிமைக் குழுவின் ஆக்கப்பூர்வமான பேச்சுகளையும் அனைத்துத் தரப்புகளின் ஒத்துழைப்புடனான அணுகுமுறையையும் வலுவிழக்கச் செய்யும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
"நோக்கம் சார்ந்த, வெளிப்படைத் தன்மை கொண்ட, அரசியல் கலவாத, மோதல்களை ஆதரிக்காத கொள்கைகளில்தான் மனித உரிமைக் குழுவின் வலிமை அடங்கியிருக்கிறது. இந்தப் பண்புகளைக் காக்க வேண்டுமென்றால், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை, உறுதியான பேச்சுகள், ஒத்துழைப்பு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்" என்று இந்தியா கூறியிருக்கிறது.
 
இந்தியாவின் இந்த அறிக்கை மனித உரிமைக் குழுவின் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.
 
'இப்போது அவசியமில்லை!'
 
ஒரு குறிப்பிட்ட நாட்டின் மனித உரிமை நிலை பற்றி விவாதம் நடத்துவது அவசியம் வேண்டும் என்றால், வழக்கமாக நடக்கும் உலகம் முழுவதுமான ஆய்வின்போது அதைச் செய்யலாம். இப்போது அதற்கான அவசியம் இல்லை, என்று இந்தியா கருதுவது இந்த அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
 
உலகம் முழுவதுமான ஆய்வின்கீழ் ஒவ்வொரு நாட்டிலுள்ள நிலைமையும் மனித உரிமைக் குழுவில் பரிசீலிக்கப்படும். அந்த வகையில், இலங்கையின் மனித உரிமை நிலைமை பற்றிய முன்மொழிவு வரும் அக்டோபரில்தான் வரவிருக்கிறது.
 
எல்எல்ஆர்சி எனப்படும் போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அளித்திருக்கும் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு, அதுவரை தங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று இலங்கை ஏற்கெனவே கோரியிருக்கிறது.
 
இந்தக் கோரிக்கைக்கு இந்தியாவும் ஆதரவளித்துள்ளது. இப்போது இந்தியாவின் ஆதரவு முழுவதுமாக இருப்பது இலங்கைக்குப் புரிந்துவிட்டதால், நெருக்கடி தீர்ந்த மகிழ்ச்சியில் அறிக்கை வெளியிட ஆரம்பித்துள்ளனர்!



[Continue reading...]

சுளையாக இருநூறு டொலர்கள்

- 0 comments
 

சுளையாக இருநூறு டொலர்கள்

மனைவி வீட்டில் தனியாக இருந்தாள்.

யாரோ கதவின் அழைப்பு மணியை அழுத்தினார்கள்.

அவள் கதவைத் திறந்தாள். அவள் கணவனின் நண்பன் டேவிட் வெளியே நின்றிருந்தான்.

ஹாய்! ரொம் வீட்டில் நிற்கிறாரா?

இல்லை!. கடைக்குப் போயிருக்கின்றார். உங்களுக்கு அவசரமென்றால் அவருக்காக நீங்கள் இங்கே காத்திருக்கலாம். இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவார்.

நன்றி சொல்லிவிட்டு அவன் வரவேற்பறையிலிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.

சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன.

ஒரு முறை செருமியபடி சாரா.. என்றான் அவளது கணவனின் நண்பன்.

சாரா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

உனது மார்பகங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன…

அவள் கூச்சத்தோடு தன் இருக்கையில் நெளிந்தாள்.

நீ உன் மார்பகங்களில் ஒன்றைக் காட்டினால் 100 டாலர்கள் தருகின்றேன் என்றான் அவன்.

அட இதென்ன தொல்லையாக இருக்கின்றது. மார்பைக் காட்டட்டுமாம். 100 டாலர் தருகிறானாம்.

அவளுக்குள் சபலம் தட்டியது. ஒரு தடவை காட்டினால் என்ன நஷ்டம் வந்துவிடப்போகின்றது? 100 டாலர் இலாபந்தானே.?

ஒரு கணம் தயங்கியவள் மறு கணம் தன் மேலாடையை விலக்கி தன் மார்பகங்களில் ஒன்றைக் காட்டினாள். ஆசை தீர அவன் பார்த்துவிட்டு மேசையில் 100 டாலர் நோட்டு ஒன்றை வைத்தான். தன் மேலாடையைச் சரிசெய்து கொண்ட அவள் ஆவலோடு அந்த 100 டாலர் தாளை எடுத்துக் கொண்டாள்.

அழகே அழகுதான். ஒன்றைப் பார்த்த எனக்கு மற்றையதையும் பார்க்காவிட்டால் பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கின்றது. இரண்டாவதையும் நீங்கள் காட்டினால் இன்னொரு 100 டாலர் தருகின்றேன் என்றான் அவன்.

எந்த நரி முகத்தில் இன்று நான் விழித்தேன்? இன்னொரு 100 டாலரா?

ஆசை யாரைத்தான் விட்டது? கையில் கிடைத்த 100 டாலரின் ருசி வெட்கத்தை ஓரத்தில் தள்ள தன் மேலாடையை அகற்றி தன் இரு மார்பகங்களையும் அவனுக்குக் காட்டினாள் அவள்.

அடடா அற்புத அழகு.. அவன் கண்கள் அவள் மார்பகங்களில் மொய்த்தன. ஆசை தீரப் பார்த்து விட்டு அடுத்த 100 டாலர் தாளை அவளிடம் நீட்டினான்.

அவன் எழுந்தான். எனக்கு நேரமாகின்றது. இன்னொரு தினம் ரொம்மிடம் வருகின்றேன். கேட்டதாகச் சொல்லுங்கள்.

அவசரமாக எழுந்து அவன் போய்விட்டான். இருநூறு டாலர் சம்பாத்தியத்தில் மெய்மறந்து போயிருந்த அவள் அவசரம் அவசரமாக தன் உடைகளைச் சரிசெய்து கொண்டாள். 200 டாலரை மெல்ல தன் உட் சட்டைக்குள் செருகிக் கொண்டாள்.

பத்து நிமிடங்கள் கழித்து அவள் கணவன் வந்தான். வந்ததும் வராததுமாக

டேவிட் வந்தானா சாரா? என்று கேட்டான் ரொம்.

வந்தார். ஆனால் சில நிமிடங்கள் காத்திருந்து விட்டு பிறகு வருவதாகக் கூறி விட்டுப் போய்விட்டார் என்றாள் அவள்.

நான் கடனாகக் கொடுத்த 200 டாலர் பணத்தைக் கொண்டு வந்து உன்னிடம் கொடுப்பதாகக் கூறினான். தந்தானா ? என்று கோபத்தோடு வெடித்தான் ரொம்.

[Continue reading...]

சிபிசிஐடி யாக வரும் சீமான்

- 0 comments
 

சீமான், முரளி, ஐஸ்வர்யா தேவன் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய படம் கண்டுபிடி கண்டுபிடி. முரளி-ஐஸ்வர்யா தேவன் இருவருக்கும் நடக்கும் திருமணத்தை தொடர்ந்து ஏற்படும் திகில் நிறைந்த புதிர்கள் அதனை சிபிசிஐடி யாக வரும் சீமான் புலனாய்வு செய்வது தான் படத்தின் விறு விறுப்பான திரைக்கதை.

தமிழ் சினிமாவில் எத்தனையோ புலனாய்வுப் படங்கள் வந்திருந்தாலும் ஒரு யதார்த்தமான அதே நேரம் புலனாய்வு அதிகாரிகளின் புலனாய்வுத் தந்திரங்கள், அதற்காக அவர்கள் மெனக்கெடுதல்கள் என புதிதாகச் சொல்லும் படமாக KPKP இருக்கும்.

இப்படி ஒரு அமைப்பு இயங்குகிறதா, சத்தமில்லாமல் தங்கள் பணியினைப் புலனாய்வு அதிகாரிகள் ஆற்றிக் கொண்டிருப்பதன் மூலம் சமுதாத்திற்கு ஏற்படும் அச்சுருத்தல்கள் எவ்வாறு முறியடிக்கப்படுகிறது என்பதைச் சொல்லும் படமாக KPKP இருக்கும்.

அந்த அளவிற்கு சீமானும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரது புலனாய்வு அதிகாரி வேடத்தை KPKP இல் பார்த்து ரசிக்கும் ஒவ்வொரு ரசிகருக்குள்ளும் அந்தத் துறையின் மீது பெரிய மரியாதை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சமாக சமுதாய நோக்கோடு அமைக்கப்பட்ட காட்சி ஒரு பசுமைப் புரட்சிக்கே வித்திடப்போகிறது என்றால் அது மிகயல்ல. ஆம் முரளி – ஐஸ்வர்யா தேவன் திருமணத்திற்கு அவர்களை வாழ்த்த வரும் உறபினர்கள் நண்பர்களுக்கு தாம்பூலப் பையில் மரக்கன்றுகளைக் கொடுத்து அனுப்புவதுபோல் அந்தக் காட்சியினை அமைத்திருக்கிறார் இயக்குனர் ராம் சுப்புராமன்.

அத்துடன் அதிக அளவில் மரம் நடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வசனங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதைப் பற்றி இயக்குனர் ராம் சுப்பராமன் கூறும்போது, "எனது நண்பர் ஒருவர் திருமணத்திற்குச் சென்றிருந்த போது சாதாரணமாக பழம், தேங்காய், வெத்திலை பாக்குடன் கொடுக்கப்படும் தாம்பூலப்பைக்குப் பதிலாக மரக்கன்றுகளைக் கொடுத்தார்கள்".

எனக்கு பெரிதும் வியப்பாக இருந்தது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுவரும் புவிவெப்பமயமாதலைத் தடுத்து அதனால் ஏற்படும் வறட்சி, இயற்கைச் சீற்றங்களில் இருந்து புவியைக் காத்து நமது அடுத்த தலைமுறைக்குப் பத்திரமாக விட்டுச் செல்லவேண்டுமானால் அதற்கு ஒரே வழி அதிக அளவில் மரம் நடுதலே என்பது புரிந்தது. சமூதாயத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கும்.

இந்த புனிதமான விஷயத்தை சக்தி வாய்ந்த திரைப்படத்தின் மூலம் சொல்லும் போது அனைத்து மக்களையும் சென்றடையும். அதன் மூலம் இந்த உலகசமுதாயத்திற்கு திரைப்படங்கள் மூலம் நன்மை விளைந்த மாதிரியும் இருக்கட்டுமே என்று அந்தக் காட்சியை மிகவும் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறோம் என்றார்.

படப்பிடிப்பின் போது சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து நடிக்க வந்தவர்களுக்கு சம்பளத்துடன் மரக்கன்றுகளும் கொடுத்து அனுப்பியிருக்கின்றனர். படப்பிடிப்பின் போது பேசிய வசனங்களைத் தமக்காகவே பேசப்பட்டது போல் உணர்ந்த மக்கள் தாங்கள் வாங்கிச் சென்ற மரக்கன்றுகளை ஆர்வமாக தகுந்த இடங்களில் நட்டு வளர்த்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

மூவி பஜார் என்ற நிறுவனத்தின் சார்பில் கல்கி யுவாவும் மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த சாமு சிவராஜும் இணைந்து தயாரிக்கும் கண்டுபிடி கண்டுபிடி படத்தின் இசை விரைவில் வெளியாக இருக்கிறது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger