Showing posts with label கற்பழிப்பு. Show all posts
Showing posts with label கற்பழிப்பு. Show all posts

Wednesday, 22 January 2014

பொன்னேரியில் மயக்க மாத்திரை கொடுத்து காதலியை கற்பழித்த பட்டதாரி வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில் Men arrested for To give the sleeping tablet and raped the girl near ponneri

- 0 comments
திருவள்ளூர். ஜன.23- 
Rape


திருவள்ளூரை அடுத்த பொன்னேரி அண்ணா நகர் சோம்பட்டு பகுதியை சேர்ந்தவர், நாகதாஸ் (வயது 35). எம்.ஏ பட்டதாரியான இவர் தனது மூன்றாவது வீட்டில் வசிக்கும் மீரா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது.) என்ற 25 வயது பெண்ணை காதலித்து வந்தார். கடந்த 4-9-2002 அன்று மீரா தனது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக படுத்து இருந்தார்.

அப்போது அங்கு வந்த நாகதாஸ் அவரிடம் உடல் நலம் பற்றி விசாரித்தார். அப்போது மீராவின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதனை பயன்படுத்திக்கொண்ட நாகதாஸ், மீராவின் பெற்றோர் கொடுத்ததாக கூறி, ஒரு மாத்திரையை சாப்பிடும்படி கூறி இருக்கிறார். அது மயக்க மாத்திரை என்று அறியாமல் சாப்பிட்ட மீரா சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். அப்போது மீராவை நாகதாஸ் கற்பழித்துவிட்டார்.

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த மீரா தான் கற்பழிக்கப்பட்டதை அறிந்து நாகதாசிடம் கேட்டார். அதற்கு அவர் மீராவை திருமணம் செய்துகொள்வதாக கூறி சமாளித்துவிட்டார். இந்நிலையில் மீரா கர்ப்பமாகி ஆண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பின்னரும் தன்னை திருமணம் செய்து கொள்ள நாகதாஸ் மறுத்து விட்டதால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் மீரா புகார் செய்தார். பூந்தமல்லியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் மனவேதனையடைந்த மீரா தொடர்ந்து போராடி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், நாகதாஸ் மீதான கற்பழிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 7 வருடம் கடுங்காவல் ஜெயில் தண்டணையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் நாகதாசை சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக பி.எஸ்.ஆர்.சவுந்தர்ராஜன் ஆஜராகி வாதாடினார். 

[Continue reading...]

Monday, 20 January 2014

ஆனைமலை அருகே காதலிக்க மறுத்ததால் பெண்ணை கடத்தி கற்பழித்த கார் டிரைவர் கைது love refused to girl youth molested near aanimalai

- 0 comments
ஆனைமலை. ஜன.17–
ஆனைமலையை அடுத்துள்ள செட்டிமல்லன் புதூரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் அங்காள பரமேஸ்வரி (வயது 18). மில் தொழிலாளி. இவரை அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஹரிசங்கர் (25) என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்தார்.
தனது காதலை அங்காள பரமேஸ்வரிடம் பலமுறை சொன்னார். ஆனால் அங்காள பரமேஸ்வரி மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் தினமும் காலையும், மாலையும் அங்காள பரமேஸ்வரி வேலைக்கு செல்லும்போது ஹரி பின் தொடர்ந்து வந்து காதல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதுகுறித்து அங்காள பரமேஸ்வரி தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்தார். இதைகேட்டு கோபமடைந்த கருப்பசாமி தனது மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த ஹரி சங்கரை கண்டித்தார். ‘‘என் மகளுக்கு இனிமேல் தொல்லை செய்தால் நடப்பதே வேறு’’ என்று எச்சரித்தார்.
இதனால் ஹரிசங்கர் ஆத்திரமடைந்து அங்காள பரமேஸ்வரியை அடைய நினைத்தார். இதற்காக சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். நேற்று இரவு அங்காள பரமேஸ்வரி வீட்டில் இருந்து தோட்டத்திற்கு சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற ஹரிசங்கர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அங்காள பரமேஸ்வரின் வாயை பொத்தி அருகிலுள்ள காட்டுக்குள் கடத்தி சென்றார். அங்கு வலுக்கட்டாயமாக அங்காள பரமேஸ்வரியை கற்பழித்தார்.
ஹரிசங்கரின் பிடியில் இருந்து தப்பிக்க அங்காள பரமேஸ்வரி கடுமையாக போராடினார். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.
நீண்ட நேரமாகியும் வெளியில் சென்ற மகள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த கருப்பசாமி தனது உறவினர்களுடன் மகளை தேடி அந்த பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு ஹரிசங்கரின் பிடியிலிருந்த அங்காள பரமேஸ்வரி கதறி அழுத சத்தம் கேட்டது.
பதறியடித்த கருப்பசாமி சத்தம் போட்டபடியே அங்கு வந்தார். கருப்பசாமியும் அவரது உறவினர்களும் அங்கு வருவதை பார்த்த ஹரிசங்கர் அங்கிருந்து தப்பியோடினார். மகள் அலங்கோலமாக கிடப்பதை கண்டு கருப்பசாமி பதறினார்.
மகளை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கருப்பசாமி ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ், தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் ஹரிசங்கரை காட்டுப்பகுதியில் தேடினர்.
இன்று காலை சிங்கா நல்லூர் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த ஹரிசங்கர் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஹரிசங்கர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது
[Continue reading...]

Tuesday, 10 December 2013

கோவாவில் டச்சு நாட்டு பெண் யோகா ஆசிரியரால் கற்பழிப்பு Goa Dutch country woman molested yoga teacher

- 0 comments

Img கோவாவில் டச்சு நாட்டு பெண் யோகா ஆசிரியரால் கற்பழிப்பு Goa Dutch country woman molested yoga teacher

பனாஜி, டிச. 11-

கோவா மாநில தலைநகர் பனாஜியில் வாடகை வீடு ஒன்றில் 25 வயது டச்சு நாட்டு பெண் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் அப்பகுதியில் கிருஷ்ணா சர்மா என்பவரிடம் யோகா கற்றுவந்தார்.

இந்நிலையில் அவர்கள் இரண்டு பேரும் நேற்று அனுஜாவில் நடந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். விருந்து முடிந்ததும், அந்த பெண் யோகா ஆசிரியர் கிருஷ்ணா சர்மாவின் வாகனத்தில் அவரது வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் சென்ற சர்மா அந்த பெண்ணை பலவந்தமாக அவர் கற்பழித்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். கற்பழிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட டச்சு நாட்டு பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரை அடுத்து போலீசார் சர்மாவை தேடினர். இந்நிலையில் மும்பைக்கு தப்பித்து ஓட தாபோலிம் விமான நிலையத்திற்கு சர்மா சென்றுள்ளார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.

சர்மா உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சர்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
...

[Continue reading...]

Friday, 25 October 2013

கற்பழிப்பு வழக்கில் ராஜஸ்தான் முன்னாள் மந்திரி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை Rajasthan ex minister arrested in harassment case CBI action

- 0 comments

கற்பழிப்பு வழக்கில் ராஜஸ்தான் முன்னாள் மந்திரி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை Rajasthan ex minister arrested in harassment case CBI action

ஜெய்ப்பூர், அக். 25-

ராஜஸ்தான் மாநிலத்தல் பால்வளம் மற்றும் கதர்துறை மந்திரியாக இருந்தவர் பாபுலால் நாகர். இவர் 35 வயதுபெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் அந்த பெண்ணை தனது பங்களாவுக்கு அழைத்து கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பாபுலால் நாகர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின்னர் இவ்வழக்கு கடந்த 9-ம் தேதி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் கற்பழிப்பு புகார் தொடர்பாக பாபுலால் நாகரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். தடயவியல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. பின்னர் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

...

shared via

[Continue reading...]

Monday, 2 September 2013

மனநலம் பாதித்த பெண் கற்பழிப்பு - வார்ட் பாய் காவலர் கைது ward boy arrested for molesting mentally challenged woman

- 0 comments

மனநலம் பாதித்த பெண் கற்பழிப்பு: வார்ட் பாய் காவலர் கைது ward boy arrested for molesting mentally challenged woman 

 

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள போசாரி பகுதியில் உள்ள காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை அனுமதித்து பராமரித்து வருகின்றனர்.

இங்கு தங்கியுள்ள 30 வயது பெண் நோயாளிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காப்பக நிர்வாகிகள் அவரை அருகில் உள்ள அரசு நகராட்சி ஆஸ்பத்திரியில் கடந்த 26ம் தேதி அனுமதித்தனர்.

[Continue reading...]

Saturday, 31 August 2013

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை 3 years sentence to juvenile in Delhi molestation case

- 1 comments

டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் முதல் தீர்ப்பு: குற்றம் சாட்டப்பட்டவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை 3 years sentence to juvenile in Delhi molestation case

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக அடித்து கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ராம்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். இவர்களில் ஒரு குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மீதான வழக்கு மட்டும் டெல்லியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
[Continue reading...]

Tuesday, 27 August 2013

பெங்களூரில் குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன் கைது Bangalore Police arrest suspected serial child

- 0 comments

பெங்களூரில் குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன் கைது Bangalore Police arrest suspected serial child

பெங்களூர், ஆக. 27-

பெங்களூரில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குழந்தையை கடத்தி, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 குழந்தைகள் கடத்தப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட குழந்தைகள் அனைவரும் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள். குழந்தைகளை கடத்தும் அந்த ஆசாமி, வெகு தூரம் கொண்டு சென்று பாலியல் தொல்லை கொடுத்து பின்னர் விடுவித்துள்ளான். இதனால் அனைத்து குழந்தைகளும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகள் கடத்தல் வழக்கு தொடர்பாக, 30 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 31 கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளான்.

மேலும் பல்வேறு பைக், நகை திருட்டுக்கள் மற்றும் மோசடியிலும் அவன் ஈடுபட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

[Continue reading...]

Monday, 26 August 2013

கம்பம் அருகே டியூசன் சென்ற மாணவி கற்பழிப்பு: ஆசிரியர் கைது kampam near tution went student harassment teacher arrested

- 0 comments

கம்பம் அருகே டியூசன் சென்ற மாணவி கற்பழிப்பு: ஆசிரியர் கைது kampam near tution went student harassment teacher arrested

26 Aug 13 10:55:32 AM by Tamil  |   Tags : தினசரி செய்திகள் , Daily News   

கம்பம், ஆக. 26-

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த அந்த மாணவி, ஆசிரியர் ரவிக்குமாரிடம் டியூசன் படித்து வந்தார். சம்பவத்தன்று டியூசன் சென்ற மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் ரவிக்குமார், பின்னர் அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறத

[Continue reading...]

Sunday, 25 August 2013

புனே அருகே 11 வயது சிறுமி கற்பழிப்பு

- 0 comments

மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள கிராமம் கலாண்ட்வாடி. இந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை 22 வயது வாலிபர் ஒருவர் வழிமறித்து கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்கு அந்த சிறுமியை கற்பழித்தார். பின்னர் அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல டெல்லியில் 17 வயது இளைஞரை அவரது நண்பர்களே குத்தி கொன்றனர்.

டெல்லி சிரகவில் உள்ள மயூர்விகார் பகுதியை சேர்ந்தவர் ரவி. தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் சிறிய தகராறு ஏற்பட்டது. 4 பேரும் சேர்ந்து ரவியை பீர் பாட்டிலால் குத்தினார்கள். பின்னர் அவர்கள் கல்லால் அவரது முகத்தை சிதைத்தனர்.

போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்தனர்.

[Continue reading...]

Friday, 23 August 2013

16 வயது சிறுமியை கற்பழித்த மந்திரவாதி தலைமறைவு police search to nab gujarat godman for molesting minor girl

- 0 comments

பேய் ஓட்டுவதாக கூறி 16 வயது சிறுமியை கற்பழித்த மந்திரவாதி தலைமறைவு police search to nab gujarat godman for molesting minor girl 

 

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பம் நீண்ட காலமாக சொத்துப் பிரச்சினை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக சிக்கலில் மாட்டித் தவித்தது.

அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த ஹரி பிரம்மன் என்ற மந்திரவாதி அடிக்கடி அவர்களின் வீட்டுக்கு வந்து மந்திர தந்திரங்களை செய்து வந்தான்.

நேற்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அவசரமாக ஓடிவந்து கதவை தட்டிய மந்திரவாதி, ‘நல்ல நேரம் முடிவதற்குள் உடனடியாக பூஜை செய்ய வேண்டும்’ என கூறி உள்அறைக்கு சென்றான்.

‘உங்களது பீடை ஒழிய உங்கள் இளைய மகளை தனியாக வைத்து பூஜிக்க வேண்டும். அவளிடம்தான் தெய்வீக சக்திகள் குடிகொண்டு இருக்கின்றன’ என்று கூறிய ஹரி பிரம்மன் அவர்களின் 16 வயது மகளை தனிஅறைக்கு அழைத்துச் சென்றான். பெற்றோர்களை அறையை விட்டு வெளியேறும்படி கூறிய அவன், கதவை உள்பக்கம் தாளிட்டுக் கொண்டு அந்த சிறுமியை கதறக்கதற கற்பழித்தான்.

எல்லாம் முடிந்த பிறகு அந்த பெண் மயங்கி விழுந்தாள். ஒன்றும் நடக்காததுபோல் வெளியே வந்த மந்திரவாதி, ‘உங்கள் மகள் மீது தெய்வத்தின் அருள் வந்து அவள் மயங்கி விழுந்து விட்டாள். சிறுதி நேரத்தில் மயக்கம் தெளிந்து விடும். எனக்கு இன்னொரு வீட்டில் அவசரப் பூஜை இருக்கிறது’ என்று கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து நழுவினான்.

மயக்கம் தெளிந்த சிறுமி பெற்றோரிடம் உள்ளே நடந்த அக்கிரமத்தை கூறி அழுதாள். இதனையடுத்து அவர்கள் டியோடர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் சர்தார் புரா பகுதியை சேர்ந்த போலி மந்திரவாதி ஹரி பிரம்மனை வலை வீசி தேடிவருகினறனர்.

[Continue reading...]

Friday, 9 August 2013

குடித்துவிட்டு சக தோழியை கதறக் கதற கற்பழித்த நான்கு கல்லூரி மாணவிகள்

- 0 comments
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கல்வி பயில வந்த மாணவியை, கல்லூரி விடுதியில் சக மாணவிகள் நான்கு பேர் குடித்துவிட்டு, தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


ஆண்களால் தான் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் என மக்கள் ஒருபுறம் அதற்காகப் போராடிக் கொண்டிருக்க, பெண்களாலேயே பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.


சக மாணவியை காமக் கண்களோடு பார்த்ததோடு, பாலியல் சித்ரவதையும் கொடுத்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்திய குற்றவாளிகளும் கல்லூரி மாணவிகள் தான்.
[Continue reading...]

Monday, 29 July 2013

சென்னை யில் வேலை செய்யும் பெண்களின் நிலமை ? - கற்பழித்த கொல்லப்பட்ட பெண்

- 0 comments
தயவுசெய்து இதனை பகிருங்கள்
உண்மை சம்பவம் ... முழுவதும்
படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! !
....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்...
சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும்
ஜெயசந்திரன் குழுமங்களில்
வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில்
தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும்
பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும்
நடத்தபடுகின்றனர
பெரும்பாலான பெண்கள்
[Continue reading...]

Saturday, 27 July 2013

ஓடும் ரெயிலில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர்

- 0 comments

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை, ரெயிலில் சென்ற
இளம்பெண்ணை ஒரு ஆசாமி மானபங்கம்
செய்துள்ளான். செல்போனை பிடுங்கியதுடன்,
அவரை கற்பழிக்க முயன்றதாகவும் தெரிகிறது.
உதவிக்கு ஆள் இல்லாததால் மானத்தைக்
காப்பாற்றிக் கொள்ள அந்த பெண், பேலூர் என்ற
இடத்தில் ரெயில் சென்றபோது கீழே குதித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த
அந்த பெண்ணை உள்ளூர் மக்கள்
காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறிய
முதல்வர் மம்தா பானர்ஜி, தேவையான
மருத்துவ செலவை ஏற்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், ஓடும் ரெயிலில்
இளம்பெண்ணை மானபங்கம் செய்த வழக்கில்,
உத்தர்பாராவைச் சேர்ந்த தேப்சங்கர் சாவ் (36)
என்பவரை கொல்கத்தா போலீசார்
நேற்று கைது செய்துள்ளனர்.

[Continue reading...]

Thursday, 25 July 2013

பீகாரில் 2 நாட்களில் 3 பெண்கள் கற்பழிப்பு 2 days 3 women torture in bihar

- 0 comments
டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி விட்டன. பீகாரில் இந்த வாரம் 2 நாட்களில் 2 பெண்களும், ஒரு சிறுமியும் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
முதலாவது சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்தது. அர்வால் மாவட்டம் கிண்டார் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் கணவர் மீது புகார் கொடுப்பதற்காக கோர்ட்டுக்கு வந்து இருந்தார்.

இரவு 7 மணி ஆகி விட்டதால் வீடு திரும்புவதற்காக காத்து இருந்தார். அப்போது ஒரு மினி பஸ் வந்தது. அதில் 2 டிரைவர்கள் இருந்தனர். அவர்கள் அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக ஏமாற்றி ஏற்றிச் சென்று ஓடும் பஸ்சில் ஒருவர் மாறி ஒருவர் கற்பழித்தனர்.
[Continue reading...]

Tuesday, 23 July 2013

9 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை

- 0 comments
அரியானா மாநிலம், குர்கான் 31வது செக்டர் பகுதியில் வசிக்கும் 9 வயது மாணவி தனது பள்ளித் தோழியை சந்திக்க கடந்த திங்கட்கிழமை அவளது வீடு தேடி சென்றாள்.

வீட்டில் அந்த மாணவியின் தந்தை மட்டும் தனியே இருந்தார்.

உன் தோழி கடைக்கு போய் இருக்கிறாள். அவள் வரும் வரை உள்ளே வந்து உட்கார் என்று கூறிய அவர் சிறுமி உள்ளே நுழைந்ததும் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.

அவரது பிடியில் இருந்து விடுபட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்ற சிறுமி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதாள்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் அவள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதால் குற்றம் சாட்டப்பட்ட செடிலால் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
[Continue reading...]

Sunday, 21 July 2013

14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22வயது பெண்

- 0 comments
14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22
வயது பெண்ணுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 2
ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது.
இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில்
வசிக்கும் 14 வயது சிறுவன் தனது சித்தியின்
கிரெடிட் கார்ட் மூலம் கஞ்சா வாங்கியதும்,
விடுதியில் தங்கியிருந்ததும்
அவனது பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து, பெற்றோர் அந்த
சிறுவனை மிரட்டி விசாரித்த போது, தனது 22
வயது ‘ஆசை நாயகி’யுடன்
கஞ்சா போதையில் ஓட்டலில்
தங்கியிருந்ததை ஒப்புக் கொண்டான்.
அந்த பெண்ணுடன்
[Continue reading...]

Tuesday, 16 July 2013

கற்பழிப்பு நகரம் டெல்லி யில் 12 வயது பெண் அத்தை மகனாலும் அண்ணனாலும் கற்பழிப்பு

- 0 comments
வடக்கு டெல்லியில் வசிக்கும் 12
வயது சிறுமியை அவரது அத்தை மகனான 25
வயது வாலிபர் கடந்த வாரம்
கற்பழித்துவிட்டார். இதுதொடர்பாக, அந்த
சிறுமியின் பெற்றோர் அளித்த
புகாரையடுத்து அந்த வாலிபரை போலீசார்
கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி,
மனவேதனை, உடல் வேதனையில்
இருந்து இன்னும் மீளாத அந்த
சிறுமி நேற்று முன்தினம்
இரவு குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக்
கொண்டிருந்தார். அப்போது, உடன் பிறந்த
அண்ணனான 14 வயது சிறுவன் அந்த
சிறுமியின் வாயை துணியால்
பொத்தி கற்பழித்துவிட்டு பயத்தில்
வீட்டை விட்டே ஓடிவிட்டான்.
தலைமறைவாக இருக்கும் அந்த
சிறுவனை போலீசார் தீவிரமாக
தேடி வருகிறார்கள்.
பட்ட காலிலேயே படும் என்பது அந்த
சிறுமியை பொருத்தவரை சரியாகதான்
உள்ளது என்று அக்கம்பக்கத்தினர்
கவலையுடன் கூறினர்
[Continue reading...]

4 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 8 வாலிபர்கள்

- 0 comments
ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்ட   லித்திபாரா பிளாக்கில் உள்ள ஒரு   பழங்குடியினர் மாணவியர் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு முகமூடி கும்பல் ஆயுதங்களுடன் புகுந்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்த 4 சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் உடனடியாக சரண் அடையும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், மாணவிகளை கடத்தி பலாத்காரம் செய்த கும்பலில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தாலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே இதுபோன்ற வழக்குகள் உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
[Continue reading...]

Tuesday, 2 July 2013

மாணவியை நண்பனின் வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த காமுகன்

- 0 comments
7ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று 4
நாட்களாக நண்பனின் வீட்டில்
அடைத்து வைத்து கற்பழித்த
வாலிபனை டெல்லி போலீசார்
கைது செய்துள்ளனர்.
கிழக்கு டெல்லியில் உள்ள
கல்யாண்புரி பகுதியில் வசிக்கும் ஒருவர், 7ம்
வகுப்பில் படித்து வந்த தனது 16
வயது மகளை காணவில்லை என்று போலீசில்
புகார் அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் அப்பகுதியில்
உள்ளவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மாணவியின் வீட்டின் அருகில் வசிக்கும் சந்தன்
(24) என்பவன் மீது தங்களுக்கு சந்தேகமாக
இருப்பதாக பெற்றோர் போலீசாரிடம்
தெரிவித்தனர்.
[Continue reading...]

Wednesday, 19 June 2013

பெண்களை கற்பழிக்கும் ‘நிர்வாண மனிதர்கள்’ naked men panic

- 0 comments
அசாம் தேஜ்பூர் பகுதியில் ஆடையில்லா மனிதர்கள் பெண்களை கற்பழிக்கும் நோக்கில் அலைந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்த வதந்தி பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவத்தொடங்கியது. இதனால் கிராம மக்கள் தங்களது பெண்களை காப்பாற்ற பயங்கர ஆயுதங்களுடன் இரவில் ரோந்து சுற்றி வருகின்றனர்.  

இந்நிலையில் சோனித்பூர் மாவட்டம் பலிஷிஹா கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், பயங்கர ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு நேற்று இரவு முழுவதும் கண்காணித்து வந்தனர். அப்போது அதிகாலையில் 3 பேர் ஒரு வாகனத்தில் வந்துள்ளனர். உடனே அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்ததால், பெண்களை கெடுக்க வந்த ஆடையில்லா மனிதர்கள் என நினைத்து கையில் இருந்த ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகுதான், கொலை செய்யப்பட்ட மூவரும், கார்கள் மற்றும் காரிலிருந்து எண்ணெய் திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. எனவே, வதந்திகளை நம்பவேண்டாமென பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். 
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger