Monday 21 October 2013

மணலியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி atm machine break attempt robbery in manali

மணலியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி atm machine break attempt robbery in manali

திருவொற்றியூர்,அக். 21–

மணலி, காமராஜர் சாலையில் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை. இன்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு சென்றவர்கள் எந்திரம் உடைந்து கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மணலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் குத்தி உடைத்து இருப்பது தெரிந்தது. பணத்தை எடுக்க முடியாததால் அவர்கள் திட்டத்தை கைவிட்டு சென்றுள்ளனர். இதனால் பல லட்சம் பணம் தப்பியது.

அங்கிருந்த ரகசிய காமிராவை போலீசார் ஆய்வு செய்தபோது மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தது பதிவாகி இருந்தது. அதனை வைத்து விசாரணை நடந்து வருகிறது.

கொள்ளை கும்பல் ரகசிய காமிரா இருப்பதை கவனிக்காததால் அதனை சேதப்படுத்தாமல் சென்றுள்ளனர்.

...

shared via

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger