Showing posts with label Tamil News. Show all posts
Showing posts with label Tamil News. Show all posts

Friday, 24 January 2014

குடிகாரனை எல்லாம் தலைவனாக ஏற்று கொள்ள முடியாது. தி.மு.க. தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி Today Chennai mk azhagiri interview dmk election failed

- 0 comments

குடிகாரனை எல்லாம் தலைவனாக ஏற்று கொள்ள முடியாது. தி.மு.க.  தோற்கும்: மு.க.அழகிரி பேட்டி Today Chennai mk azhagiri interview dmk election failed

 

 

சென்னை, ஜன. 25–
தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்து வந்த மு.க.அழகிரி எம்.பி. கட்சியில் இருந்து நேற்று தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மு.க.அழகிரி எம்.பி. அளித்த பேட்டி விவரம் வருமாறு:–
கட்சியில் இருந்து என்னை ஏன் என்று நீக்கினார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. நான் ஹாங்காங் சென்றேன். அந்த தகவலை கட்சி தலைமைக்கு தெரிவிக்கவில்லை. அதனால்கூட என்னை நீக்கி இருக்கலாம். தி.மு.க.வில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை.
மதுரையில் சிலர் மீது சாதியை சொல்லி வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். ஒருவர் சாதியை சொல்லி திட்டியது உண்மை என்றால், அவர் புகார் செய்ய வழி இருக்கும்போது புகார்தான் செய்வார். உங்களை திட்டினால் சும்மா இருப்பீர்களா?.
என்னை கட்சியில் இருந்து நீக்கியபின் எனது ஆதரவாளர்கள், தொண்டர்கள் அதிக பலத்துடன் இருக்கிறார்கள். என் நிலைப்பாடு குறித்து வருகிற 30–ந்தேதி மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடக்கும் பிறந்தநாள் விழாவில் தெரிவிப்பேன்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வந்து தொண்டர்களை சந்தித்து பேசுவேன். அதுவரை அமைதியாக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளேன். தி.மு.க.வில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
எனது ஆதரவாளர்கள் மீது மட்டும்தான் சஸ்பெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இது ஏன் என்று எனக்கு புரியவும் இல்லை. தெரியவும் இல்லை.
இதுபற்றி நான் தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினேன். ஆனால் அவர் எனக்கு இது தொடர்பாக எதுவுமே சொல்லவில்லை. ஆனால் நான் பேசி விட்டு சென்ற உடன் என்னை நீக்கி இருக்கிறார்கள்.
மு.க.ஸ்டாலினை நான் தலைவராக ஏற்க மாட்டேன் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். அவரை ஒரு போதும் தலைவராக ஏற்க மாட்டேன்.
என் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தப் பிறகு ஸ்டாலின் தலைமையை நாங்கள் ஏன் ஏற்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளால் நாங்கள் துவண்டு விடமாட்டோம். முன்பை விட ஏழை மக்களுக்கு அதிக அளவில் உதவிகள் செய்யப்படும்.
தி.மு.க.வுக்காக உழைத்த தொண்டர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் நீக்கியுள்ளனர். இது சரியானது தானா என்றுதான் நியாயம் கேட்டேன். நான் நியாயம் கேட்கக் கூடாதா? அதற்காக என்னையும் நீக்கி உள்ளனர்.
தலைவரிடம் பேச எனக்கு உரிமை இல்லையா? நான் உரத்தக் குரலில் பேசவேக் கூடாதா? அப்படியானால் தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்றுதானே அர்த்தம்.
நான் சொல்வதை கேட்காத தலைவர், ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்கிறார். தலைவரும், பொதுச் செயலாளரும் ஸ்டாலின் சொல்வதைத் தான் செய்கிறார்கள்.
எனக்கு தென்மண்டல அமைப்பாளர் பதவியைக் கொடுத்துள்ளனர். ஆனால் என்னிடம் எதுவுமே கேட்பது இல்லை. என்னை கலந்து ஆலோசிக்காமலே தென் மாவட்ட தி.மு.க. பற்றி முடிவு எடுத்தால் என்ன அர்த்தம்?
எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. கட்சி ரீதியாகத்தான் பிரச்சினை உள்ளது.
ஸ்டாலின் பதவிக்கு ஆசைப்படுபவர். ஆனால் நான் அப்படி அல்ல. ஒரு போதும் பதவிக்காக கவலைப்பட்டதே இல்லை. மீண்டும் தலைவரை உடனடியாக சந்திக்கும் திட்டம் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. கட்சியில் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை.
அப்படி இருக்கும் போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? ஒரு போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன். அதுபோல விளக்கக் கடிதம் எதுவும் தலைமைக்கு அனுப்பமாட்டேன்.
என்னை நீக்கியதால் தி.மு.க. மீதான குடும்ப அரசியல் என்ற பழி துடைக்கப்பட்டுள்ளதாக வீரமணி கூறியுள்ளார். அவர் ஒரு அரசியல் வியாபாரி. எங்கே ஆதாயம் கிடைக்கிறதோ அங்கே போய் சேர்ந்து விடுவார்.
கருணாநிதி முதல்வரானதும் தி.மு.க.வை புகழ்ந்தார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் சமூக நீதி காத்த வீராங்கனை என்றார். ஆதாயம் கிடைக்கும் இடத்துக்கு ஏற்ப மாறி, மாறி பேசுவார்.
கட்சியில் இருந்து நான் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது இது இரண்டாவது முறை. அந்த அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. இதற்காக நான் என் தொண்டர்களை ஒரு போதும் கைவிட்டு விடமாட்டேன்.
ஸ்டாலின் இப்போது தி.மு.க. தலைவர் மாதிரி செயல்பட ஆரம்பித்து விட்டார். அவருக்கு கட்சியில் பொருளாளர் பதவியை கொடுத்திருக்கிறார்கள். அவர் அதை மட்டும்தான் செய்ய வேண்டும்.
ஆனால் மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதனால் தி.மு.க.வின் சொத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்வது போல எனக்கு தோன்றுகிறது.
தி.மு.க. தலைவரை யாரோ ‘‘பிளாக்மெயில்’’ செய்கிறார்களா? என்று எனக்கு தெரியவில்லை. ஸ்டாலினை பொருத்தவரை அவர் பதவிக்காக எதையும் செய்வார். இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.
நான் நியாயத்துக்காக போராடுவேன். 30–ந்தேதி என் ஆதரவாளர்கள் நடத்தும் விழாவில் பங்கேற்பேன். அப்போது நான் எல்லாவற்றையும் சொல்வேன்.
என்னை நீக்கிய பிறகு தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி அமைக்கும் என்று சொல்கிறார்கள். அப்படி கூட்டணி ஏற்பட்டால் இரு கட்சிகளுக்குமே லாபம் ஏற்பட போவதில்லை. தே.மு.தி.க.வை நம்பி தி.மு.க. வெற்றி பெற முடியாது.
அ.தி.மு.க.வினர் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று இப்போதே பணிகளை தொடங்கி விட்டனர். இதற்கான எல்லா முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுவார்கள்.
என் மீதான நடவடிக்கை எனக்கு இன்னமும் ஆச்சரியமாக உள்ளது. தலைவர் ஒப்புதல் இல்லாமல் கூட இது நடந்து இருக்கலாமோ என்று நினைக்கிறேன். கட்சிக்காக நான் செய்த பங்களிப்பு எல்லோருக்கும் தெரியும். எனக்கு எப்போதுமே கருணாநிதிதான் தலைவர். அவர் இல்லாத தி.மு.க.வை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.
இவ்வாறு மு.க.அழகிரி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று மு.க.அழகிரி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தி.மு.க.வில் ஜனநாயகம் செத்து விட்டது. நியாயத்துக்காக போராடியதற்காக தி.மு.க.வில் இருந்து நீக்கி விட்டார்கள். ‘வருங்காலமே’ என்று சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தி.மு.க.வுக்கு போட்டி வேட்பாளர்கள் தேவை இல்லை. தி.மு.க. தானாகவே தோற்கும். கட்சியில் இருந்த முறை கேடுகளை எடுத்து கூற முற்பட்டது நான் செய்த தவறு.
தி.மு.க.வில் நடந்து இருக்கும் ஊழலுக்கான ஆதாரங்களை மதுரையில் வெளியிடுவேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

 

[Continue reading...]

Monday, 20 January 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது teacher qualifying exam verifying started working

- 0 comments
சென்னை, ஜன. 21-

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக கிடக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்
ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. அதில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்க பள்ளி
கல்வித்துறை முடிவு செய்தது.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு தனியாகவும், பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கு தனியாகவும்
ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைத்தாள்கள்
மறு மதிப்பீடு செய்யப்பட்டு முடிவு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த
மாவட்டங்களில் 20–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து
இருந்தது.
அதன்படி நேற்று தமிழ்நாடு முழுவதும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது. சென்னையில் அசோக் நகர் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளியில் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. எனவே அவர்கள் அதற்கான சான்றிதழை படித்த
நிறுவனத்தில் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
இது குறித்து ஒரு பட்டதாரி கூறுகையில், நான் பட்டப்படிப்பை ஆங்கிலத்தில் படித்தேன். பி.எட். படிப்பை தமிழில்
படித்தேன். அதற்கு மதிப்பெண் உண்டா, சலுகை உண்டா என்ற விவரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கமாக
தெரிவிக்கவில்லை என்று புகார் கூறினார். 
[Continue reading...]

Monday, 21 October 2013

மணலியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி atm machine break attempt robbery in manali

- 0 comments

மணலியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி atm machine break attempt robbery in manali

திருவொற்றியூர்,அக். 21–

மணலி, காமராஜர் சாலையில் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை. இன்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு சென்றவர்கள் எந்திரம் உடைந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மணலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் குத்தி உடைத்து இருப்பது தெரிந்தது. பணத்தை எடுக்க முடியாததால் அவர்கள் திட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர். இதனால் பல லட்சம் பணம் தப்பியது.

அங்கிருந்த ரகசிய காமிராவை போலீசார் ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தது பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணை நடந்து வருகிறது.

கொள்ளை கும்பல் ரகசிய காமிரா இருப்பதை கவனிக்காததால் அதனை சேதப்படுத்தாமல் சென்றுள்ளனர்.

...

shared via

[Continue reading...]

இன்று 4–வது நாளாக தேடுதல்வேட்டை: தங்கபுதையல் சாமியாருக்கு நரேந்திரமோடி ஆதரவு Modi to support the priest gold treasure

- 0 comments

இன்று 4–வது நாளாக தேடுதல்வேட்டை: தங்கபுதையல் சாமியாருக்கு நரேந்திரமோடி ஆதரவு Modi to support the priest gold treasure

அலகாபாத், அக்.21–

உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஷோபன்சர்க்கார் என்பவர், ராஜா ராவ்ராம் பக்சிங் தன் கனவில் தோன்றி உன்னாவ் பகுதியில் உள்ள தமது கோட்டையில் 1000 டன் தங்கத்தை புதைத்து வைத்து இருப்பதாக கூறியதாக தெரிவித்தார்.

அந்த 1000 டன் தங்கத்தை அரசு தோண்டி எடுக்க வேண்டும் என்று அவர் கடந்த சில ஆண்டுகளாக கூறி வந்தார்.

இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அந்த கோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை தங்கம் தேடும் பணியை தொடங்கியது. ஜேசிபி எந்திரங்கள் மற்றும் ஆழ்துளை கருவிகள் மூலம் கோட்டை பகுதியில் தங்கம் புதைக்கப்பட்டுள்ளதா என்று தேடப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. இன்று (திங்கட்கிழமை) 4–வது நாளாக தங்கம் தேடும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே 1000 டன் தங்கம் தேடப்படுவதை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் இதுபற்றி கூறுகையில், ''1000 டன் தங்கம் தேடுவதை எல்லா நாடுகளும் உற்றுப் பார்க்கின்றன. இது தேவை இல்லாதது. அங்கு தங்கம் தோண்டுவதை விட்டு விட்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள 1000 டன்னுக்கு மேல் உள்ள தங்கத்தை திரும்ப கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

மோடியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்து சாமியாரை அவர் அவமதித்து விட்டதாக கூறப்பட்டது.

சில இந்து அமைப்புகள் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி தங்கள் அதிருப்தியை வெளியிட்டன.

இதையடுத்து நரேந்திர மோடி உத்தரபிரதேச சாமியாருக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ''கடந்த பல ஆண்டுகளாக லட்சக் கணக்கான மக்கள் கோபன் சர்க்கார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவரது தியாகத்துக்கு நான் தலைவணங்குகிறேன்'' என்று கூறியுள்ளார்.

...

shared via

[Continue reading...]

Sunday, 20 October 2013

மாணவர்களை கற்பழித்த ஆசிரியை! – மாணவனை பலாத்கரித்த அதிபர்! (படங்கள் இணைப்பு)student rape by teacher

- 0 comments

மாணவர்களை கற்பழித்த ஆசிரியை! – மாணவனை பலாத்கரித்த அதிபர்! (படங்கள் இணைப்பு)

North Carolina வை சேர்ந்த 49 வயதாகும் David Ellis Edwards என்ற Douglas Byrd நடுத்தர பாடசாலையின் அதிபர், மாணவனை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார். 

இவரது அலுவலக வாசலின் முன்னர் அம் மாணவனது பெற்றோர் காத்திருந்த வேளையில், தனது அலுவலகத்தினுள் இவ் வக்கிர செயலை புரிந்துள்ளமை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அவர்மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல மாணவர்களை இவர் துஷ்பிரயோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்றம் இவருக்கு $140,000 பிணை விதித்துள்ளது.

இந் நிலையில்…

Grand Rapids பாடசாலை ஆசிரியை ஒருவர், தன்னிடம் கல்விபயின்ற 15 – 16 வயதுகளுக்கு இடைப்பட்ட நான்கு மாணவர்களை பலாத்காரம் செய்தமை தொடர்பில் கைதாகியுள்ளார்.

தற்போது பாடசாலையில் இருந்து பதவி நீக்கப்பட்டிருக்கும் இவர், விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவருக்கு 8 – 15 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டணை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

shared via

[Continue reading...]

தேதி அறிவித்த பின் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு: சீமான் பேட்டி After announced coalition parliamentary election date seeman Interview

- 0 comments

தேதி அறிவித்த பின் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு: சீமான் பேட்டி After announced coalition parliamentary election date seeman Interview

மயிலாடுதுறை, அக்.21–

மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் நாகை வடக்கு மாவட்டம் சார்பில் கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதில் கலந்துகொள்ள வருகை தந்த கட்சியின் தலைவர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருவாரூர் மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு எடுப்பதை கண்டித்து வருகிற 23ந் தேதி(புதன்கிழமை) குடவாசலில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதில் திரளான விவசாயிகள், கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.

இலங்கை போரின் இறுதி கட்டத்தில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற அவலத்தை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அடுத்த மாதம் 8, 9ந் தேதிகளில் பிரசார பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் தமிழ் தேசிய இயக்க அமைப்பாளர் பழ.நெடுமாறன், நடராசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். நரேந்திரமோடி பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனியார் மயம், பொருளாதார கொள்கை மட்டுமே பேசுகிறார்.

ஆனால் நாட்டின் பாதுகாப்பு குறித்து இதுவரை பேசவில்லை. கச்சத்தீவில் சீனா முகாமிட்டுள்ளது. இதனால் நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் கலியபெருமாள், சாகுல்அமீது, நடராசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

...

shared via

[Continue reading...]

டெல்லி வாக்காளர்களிடம் வீடுவீடாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டுவேட்டை Aravind Kejriwal takes door to door campaign in Delhi

- 0 comments

டெல்லி வாக்காளர்களிடம் வீடுவீடாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் ஓட்டுவேட்டை Aravind Kejriwal takes door to door campaign in Delhi

புதுடெல்லி, அக்.21-

டெல்லி சட்டசபைக்கு வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தற்போதைய டெல்லி முதல் மந்திரி ஷீலா தீட்சித்தை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

பழைய டெல்லி பகுதியில் உள்ள வாக்காளர்களை நேற்று (ஞாயிறு) வீடுவீடாக சென்று சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் துடைப்பம் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவரை சூழ்ந்துக் கொண்ட அப்பகுதி மக்கள் மின் கட்டணம், குடிநீர் மற்றும் வடிகால் கட்டணங்களை டெல்லி அரசு உயர்த்திவிட்டது தொடர்பாக கவலை தெரிவித்தனர்.

அவற்றை பொறுமையாக கேட்டுக்கொண்ட கெஜ்ரிவால், எங்கள் கட்சியின் ஆட்சி அமைந்தால் உயர்த்தப்பட்ட கட்டணங்களை அனைத்தும் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

காரில் செல்லாமல் ஆட்டோவில் சென்று வாக்காளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவாலை பல பெண்கள் துடைப்பத்தை உயர்த்தி காட்டி வரவேற்றனர்.

அரசியலில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காகவே துடைப்பத்தை என் கட்சியின் சின்னமாக தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தாலும், துடைப்பத்தை உயர்த்தி காட்டி அவரை பெண்கள் வரவேற்பது தர்மசங்கடமாக உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.

...

shared via

[Continue reading...]

மழை பனிக் காலத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக எல்லையோரம் பதுங்கியுள்ள 700 பாக். தீவிரவாதிகள் 700 Pakistan militants ready to infiltrate Indian border

- 0 comments

மழை பனிக் காலத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக எல்லையோரம் பதுங்கியுள்ள 700 பாக். தீவிரவாதிகள் 700 Pakistan militants ready to infiltrate Indian border

ஜம்மு, அக்.21-

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் எல்லையோரம் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த 2 மாதங்களில் மட்டும் 150 முறைக்கும் மேலாக இதுபோன்ற தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ஆரம்பத்தில் சிறிய அளவிலான துப்பாக்கி சூட்டில் மட்டுமே ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் தற்போது ராக்கெட் மற்றும் மோர்டார் குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் மூர்க்கமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

எல்லைக் கோட்டுப் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பாகிஸ்தானின் அசுர தாக்குதலுக்கு பயந்து ஊரை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர்.

எல்லை பகுதியை மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே நாளை (22ம் தேதி) நேரில் சென்று பார்வையிட உள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு ஆர்.எஸ்.புரா செக்டரில் உள்ள 5 ராணுவ நிலைகளின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியது.

இரவு 9 மணிக்கு நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி தந்ததாகவும் இன்று அதிகாலை வரை துப்பாக்கி சண்டை நீடித்ததாகவும் ஜம்முவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோட்டின் அருகேயுள்ள பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் 40 தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் சுமார் 700 பேர், அடைமழை மற்றும் உறைபனி காலத்தை எதிர்நோக்கி இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக காத்திருப்பதாக நம்பத்தகுந்த உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

...

shared via

[Continue reading...]

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை பெண்ணிடம் டிக்கெட் பரிசோதகர் செக்ஸ் தொல்லை kanyakumari express train Ticket Examiner torture chennai woman

- 0 comments

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை பெண்ணிடம் டிக்கெட் பரிசோதகர் செக்ஸ் தொல்லை kanyakumari express train Ticket Examiner torture chennai woman

திருச்சி, அக். 20–

திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் 22 வயது மகள் நேற்று சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் தட்கல் டிக்கெட்டில் திருச்சிக்கு பயணம் செய்தார்.

இந்த ரெயில் விழுப்புரத்தை தாண்டி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க டிக்கெட் பரிசோதகர் ஒருவர் அந்த இளம்பெண் இருந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் டிக்கெட்களையும், அடையாள அட்டைகளையும் வாங்கி பார்த்து ஆய்வு செய்தார்.

அப்போது அந்த இளம் பெண்ணிடம் முறையான அடையாள அட்டை ஏதும் இல்லை என்பதால் ரூ.480 அபராதமாக வசூலிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்த டிக்கெட் பரிசோதகர் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் சத்தம் போடவே குடிபோதையில் இருந்த டிக்கெட் பரிசோதகர் அந்த பெண்ணுக்கு பொறுக்க முடியாத அளவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதை அருகில் இருந்த சக பயணிகள் தட்டி கேட்டும் அந்த டிக்கெட் பரிசோதகர் கண்டு கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் கதறியபடி தனது தாயாருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் உறவினர் 2 பேரை அழைத்துக்கொண்டு திருச்சி ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

இதற்கிடையே அந்த அந்த ரெயிலும் திருச்சி ரெயில் நிலையம் வந்தடைந்தது. டிக்கெட் பரிசோதகரின் தொந்தரவால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் கதறியபடி ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் தனியாக ரெயிலில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர் என்று ஆவேசமாக கூறி அந்த டிக்கெட் பரிசோதகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையில் உள்ள அவரை அரசு மருத்துமனையில் பரிசோதனை செய்து போதையில் இருப்பதற்கான சான்றிதழை வாங்க வேண்டும். இல்லையென்றால் ரெயிலை இங்கிருந்து நகர விடமாட்டோம் என்று ஆவேசமாக கூறினார்.

இதற்கிடையே ரெயில் மெதுவாக நகர்ந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினார். இதனால் மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரெயில்வே போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் அந்த பெண் டாக்டர் எந்த சமரசத்துக்கும் நான் உடன்படமாட்டேன். டிக்கெட் பரிசோதகரை கீழே இறக்கி பரிசோதனை செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தால் மட்டுமே ரெயிலை இங்கிருந்து நகர விடுவேன் என்று கூறினார்.

திடீர் திருப்பமாக அங்கு வேடிக்கை பார்த்த பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக களம் இறங்கினர். இதை தொடர்ந்து அந்த டிக்கெட் பரிசோதகரை கீழே இறக்கி ரெயில்வே போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பின்னர் சுமார் 40 நிமிடம் தாமதமாக 12.10 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

பின்னர் அங்கு வைத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அந்த இளம்பெண்ணின் தாயாரான டாக்டரும் புகார் எழுதி கொடுத்தார். இந்த நிலையில் அந்த டிக்கெட் பரிசோதகருக்கு ஆதரவாக 50–க்கும் மேற்பட்ட டிக்கெட் பரிசோதகர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த டிக்கெட் பரிசோதகர் விடுவிக்கப்பட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணும் அங்கிருந்து உறவினர்களுடன் புறப்பட்டார். சுமார் 3 மணி நேரம் திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்த பரபரப்பு அதன் பின்னர் அடங்கியது.

இந்த நிலையில் இன்று மதுரை ரெயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் பரிசோதகர்கள், நேற்று பிரச்சினையில் சிக்கிய அந்த டிக்கெட் பரிசோதகரை போலீசார் தரக்குறைவாக நடத்தியதாக கூறி பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பயணிகள் ரெயில், மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றில் டிக்கெட் பரிசோதகர்கள் பணிக்கு செல்ல வில்லை. அவர்கள் இல்லாமலேயே ரெயில் புறப்பட்டு சென்றது.

...

shared via

[Continue reading...]

Gautham Menon teams up with Ajith? - அஜித்துடன் இணையும் கௌதம் மேனன்!

- 0 comments

Gautham Menon teams up with Ajith? - அஜித்துடன் இணையும் கௌதம் மேனன்!

அஜித்துடன் இணையும் கௌதம் மேனன்!

ஸ்டைலிஷான இயக்குநர் என்று பெயர்பெற்ற கௌதம் மேனனுக்கு, மறுபடியும் நல்ல நேரம் வந்திருக்கிறது.

அஜித், சூர்யா என்று ஒவ்வொருவராக கௌதம் படத்தில் நடிக்க முதலில் ஆர்வமாக இருந்து, பின் கழன்று கொண்டனர். இப்போது மீண்டும் கௌதம் படத்தில் நடிக்க முன்வருகிறார்களாம்.

சூர்யா தான் வாங்கிய 5 கோடி அட்வான்ஸ் பணத்தைத் திருப்பித் தந்தார். ஆனால், இந்த உறவு பிரியாது. மீண்டும் கௌதமுடன் இணைவேன் என்று மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.

'அடுத்த வருஷம் மீண்டும் ஒரு சிறந்த படத்தோட நான் வந்து உங்களை சந்திப்பேன். அதுக்காக எடுத்த ஒரு இடைவெளியுடன் கூடிய முடிவுதான் அது. ரெண்டு பேருக்குமே ஒருத்தக்கொருத்தர் மரியாதை இருக்கு ' என்று ஒரு இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசினார்.

கௌதம் மேனனை மனதில் வைத்துதான் சூர்யா இதைப் பேசினார் என்பது விஷயம் அறிந்தவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

இப்போது அஜித் கௌதம் படத்தில் நடிக்க இருக்கிறார். 'வீரம்' படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன்தான் இயக்கப் போகிறார்.

shared via

[Continue reading...]

Saturday, 19 October 2013

ரஷியா உதவியுடன் கூடங்குளத்தில் 3, 4 வது அணு உலைகள் அமைக்க விரைவில் ஒப்பந்தம்: மன்மோகன்சிங் பேட்டி Manmohan singh says additional Nuclear reactors set up in Koodankulam agreement soon with Russia

- 0 comments

ரஷியா உதவியுடன் கூடங்குளத்தில் 3, 4 வது அணு உலைகள் அமைக்க விரைவில் ஒப்பந்தம்: மன்மோகன்சிங் பேட்டி Manmohan singh says additional Nuclear reactors set up in Koodankulam agreement soon with Russia

புதுடெல்லி, அக்.20-

பிரதமர் மன்மோகன்சிங் இன்று ரஷியா செல்வதையொட்டி, ரஷிய பத்திரிகையாளர்களுக்கு நேற்று டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடங்குளம் அணு மின்நிலையத்தில், 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்காக ரஷிய நிறுவனங்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விரைவில் கையெழுத்தாகும் என்று நம்புகிறேன். கடந்த 2010-ம் ஆண்டில் ரஷிய ஜனாதிபதி புதின் இந்தியா வந்தபோது ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஷியா ஒத்துழைப்புடன் அணுமின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்த இந்தியா ஆர்வத்துடன் உள்ளது.

கூடங்குளம் முதல் அணு உலை, கடந்த ஜூலை மாதத்தில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான ஆயத்த நிலையை எட்டியது. அங்கு விரைவில் மின் உற்பத்தி தொடங்கி விடும். 2-வது அணு உலை கட்டுமானப்பணி முன்னேற்றமான கட்டத்தில் உள்ளது.

கூடங்குளத்தை அடுத்து ரஷியா உதவியுடன் அணுமின்நிலையம் தொடங்குவதற்காக மேற்கு வங்காள மாநிலம், ஹரிபூரை தேர்வு செய்து இருக்கிறோம். ஹரிபூரில் அதற்கான சாத்தியம் இல்லை என்றால் மாற்று இடம் தேர்வு செய்து வழங்கப்படும் .

இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

...

shared via

[Continue reading...]

ரூ.20 லட்சத்தை படுக்கையில் தூவி படுத்து தூங்கிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் rs 20 lakh sleep Marxist communist person

- 0 comments

ரூ.20 லட்சத்தை படுக்கையில் தூவி படுத்து தூங்கிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் rs 20 lakh sleep Marxist communist person

அகர்தாலா, அக். 19–

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவர் சமர் ஆச்சார்ஜி. 42 வயதாகும் இவர் பில்டிங் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார்.

திரிபுரா தலைநகர் அகர்தாலாவில் மாநகராட்சி கட்டிட பணிகளை இவர் காண்டிராக்ட் அடிப்படையில் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். சமீபத்தில் அகர்தாலா மாநகராட்சிக்குட்பட்ட 3 வார்டுகளில் கழிவறை கட்டுவதற்கான ஒப்பந்தம் பெற்றார்.

இந்த பணி மூலம் தனக்கு ரூ.2½ கோடி லாபம் கிடைத்ததாக ஆச்சார்ஜி கூறினார். இந்த நிலையில் பணக்கட்டுகளுடன் சமர் ஆச்சார்ஜி இருப்பது போன்ற வீடியோ படக்காட்சிகள் அங்குள்ள டிவி சானலில் ஒளிபரப்பானது. இது திரிபுராவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோ பட காட்சியில் ஒரு படுக்கையில் பணத்தை தூவி அதன் மீது சமர் ஆச்சார்ஜி படுத்து தூங்குவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது. இது பற்றி ஆச்சார்ஜி கூறுகையில், ''பணம் மீது படுத்து தூங்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இதற்காக வங்கியில் இருந்து ரூ.20 லட்சம் எடுத்து வந்து படுக்கையில் பண நோட்டுக்களை தூவினேன்'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ''கம்யூனிஸ்ட் தலைவர்களில் பலர் பல கோடி சொத்து வைத்துள்ளனர். ஆனால் வெளியில் எளிமையானவர் போல வேஷம் போடுவார்கள். நான் அப்படி வாழ விரும்பவில்லை'' என்றும் தெரிவித்தார்.

சமரின் இந்த கருத்து திரிபுரா மாநில கம்யூனிஸ்டு தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

சமர்ஆச்சார்ஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 3 வார்டுகளில் கழிவறை கட்டியதன் மூலம் எப்படி ரூ.2½ கோடி சம்பாதிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு திரிபுரா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

...

shared via

[Continue reading...]

அ.தி.மு.க விற்கு எதிராக திரும்பும் தேவர் இனம் , பாரளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவுமா ? News to jeyalalitha

- 0 comments

நெல்லை தாது மணல் கடத்தல் விவகாரத்தில் வைகுண்ட ராஜன் கைது செய்யப்படாததை கணடித்து திருநெல்வேலி நகர் முழுவதும் சுவரொட்டி ஒன்று ஓட்டப்பட்டுள்ளது

அதில் கிராணைட் மோசடில் தேவருக்கு ஒரு நீதி !

தாது மணல் கடத்தலில் நாடாருக்கு ஒரு நீதியா ?

தாது மணல் கடத்தல் தலைவனை கைது செய் !

இல்லை எனில் பாருளுமன்ற தேர்தலில் அதிமுகவின்  ஓட்டு வங்கி திமுக அல்லது தேமுதிமுக  வுக்கு ஆதரவாக வாக்களிக்க தயார்

[Continue reading...]

அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பலுக்கும் தாது மணல் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு Thoothukudi engineer suicide attempt in america armed ship

- 0 comments

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பலில் என்ஜினீயர் தற்கொலை முயற்சி Thoothukudi engineer suicide attempt in america armed ship

தூத்துக்குடி, அக். 20-

அத்துமீறி ஆயுதங்களுடன் வந்த அமெரிக்க கப்பலில் இருந்த கேப்டன் ஒருவரும், என்ஜினீயர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இதில் கப்பலில் இருந்த என்ஜினீயர் திடீரென்று தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி கடல் பகுதியில் அமெரிக்க நாட்டை சார்ந்த 'சீமோன் கார்டு' என்ற கப்பல் அத்துமீறி நுழைந்தது. இந்த கப்பலை கடந்த 12-ந்தேதி தூத்துக்குடி கடல் படையினர் மடக்கிப்பிடித்தனர். இந்த கப்பலில் 10 மாலுமிகள், 25 சிப்பந்திகள் என மொத்தம் 35 பேர் இருந்தனர். நவீனரக துப்பாக்கிகளும் தோட்டாக்களும் அவர்களிடம் இருந்தன.

தூத்துக்குடியில் இருந்து அந்த கப்பலுக்கு சட்ட விரோதமாக யாரோ சிலர் டீசல் சப்ளை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு கியூ பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு துருவித்துருவி விசாரணை நடைபெற்றது.

அத்துமீறி ஆயுதங்களுடன் இந்திய கடற் பகுதிக்குள் நுழைந்த குற்றத்திற்காக, கப்பலில் இருந்த 35 பேரில் 33 பேர் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

கப்பலில் பராமரிப்பு பணிக்காக, கப்பலின் கேப்டன் உக்ரைன் நாட்டை சேர்ந்த டுட்னிக் வாலன்டைன், என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரி ஆகிய 2 பேரை மட்டும் கப்பலில் இருக்க அனுமதித்து இருந்தனர்.

நேற்று மதியம் 1 மணி அளவில் கியூ பிரிவு போலீசார் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் அமெரிக்க கப்பலுக்கு சென்றனர். கப்பல் முழுவதும் தீவிர சோதனை நடத்தினார்கள். அங்கு இருக்கும் அறைகள் மற்றும் சாமான்கள் வைத்து இருக்கும் இடம் என அனைத்து பகுதிகளையும் சோதனை செய்தனர்.

மேலும் கேப்டன் டுட்னிக் வாலன்டைன், மாலுமி சிடோரெல்கோ வாலேரி ஆகியோரிடமும் போலீசார் தனித்தனியாக துருவித்துருவி பல கேள்விகளை கேட்டனர்.

அப்போது என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரி, வேகமாக கப்பலின் மேல்பகுதிக்கு விரைந்து சென்றார். அங்கு இருந்த கொடிக்கம்பத்தில் கயிற்றை கட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதைக்கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன், பாய்ந்து சென்று சிடோரெல்கோ வாலேரி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்திவிட்டார். இதற்குள் அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்து தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயரை பிடித்தனர். இதனால் கப்பலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரி மற்றும் கேப்டன் டுட்னிக் வாலன்டைன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களை தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். தற்கொலைக்கு முயன்ற என்ஜினீயர் சிடோரெல்கோ வாலேரிக்கு மருத்துவ பரிசோதனையும், முதல் உதவி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. பின்னர் 2 பேரையும் முத்தையாபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

நேற்று இரவு 7-30 மணி அளவில் தூத்துக்குடி 2-வது மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) அகிலாதேவியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். நீதிபதி முன்னிலையில் 2 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை வருகிற 31-ந்தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து 2 பேரும் போலீஸ் வாகனம் மூலம் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு, ஏற்கனவே கப்பலில் இருந்து கைது செய்யப்பட்ட 33 பேர் அடைக்கப்பட்டு இருந்த பகுதியில் இந்த 2 பேரையும் அடைத்தனர்.

இதற்கிடையே அமெரிக்க கப்பலுக்கு டீசல் சப்ளை செய்ததது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவை சேர்ந்த படகு முகவர் மரிய அண்டன் வில்சன் (வயது 25), திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த படகு டிரைவர் செல்லம், தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டை சேர்ந்த இடைத்தரகர் வெங்கடேசன் ஆகியோரை கியூ பிரிவு போலீசார் நேற்று பிடித்தனர்.

பின்னர் 3 பேரையும் தனித்தனியாக ரகசிய இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடியில் எந்தெந்த பெட்ரோல் பங்குகளில் இருந்து டீசல் வாங்கப்பட்டது. அந்த டீசல் எந்த வழியாக? எப்படி கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டு அமெரிக்க கப்பலுக்கு சப்ளை செய்யப்பட்டது. இதற்காக எவ்வளவு பணம் கை மாறியது. எந்த வகையில் டீசல் பெறுவதற்கு தொடர்புகள் அமைந்தன. இதே போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னர் நடந்து இருக்கிறதா? இந்த கும்பலுக்கு வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு உள்ளதா? என்று கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் அளிக்கும் தகவல்களில் ஏற்படும் முரண்பாடுகளை கொண்டு அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்று கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி 3 பேரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

...

shared via

[Continue reading...]

சென்னை என்ஜினீயரிங் மாணவர் கொலையில் நண்பர் கைது Chennai engineering student murder friend arrest

- 0 comments

சென்னை என்ஜினீயரிங் மாணவர் கொலையில் நண்பர் கைது Chennai engineering student murder friend arrest

பெங்களூர், அக். 19–

சென்னையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்தவர் ராஜா (26). இவர் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் 'சாப்ட்வேர்' என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

ராஜாவின் நண்பர் மந்திரலிங்கம் (26). இவரும் அதே நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இருவரும் சென்னையில் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள்.

பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஒயிட்பீல்டு என்ற இடத்தில் வாடகை அறை எடுத்து இருவரும் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த மே மாதம் 28–ந்தேதி ராஜா அறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது நண்பர் மந்திரலிங்கம் போலீசில் புகார் செய்தார்.

முதலில் ராஜா மாரடைப்பால் இறந்ததாக கருதப்பட்டது. சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேத பரிசோதனையில் ராஜா மாரடைப்பில் இறக்கவில்லை. உள்காயம் உள்ளது. தலையில் தாக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளது தெரிய வந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று டாக்டர்கள் அறிக்கை அளித்தனர்.

இதையடுத்து போலீசார் ராஜாவின் நண்பர் மந்திர லிங்கத்திடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது மந்திரலிங்கம்தான் தன்னுடன் தங்கி இருந்த நண்பர் ராஜாவை அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.

மந்திரலிங்கத்துக்கு பெண்களுடன் தொடர்பு இருந்தது. இதை ராஜா கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில் மந்திரலிங்கம், ராஜாவை தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். இந்த உண்மை 5 மாதங்களுக்கு பிறகு தெரிய வந்ததையடுத்து நண்பரையே கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய மந்திரலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.

...

shared via

[Continue reading...]

ஷிர்டி சாய்பாபா அருள் வேண்டி ஆரம்பம்…! Ajith aarambam news

- 0 comments

ஷிர்டி சாய்பாபா அருள் வேண்டி ஆரம்பம்…!

சினிமாவில் ஓஹோவென ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் அதற்கப்புறம் நொடித்துப் போவதெல்லாம் சகஜம். இருந்தாலும் விடாமுயற்சியுடன் போராடி விட்ட இடத்தை பிடித்தவர்களும் இருக்கிறார்கள். அப்படி வெற்றிக் கோட்டுக்கு சமீபத்தில் வந்திருக்கிறார் ஏ.எம்.ரத்னம். அஜீத் நடிக்கும் ஆரம்பம் படத்தை நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரித்திருக்கும் ரத்னம், இப்படத்தை வெளிக் கொண்டு வருவதற்குள் படாதபாடு பட்டுவிடுவார் போலிருக்கிறது. எதிர்ப்புகள் நாலாபுறத்திலிருந்தும் கடன் ரூபத்தில் வர, கையில் நம்பிக்கை என்னும் பேட்டுடன் அவற்றை விரட்டியடித்துக் கொண்டிருக்கிறார் அவர்.

சனிக்கிழமை தீபாவளி என்பதால் வழக்கம் போல வெள்ளிக் கிழமையில் இந்த வருட தீபாவளிப் படங்கள் வரப்போகிறது. ஆனால் தனது அலுவலகத்திலேயே சாய்பாபாவுக்கு கோவில் கட்டியிருக்கும் ஏ.ஆர்.ரத்னம், வியாழக்கிழமை சென்ட்டிமென்ட் பார்க்கிறாராம். பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையிலேயே ஆரம்பம் வரப்போகிறது. ஒரு நாள் கலெக்ஷனை சுளையாக முதல் நாளே அள்ளிக் கொள்ளும் சூட்சுமம்தான் இது.

எதுவாக இருந்தாலும் தடைகளை கடந்து ஏ.எம்.ரத்னம் வெல்ல வாழ்த்துக்கள்.

shared via

[Continue reading...]

Friday, 18 October 2013

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை Catch regime in Delhi assembly election arvind kejriwal

- 0 comments

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்போம்: அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை Catch regime in Delhi assembly election arvind kejriwal

புதுடெல்லி, அக். 19–

டெல்லி சட்டசபை தேர்தலில் 50 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிப்போம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், மிசோராம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடை பெறுகிறது.

டெல்லியில் வருகிற டிசம்பர் 4–ந்தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. அங்கு காங்கிரஸ் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியில் இருந்து வருகிறது. ஷீலா தீட்சித் 3 முறை முதல்–மந்திரி பதவியில் இருந்து வருகிறார்.

வருகிற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா தவிர அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்கி உள்ளது. ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் அன்னா ஹசாரேயுடன் இணைந்து லோக்பால் மசோதாவுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்.

டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் நீதி கேட்டு பெரும் போராட்டத்தை நடத்தினார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் கட்சி தொடங்குவதை அன்னா ஹசாரே விரும்பவில்லை. என்றாலும் விழிப்புணர்வு பிரசாரம், போராட்டங்கள் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் இளைஞர்களை கவர்ந்துள்ளார். எனவே டெல்லி சட்டசபை தேர்தலில் அவர் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுக்கு பெரும் சவாலாக உருவாகியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் குதித்துள்ள கெஜ்ரிவால் டெல்லி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்து கலக்கி வருகிறார். இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து கணிப்பு நடத்தினார்.

கடந்த செப்டம்பர் 5–ந் தேதி முதல் அக்டோபர் 5–ந்தேதி வரை 3 கட்டங்களாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 34,425 வாக்காளர்களிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் ஆம் ஆத்மி கட்சி 45 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 16 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி பின்தங்கி உள்ளது. 21 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு ஊசலாட்டத்தில் இருக்கிறது.

இந்த தகவலை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சி தலைவரும் சமூக ஆய்வாளருமான யோகேந்திர யாதவ் ஆகியோர் நிருபர்களிடம் தெரிவித்தனர். கெஜ்ரிவால் மேலும் கூறியதாவது:–

50 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் டெல்லியில் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம். தேர்தலுக்கு இன்னும் 50 நாட்கள் இருக்கிறது. இடைப்பட்ட நாட்களில் எங்களுக்கு இன்னும் கூடுதல் ஆதரவு கிடைக்கும்.

பிப்ரவரி மாதம் எங்கள் கட்சி செல்வாக்கு 14 சதவீதமாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தில் 27 சதவீதமாக அதிகரித்தது. செப்டம்பரில் 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதே சமயம் காங்கிரசின் செல்வாக்கு பிப்ரவரி மாதத்தில் 35 சதவீதம் இருந்தது. ஆகஸ்ட்டில் அது 28 சதவீதமாகவும், செப்டம்பரில் 26 சதவீதமாகவும் சரிந்துள்ளது.

யோகேந்திர யாதவ் கூறுகையில், டெல்லியில் நாங்கள் மிகப்பெரிய போட்டியாளர்களாக உருவாகி வருகிறோம். எங்களது பிரதான எதிரி காங்கிரஸ் தான். பாரதிய ஜனதா கட்சி வாக்காளர்களை கவர தவறி விட்டது என்றார்.

...

shared via

[Continue reading...]

வேளச்சேரி வங்கி அதிகாரியை கொன்றது நண்பர்கள்: போலீஸ் விசாரணையில் தகவல் police information velachery bank officer killed in friend

- 0 comments

வேளச்சேரி வங்கி அதிகாரியை கொன்றது நண்பர்கள்: போலீஸ் விசாரணையில் தகவல் police information velachery bank officer killed in friend

வேளச்சேரி, அக். 18–

வேளச்சேரி வீனஸ் காலனி விரிவு 2–வது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் பெசன்ட்நகர் கிளை உதவி மேலாளராக பணியாற்றி வந்த இவர் நேற்று முன்தினம் இரவு தனது மாடி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.

நாகராஜ் கழுத்து பெல்ட்டால் இறுக்கப்பட்டு இருந்தது. அவரது செல்போன், இருசக்கர வாகனங்கள் கொள்ளை போய் இருந்தது. வீட்டில் இருந்த பீரோ ஒன்று உடைக்கப்பட்டு இருந்தது.

மேலும் படுக்கை அறையில் இருந்த பீரோ சாவியை காணவில்லை. வீடு முழுக்க மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

மறுநாள் காலை கீழ் வீட்டில் இருந்த தாய் கமலம் மாடிக்கு வந்து பார்த்த போதுதான் நாகராஜ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொலை குறித்து அடையாறு துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா, உதவி கமிஷனர் மோகன்ராஜ், வேளச்சேரி இன்ஸ்பெக்டர் சேகர்பாபு ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

கொலையாளிகள் திட்டமிட்டு கொலையை அரங்கேற்றியுள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு நாகராஜ் தனது நண்பர்கள் 3 பேருடன் வீட்டுக்கு வந்தார். அவர்களுடன் நீண்ட நேரம் மது அருந்தினார். நள்ளிரவு நண்பர்கள் திரும்பிச் சென்று விட்டனர். அப்போது நாகராஜின் இரு சக்கர வாகனத்தை அவர்கள் எடுத்துச் சென்றனர். வாகனத்தை எடுத்துச் செல்வதை கீழ் வீட்டில் இருந்த நாகராஜ் தாயார் கமலம் பார்த்து உள்ளார்.

எனவே நாகராஜை அவரது நண்பர்கள்தான் கொலை செய்து இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். மது அருந்தும்போது ஏற்பட்ட மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்த கொலைகார நண்பர்கள் யார்? என்று தெரியவில்லை. அவர்களை பிடிக்க பல்வேறு தடயங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

கொள்ளைபோன நாகராஜின் செல்போன், இரு சக்கர வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் முதலில் ஈடுபட்டுள்ளனர். நாகராஜ் வீட்டுக்கு அடிக்கடி வரும் நண்பர்கள் யார்– யார்? என்ற தகவலும் சேகரிக்கப்படுகிறது.

நாகராஜுக்கு செல்வி என்ற மனைவியும், திருமணமான கலையரசன் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். கலையரசன் துபாயில் குடும்பத்துடன் வசிக்கிறார். திவ்யா அமெரிக்காவில் கணவருடன் வசிக்கிறார். அமெரிக்காவில் உள்ள மகள் திவ்யா வீட்டுக்கு செல்வி சென்று உள்ளார்.

துபாயில் இருக்கும் மகன் கலையரசனும், அமெரிக்காவில் இருக்கும் நாகராஜ் மனைவி செல்வியும் நாளை சென்னை திரும்புகிறார்கள்.

நாகராஜ் நண்பர்கள் பற்றி மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

...

shared via

[Continue reading...]

Thursday, 17 October 2013

நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் இன்று 2–வது நாளாக ஆய்வு Today in Tirunelveli District mineral sand quarrying 2nd day of study

- 0 comments

நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் இன்று 2–வது நாளாக ஆய்வு Today in Tirunelveli District mineral sand quarrying 2nd day of study

Tamil NewsToday,

நெல்லை, அக். 18–

நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் சிறப்பு குழுவினர் இன்று 2–வது நாளாக ஆய்வு நடத்தினர்.

தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினர் நேற்று நெல்லை மாவட்ட தாது மணல் குவாரிகளில் ஆய்வு பணியை தொடங்கினர்.

128 அதிகாரிகள் 15 குழுக்களாக பிரிந்து சென்று ஒரே சமயத்தில் சோதனை நடத்தினர். நேற்று கடலோர பகுதிகளான உவரி, குட்டம், கரைசுத்து உவரி, கரைசுத்து புதூர், செட்டிகுளம், கோடாவிளை, காரியாகுளம், லெவிஞ்சிபுரம், இருக்கன்துறை, கூடங்குளம், விஜயாபதி, திருவம்பலாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 22 தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் சமயமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் கோடாவிளை, காரியாகுளம் பகுதி குவாரிகளில் ஆய்வு செய்தனர்.

ஒவ்வொரு குவாரியிலும் சர்வேயர் மூலம் அளந்து குறிப்பிட்ட அளவுக்குத்தான் மணல் எடுக்கப்பட்டுள்ளதா, அனுமதியளிக்கப்பட்ட இடத்தில்தான் அள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் நில அளவைத் துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை, சுற்றுச்சூழல், நீர்வளத்துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 52 குவாரிகள் உள்ளன. நேற்று 22 குவாரிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள குவாரிகளில் இன்றும், நாளையும் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

இந்த ஆய்வு பணிக்காக 70 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு குழுவுக்கும் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் அடங்கிய துப்பாக்கியுடன் கூடிய 7 போலீசார் பாதுகாப்புக்கு செல்கின்றனர். மேலும் குவாரிகள் தோறும் சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பணியில் 300 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தாது மணல் முறைகேடு தொடர்பாக மீனவ கிராமங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும் என்று கடலோர மக்கள் கூட்டமைப்பு அமைப்பாளர் புஷ்பராயன் சிறப்பு குழு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே தாதுமணல் குவாரிகளில் வேலைபார்க்கும் ஊழியர்கள் 500–க்கும் மேற்பட்டோர், தாதுமணல் ஆலைகளை திறக்க அனுமதி வழங்க கோரி நேற்று ககன்தீப்சிங் பேடியை சந்தித்து மனு கொடுத்தனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

பள்ளிக்கூடம் பிடிக்காததால் தற்கொலைக்கு முயன்றேன்: காஞ்சீபுரத்தில் தீக்குளித்த மாணவி வாக்குமூலம் self immolations Student statement did not like school tried to commit suicide

- 0 comments

பள்ளிக்கூடம் பிடிக்காததால் தற்கொலைக்கு முயன்றேன்: காஞ்சீபுரத்தில் தீக்குளித்த மாணவி வாக்குமூலம் self immolations Student statement did not like school tried to commit suicide

Tamil NewsToday,

காஞ்சீபுரம், அக்.18-

காஞ்சீபுரம் அருகே தூசியை அடுத்த அப்துல்லாபுரம் தோப்பு தெருவில் வசிப்பவர் கன்னியப்பன். இவருடைய மகள் சினேகா(வயது 11). இவள், பெரிய காஞ்சீபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

கடந்த 15-ந்தேதி காலை பள்ளிக்கூடம் சென்ற சினேகா, தனது பாட புத்தக பையில் பிளாஸ்டிக் பாட்டிலில் அரை லிட்டர் மண்எண்ணெய் மற்றும் தீப்பெட்டியை மறைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. பள்ளி இடைவேளையின் போது மண்எண்ணெய் பாட்டில், தீப்பெட்டியுடன் கழிவறைக்கு சென்ற சினேகா, திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாள்.

உடல் முழுவதும் எரிந்த தீயுடன் அலறியபடி வெளியே ஓடி வந்தாள். உடனடியாக அவளை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மாணவி சினேகா, இந்த வருடம்தான் இந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்து உள்ளாள். இந்த நிலையில் அவள் எதற்காக தீக்குளித்தாள்? என்பது தெரியவில்லை. இதுபற்றி பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த பள்ளிக்கூடம் அவளுக்கு பிடிக்கவில்லையா? அல்லது படிப்பு சரிவர வரவில்லையா? அல்லது வீட்டில் பெற்றோர்கள் திட்டினார்களா? ஆசிரியர்கள் கண்டித்தனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி, விசாரணை நடத்தி வருகிறார்.

மாணவி தீக்குளித்த சம்பவத்தை தொடர்ந்து 15-ந்தேதி அரசினர் மகளிர் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மறுநாள் பக்ரீத் விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. நேற்று காலை பள்ளிக்கூடத்துக்கு வந்த அனைத்து மாணவிகளின் புத்தக பைகளையும் நன்றாக சோதனை செய்த பின்னரே அவர்களை வகுப்பறைக்குள் செல்ல ஆசிரியர்கள் அனுமதித்தனர்.

இதற்கிடையில் சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சினேகாவிடம், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி வாக்குமூலம் பெற்றார். அந்த வாக்குமூலத்தில் மாணவி கூறி இருப்பதாவது:-

எனது பெற்றோர் என்னை, காஞ்சீபுரம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு சேர்த்தனர். எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் எனது பெற்றோர், உன்னை வேறு பள்ளிக்கூடத்தில் சேர்க்க முடியாது. நீ படித்தால் படி, இல்லாவிட்டால் இரு என்று கண்டிப்புடன் கூறி விட்டனர். எனவே பள்ளிக்கூடம் பிடிக்காமல் நான், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன்.

இவ்வாறு அந்த மாணவி, வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger