Saturday 10 January 2015

Tamil Galatta jokes collection of year 2050

Tamil Nadu in 2050
2050 ல் தமிழ்நாடு

* முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை ஆறு மாத காலத்திற்குள் சுமூகமாக தீர்த்து வைக்க மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

* 35 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய விமானத்தை 'கேப்டன்' விஜயகாந்த் கண்டுப்பிடித்தார்.

* ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தனு, பேரறிவாளன், முருகன் ஆகியோரது தீர்ப்பு வழக்கு ஒத்திவைப்பு.

* உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடான சீனாவின் சாதனையை இந்திய முறியடித்தது.

* நாளை முதல் 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பு. 10,000ரூ, 20,000ரூ, 50,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பால் விலை லிட்டருக்கு 800 ரூபாய் குறைப்பு. தாய்மார்கள் மகிழ்ச்சி.

* எந்த நிலையிலும் மருதநாயகம் படம் வெளியாகும். கமலஹாசன் தனது பேரனின் திருமண விழாவில் அறிவித்தார்.

* இலங்கை கடற்படையினரால் 11 மீனவர்கள் சிறைப்பிடிப்பு. தமிழக கடலோரப் பகுதிகளில் பதட்டம் நீட்டிப்பு. வைகோ, நெடுமாறன் கண்டனம்.

* அரசு வழங்கி வரும் மாணவ, மாணவிகளுக்கான இலவச கார் வழங்கும் திட்டத்தில், ஊழல் நடந்துள்ளதாக எதிர் கட்சியினர் வெளி நடப்பு.

* தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு விவசாயம் குடும்பம் கண்டுபிடிப்பு.

* வீட்டுக்கு மின்சாரம் தருவதாக கூறி 6 லட்சம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது.மேலும் இதுபோன்ற தமிழ் நாட்டில் இல்லாத விசயங்களை கேட்டு ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு டி.ஐ.ஜி கூறினார்.

* பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைந்து,இன்று முதல் 968/லி க்கு விற்கப்படுகிறது.

* ரஜினியின் புதிய படத்தில்,ரஜினிக்கு ஜோடியாக நடிகை சமந்தாவின் மகள் நடிக்கிறார்.

* சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பவர் ஸ்டாருக்கு வழங்கப்பட்டது.

* தங்க விலை உயர்வு.ஒரு கிராம் தங்கம் 18,058 ரூபாய்க்கும்,ஒரு சவரன் 1,34,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

---------நன்றி--------

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger