Friday 25 April 2014

கைவிட்டது அகரம் பவுண்டேசன் ... காப்பாற்றினார் அஜித்

- 0 comments

கைவிட்டது அகரம் பவுண்டேசன் ...
காப்பாற்றினார் அஜித்

அஜீத் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததுள்ளது அனைவரும் அறிவர். இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித், ஒரு நல்ல மனிதர் என்பதை யாராலும் மறுக்க முடியாது அதற்கு ஓர் சிறு உதாரணம் இந்த சம்பவம்
தமிழ் பத்திரிகைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபாற்றும் ஓவியர் ஒருவர் தனது மகன்களை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் என்று விரும்பினார். . இரண்டு மகன்களும் நன்றாக படித்து வருகிறார்கள். ஒரு சமயத்தில் இளையமகன் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கும்படியும்,அங்கு வேலை செய்துகொண்டே படிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
வேலைபார்த்துக்கொண்டே படிப்பதாக மகன் கூறிய உறுதியை நம்பி ஒருவழியாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் ஓவியர். ஆனால் அங்கு பகுதி நேர வேலை செய்ய கல்லுரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. வேறு வழியில்லாமல் இங்கிருந்தே படிப்பு செலவையும் அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் ஓவியருக்கு ஏற்பட்டது. எல்லா கடன் வாங்கி மகனுக்கு பணத்தை அனுப்பி வைத்தார் ஓவியர். மகனுக்கு இது இறுதியாண்டு ஆனால் இறுதி ஆண்டுக்கான பணத்தை தந்தையால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. பணம் கட்டவில்லை என்றால் கல்லூரியிலிருந்து மகனை வெளியேற்றும் நிலை உருவானதாம்.
வேறு வழியில்லாமல் தன்னிடம் அன்பு பாராட்டும் நடிகர் சிவகுமாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகரம் பவுண்டேஷன்லேர்ந்து ஏதாவது உதவி கிடைக்குமா என்று கேட்டாராம் ஓவியர். அதற்கு சிவக்குமார், ஞானவேலை கேட்டுபாரேன் என்று கூறினாராம் இதனையடுத்து ஞானவேலுவை ஓவியர் தொடர்பு கொண்டார். அபபோது அவரோ, அகரம் பவுண்டேஷன்லேர்ந்து உதவணும்னா, அந்த பையன் அநாதையா இருக்கணும். உங்க பையனுக்கு எங்க ரூல்ஸ்படி உதவ முடியாதே என்றார்.
மிகவும் மனம் வருந்திய ஓவியர், அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது சில நபர்கள் அஜீத்தை தொடர்பு கொள்ள கூறினர். இதனையடுத்து நண்பர்களின் உதவியுடன் அஜீத்தை தொடர்பு கொண்ட ஓவியர் தன் நிலைமையை விவரித்துகூறினார். பின்னர் வீடு வந்து சேர்வதற்குள் அவருக்கு நல்ல செய்தி வந்து சேர்ந்தது. பையன் குறித்த முழு விபரங்களை கொடுத்துட்டு கவலைபடாமல் இருங்கள்.. உங்க பையனின் முழு படிப்பு செலவின் முழுதொகையும் கட்டிவிடலாம் என்று அஜீத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
இல்லையென்று வருபர்களுக்கு இல்லையென்று சொல்லாத அஜித் மனம் யாருக்கு வரும்... - தினமணி

[Continue reading...]

நயன்தாராவை சாடும் அனாமிகா படக்குழுவினர்!

- 0 comments


இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. அந்த படத்தின் ரீமேக் அனாமிகா என்ற பெயரில் தெலுங்கிலும், நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் தமிழிலும் உருவாகியுளளது. இந்த இரண்டு பதிப்பிலுமே நயன்தாராதான் நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.


இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தபோது படத்தின் இயக்குனர் மட்டுமே கலந்து கொண்டார். நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், நயன்தாரா திறமையான நடிகை. அவரது நடிப்பைப்பார்த்து அவர் கேட்டதைவிட அதிக சம்பளம் கொடுக்கலாமா என்றுகூட நான் யோசித்தேன் என்று அவர் தெரிவித்தார்.

அதையடுத்து, சமீபத்தில் அப்படத்தின் ஆடியோ விழா ஐதராபாத்தில் நடந்தபோதும் நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்தார்களாம். ஆனால் அப்போதும் அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டாராம். லீடு ரோலில் நடித்த ஒரு நடிகை இப்படி வேறு படங்களில் பிசியாக இருப்பதாக காரணம் சொல்லிக்கொண்டு விழாக்களுக்கு வராமல் தவிர்ப்பதால், அப்படக்குழுவினர் நயன்தாராவை கண்டபடி விமர்சித்து வருகின்றனர்.

இதையடுத்து, தான் முக்கிய வேடத்தில் நடித்த ஒரு படத்தை நயன்தாரா தவிர்க்கிறார் என்றால், அவர்களுக்குள் ஏதோ உள் விவகாரம் இருக்கிறது. இல்லாமல் இப்படி செய்ய மாட்டார் என்று சிலர் பேசிக்கொள்கின்றனர். ஆனால் இதுகுறித்து நயன்தாராவை தொடர்பு கொண்டு விசாரித்தவர்களிடம் அவர் மெளனத்தையே பதிலாக்கி விட்டாராம். 

ஆக, ஏதோ நடந்திருக்கிறது. அது என்னவென்றுதான் தெரியவில்லை...
[Continue reading...]

மேடை நாகரீகம் தெரியாமல் விஜய்யை அசிங்கமாக திட்டிய அரசியல்வாதி!

- 0 comments


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் விஜய் குறிப்பிடத்தக்கவர். அவருக்கு ஏராளமான இளவட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன்காரணமாகவே மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அவரை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். அதனால் தன்னைத்தேடி வரும் அவர்களுடன் விஜய்யும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசுகிறார்.


ஆனால், அந்த சந்திப்பு சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும் அதை டீசன்டாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு பிரபலமில்லாத அரசியல்வாதி விஜய்யை கண்டபடி அசிங்கமாகவும், ஆபாசமாகவும் திட்டி பேசியுள்ளார். அவரை மட்டுமின்றி ஒட்டு மொத்த நடிகர்களையே அருவருப்பான ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்துள்ளார். 

அதேசமயம், அவர் யார்? எங்கு நடைபெற்ற கூட்டததில் இப்படி பேசினார் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை. ஆனால், அவரது பேச்சு யு-டியுப்பில் வெளியானதையடுத்து சமூக வலைதள நேயர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் நின்று பேசிய மேடையில் உள்ள கட்சியின் கொடியை வைத்து அவர் ஒரு மதவாத கட்சியைச்சேர்ந்தவர் என்பது அறியப்பட்டுள்ளது.

மேடை நாகரீகமே தெரியாமல் அவர் பேசியுள்ள இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, விஜய் ரசிகர்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
[Continue reading...]

நஷ்டத்தை ஏற்படுத்திய நான் சிகப்பு மனிதன்

- 0 comments


நான் சிகப்பு மனிதன் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது என்றாலும், அப்படத்தை உண்மையில் தயாரித்தது என்னவோ யுடிவி நிறுவனம்தான். யுடிவி கொடுத்த பணத்தில், தன் லாபமாக சில கோடிகளை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தில் படத்தை எடுத்துக் கொடுத்தார் விஷால். அதன் பிறகு நான் சிகப்பு மனிதன் படத்தை பப்ளிசிட்டி செய்து வியாபாரம் செய்வதும், அதன் லாப நஷ்டமும் யுடிவியைச் சேர்ந்தது. எனவே நான் சிகப்பு மனிதன் படத்தை மார்க்கெட்டிங் செய்யும் வேலையில் யுடிவி இறங்கியபோது, அவர்களிடம் விஷால் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்.

அதாவது, பாரிவேந்தரின் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கும் தனக்கும் ஒரு கமிட்மெண்ட் உள்ளதாகவும், அதனால் நான் சிகப்பு மனிதன் படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டி இருக்கிறது. எனவே படத்தை என்னிடமே கொடுத்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதன்படி தமிழக தியேட்டர் ரைட்ஸை 10 கோடிக்கு விஷாலுக்குக் கொடுத்திருக்கிறது யுடிவி. விஷாலோ அதை 11 கோடிக்கு வேந்தர் மூவிஸுக்கு விற்றிருக்கிறார். 11 கோடிக்கு வாங்கிய வேந்தர் மூவிஸ் சில கோடிகள் லாபம் வைத்து தியேட்டர்காரர்களுக்கு பிரித்து விற்றிருக்கிறார்.

நெட் ரிசல்ட் என்ன? நான் சிகப்பு மனிதன் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால் தியேட்டர்காரர்களுக்கு சுமார் 25 சதவிகிதம் நஷ்டமாம்.
[Continue reading...]

தாமதமாக வந்து வாக்களித்த வடிவேலு

- 0 comments


நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் நட்சத்திரங்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்களித்த கை(மை)யோடு, அதை ஃபோட்டோ எடுத்து ட்விட்டரில் ஷேர் பண்ணி சீன் போட்டனர். வழக்கமாக தேர்தல் அன்று காலையிலேயே உற்சாகமாக வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் சிரிப்பு நடிகர் வடிவேலு. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை நேரத்திலேயே வந்துவிடுவார். வாக்களித்துவிட்டு, மீடியாக்களின் கேமரா முன்பு நின்று முழங்குவார். இந்த தேர்தலில் வடிவேலுவின் முழக்கம் கேட்கவில்லை. என்ன காரணம்?

விஜயகாந்த் வாக்களிப்பதும் வடிவேலு வாக்களிக்கும் அதே வாக்குச்சாவடியில்தான். எனவே, காலை நேரத்தில் வாக்களிக்க வந்தால் அங்கே திரண்டு நிற்கும் விஜயகாந்தின் கட்சித்தொண்டர்களினால் தனக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்ற நினைத்தாராம். ஏற்கனவே ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளாகி இருக்கும் நமக்கு இந்த நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பது வடிவேலுவின் அச்சம். எனவேதான், விஜயகாந்தின் தொண்டர்கள் கூட்டம், மீடியாக்கள் இல்லாத நேரமாகப் பார்த்து...அதாவது வாக்குப்பதிவு முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் வந்து வாக்களித்து விட்டு சென்றிருக்கிறார்.
[Continue reading...]

ரஜினி ரசிகர்களை இழுக்க சிவகார்த்திகேயன் திட்டம்

- 0 comments



இன்றைய தலைமுறை நடிகர்களின் ரஜினியின் பாதிப்பு இல்லாத நடிகர்களே இல்லை. சில இளம் நடிகர்களோ ரஜினியின் மேனரிஸத்தை ஃபாலோ பண்ணி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் அநியாயத்துக்கு ரஜினித்தனம். இது பற்றி கேட்டால், நான் அவரோட ரசிகன். அவர் நடிச்ச ஒரு படத்தைக் கூட நான் மிஸ் பண்ணினதில்லை. அப்படிப்பட்ட என் நடிப்பில் ரஜினி ஸாரோட பாதிப்பு இருப்பது ஆச்சர்யப்படுகிற விஷயம் இல்லை. என் நடிப்பில் ரஜினி ஸாரோட பாதிப்பு இல்லைன்னாத்தான் ஆச்சர்யப்படணும் என்று வெளிப்படையாகவே சொல்கிறார் சிவகார்த்திகேயன்.

தன் அடுத்தப் படத்துக்கு ரஜினி முருகன் என்று பெயர் சூட்டி இருப்பதன் மூலம், சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகர்களை தன் பக்கம் இழுக்க திட்டமிட்டிருக்கிறார் என்பது தெளிவாகிறது. கோச்சடையான் படத்தில் நடிக்கவே விருப்பமில்லை, வேறு வழியில்லாமல் நடித்தேன், நடிப்பிலிருந்து ரிடையர்ட் ஆக விரும்புகிறேன் என்றெல்லாம் அவ்வப்போது சொல்லி வருகிறார் ரஜினி. அவர் இதே மனநிலையில் இருந்தால் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் நடிப்புக்கு குட்பை சொல்லிவிடுவார். எனவே இப்போதே ரஜினி ரசிகர்களை டார்கெட் வைத்தால் பிற்காலத்தில் மொத்த பேரும் தன் பின்னால் அணி திரள்வார்கள் என்பதுதான் சிவகார்த்திகேயன் போட்டு வைத்திருக்கும் கணக்காம்.

சிவகார்த்திகேயன் படிக்கும் காலங்களில் கணக்கில் புலியாய் இருந்திருப்பாரோ?
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger