Showing posts with label கள்ளக்காதல். Show all posts
Showing posts with label கள்ளக்காதல். Show all posts

Thursday, 24 October 2013

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதல் ஜோடி தலை துண்டித்து கொலை: தலிபான்கள் வெறியாட்டம் Afghanistan Taliban attack affair couple killed

- 0 comments

ஆப்கானிஸ்தானில் கள்ளக்காதல் ஜோடி தலை துண்டித்து கொலை: தலிபான்கள் வெறியாட்டம் Afghanistan Taliban attack affair couple killed

கந்தகார், அக். 24–

ஆப்கானிஸ்தான் நாட்டில் கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களுக்கு தலிபான் தீவிரவாதிகள் மரண தண்டனை விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணமான பெண் ஒருவர் வேறொரு ஆணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார்.

இதுபற்றி தலிபான் தீவிரவாதிகளுக்கு தகவல் தெரிந்தது. அந்த ஆணையும், பெண்ணையும் தலிபான் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் தலையை துண்டித்து கொலை செய்தனர். அவர்களுடைய உடல் ஊருக்கு வெளியே கிடந்தது.

இதுபோல கள்ளக் காதலில் ஈடுபட்ட பலரை தலிபான் தீவிரவாதிகள் தலையை வெட்டி கொன்றுள்ளனர். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு 20 வயது இருக்கும், ஆண் பற்றிய மற்ற விவரங்கள் தெரிய வில்லை.

...

shared via

[Continue reading...]

Wednesday, 26 June 2013

கவிதாவின் கள்ளகாதல் - Tritchi kavitha

- 0 comments
 கவிதாவின் கள்ளகாதல்

கள்ளக்காதலனை திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி, அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன் இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சித்திரைப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கவிதா, 30. இவர்களுக்கு, 12 வயதில் பெண் குழந்தையும், எட்டு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். கவிதாவின் நடத்தை சரியில்லாத காரணத்தால், கணவர் சரவணன் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
அதே காரணத்துக்காக, கவிதாவின், இரு குழந்தைகளையும், அவரது தாயார் அழைத்துச் சென்று வளர்த்து வருகிறார். குழந்தைகளைப் பற்றி கவலைப்படாத கவிதாவுக்கு, திருச்சி பாலக்கரை செங்குளம் காலனியைச் சேர்ந்த யோகநாதன், 25, என்ற வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இருவரும் தாலிகட்டாமல் குடும்பம் நடத்த துவங்கினர். கடந்த, இரண்டு ஆண்டாக துறையூர், கரூர் ஆகிய இடங்களில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
[Continue reading...]

Monday, 17 June 2013

கள்ளக்காதல் விவகாரம் ரயில் முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை

- 0 comments
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை வேப்பம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் தனபால், தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

சரஸ்வதிக்கும் அந்த பகுதியை சேர்ந்த கார் டிரைவர் முத்துகுமார்(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

இதையறிந்த தனபால் மனைவியை கண்டித்தார். ஆனாலும் அவர் முத்துக்குமாருடனான பழக்கத்தை கைவிடவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரஸ்வதி கைக்குழந்தையுடன் கள்ளக்காதலன் முத்து குமாரோடு ஊரைவிட்டு ஓடினார்.

தனபால் பல இடங்களில் அவர்களை தேடினார். எனினும் அவர்கள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை. இந்நிலையில் இன்று காலை நாங்குநேரி வாகைக்குளம் ரெயில்வே கேட் அருகே குழந்தையுடன் 2 பேர் இறந்து கிடப்பதாக நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அங்கு இறந்து கிடந்தது வேப்பம்பாடை சேர்ந்த முத்துகுமார், சரஸ்வதி அவரது குழந்தை என்பது தெரியவந்தது. 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் குழந்தையுடன் முத்துகுமாரும், சரஸ்வதியும் இன்று காலை நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர்.
[Continue reading...]

Monday, 20 May 2013

பெரம்பலூர் அருகே டாக்டருடன் கள்ளத்தொடர்பு

- 0 comments


பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 40), கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34).

இவருக்கும் சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த ஓமியோபதி டாக்டர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி சின்னச்சாமிக்கு தெரியவந்தது. உடனே அவர் மனைவியை கண்டித்து வந்தார். ஆனாலும் ஜெயலட்சுமி டாக்டருடனான கள்ளத் தொடர்பு கைவிடவில்லை.

இந்தநிலையில் ஜெயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை கள்ளத்தொடர்பால் பிறந்தது என்று சின்னச்சாமி நினைத்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.


வழக்கம்போல் சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சின்னச்சாமி மனைவி ஜெயலட்சுமியை ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். அதற்கு ஜெயலட்சுமி மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த சின்னச்சாமி ஜெயலட்சுமி தலையில் அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த ஜெயலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். மனைவி இறந்ததை உறுதி செய்த சின்னச்சாமி தற்கொலை செய்யும் எண்ணத்தில் தன்னைத்தானே வெட்டிக்கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அரும்பாவூர் போலீசார் அங்கு வந்து ஜெயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுபற்றி விசாரணை நடத்தியதில் சின்னச்சாமி மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[Continue reading...]

Friday, 10 May 2013

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற மனைவி

- 0 comments


ஸ்ரீபெரும்புதூரை அடுத்த போந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 32). தொழிலாளி. கடந்த 5-ந்தேதி இரவு வீட்டு முன்பு திண்ணையில் தூங்கியபோது கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். ராமுவின் இறுதிச் சடங்கு நடந்த போது அவரது மனைவி ரதியின் நடவடிக்கையில் போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவரிடம் நடத்திய விசாரனையில் அதே பகுதியை சேர்ந்த கள்ளக்காதலன் ராஜசேகரனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர்.

ரதி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

கணவர் ராமுவுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் மது அருந்தி வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டு இரவில் தூங்கி விடுவார். இதனால் செக்ஸ் ஆசை நிறைவேறாமல் தவித்து வந்தேன். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜசேகரன், என்னிடம் அன்பாக பேசி பழகினார். இதனால் கணவரை வெறுத்தேன்.

நாங்கள் 2 பேரும் வெளியிடங்களுக்கு சென்று உல்லாசமாக இருப்போம். கணவர் வெளியில் சென்ற நேரத்தில் வீட்டிலும் ஜாலியாக இந்தோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் படுக்கையில் ஒன்றாக இருந்ததை கணவர் ராமு பார்த்துவிட்டார். எங்கள் இருவரையும் கண்டித்து எச்சரித்தார். இதனால் ஒன்று சேர முடியாமல் தவித்தோம்.

கணவரை தீர்த்து கட்டி விட்டால் ஒன்றாக வாழலாம் என்று நினைத்தோம். ராஜசேகரனும் எனது 3 குழந்தைகளையும் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார். இதையடுத்து தினமும் வீட்டின் வெளியே திண்ணையில் தூங்கும் ராமுவை மின்தடை ஏற்படும் நேரத்தில் கொலை செய்ய திட்டமிட்டோம்.

சம்பவத்தன்று இரவு திட்டப்படி கத்தியுடன் வந்த ராஜசேகரன் கணவர் ராமுவை கொலை செய்ய முயன்றபோது 2 பேருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. கணவர் வீட்டு கதவை தட்டி என்னை உதவிக்கு அழைத்தார். நான் கதவை திறக்காமல் வீட்டின் ஜன்னல் வழியே சண்டையை பார்த்தேன்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அப்போது கணவர் ராமுவின் கழுத்தை அறுத்து விட்டு ராஜசேகரன் தப்பி ஓடி விட்டார். இதில் அவர் இறந்து விட்டார். மர்ம நபர்கள் கணவரின் கழுத்தை அறுத்து கொன்று விட்டதாக நாடகமாடி அழுதேன். ஆனால் என்னை விசாரித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கொலை நடந்த நாளில் இருந்து ராஜசேகரன் தலைமறைவாக இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் ராஜசேகரனும், கொலையுண்ட ராமுவின் மனைவி ரதியும் அடிக்கடி சந்தித்து பேசுவதும் தெரிய வந்தது. கணவனின் இறுதிச் சடங்கிலும் ரதியின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக் கட்டியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

ராஜசேகரன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ரதிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தந்தையை இழந்து, தாயும் சிறையில் உள்ளதால் அவர்களது எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
[Continue reading...]

Wednesday, 10 April 2013

நதியா பலருடன் உல்லாசம் அனபவிப்பு

- 0 comments

பலருடன் உல்லாசமாக இருந்த தாய் 3 வயது மகனை வெட்டிக் கொல்ல முயற்சி!

சிறுவனை வெட்டி கொல்ல முயன்றதாக தாயை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், குடவாசல், அரித்துவாரமங்கலத்தைசேர்ந்தவர் பரமானந்தன். 30.

இவர் மனைவி நதியா, 28. இவர்களுக்கு சுரேஷ், 3, ஜெயஸ்ரீ,1, ஆகிய குழந்தைகள் உள்ளனர்.நதியாவின் நடத்தை பிடிக்காததால், கடந்த ஆண்டு பரமானந்தம் பிரிந்து சென்றார்.நதியா, இரு பிள்ளைகளுடன், தாய் சரோஜாவுடன் வசித்து வந்தார்.

நதியா, குடித்து விட்டு, பலருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம், அப்பகுதியில் உள்ள நரிக்குறவர்களுடன், வீட்டில் மது குடித்து, உல்லாசமாக இருந்ததை, அவரது தாய் சரோஜா கண்டித்துள்ளார்.இதில் ஆத்திரம் அடைந்தவர், அரிவாளால், தன் மூன்று வயது மகனை, வெட்டினார்.

படுகாயம் அடைந்த சிறுவனை, அப்பகுதியினர் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். குடவாசல் போலீசார், வழக்குப் பதிந்து, நதியாவை கைது செய்தனர்.

[Continue reading...]

Tuesday, 5 March 2013

கள்ளக்காதலனை ஏவி கணவரை கொன்ற மனைவி

- 0 comments
புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் பேட்டை சேர்ந்தவர் மதியழகன் (வயது 34). பெயிண்டர் மற்றும் சுவரில் ஓவியம் வரையும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி தேவி (26). இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2-ந்தேதி காலை மதியழகன் தனது ஊர் அருகே உள்ள கழிஞ்சி குப்பத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அவரை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. எனவே கொலையாளிகளை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். ஆனால் துப்பு துலங்கவில்லை. கொலை பற்றி மதியழகனின் மனைவி தேவியிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அவரை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.

தேவி செல்போன் ஒன்று பயன்படுத்தி வந்தார். அந்த போன் எங்கே என்று போலீசார் கேட்டனர். அதற்கு அவர் என் கணவரிடம் கொடுத்திருந்தேன், அவரை கொன்றவர்கள் செல்போனை எடுத்திருப்பார்கள் என்று கருதுகிறேன் என்று கூறினார். இதனால் போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து அந்த போனுக்கு யார், யார் பேசியிருக்கிறார்கள்.

போனில் இருந்து வெளியே யார் யாருக்கு பேசப்பட்டுள்ளது என்று டெலிபோன் எக்ஸ்சேஞ் மூலம் சேகரித்தனர். அதில் கொலை நடந்த பிறகும் போன் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. யாருடன் பேசப்பட்டது என்று போலீசார் விசாரித்த போது தேவியே அந்த போனில் பேசியிருப்பது தெரியவந்தது.

எனவே கொலை நடந்த பிறகும் போன் தேவியிடம் தான் இருந்துள்ளது. கணவர் போனை எடுத்து செல்லவில்லை என்று போலீசார் கருதினார்கள். எனவே தேவி மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் துருவி துருவி விசாரித்தபோது தனது கள்ளக்காதலனை ஏவி கணவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

அதையடுத்து தேவியை போலீசார் கைது செய்தனர். கொலை பற்றிய முழு விவரங்களையும் தேவி போலீசாரிடம் வாக்கு மூலமாக அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நான் சூரமங்கலம் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறேன்.

எனது வீட்டில் இருந்து தினமும் பஸ் மூலம் சூரமங்கலத்துக்கு வந்து செல்வேன். 2 பஸ் மாறி சூரமங்கலத்திற்கு வந்து செல்ல வேண்டும். இது எனக்கு சிரமமாக இருந்தது. எனவே கரையாம்புத்தூரில் உள்ள பக்கத்து ஊருக்கு மாறுதல் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று கருதினேன். இதுதொடர்பாக பல பிரமுகர்களை சந்தித்தேன்.

அப்போது வீராம்பட்டினத்தை சேர்ந்த ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் சித்திரவேல் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் தனக்கு தெரிந்த பிரமுகர் மூலம் மாற்றல் வாங்கி தருவதாக கூறினார். எனவே அடிக்கடி அவருடன் செல்போனில் பேசுவேன். நாளடைவில் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் தனியாக சந்தித்து கொண்டோம்.

ஆரோவில் போன்ற பகுதிகளுக்கும் சென்று சுற்றி வந்தோம். இந்த விஷயம் என் கணவருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் என்னை கண்டித்தார். ஆனாலும் நான் சித்திரவேலுடன் தொடர்பில் நீடித்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி நான் அங்கன்வாடிக்கு புறப்பட்டு சென்றேன். அப்போது என் கணவர் என்னை பின்தொடர்ந்து கண்காணித்தபடியே வந்தார்.

நெட்டப்பாக்கத்தில் வைத்து நான் போனில் பேசிக்கொண்டிருந்தேன். நான் காதலுடன் பேசுவதாக கருதி என்னை அங்கு வைத்து அடித்து உதைத்தார். இது எனக்கு மிகவும் அவமானமாகி விட்டது. இதுபற்றி சித்திரவேலிடம் கூறினேன். என் கணவரை தீர்த்து கட்டினால் தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று அவரிடம் சொன்னேன்.

அதற்கு அவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். என் கணவரை அடையாளம் தெரிந்து கொள்வதற்காக போட்டோ ஒன்று கேட்டார். அதை கொடுத்தேன். 1-ந்தேதி சித்திரவேல் திட்டமிட்டபடி எங்கள் ஊருக்கு வந்தார். என்னிடம் கணவர் எங்கே என்று கேட்டார். அருகில் உள்ள சாராய கடைக்கு சென்றிருப்பதாக தெரிவித்தேன்.

உடனே சித்திரவேல் அங்கு தேடி சென்றார். என் கணவர் சாராயம் குடித்துவிட்டு திரும்பிப் கொண்டிருந்தார். அவரை நைசாக பேசி ஒதுக்குப் புறமாக அழைத்துச் சென்று அங்கு வைத்து சித்திரவேல் என் கணவரை கொலை செய்தார். பின்னர் எனக்கு போன் செய்து உன் கணவரை தீர்த்து கட்டிவிட்டேன் என்று கூறினார்.

மேலும், நான் வைத்துள்ள செல்போனை பயன்படுத்த வேண்டாம். அதில் உள்ள சிம்கார்டை வீசிவிட்டு செல்போனையும் எங்கேயாவது மறைத்து வைத்துவிடு என்று தெரிவித்தார். எனவே அதன்படி செல்போனை வெளியே வீசிவிட்டேன். என்னை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று கருதினேன். ஆனால் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதியழகனை கொலை செய்த போலீஸ்காரர் சித்திரவேலும் கைது செய்யப்பட்டார். தேவி-சித்ரவேலு இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
[Continue reading...]

Sunday, 3 March 2013

கள்ளக்காதலியின் கணவரிடம் உதை வாங்கிய அமைச்சர்

- 0 comments
கள்ளக்காதலியின் கணவரிடம் உதை வாங்கிய அமைச்சர்


கேரளாவில் இருந்து வெளியாகும் ஒரு மலையாள பத்திரிகையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளியானது. அதில், கேரள அரசில் அமைச்சராக இருக்கும் ஒருவருக்கு பெண் ஒருவருடன் கள்ளக்காதல் இருந்தது. இது அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததும் ஆத்திரமடைந்தார். அவர் அந்த அமைச்சரின் வீட்டுக்கு இரவில் சென்று இதுபற்றி கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு மூண்டது. இந்த பிரச்சினையில் அமைச்சரை கள்ளக்காதலியின் கணவர் சரமாரியாக தாக்கினார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று செய்தியில் கூறப்பட்டிருந்தது. பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருக்கும் அமைச்சர் யார்? என்ற கேள்வி கேரளா முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்களிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். யாரும் இதற்கு பதில் கூறாத நிலையில் கோட்டயத்தில் அரசு கொறடா ஜார்ஜ், நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருக்கும் அமைச்சர் கேரள அரசில் வனம் மற்றும் திரைப்படத்துறை அமைச்சராக இருக்கும் கணேஷ்குமார். பத்திரிகையில் எந்த அமைச்சர் என்று குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளனர். இதனால் அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மீதும் சந்தேக நிழல்படியும். இதை தவிர்க்கவே கள்ளக்காதலியின் கணவரால் தாக்கப்பட்டவர் அமைச்சர் கணேஷ்குமார்தான் என்பதை உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன். இந்த சம்பவம் 2 நாட்களுக்கு முன்பே எனக்கு தெரியும். இப்போது பத்திரிகைகளில் செய்தி வெளியாகி விட்டதால் இதை நான் வெளிப்படுத்தும் நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு பிறகும் கணேஷ்குமார் அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது. அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அரசு கொறடா ஜார்ஜ், கூறியது பற்றி நிருபர்கள் உடனடியாக அமைச்சர் கணேஷ் குமாரை சந்தித்து கருத்து கேட்டனர். அதிர்ச்சி அடைந்த அவர் இதற்கு பதில் அளித்து கூறியதாவது:- என்னைப்பற்றி கொறடா ஜார்ஜ் கூறிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். கேரள அரசில் அமைச்சராக இருக்கும் நான் நேர்மையாக பணி புரிந்து வருகிறேன். வனத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை கண்டு பிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். எனது கடுமையான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டு சேர்ந்து என் மீது சேற்றை வாரி இறைத்து உள்ளனர். இதனை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார். கேரள கூட்டணி ஆட்சியில் கேரள காங்கிரஸ் பி அணியின் சார்பில் அமைச்சர் ஆக்கப்பட்டவர் கணேஷ்குமார். மலையாள நடிகராகவும் உள்ளார். இவரது தந்தை பாலகிருஷ்ண பிள்ளை. இடமலையார் நீர் மின் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக பாலகிருஷ்ண பிள்ளை மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பான ஊழல் வழக்கை விசாரித்த கோர்ட்டு பாலகிருஷ்ண பிள்ளைக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதனால் கடந்த தேர்தலில் பாலகிருஷ்ண பிள்ளை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவானது. இதையடுத்து அவரது மகன் கணேஷ்குமார் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பாலகிருஷ்ண பிள்ளைக்கு வழங்கவேண்டிய அமைச்சர் பதவி கணேஷ்குமாருக்கு அளிக்கப்பட்டது. கணேஷ் குமார் பதவி ஏற்ற பின்பு தந்தையுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணேஷ்குமாரின் அமைச்சர் பதவியை பறிக்க பாலகிருஷ்ண பிள்ளை முயற்சி மேற்கொண்டார். அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவரது எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இப்போது கணேஷ்குமார் மீது பகிரங்க புகார் கூறிய அரசு கொறடா ஜார்ஜ் கணேஷ்குமாரின் தந்தை பாலகிருஷ்ணபிள்ளைக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. எனவேதான் அவர் கணேஷ் குமார் மீது இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  அமைச்சர் கணேஷ்குமார் மீது கூறப்பட்ட புகார் பற்றி எதிர்க்கட்சி தலைவரும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் கூறியதாவது:- கணேஷ்குமார் பிரச்சினை பற்றி உண்மை நிலவரங்கள் தெரிய வேண்டும். அதை முழுமையாக விசாரித்து அறிந்த பின்பே எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது பற்றியும், கணேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரியும் வலியுறுத்துவோம் என்றார். காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது, `அமைச்சர் கணேஷ்குமாருக்கும் ஜார்ஜ்க்கும் இடையே விரோதம் இருப்பதாக அறிகிறோம். அதனால் இவ்வாறு கருத்து வெளியிட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்' என்றார்.
[Continue reading...]

Sunday, 24 February 2013

40 வயது காதலியுடன் வாழத்துடிக்கும் இளைஞன்

- 0 comments

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்த சேட்டு என்ற விஜய் (வயது 30) பாலிடெக்னிக் படித்து விட்டு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி சசிகலா (வயது 45). இவர்களுக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். நாராயணபுரத்தை சேர்ந்த தினேஷ்க்கு இவரை திருமணம் செய்து கொடுத்தார்.
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு பன்னீர்செல்வம் இறந்துவிட்டார். இதனால் திருப்பூருக்கு சென்று பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த சேட்டுவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் சசிகலாவை சேட்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர். மின்வெட்டு காரணமாக தற்போது அங்கு வேலை இல்லாததால் ஆம்பூர் பெரியாங்குப்பத்துக்கு வந்தனர்.
இதற்கிடையில் சசிகலாவின் மகள் ஜோதிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உனது அம்மா வயது குறைந்தவரை திருமணம் செய்துள்ளார். இது சரியில்லை என்று கூறி தினேஷ், ஜோதியை தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் மனமுடைந்த சசிகலா தன்னை சேட்டுவிடம் இருந்த பிரித்து வைக்ககோரி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து பேசினர்.
அப்போது சேட்டு சசிகலா இல்லாமல் என்னால் வாழமுடியாது எங்களை பிரித்து விடாதீர்கள் என்று போலீசாரிடம் மன்றாடினார். போலீசார் அவரை சமாதானம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger