Friday 27 September 2013

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்தது 60 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு Mumbai building collapse 60 people trapped anxiety

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்தது 60 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு Mumbai building collapse 60 people trapped anxiety
Tamil NewsToday, 05:30

மும்பை, செப். 27–

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. இதில் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் 60 பேரை மீட்கும் பணி நடைபெறுகிறது.

மும்பை டக்யார்டு ரோடு பாபுகெனு மார்க்கெட் பகுதியில் உள்ள 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மும்பை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த குடியிருப்பு கட்டிடத்தில் மாநகராட்சி ஊழியர்கள் வசித்து வந்தனர்.

இது 60 ஆண்டு பழமையான கட்டிடம் என்றும் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்தது. இன்று காலை 6.25 மணி அளவில் திடீர் என்று இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

அப்போது கட்டிடத்தின் உள்ளே 50 முதல் 60 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இடிபாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள்.

உடனே போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மும்பையின் பல்வேறு இடங்களில் இருந்து 12 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4 ஆம்புலன்ஸ் வேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் இடிபாடுகளை அகற்றி 4 பேரை மீட்டனர். உடனடியாக அவர்கள் அரசு ஜெ.ஜெ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

5 மாடி கட்டிடத்தில் தரை தளம் குடோனாக செயல்பட்டது என்றும், கட்டிடத்தில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் அருகில் வசித்து வரும் ஒருவர் தெரிவித்தார்.

...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger