Friday 27 September 2013

சாம்பியன்ஸ் லீக்: மும்பை அணி வெற்றி CLT20 league stage Mumbai won

- 0 comments

சாம்பியன்ஸ் லீக்: மும்பை அணி வெற்றி CLT20 league stage Mumbai won

Tamil NewsYesterday, 05:30

ஜெய்ப்பூர், செப். 28-

5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியின் 7-வது நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெறும் ஏ பிரிவு லீக்கில் ஐ.பி.எல். சாம்பியன் மும்பை இந்தியன்சும், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த லயன்சும் சந்தித்தன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதையடுத்து முதலில் களம் இறங்கிய லயன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்தது.

பின்னர் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

மும்பை அணியில் அதிபட்சமாக 63 ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்த டெயின் ஸ்மித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி danush and iswarya latest news

- 0 comments

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

மனைவியுடன் தனுஷ் சமீபத்தில் பல நாட்களாகப் பேசுவதில்லை. தனுஷ¨டன் ஒரு இளம் நடிகை உறவை பலப்படுத்திக் கொண்டதால், மனைவி தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறார். வெளிப்பார்வைக்கு தனுஷ் அப்பாவியாகத் தெரிகிறார்.

ஆனால் பலான விஷயத்தில் தீரர். அதனால்தான் சுருதிஹாசன் தனுஷிடம் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். பொதுவாக படத்துக்குப்படம் கதாநாயகிகளை மாற்றும் தனுஷ்க்கு அனைத்து நடிகைகளுடன் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆவதோடு எல்லா நடிகைகளும் தனுஷ் அணுகுமுறையை பாராட்டுகிறார்கள்.

இருந்தாலும் மனைவி ஐஸ்வர்யாவை பார்ப்பதையே தவிர்க்கும் தனுஷ், தன் குடும்பத்தில் புயல் வீசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இவர்களது மோதல் முற்றுவதை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவார்கள் என்று தெரிகிறது.

 

Show commentsOpen link

[Continue reading...]

சூர்யா நடிக்கும் ’எஸ்கிமோ காதல்’! சூது கவ்வும் இயக்குனரின் அடுத்த படைப்பு! Surya next movie

- 0 comments

சூர்யா நடிக்கும் 'எஸ்கிமோ காதல்'! சூது கவ்வும் இயக்குனரின் அடுத்த படைப்பு!

by admin
TamilSpyToday,

சிறிய பட்ஜெட் படம். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கதை இல்லை. படத்தில் ஹீரோ ஒரே ஒருமுறை தான் சிரிப்பார். ஆனால் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று, அதிக வசூலை அள்ளியது. சூது கவ்வும் திரைப்படத்தைப் பற்றி எதிர்காலத்தில் இப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்படலாம்.

மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சூது கவ்வும் திரைப்படத்தின் இயக்குனர் நளன் குமாரசாமி இயக்கவிருக்கும் திரைப்படத்திற்கு 'எஸ்கிமோ காதல்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நளனின் முதல் திரைப்படத்தைப் போலவே, இந்த திரைப்படத்தையும் திருமுருகன் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கிறது.

சூதுகவ்வும் திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோ அதே அளவிற்கு திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்தது உண்மை தான். சிங்கம் திரைப்படத்திற்குப் பிறகு ஜாலியாக ஒரு படம் நடிக்கவேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு நளனிடம் சூர்யா ஒரு ஸ்கிரிப்ட் கேட்டார். நளன் சுருக்கமாக கூறிய கதை மிகவும் பிடித்துவிட முழு கதையையும் தயார் செய்யச் சொல்லியிருந்தார்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த திரைப்படமும் தாமதமாகிக்கொண்டிருக்க, தற்போது நளன் 'எஸ்கிமோ காதல்' என்ற திரைப்படத்தை துவங்குவதால் சூர்யாவுடன் நளன் இணையும் படம் தான் இது என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பல பெண்களை தனது வலையில் விழவைத்த ராணுவ வீரர்!. உண்மைச் சம்பவம், காணொளி

Show commentsOpen link

[Continue reading...]

I Will Marry Simbu Only after 5 Years Says Hansika இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை

- 0 comments

I Will Marry Simbu Only after 5 Years Says Hansika - இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம
by vijigermany
New Tamil Jokes -  12:39

இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை : ஹன்சிகா அதிரடி!

இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார் ஹன்சிகா.

தமிழ் சினிமாவில் குட்டி குஷ்புவாக வலம் இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்ட இவர் அதனை ஒப்பனாக வேறு சொல்லிவந்தார்.

தற்போது 22 வயதையே எட்டியுள்ள இவர் கைவசம் 7 படங்கள் உள்ளனவாம்.

தமிழ், தெலுங்கு என நடித்து வரும் இவரது கால்ஷீட் டைரி குறைந்தது 5 வருடங்களுக்கு பிசி ஷெடியுல்தானாம்.

அதனால் காதலை ஒரங்கட்டிவிட்டு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம் இல்லை என்றும் தனது நடிப்புதான் முக்கியம் என கூறுகிறார் குட்டி குஷ்பு.

Show commentsOpen link

[Continue reading...]

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் சேர்ந்த சமந்தா! Vijay murugadass

- 0 comments

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் சேர்ந்த சமந்தா!

by abtamil

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படமான 'துப்பாக்கி' சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மாபெரும் வெற்றி வெற்றது. விஜய் சமீபத்தில் நடித்த படங்களில் இப்படம் பிரம்மாண்டமான படைப்பாக இருந்ததால் முருகதாஸ் மீது விஜய்க்கு தனி மரியாதையும் ஏற்பட்டது. ஆகையால், முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கலாம் என முடிவெடுத்தார் விஜய்.

'துப்பாக்கி'யைத் தொடர்ந்து 'தலைவா', 'ஜில்லா' ஆகிய படங்களுக்கு நடிக்க ஒப்புக்கொண்டிருந்த விஜய், 'தலைவா' வெளியானதைத் தொடர்ந்து தற்போது 'ஜில்லா' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தை முடித்ததும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன.

மிகப்பெரிய கதைக்களத்துடன் உருவாகும் அப்படத்திற்கு அதிரடி என பெயர் வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், முருகதாஸ் படத்திற்கான தலைப்பை மறுத்துவிட்டார். ஆனால், இவருடைய இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்பதற்கு எந்தவித பதிலும் கூறவில்லை.

இந்நிலையில், விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில்தான் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ஆனால் கதாநாயகி தேர்வு நடந்துவிட்டது. இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறாராம். மேலும், 'கொலவெறி' புகழ் அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இவர் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'ராஜாராணி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் இந்த புதிய படம் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என தெரிகிறது.

Show commentsOpen link

[Continue reading...]

3–வது நாளாக மழைநீடிப்பு: குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது 50 ஆயிரம் மக்கள் மீட்பு three days rain continue gujarat flood 50 thousand people Recovery

- 0 comments

3–வது நாளாக மழைநீடிப்பு: குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது 50 ஆயிரம் மக்கள் மீட்பு three days rain continue gujarat flood 50 thousand people Recovery
Tamil NewsToday, 05:30

ஆமதாபாத், செப். 27–

குஜராத்தில் 3 நாட்களாக பெய்த மழையில் பல நகரங்கள் வெள்ளத்தில் மதிக்கிறது. 50 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சவுராஷ்டிரா பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் ராஜ்கோட், ஆமதாபாத் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ராஜ்கோட்டில் சுரங்கப் பாதைகள் நீரில் மூழ்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.

சவுராஷ்டிரா பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 3000 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 7,700 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதே போல் மற்ற பகுதிகளில் வெள்ளத்தில் தந்தளித்த 50 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டு பள்ளிக்கூடங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்கோட்டில் 36 மணி நேரத்தில் 500 மி.மீ மழை கொட்டியது. ராஜகோட்டுக்கு குடிநீர் வழங்கும் பாதர் அணை நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதே போல் அஜி நயாரி அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜ்கோட், வதோதரா பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு அலுவலகங்கள் இயங்கினாலும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.

ராஜ்கோட்டில் ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் மும்பை ரெயில் உள்பட நீண்ட தூரம் செல்லும் ரெயில்கள் 8 ரத்து செய்யப்பட்டன. இதில் வதோதரா வழியாக செல்லும் விஸ்வாமித்ரி ஆற்றில் 29.6 அடி உயரத்துக்கு அபாய அளவை தொட்டவாறு வெள்ளம் ஓடுகிறது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாமா, ரபோரா நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வதோதராவில் வெள்ளத்தில் சிக்கிய 159 பேரை மீட்டனர்.

இதே போல் 4 படகுகளில் 4 அதிகாரிகள் தலைமையில் 45 மீட்பு படை வீரர்கள் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்தது 60 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு Mumbai building collapse 60 people trapped anxiety

- 0 comments

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்தது 60 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு Mumbai building collapse 60 people trapped anxiety
Tamil NewsToday, 05:30

மும்பை, செப். 27–

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. இதில் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் 60 பேரை மீட்கும் பணி நடைபெறுகிறது.

மும்பை டக்யார்டு ரோடு பாபுகெனு மார்க்கெட் பகுதியில் உள்ள 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மும்பை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த குடியிருப்பு கட்டிடத்தில் மாநகராட்சி ஊழியர்கள் வசித்து வந்தனர்.

இது 60 ஆண்டு பழமையான கட்டிடம் என்றும் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்தது. இன்று காலை 6.25 மணி அளவில் திடீர் என்று இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

அப்போது கட்டிடத்தின் உள்ளே 50 முதல் 60 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இடிபாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள்.

உடனே போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மும்பையின் பல்வேறு இடங்களில் இருந்து 12 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4 ஆம்புலன்ஸ் வேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் இடிபாடுகளை அகற்றி 4 பேரை மீட்டனர். உடனடியாக அவர்கள் அரசு ஜெ.ஜெ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

5 மாடி கட்டிடத்தில் தரை தளம் குடோனாக செயல்பட்டது என்றும், கட்டிடத்தில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் அருகில் வசித்து வரும் ஒருவர் தெரிவித்தார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger