Wednesday 28 January 2015

மோடியின் மேக் இன் இந்தியா திட்டம்...!!!

- 0 comments

மோடியின் மேக் இன் இந்தியா திட்டம்...!!!

மேக் இன் இந்தியா என்று ஊர் முழுக்க விளம்பரம் செய்யும் மோடி செய்த வேலை என்ன தெரியுமா...??

இந்தியாவின் 66வது குடியரசு தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் பெரிதும் சர்ச்சையை கிளப்பியது மோடி அணிந்திருந்த ஆடை.

நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற தனது முழு பெயரையும் கோடுகள் போன்று எழுதப்பட்டிருந்த ஆடை.

உலகிலேயே இந்த ஆடைக்கு தேவையான துணியை வழங்குவது லண்டனை சேர்ந்த Holland & Sherry Fabrics என்ற நிறுவனம். இது உலக புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம். இந்த நிறுவனம் பிரத்யேகமாக பல வகை ஆடைகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வரிசையில் அந்த நிறுவனம் வேளியிட்ட ஓர் ஆடைதான் "Signature Fabric". இது பல ரகங்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ஒரு மீட்டர் துணி 300 பவுண்டுகள்.

இதன் சிறப்பம்சமே துணியில் கோடுகள் போன்று தனிமனிதர் பெயரோ அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரோ நெய்து தரப்படும்.

இந்த ஆடையை தைப்பது சிட்னியை சேர்ந்த உலக புகழ் பெற்ற நிறுவனமான Tom James என்ற நிறுவனம்.

மோடி நேற்று முன்தினம் அணிந்திருந்த ஆடையின் துணி மட்டும் 7 மீட்டர் நீளம் கொண்டது. அதன் மதிப்பு மட்டும் 3000 பவுண்டுகள்(2,78,200 ரூபாய்). இதனை தைப்பதற்க்கும் சேர்த்து ஆன மொத்த தொகை 10,000 பவுண்டுகள்(9,27,332 ரூபாய்).

எளிமையான தலைவர், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றும் மிக அற்புதமான தலைவர் செய்த வேலை தான் இது..!!

லண்டனில் இருந்து துணி...!!
அதனை தைக்க ஆஸ்திரேலிய கம்பெணி...!!

மேலும் தகவலுக்கு குடியரசு தின விழா பற்றிய கட்டுறையை படியுங்கள்......

[Continue reading...]

Wednesday 21 January 2015

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-1 Micromax Canvas A1 Review

- 0 comments

செமையா இருக்குப்பா நம்ம ஊரு மொபைலு - மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் A1 அசத்தும் அமோசனின் ஆபர் !

மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஏ-1 ஒரு சின்ன ரிவ்யூ பார்க்கலாமா ?

எப்பவுமே இந்திய தயாரிப்புகள் எதாவது ஹிட்டடிச்சா அதுல ரெண்டு உண்மை இருக்கும் ஒண்ணு அது நீடிச்சு உழைக்கும் ரெண்டு விலை குறைவா இருக்கும் . டிவிஎஸ் 50 மொபட் இப்படித்தான் ஜெயிச்சது. அதே மாதிரி 100% இந்திய தயாரிப்பான மைக்ரோமேக்ஸ் மொபைல்ஸும் இன்னிக்கு "நம்பிக்கை நாணயம் கைராசி"ன்னு விளம்பரம் போடுமளவிற்கு தனி டிராக்கை பிடிச்சுடுச்சு.

லாலிபாப்பிற்கு குழந்தைகள் ஆசைப்படுகின்றன என்றால் ஆன்ட்ராய்ட் லாலிப்பாப்பிற்கு பசங்களும் பொண்ணுகளும் ரொம்பவே வெயிட்டிங். ஆன்ராய்ட் லாலிபாப் அப்டேட் செஞ்சா மைக்ரோமேக்ஸ் கான்வாஸ் A1ன்னின் வேகமும் பேட்டரி ஸ்டான்ட்-பை நேரமும் அதிகமாகுதுன்னு டெக்கிஸ் சைட் கிசுகிசு வேற ஓடிட்டு இருக்கு.

இந்த நேரத்தில் அமோசன் மைரோமேக்ஸ் கான்வாஸ் A1 (ஆன்ட்ராய்ட் ஒன்னுடன் ) கிட்டதட்ட 1200 ரூபாய் குறைச்சு ஆபர் போட்டிருக்காங்க...

5 எம்பி கேமரா - 2 எம்பி செகண்டரி கேமரா 1080p வீடியோ ரெக்கார்டிங். செல்பி எடுத்து பார்த்தேன், சூப்பரா இருக்கு...

அண்ட்ராய்ட் ஒன் (அதாவது ரெகுலர் அண்ட்ராய்ட்ல இருந்து பல தேவையில்லாத பிரச்சனைகளை நீக்கி ஸ்லிம்மா கொடுத்து இருக்கிற ஓ.எஸ்.). போன் / கேம்ஸ் எல்லாம் ரொம்ப வேகமா இருக்குது.

பேட்டரி சாலிடா ரெண்டு நாள் நிக்குது. (என்னோட யூசேஜ் பொறுத்து). ஆபீஸ் கொலீக் ஒருத்திக்கு 3 நாள் வருதுன்னு சொல்றாங்க (அவங்க அதிகமா யூசேஜ் இல்லை, அதனால இருக்கலாம். - அவங்களுக்கு கால் லேண்ட்லைன்ல தான் வரும்)

1 ஜிபி ராம் 4ஜிபி இன்பில்ட் மெமரி 32ஜிபி எக்ஸ்பாண்டபில். என்னுடைய கலெக்‌ஷன் மியூஸிக் சூப்பரா உட்கார்ந்துடுச்சு. (நம்ம கிட்ட ராஜா சாங்ஸ் தனி எஸ்.டி கார்டா இருக்கு, அதையும் மெயிண்டெயின் பண்ணுறம்ல). ஐபோனுக்கும் இதுக்கும் உள்ள ஒரே ப்ராப்ளம் ஐபோன்ல மெமரி கார்ட் போடமுடியாதுங்கறது தான் (ஆனா ஸ்பேஸ் அதிகம் இருக்கும்).

ஆர்டர் செய்வது பற்றி : சென்னை கோவை திருச்சி மதுரை மாதிரி கார்பரேஷன் சிட்டிகளில் இருந்து ஆர்டர் செய்தால் சில மணி நேரங்களில் வீட்டுக்கே வந்துவிடுகிறது. "கொஞ்சம் ரூரல்தாங்க என் வீட்டுக்கு வருமா ? ன்னு கேட்டா வரும் ஒரு நாள் கழிச்சு என்கின்றனர். ஒரு ப்ரெண்டு போன மாசம் ஆர்டர் செய்தபோது (மதுரையில் இருந்து) - ரெண்டு நாள் ஆச்சுன்னு சொன்னார். ஆனால் இப்ப ஒரே நாள்ல வருதுன்னு சொல்றாங்க..

கீழ உள்ள லிங்கில் கிளிக் பண்ணி பாருங்க, வாங்கினிங்கன்னா கமென்ட்ஸ்ல ரிவ்யூ எழுதுங்க

[Continue reading...]

Monday 19 January 2015

Good touch and bad touch பெற்றோர்களின் கவனத்திற்கு

- 0 comments

பெற்றோர்களின் கவனத்திற்கு:-

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய்

இருந்தாலும், "Good touch", "bad touch"

எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

 

2. மேலாடையின்றியோ, ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம்,

எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

 

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும்

போது கவனம் தேவை, நெடு நேரம்

குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள்

மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

 

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில்

தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும்

தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

 

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க

வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

 

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள்,

மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து,

மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத

இடங்களை தொடுவதும், சில இடங்களில்

நடக்கிறது.

 

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார்

கொடுத்தால் வாங்க வேண்டும்

என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

 

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின்

தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

 

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்

இருந்தால், ஒருபோதும் ஒருவருடன்

மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள்,

வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

 

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள்

விருப்பங்களை குழந்தையின் மேல்

திணிக்காதீர்கள்.

 

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது,

வன்முறை, காதல், கொலை, களவுப்

போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ,

நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

 

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில்

மூழ்கி இருக்காமல்,

குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ,

அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும்

வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

 

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள்,

ஒரு தோழமையுடன் அவர்கள்

சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

 

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள்,

தண்டிக்க நினைக்காதீர்கள்!

 

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

 

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன்

அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ,

பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

 

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள்.

பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

 

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள்

பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

 

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

 

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின்

ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

 

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின்

வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்!

பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும்

போது தெரிந்தால் சொல்லுங்கள்,

தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன்

என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான

பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல்

அவர்களிடம் சொல்வது அவசியம்.

 

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு"

"தொணதொண என்று கேள்வி கேட்காதே"

என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின்

ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

 

23. பசி என்று குழந்தை சொன்னால்,

உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ,

சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின்

குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

 

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின்

எதிரே சண்டை இடாதீர்கள்!

 

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள்,

ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள்

அல்ல!

[Continue reading...]

Saturday 17 January 2015

எல்லைப்பாதுகாப்பு படை வீர்ர்களின் சபதம்

- 0 comments

இது எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களிடமிருந்து வரும் சிறிய கருத்து ஆகும்.தயவு செய்து இதனை சமூக வலை தளங்களில் பகிரவும்.படிப்பறிவில்லாத மக்களுக்கும் எடுத்து செல்லவும்.

 

ஊரெல்லாம் பொங்கல் பொங்கும் இத்தருணத்தில் நாடோரம் காவல் காக்கும் எல்லைப்பாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல் என் தமிழக மக்களுக்கு ..

 

நாட்டின் எல்லை பகுதியை காவல் காக்க அனுப்பி வைத்த நீங்கள் நாட்டையும் அதன் மண்ணையும் விற்றுக்கொல்வது (எழுத்துப் பிழை அல்ல) வேதனையை தருகிறது.

நமது உயிராதாரமான மண்ணை நிலத்தை தெரிந்தோ தெரியாமலோ நாமும் ,தெரிந்தே ஆளும் அரசாங்கங்களும் அழித்து வருகிறோம்.

 

மீத்தேன்,அணு உலை என்று அனைத்து ஆபத்துகளையும் பாகுபாடில்லாமால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் சேர்த்து கொண்டிருக்க நாமும் நமது பங்கிற்கு ரியல் எஸ்டேட் பேராசையில் நமது விளை நிலங்களை விற்று தவறு செய்கின்றோம்.

 

நாளைய நாட்களில் நமது வீடுகளில் சமைத்த அரிசியை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் சாப்பிட வேண்டியதாக இருக்கும்.அந்த நிலையில் அவர்களை மீறி தெற்காசியாவின் மாபெரும் நாடான இந்தியா ஒரு துரும்பை கூட கிள்ள இயலாது.

 

ஆயிரம் சாப்ட்வேர் இஞ்சினியர்களை உருவாக்குவது எளிது.ஆனால் ஓரடி விளை நிலத்தை உருவாக்குவது அத்தனை எளிதல்ல.நாம நமது அவசியத்துக்கு மீறி வாங்கி குவிக்கும் ஒவ்வொரு விளை நிலமும் நமது குழந்தைகளுக்கான சுடுகாடு என்பதை உணர்வோமா?

 

பன்னாட்டு கம்பெனிகளுக்கு உள் நாட்டில் நிலம் கொடுத்து ஆள வைக்கும் அரசுகள் ,கட்சிகள், மக்கள் அனைவருக்கும் எங்களின் சிறிய கேள்வி என்னவென்றால் அப்புறம் எதற்காக மண்ணை காப்பாற்ற எங்களை எல்லையில் நிற்க வைத்துள்ளீர்கள்?

 

இந்த பொங்கல் திரு நாளில் ஒரு சபதம் எடுப்போம் .....விளை நிலங்களை விற்க மாட்டோம் எனவும் வாங்க மாட்டோம் எனவும். நன்றி .வணக்கம்.

 

விற்பதற்க்கும் தொலைப்பதற்க்கும் விளை நிலங்கள் வெறும் பணமல்ல ...அது நமது வாழ்வாகும் . தயவு செய்து பகிர மறக்காதீர்கள் .விவாதியுங்கள்.விதையுங்கள்.

 

[Continue reading...]

பெற்றோர்கள் கவனத்திற்கு Parenting Tips!

- 0 comments

பள்ளியில் சேர்த்த பிறகு , உங்கள் குழந்தை , அது ஆணோ , பெண்ணோ , எந்தக் குழந்தையாக இருப்பினும் , பள்ளியிலிருந்து வந்த சிறிது நேரத்தில் , மெதுவாக , அன்று காலையிலிருந்து , நடந்த விஷயங்கள் அனைத்தையும் , விளையாட்டு போல கேட்டு அறிந்து கொள்ளுங்கள் .

 

நீங்கள் வேலைக்குச் செல்பவராக இருந்தாலும் , வந்த பிறகு , ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி , இதைக் கண்டிப்பாக கேட்டு அறியவும் .

 

ஒவ்வொரு நாளும் , குழந்தையிடம் , "இன்னிக்கு போலவே , தினமும் , நடந்தது எல்லாத்தையும் , நீ என்கிட்டே சொல்லிடணும்...சரியா , எதுக்கும் பயமே வேண்டாம் " என்று சொல்லிக்கொண்டு இருந்தால் தான் , அவர்கள் எதையும் தைரியமாகச் சொல்வார்கள்

[Continue reading...]

குழந்தைக்கு கொடுக்க வேண்டியவைகள்....!! Childrens Tips

- 0 comments

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக்

கொடுக்க வேண்டியவைகள்....!!

1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும்

அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க

வேண்டும்.

 

2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள்

முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்

தவிர்க்க வேண்டும்.

 

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய

கணவன் என்றோ,

மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில்

பதிய வைப்பதோ தவறு.

 

4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள்

பார்வை அவர்கள்

மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும்

அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும்

கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்

குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்

துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

 

5. உங்கள் குழந்தையால் சரியாக

பொருந்தியிருக்க முடியாத

நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்

அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

 

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய

ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது

பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்

கேட்டு அவர்களின்

பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

 

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும்

அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.

இல்லையென்றால், சமுதாயம்

அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக்

கற்றுக் கொடுத்துவிடும்.

 

8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக

நாம் அறிந்து கொண்டு அவர்கள்

கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்

கொடுத்துவிட வேண்டும்.

 

9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும்

இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற

சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்

செயலிழக்கச்

செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்

கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள்

அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும்

இதை செய்து வைக்க

அறிவுருத்துவது நல்லது.

 

10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள்

உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய

கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்

பகுதிகளை பிறர் யாரும்

தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என

எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும்

அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,

அவசியமற்ற உதவிகளை செய்யும்

போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது

 

11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய

அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக்

கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில்

இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும்

அடங்கும்.

 

12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள்

குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்

திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

 

13. குழந்தை ஒருவரைப்

பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,

அதை கவனிக்கத் தொடங்குங்கள்.

கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.

நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள்

என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்;

அது நாம் பெற்றோராக இருந்தாலும்

சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக

இருந்தாலும் சரி!

 

நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்.

 

****************************************

 

[Continue reading...]

உடல் எடையை குறைக்கும் முறை - How to reduce body weight ?

- 0 comments

உடல் எடையை குறைக்கும் மற்றுமொருமுறை:

 

உடல் எடையை குறைக்கும் மல்லி மற்றும் பார்ஸ்லி இலை:

 

5 நிமிடங்களில் தயாராகும் இந்தச் சாறு 7 பவுண்டுகள் (மூன்றரை கிலோ) வரை குறைக்கும். உடல் எடையைக் குறைக்க பட்டினியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேவை:

 

1 கைப்பிடி பார்ஸ்லி அல்லது மல்லி இலை

1 எலுமிச்சைப்பழம்

1 கப் தண்ணீர்

 

செய்முறை:

 

மல்லி இலை அல்லது பார்ஸ்லி இலையை நன்றாக கழுவி தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறுடன் மிக்ஸியில் அடித்து சலித்து குடிக்கவும்.

 

சாப்பிடும் முறை:

 

இந்தச் சாற்று காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இடைவிடாமல் 5 நாட்கள் குடித்த பிறகு 10 நாட்கள் இடைவெளி விடவும். இந்தச் சாறு உடலில் உள்ள கொழுப்பை எரித்து உடலுக்கு வைட்டமின்களையும், மினரல்களையும் அள்ளித்தரும்.

 

மல்லி அல்லது பார்ஸ்லி இலைகள் ஜீரணத்தை மேம்படுத்தி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது. 5 நாட்களில் 6 பவுண்டுகள் வரை எடை குறையும். உங்களுக்கு இந்தச் சாற்றை குடிக்க சலிப்பு ஏற்படும்போது தண்ணீருக்கு பதிலாக மோரை உபயோகப்படுத்தி சிறிது இந்துப்புவை சேர்த்து கொள்ளலாம். மோரும் ஜீரணத்திற்க்கு ஒரு நல்ல மருந்து.

 

அதிகமாக சாப்பாடு சாப்பிட்டால் பலன் கிடைக்காது. எனவே குறைந்த அளவில் சத்தான உணவுகளை சாப்பிட்டு பலன் பெறுங்கள். இந்த முறையில் உடல் எடைக்குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணலாம்

[Continue reading...]

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா? Simcard Mobile number find method

- 0 comments

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா?

 

"உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்"

 

Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

 

Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#

 

Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#

 

Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

 

Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#

 

Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

 

Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#

 

Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#

 

Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#

 

[Continue reading...]

Thursday 15 January 2015

திருநெல்வேலி மாவட்ட பெருமைகள்

- 0 comments

தமிழ் மொழி பிறந்ததும் இங்கே தான்...!

தென்றல் தவிழுவதும் இங்கே தான்...!

வற்றாத ஜீவ நதி பாய்வதும் இங்கே தான்...!

ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் கட்டபட்டதும் இங்கே தான்...!

இந்திய சுதந்திரத்திற்கு முதல் வீர முழக்கம் எழும்பியதும் இங்கே தான்...!

ஐவகை நிலங்களும் ஒரே மாவட்டத்தில் இருப்பதும் இங்கே தான்...!

மிகப்பெரிய சிவாலயம் இருப்பதும் இங்கே தான்...!

தென்னகத்தின் ஆக்ஸ்போர்ட் சிட்டி இருப்பதும் இங்கே தான்...!

இன்னும் சொல்லப்படாத எத்தனையோ பெருமைகளை சுமந்து நிற்கிறது எங்கள் திருநெல்வேலி மாவட்டம்

எந்த ஊர் சென்றாலும் பெருமையாக சொல்வோம் நாம் திருநெல்வேலி மக்கள் என்று...

[Continue reading...]

Wednesday 14 January 2015

ஐ படத்தின் கதை எப்படி இருந்த்து - திரை விமர்சனம்

- 0 comments

பிரம்மாண்டத்தாலும், காட்சி அமைப்புகளிலும் ரசிகர்களைக் கவரும் இயக்குநர் ஷங்கர், '' படத்தில் காதல் உணர்வையும், பழிவாங்கும் படலத்தையும் கையில் எடுத்திருக்கிறார்.

 

உடல் வலிமையோடு இருக்கும் ஒருவனை ஒரு கும்பலே சேர்ந்து உருக்குலைக்கிறது. அவன் மனவலிமையோடு திருப்பி அடிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்...? இதுதான் ''-யின் ஒன்லைன். இதில், உடலை அறுவறுப்பாக உருக்குலைத்தல் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. உடல் அழகுக்கும் காதலுக்கும் இடையிலான 'தொடர்பு'ம் இங்கே மையமாக்கப்படுகிறது.

 

'' ட்ரெய்லரில் வரும் காட்சி நினைவிருக்கலாம். 'யார் நீ? என்னைக் கொல்லப் போறியா? கெடுக்கப் போறியா?' என அழுதபடி கேட்பார் ஏமி ஜாக்சன். 'அதுக்கும் மேல' என்று சொல்வார் 'கூனன்' விக்ரம். இதுவே ஆரம்ப காட்சிகளில் இடம்பெற்றபோது, திரையரங்கில் ரசிகர்களின் சலசலப்பு குறைந்து, கொஞ்சம் சீரியஸாக நிமிர்ந்தபடி கூர்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள்.

 

அதன்பின் விரியும் ஃப்ளாஷ்பேக்கில், விரிந்த மார்புடன் இளைஞன் லிங்கேசனாக விக்ரம் தோன்றும்போது விசில் சீட்களில் இருந்து மெர்சலின் விளைவால் பறந்தது விசில் சத்தம்.

 

விக்ரம் என்ட்ரி மெர்சல் என்றால், ஏமி ஜாக்சன் வருகை அதுக்கும் மேலே. ஏமி - விக்ரம் காதல் அத்தியாங்களில் எல்லாம் ரசிகர்களிடம் குதூகலம் பொங்குவதைப் பார்க்க முடிந்தது.

 

ஒரு காட்சியில் ஏமி வருவதைப் பார்த்து மயங்கி விழுந்தது, விக்ரம் மட்டுமல்ல... ரசிகர்களும்தான். அப்போதுதான், இந்தப் படத்துக்கு யு/ஏ வழங்கியதன் காரணங்களுள் ஒன்று நமக்கு விளங்கியது.

 

பாடிபில்டர்களைத் துவைத்து எடுக்கும் முதல் சண்டைக் காட்சியில் வீசிய அனலுக்குக் காரணம், அக்காட்சி அமைக்கப்பட்ட விதமா? ரசிகர்கள் அதற்கு அரங்கில் அளித்த வரவேற்பா..? இப்படி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய கொண்டாட்ட வன்முறை அது. ஆனால், எப்படா 'இடைவேளை' என்று ஏக்கம் ரசிகர்கள் பலருக்கும் தொத்திக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை.

 

இடைவேளைக்குப் பின்னர், கேன்டீனில் ரசிகர்கள் நடத்து ஸ்டேண்டிங் வட்டமேஜை மாநாடுகள் சிலவற்றில் காதுகொடுத்தபோது, இதுக்கும் மேல ஏதோ எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.

 

ஆனால், முக்கியமான வில்லன் இவர்தான் என்று தெரியவரும்போது "நாமதாம் எப்பவோ கண்டுபிடிச்சிட்டோம் மாப்ளே" என்ற பக்கத்து சீட்டில் இருந்த இளைஞர் தனது தோழரிடம் உரைத்தது, அவர்களிடன் இடைவேளை மாநாட்டு விவாதத்தின் வீரியத்தைப் பறைசாற்றியது.

 

படம் கொஞ்சம் நீளம் என்றாலும்கூட, கடைசி 45 நிமிடங்கள் வேகமாக நகர்ந்த விதம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு மெர்சலானுபவத்தைத் தந்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

 

இடையில், பவர் ஸ்டார் என்ட்ரியில் சந்தானத்தின் வழக்கமான கலாய்ப்பினால் ரசிகர்கள் கிச்சுகிச்சுமூட்டப்பட்டனர். மற்றபடி, விக்ரம் - சந்தானம் காமெடி ரசிகர்களை சிரிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

 

கூனன், பாடி பில்டர், விளம்பர மாடல் என மாறி மாறி ரசிகர்களை வியப்பூட்டும் விக்ரம், உடல் ரீதியினால வேறுபாடுகளையும், குரல் வழியிலான வித்தியாசத்தியும் புகுத்தி கச்சிதமாக உழைத்தும் நடித்தும் படம் முழுவதுமே "'' அம்" தான் என்று நிரூபித்திருக்கிறார். விக்ரமுக்கு திரையரங்கில் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை, அவரது விடாமுயற்சிக்கும் காத்திருப்புக்கும் கிடைத்த பலனாகவே பார்க்க முடிந்தது.

 

ஏமி ஜாக்சனுக்கும் இது முக்கியமான படம்தான். இவரால் ரசிகர்கள் எந்த அளவுக்கு குதூகலம் அடைந்தார்களோ, அந்த அளவுக்கு பாராட்டைப் பெறவும் ஏமி தவறவில்லை. வசனத்துக்கான உதட்டு அசைவுகளைக் கச்சிதமாக வெளிப்படுத்துவதுடன், மிகை இல்லாத சரியான நடிப்பால் கவர்ந்திழுக்கிறார்.

 

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், கலை இயக்குநர் முத்துராஜ், இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதலானோரின் பங்களிப்பு ''-யை உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

 

ஆயிலா ஆயிலா, மெர்சலாயிட்டேன், பூக்களே, என்னோடு நீ இருந்தால் என பாடல்கள் அனைத்துமே ஷங்கரின் வழக்கமான சுவை குறையாத பொங்கல் படையலாக தியேட்டரில் ரசிக்கப்பட்டது.

 

ஆனால், ஏற்கெனவே பல படங்களில் காட்டப்பட்ட சண்டைக் காட்சிகளுக்கான காரணப் பின்னணிகள், காதல் மிகத் தொடங்கும் காட்சிகள் எல்லாம் அவ்வப்போது அலுப்பூட்டவும் தவறவில்லை. படத்தில் காட்டப்படும் அறுவெறுப்பான அம்சங்களும்கூட இப்படம் பெரியவர்களுக்கு உரியது என்பதைச் சொல்லின.

 

உபேன் பட்டேல், சுரேஷ் கோபி, ராம் குமார், ஒஜாஸ் ரஜனி முதலானோர் நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் மீது ரசிகர்கள் பெரிய அளவில் கவனம் கொள்ளவில்லை.

 

படத்தின் நீளம், யூகிக்க முடிந்த கதைப் போக்கு, வசனங்களின் பங்களிப்பு முதலான குறைகள் அடுக்கப்பட்டாலும், விக்ரமின் மிரட்டலும், அதற்குக் காரணகர்த்தா ஷங்கரின் டீட்டெயிலிங் உடனான இயக்கமும், காதல் கண்களுடன் கூடிய 'ஃபிலிம் மேக்கிங்'கான ஐ-க்கு ஓர் 'ஓ...' போட வைக்கிறது.

 

படம் முடிந்ததும் ரசிகர்கள் சிலரிடம் கருத்து கேட்டபோது கிடைத்த பாயின்ட்ஸ்:

 

அதிகம் பகிரப்பட்டவை: "மெர்சலாயிட்டேன்", "அதுக்கும் மேல", "விக்ரம், ஷங்கர் கிரேட்"!

 

ஓரளவு சொல்லப்பட்டவை: "தமிழ் சினிமாவை அடுத்த ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்கப்பா!"

 

மிகச் சிலர் குறிப்பிட்டவை: "ஒரு தடவை பார்க்கலாம்!"

 

ஆக, முதல் காட்சியில் ரசிகர்கள் உணர்த்திருயிருப்பது... ''-யைத் தவறேல்

[Continue reading...]

Tuesday 13 January 2015

இயற்கை மருத்துவம்..! NATURE MEDICINE

- 0 comments

Tamil nature medicine .. Tamil Facebook updates
இயற்கை மருத்துவம்..!

1. பார்வைக்குச் சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை, சிறுநீர் அடைப்பைப் போக்கும்.
2. கர்ப்பப்பை போன்றிருக்கும் கொய்யாக்காய், கர்ப்ப கோளாறைப் போக்கும்.
3. மூளை போன்றிருக்கும் அக்ரூட், மூளை வளர்ச்சிக்கு மருந்தாகிறது.
4. இதயம் போன்றிருக்கும் செந்தாமரை, இதய நோய்க்கு மருந்தாகிறது.
5. கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய், கண் நோய்க்கு மருந்தாகிறது.
6. உயிரணு போன்றிருக்கும் எள், உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது.
மூலிகைகளைப் பயன்படுத்திய சித்த மருத்துவர்கள், அந்த மூலிகைப் பொருள்களுக்குச் சூட்டியுள்ள காரணப்பெயரே சான்றாகும்.

[Continue reading...]

Monday 12 January 2015

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள் fridge Tamil tips

- 0 comments

பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்

பொதுவாக நாம் சமைக்கப் பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம். ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவே கூடாது என்றும் சொல்லலாம்.

அது போன்ற பொருட்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நாம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.

பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூஞ்சை பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாகப் பிரித்து எடுத்து வைக்கலாம்.

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.

தேன்

உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுவை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.

வாழைப்பழம்

வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

முலாம்பழம்

கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிளம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

[Continue reading...]

அல்சரை தவிர்க்க.........! Tamil medical tips

- 0 comments

அல்சரை தவிர்க்க.........!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....!

ஒரு கப் தயிரை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அல்சர் வரவே வராது.......!

தினமும் ஒரு ஏலக்காயை தேனோடு உண்பது கண் பார்வைக்கும், நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது.......!

தினமும் இரண்டு அல்லது மூன்று ஓமம் சாப்பிட்டால் ஒரு மனிதனுக்கு தேவையான இரும்புச் சத்தில் பத்து சதவீதம் கிடைக்கிறது.......!

குழந்தைகளுக்கு முகத்தில் பாலுண்ணி தோன்றியதும், வெங்காயத்தை வெட்டி அதன் மேல் தேய்த்துவிட்டால் இரண்டு மூன்று தினங்களில் உதிர்ந்து விடும்.......!

மஞ்சள், பூண்டு இவை இரண்டையும் பால் விட்டு அரைத்து தலைக்கு பற்றுப் போட்டால், தலைவலி நீங்கும்.......!

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......!

நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!

Like & Share
நட்பென்றால் நாம் என்போம்

[Continue reading...]

Saturday 10 January 2015

Tamil Galatta jokes collection of year 2050

- 0 comments

Tamil Nadu in 2050
2050 ல் தமிழ்நாடு

* முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை ஆறு மாத காலத்திற்குள் சுமூகமாக தீர்த்து வைக்க மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

* 35 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தை 'கேப்டன்' விஜயகாந்த் கண்டுப்பிடித்தார்.

* ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனு, பேரறிவாளன், முருகன் ஆகியோரது தீர்ப்பு வழக்கு ஒத்திவைப்பு.

* உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடான சீனாவின் சாதனையை இந்திய முறியடித்தது.

* நாளை முதல் 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு. 10,000ரூ, 20,000ரூ, 50,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பால் விலை லிட்டருக்கு 800 ரூபாய் குறைப்பு. தாய்மார்கள் மகிழ்ச்சி.

* எந்த நிலையிலும் மருதநாயகம் படம் வெளியாகும். கமலஹாசன் தனது பேரனின் திருமண விழாவில் அறிவித்தார்.

* இலங்கை கடற்படையினரால் 11 மீனவர்கள் சிறைப்பிடிப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் பதட்டம் நீட்டிப்பு. வைகோ, நெடுமாறன் கண்டனம்.

* அரசு வழங்கி வரும் மாணவ, மாணவிகளுக்கான இலவச கார் வழங்கும் திட்டத்தில், ஊழல் நடந்துள்ளதாக எதிர் கட்சியினர் வெளி நடப்பு.

* தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு விவசாயம் குடும்பம் கண்டுபிடிப்பு.

* வீட்டுக்கு மின்சாரம் தருவதாக கூறி 6 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது.மேலும் இதுபோன்ற தமிழ் நாட்டில் இல்லாத விசயங்களை கேட்டு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு டி.ஐ.ஜி கூறினார்.

* பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைந்து,இன்று முதல் 968/லி க்கு விற்கப்படுகிறது.

* ரஜினியின் புதிய படத்தில்,ரஜினிக்கு ஜோடியாக நடிகை சமந்தாவின் மகள் நடிக்கிறார்.

* சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பவர் ஸ்டாருக்கு வழங்கப்பட்டது.

* தங்க விலை உயர்வு.ஒரு கிராம் தங்கம் 18,058 ரூபாய்க்கும்,ஒரு சவரன் 1,34,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

---------நன்றி--------

[Continue reading...]

ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க

- 0 comments

ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்க..
01) உழவு கூலி (ட்ராக்டர்)🚜 மூன்று ஓட்டு -ரூ.1500/
02) வரப்பு சீர் செய்ய-ரூ.1200/-
03) நிலத்தை சமப்படுத்த-ரூ.1200/
04 ) நாத்து தயார் செய்ய.(விதை,உழவு தெளி)ரூ.2500/-
05) நாற்று பரியல் நடவு கூலி.ரூ.3750/-
06) அடி உரம், மேல் உரம் , பூச்சி மருந்து.ரூ.4500
07) களை எடுக்க.ரூ.600/-
08) அறுவடை ரூ.3000/-
09) நீர் பாய்ச்ச மூன்று மாத கூலி ரூ.1500/-
மொத்தம் : ரூ. 19,750/-
மொத்த உற்பத்தி/
ஏக்கர் : 30 மூட்டை ( 70 கிலோ)

அரசு கொள் முதல் விலை : 30*850= ரூ.25500/-
லாபம் :
ஏக்கருக்கு ரூ. 5750/-
மழை , வெள்ளத்தில் சேதம் இல்லாமல் இருந்தால் தான்
இந்த லாபம் சேதமாயின் அடுத்த ஆண்டு விவசாயி தற்கொலை தான்.
ஊருக்கு சோறு போடும் விவசாயிக்கு அரசு பெரிசா ஒன்னும் செஞ்சிட வேண்டாம் ,
மீத்தேன் வாயு எடுக்குறேன் என்று எங்க பொழப்பை கெடுக்காதீங்கன்னு தான் சொல்றோம்.

-"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவர்தொழுதுண்டு அவர்பின் செல்வர்" .

- என்றார் திருவள்ளுவர்.

யாரும் யாரையும் தொழ வேண்டாம்.
உங்களுக்கு சோறு போட எங்களுக்கு உதவுங்க என்று தான் விவசாயிகள் கேட்கிறார்கள்.

மீத்தேன் இல்லையென்றால் வாழ்ந்து விட முடியும்.சோறு  இல்லையெனில் ?
உலகுக்கே சோறு போடும் விவசாயியை தன் காலில் விழச்செய்யும் இந்த அரசும் நாடும் நாசமாய் போகாதா ?

உணர்ந்தவர்கள் forward பண்ணுங்கள்....

[Continue reading...]

Friday 9 January 2015

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு

- 0 comments

💒 வீட்டில் 🚹 தனியாக இருக்கும் போது மாரடைப்பு 😩

💒 வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

🏃 வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில 😨  பிரச்சனைகள் காரணமாக உங்கள் 😡 மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

👉 நீங்கள் மிகவும் 😳 படபடப்பாகவும், 😟 தொய்வாகவும் உள்ளீர்கள்.

👉 திடீரென்று உங்கள் 💗 இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

👆 அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

👉 உங்கள் வீட்டில் இருந்து 🏥 மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

👎 ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் 💬 மூளை உங்களுக்கு சொல்கிறது

👌 இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

👎 துரதிஷ்ட வசமாக 💔 மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..!

✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

👆 நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.

🙌 இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக 😲 இரும்ப வேண்டும்,

👌 ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் 👃 மூச்சை இழுத்து விட வேண்டும்,

👉 இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்,

💚 இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது 🏃 வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

👆 ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

👆 மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

👆 இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

👉👈 இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.

👆 இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

👇 பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள 🏥 மருத்துவமனைக்கு செல்லலாம்..

👆 இந்த தகவலை 📝 குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். 📲 📤 📱

❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!
           🙌 🙏 👏

[Continue reading...]

Sunday 4 January 2015

சோமாலியாவில் கடும் பஞ்சம்: பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரம்

- 0 comments

சோமாலியாவில் கடும் பஞ்சம்:
பலி எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரம்

இதையாவது எல்லாருக்கும் (Share)
செய்து தெரியப்படுத்துங்கள்

ஒரு நாடே வறுமையில்
தத்தளித்து கொண்டிருக்கிறது.இறப்பு எண்ணிக்கையும்
இலட்சத்தை தாண்டி விட்டது ..ஆனாலும்
இதை பற்றி எந்தவித செய்தியையும்
பத்திரிக்கைகள் வெளியிடுவதும் கிடையாது...

ஒரு வேளை அங்குள்ளவர்களை மக்கள்
என்று நமது பத்தரிக்கைகள் மற்றும் உலக
நாடுகளும் நினைக்கவில்லை போலும்..

ஈதியோப்பாவின் ,சோமாலியாவின்
வறுமை என்பது ஏதோ நிலையான்
ஆட்சி இன்மை மற்றும் ஆயுதங்களால் தான்
என்று நாம் தினம் தினம் பேசுகின்றோம் ஆனால்
நாம் அனைவரும் மறந்த மற்றும் பத்திரிக்கைகள்
மறைத்த செய்தி என்னவென்றால் அங்குள்ள
பசி பஞ்சத்திற்கும் ஆயுத கலாச்சாரத்ரிகும்
அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தான் காரணம் என்ற உண்மையை..

காரணம் அங்குள்ள இயற்கை வளங்களை கொள்ளையிட அணு ஆயுத கழிவுகளை கொட்ட அவர்களின் கடற்பரப்பை பயன்படுத்த எனஅணைத்து அக்கிரமங்களும் அமெரிக்க மற்றும்
மேற்கத்திய நாடுகளால் நிகழ்த்தப்பட்டு வருவது தான் வேதனை...

நான் உங்களிடமிருந்து ஒரு shareஐ மட்டுமே எதிர்பார்க்கிறேன்
தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்

[Continue reading...]

Saturday 3 January 2015

பேச்சிப்பாறையில் படகுசவாரி

- 0 comments

பேச்சிப்பாறையில் படகுசவாரி காளிகேசத்தில் மலையேற்றம் ₹ 500 கட்டணத்தில் குமரி காடுகளை ரசிக்கலாம்
******************************
நாகர்கோவில், ஜன.3:
குமரியில் வனத்துறை சார்பில் எக்கோ டூரிசம் திட்டம்  வருகிற மார்ச் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வனத்துறை மற்றும் மலைவாழ் மக்கள் இணைந்து எக்கோ டூரிசம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் வரும் சுற்றுலா பயணிகள் அந்த பகுதிகளின் சிறப்பை அறிந்து கொள்வதுடன், அவர்களை கவரும் வகையில் தேவையான வசதிகளை செய்து தருவது, பாரம்பரிய உணவு வழங்குவது, அருவிகள் பராமரிப்பு, மலைப் பாதையில் நடை பயணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகள், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்துடன் வழங்கப்பட்டு வருகின்றன.
இயற்கை வளங்களும் 14 வகையான வனப்பகுதிகளை கொண்ட குமரியிலும் எக்கோ டூரிசம் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி குமரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் எக்கோ டூரிசம் குறித்து திட்டங்களை உருவாக்க தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி இருந்தனர். தற்போது அதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
வருகிற மார்ச் மாதம் முதல் இத்திட்டத்தை செயல்படுத்தும் வகை யில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி அழகியபாண்டியபுரம் வனச்சரக அலுவலகத்திலிருந்து காலை யில் வாகனம் கிளம்பும். இவ்வாகனத் தில் 22 பேர் பய ணம் செய்ய லாம். முதலில் உலக்கை அருவிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு குளியலை முடித்து விட்டு காளிகேசத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
அங்கு மலைப்பாதையில் மலையேற்ற பயிற்சி, குளியல் முடித்து விட்டு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதில் காணி இனமக்களின் பாரம்பரிய உணவுகளான கப்பக்கிழங்கு, காந்தாரி மிளகாய் துவையல், மீன், இறைச்சி, சிகப்பு அரிசி சாதம் போன் றவை வழங்கப்படுகிறது. பின்னர் பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட் அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு பேச்சிப்பாறை அணையில் படகு சவாரி மற்றும் அணையில் உள்ள சிறு தீவுகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். சிறு தீவு களில் சிற் றுண்டி வழங்கப்படும். பின்னர் மீண்டும் அழகியபாண்டியபுரம் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.
இதே போல் ஜீரோ பாய்ன்டிலிருந்தும் 22 பேர் படகுசவாரி, ஐலேன்ட் விசிட் முடித்து விட்டு காளிகேசம் & உலக்கைஅருவி வந்து விட்டு மீண்டும் ஜீரோ பாயின்ட் அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கு கட்டணமாக
₹ 500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி வனத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, குமரி வனப்பகுதியை பற்றி அறியும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு ₹500 கட்டணம் ஆகும். இதில் வாகன செலவு, சிற்றுண்டி மற்றும் மதிய உணவு, படகுசவாரி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அடங்கும். அதிகாலையில் கிளம்பும் அந்த பயணம் நிறைவு பெற இரவு ஆகிவிடும். வாரத்திற்கு இரு நாட்கள் இந்த பயணம் இருக்கும். இதற்கான வரவேற்பு மற்றும் சூழலை பொறுத்து தினசரி இந்த சுற்றுலா செயல்படுத்தப்படும் என்றனர்.

[Continue reading...]

Friday 2 January 2015

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??

- 0 comments

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??

சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு. பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது. www.puradsifm.com

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.

அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons

[Continue reading...]

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

- 0 comments

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்

* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.

* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.

* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

[Continue reading...]

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன் உண்மை நிலை

- 0 comments

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன் உண்மை நிலை

1. மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்?

மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது.

நாம் வெளியே எங்கே சென்றாலும், அங்கே விஷ அணுக்களின் தன்மை பரவிப் படர்ந்துள்ளது. அவைகள் நம் பாதங்களில் பட்டவுடன், நமது உடலில் சேர்கின்றது அந்த உணர்வின் வலிமையை நுகர்ந்தால், நமக்குள் அது வலிமை பெறுகின்றது.

விஷத்தின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்தாலும்,
வாசனையுள்ள சாணத்தின் மீது நமது பாதம் பட்டபின்,
நமக்குள் விஷத்தை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகின்றோம்.

ஏனென்றால், மாடு விஷத்தின் தன்மையைத் தன் உடலாக்கியபின், விஷத்தை நீக்கிய நல்ல உணர்வின் தன்மையாக, மாட்டின் சாணம் வெளிப்படுகின்றது. ஆகவே, விஷத்தை ஒடுக்கும் வல்லமை மாட்டின் சாணத்திற்கு உண்டு.

ஆகையால், ஞானிகள் "மாட்டின் சாணத்தை வீட்டில் தெளி" என்றார்கள். மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகினால், நம்மால் வெளியிடப்பட்டு, வீட்டில் பதிந்துள்ள சங்கடம், சலிப்பு, வேதனை, போன்ற உணர்வுகளை அது கொல்கின்றது.

2. எந்த எண்ணத்துடன் கோலம் போடவேண்டும்?

அதே மாதிரி வீடுகளில் கோலம் போடுவார்கள். இது சாஸ்திரங்கள் நமக்காக உருவாக்கிக் கொடுத்த வழிமுறை. கோலம் எதற்காகப் போடுகிறார்கள்? பல புள்ளிகளை வைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.

கோலப்பொடி தயாரிக்கப் பயன்படும் கற்கள் காந்தப் புலன்கள் கொண்டது. காந்தப் புலன்கள் கொண்ட, கோலப்பொடியைக் கொண்டு கோலமிடும் பொழுது, நாம் எண்ணுகின்ற உணர்வுகள், கோலப் பொடியில் கலந்து விடுகின்றது.

வீட்டில் வெறுப்பாக இருப்பார்கள். சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். ஆக, இந்த வெறுப்பின் உணர்வுடன், கோலப்பொடியைக் கையில் எடுத்தோம் என்றால், அதிலிருக்கும் காந்த சக்தி நமது வெறுப்பின் உணர்வை அது கவர்ந்து கொள்ளும்.

நாம் நமது வீட்டில் கோலப்பொடி வைத்திருக்கிறோம். மற்ற எல்லாவற்றையும் வைத்திருக்கிறோம். ஆனால், மாமியார் மீது வெறுப்பு, மாமனார் மீது வெறுப்பு, கணவர் மீது வெறுப்பு என்று மனதில் வெறுப்பு கொண்டு, புள்ளி வைத்தால் எப்படியிருக்கும்?

இந்த உணர்வுடன் கோலமிடத் தொடங்கினால், என்னாகும்? அது ஒழுங்காக வராது. அழித்து அழித்துக் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் சந்தோசமாக இருப்பவர்கள், ஒரு புள்ளியை வைத்தால், தொடர்ந்து அழகாகக் கோடு இழுத்துக் கொண்டே போவார்கள்.

ஆக, இதையெல்லாம் மாற்றியமைப்பதற்காக தன் குடும்பத்தின் மீது, பற்றும் பாசமும் கொள்ளும் பொழுது, மகிழ்ச்சியான உணர்வின் தன்மையை உருவாக்கும் ஆற்றல் வருகின்றது.

குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி
கோலப் பொடியை எடுத்து, புள்ளிகளை வைத்துக் கோலமிடும் பொழுது, நம்முடைய நிலைகளும் ஒன்றுபடும் தன்மை வருகின்றது.

ஆக, நமக்குள் வேற்றுமை இல்லாத நிலைகள் கொண்டு, அனைவரையும் அரவணைக்கும் தன்மை வர வேண்டுமென்ற எண்ணத்தால், நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வரவேண்டும், இணைந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வுகளை எண்ணித்தான், இங்கு கோலமிட வேண்டும்.

ஆக, சாஸ்திரங்கள் காண்பித்த தத்துவங்கள் பொய்யல்ல. நாம் தெளிவாக இதையெல்லாம் தெரிந்து அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் மகிழ்ந்து வாழ்வோம்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger