Saturday 3 August 2013

உள்ளாடைக்குள் ரூ.2½ கோடி

- 0 comments
சிங்கப்பூரில்
இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச
விமான நிலையத்துக்கு சிங்கப்பூர்
ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது. அந்த
விமானத்தில் வந்த பயணிகளிடம் வருவாய்
புலனாய்வு இயக்குரக அதிகாரிகள் மற்றும்
கண்காணிப்பு இயக்குனரக அதிகாரிகள்
அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஒரு பெண்
பயணி மீது அவர்களுக்கு சந்தேகம் வலுத்தது.
அவரிடம் சோதனை நடத்தியதில், அவர்
உள்ளாடைக்குள் வைரம் பதித்த தங்க
நகைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
ரூ.2½ கோடி மதிப்புள்ள அந்த நகைகள்
பறிமுதல் செய்யப்பட்டன.
அவரை கைது செய்து தீவிர
விசாரணை நடத்தியதில், பரபரப்பு தகவல்கள்
வெளியாகின. அவரது பெயர் விஹாரி போடார்
என்றும், சிங்கப்பூரில் உள்ள
நகை மாளிகை நிறுவனத்தின் நிர்வாக
இயக்குனர் என்றும் தெரியவந்தது. அவருடைய
கணவர் அபிஷேக் போடார் பிரபல
ஜவுளி நிறுவனத்தின் அதிபர் ஆவார்.
இதுபோன்று 10 தடவை வைரம் மற்றும் தங்க
நகைகளை கடத்தி வந்த தகவலையும்
விசாரணையின்போது அவர் வெளியிட்டார்.
விஹாரி போடாருக்கு மும்பை சாந்தாகுரூசில்
நகைக்கடைகள் உள்ளன. அந்த கடைகளுக்காக
சிங்கப்பூரில்
இருந்து நகைகளை கடத்தி வந்திருக்கிறார்.
விசாரணைக்குப்பின் சாந்தாகுரூசில் உள்ள
அவருடைய நகை கடைகளிலும்
அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ.4
கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
செய்யப்பட்டன.
பின்னர் விஹாரி போடார்
மும்பை மெட்ரோபாலிட்டன்
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில்
ஆஜர்படுத்தப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.
[Continue reading...]

தட்சிணாமூர்த்தி சுவாமி சென்னையில் காலமானார்.

- 0 comments

தமிழ் - Tamil:
#மலையாள இசையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரான #தட்சிணாமூர்த்தி சுவாமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 92.
அறுபது ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு இசை விருந்தளித்து நெஞ்சங்களை நிரப்பியவர் #தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள்.
கர்நாடக சங்கீத விற்பன்னரான ஸ்வாமிகள், நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
1919ல் ஆலப்புழையில் பிறந்த தக்ஷிணாமூர்த்தி சிறு பிள்ளையாக இருக்கும்போதே கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார்
ஆறு வயதாக இருக்கும்போதே தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனைகளில் 27ஐ மனப்பாடமாக பாடத் தெரிந்தவர் இவர்.
13 வயதிலேயே அம்பலப்புழை ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் கச்சேரிகளை செய்ய இவர் ஆரம்பித்திருந்தார்.
1942ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய வானொலியில் தொடர்ந்து கர்நாடக இசைக் கச்சேரிகளை இவர் நடத்திவந்தார்.
1948ல் இவர் இசையமைத்த முதல் திரைப்படமான நல்ல தங்கா மலையாளத்தில் வெளியானது.
நவலோகம், சீதா, வியாபாரியிண்டே விலா, ஸ்ரீ குருவாயூரப்பன், இந்துலேகா உள்ளிட்ட பிரபல திரைப்படங்களில் பெருவெற்றி பெற்ற பாடல்கள் பலவற்றுக்கு சொந்தக்காரர் இவர்.
#இளையராஜா, #யேசுதாஸ் போன்றவர்களால் குரு ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட்டவர் இவர்.
ஏ ஆர் ரகுமானின் தந்தை இசையமைப்பாளர் ஆர்.கே.சேகர்கூட தக்ஷிணாமூர்த்தியிடம் உதவியாளராக இருந்திருக்கிறார்.
பெரும்பான்மையாக இவர் மலையாளப் படங்களுக்கே இசையமைத்துள்ளார் என்றாலும், ஒன்பது #தமிழ் படங்களிலும் இவர் இசையமைத்துள்ளார். ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, நந்தா என் நிலா ஆகியவை அதில் அடங்கும்.
900க்கும் மேற்பட்ட பாடல்கள் இவரது உயிரோட்டமான இசையில் உருவானவை.
1948 முதலே தக்ஷிணாமூர்த்தி சென்னையில் வாழ்ந்துவந்திருந்தார் . #மயிலாப்பூர் பக்கத்தில் போனால் சட்டை போடாமல் மேல் துண்டோடு மட்டும் இவர் வெளியில் உலவுதைப் பார்க்க முடியும் என்கிற அளவுக்கு எளிமைக்குப் பேர்போனவர் அவர்.
கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சங்கீத சரஸ்வதி விருது உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

[Continue reading...]

டயானா வின் காதலர்கள்

- 0 comments

இங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம்
செய்து கொண்ட டயானா, 31-8-1997ம் ஆண்ட
காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகர கார்
விபத்தில் பலியானார்.

சார்லசுடன் வாழ்ந்த
போதே இன்னொரு நபரை காதலிப்பதாக
டயானா அளித்த பேட்டி இங்கிலாந்து ராஜ
குடும்பத்தை பெரும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியது. இதனையடுத்து,
டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபத்
வற்புறுத்தினார்.

வில்லியம், ஹாரி என்ற
இரு மகன்களை சார்லசுடன் பெற்ற
டயானா விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்தார்.
அப்போது பல்வேறு சமூக
தொண்டுகளை செய்து வந்த
டயானா பாகிஸ்தானை சேர்ந்த டாக்டரான
ஹஸ்னத் கான் என்பவரை உயிருக்குயிராக
காதலித்தார்.

டாக்டர் ஹஸ்னத் கான் பாகிஸ்தான் முன்னாள்
கேப்டனும் தற்போதைய தெஹ்ரிக் இ இஸ்லாம்
கட்சியின் தலைவருமான இம்ரான்கானின்
உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்
கொள்வதற்காக இம்ரான் கானின்
மனைவி ஜெமிமா கானுடன்
டயானா நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.
டயானா விபத்தில் இறந்து 16 ஆண்டுகள்
கழித்து அவரது மகன் இளவரசர்
வில்லியமிற்கு கேட் மிடில்டன் மூலம் ஆண்
குழந்தை பிறந்துள்ளது. அந்த
குழந்தைக்கு ஜார்ஜ் என பெயரிடப்பட்டுள்ளது.
இதனையொட்டி, உலகப்புகழ் பெற்ற
வேனிட்டி ஃபேர் பத்திரிகையில் தனக்கும்
டயானாவுக்கும் இருந்த நட்பு பற்றி இம்ரான்
கானின் மனைவி ஜெமிமா கான் ஓர்
கட்டுரையை எழுதியுள்ளார்.

குட்டி இளவரசன் ஜார்ஜ்
எப்போதுமே அறிந்திராத பாட்டி (த
கிராண்ட்மதர் பிரின்ஸ் ஜார்ஜ் நெவர் நியூ) என
அந்த கட்டுரைக்கு அவர் தலைப்பிட்டுள்ளார்.

காதலர் ஹஸ்னத் கானை சந்திக்க
பாகிஸ்தானுக்கு டயானா 2
முறை வந்ததையும், பாகிஸ்தானில் உள்ள
அவரது ஆஸ்பத்திரிக்கு நிதி திரட்ட அவர்
உதவியதையும் ஜெமிமா கான் அந்த
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மீதிருந்த வெறித்தனமான காதலின்
வெளிப்பாடாக டாக்டர் ஹஸ்னத்
கானையே திருமணம்
செய்து கொண்டு பாகிஸ்தானில் குடியேற
டயானா திட்டமிட்டிருந்ததையும்
ஜெமிமா சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த காதலும் கசந்து போனதால் பிரான்ஸ்
நாட்டை சேர்ந்த டோடி ஃபயீத் என்பவருடன்
டயானா ரகசியமாக ஊர் சுற்ற ஆரம்பித்தார்.

இருவரும் இணைந்து காட்சியளிக்கும்
புகைப்படங்களை படம் பிடிக்க கேமராக்களும்,
பிரசுரிக்க பத்திரிகைகளும் போட்டி போட்டுக்
கொண்டு இந்த ஜோடியை விரட்ட தொடங்கின.
பத்திரிகை பரபரப்பு (பாப்பராசி) எனப்படும்
இந்த விரட்டலில் இருந்து தப்பிக்க காதலர்
டோடி ஃபயீத்துடன் பாரிசில் உள்ள
சுரங்கப்பாதையில் தலைதெறிக்கும் வேகத்தில்
காரில் சென்ற டயானா பயங்கர விபத்தில்
சிக்கி பரிதாபமாக பலியானார்
என்பது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger