Saturday 5 October 2013

சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது young girl rape news

- 0 comments

சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது

by veni
Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

காரைக்காலை அடுத்துள்ள பேரளம், கோவிந்தச்சேரியை சேர்ந்தவர் சின்னப்பா மகன் விஜிமாறன் (25). இவர், காரைக்காலிலிருந்து மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்று பேரளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்தார். இவருக்கும், புனிதா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் சுரக்குடிக்கு வந்த விஜிமாறன், அங்கு நின்று கொண்டிருந்த சிறுமி கலா (15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நைசாக பேசி, திருநள்ளாறு பேரளம் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் அருகில் உள்ள பட்டுப் பூச்சி திடலுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து திருநள்ளாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பால் என்கிற மரிகிறிஸ்டியன், சப்–இன்ஸ்பெக்டர்கள் அனில்குமார், சுரேஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, விஜிமாறனை கைது செய்தனர்.

The post சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

நடிகர் அஜீத்தின் பரந்த மனசு! வீட்டில் வேலை பார்த்தவங்களுக்கு கிடைத்த அதிர்ஸ்டம்! Super star ajith

- 0 comments

நடிகர் அஜீத்தின் பரந்த மனசு! வீட்டில் வேலை பார்த்தவங்களுக்கு கிடைத்த அதிர்ஸ்டம்!

by abtamil

Super Star Ajith

நடிகர் அஜீத் தனது வீட்டில் பத்து ஆண்டுக்கு மேல் பணியாற்றும் டிரைவர், சமையல்காரர், தோட்டக் காரர் உள்ளிட்டோருக்கும் அலுவலக உதவியாளர்களுக்கும் ஏற்கனவே இலவசமாக அரை கிரவுண்ட் நிலம் வாங்கி கொடுத்தார். கேளம்பாக்கத்தில் இந்த நிலத்தை வாங்கியுள்ளார். அவரவர் பெயருக்கு தனது சொந்த செலவிலேயே பத்திரப்பதிவும் செய்து கொடுத்தார். இதனால் ஊழியர்கள், மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையடுத்து அந்த இடத்தில் தனது செலவில் வீடுகளையும் அவர் கட்டிக் கொடுக்கிறார். கட்டுமான பணிகள் துவங்கியுள்ளன. வீடுகள் எப்படி கட்டப்பட வேண்டும் என்ற வரை படத்தை பார்த்து அஜீத் ஒப்புதல் வழங்கியுள்ளாராம். அதன்படி வீடு கட்டும் வேலைகள் நடக்கிறது.

அது மட்டுமின்றி தன் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் இரு சக்கர வாகனங்களையும் வாங்கி கொடுத்துள்ளாராம். அஜீத்தின் சேவை மனப்பான்மையை பார்த்து மற்ற நடிகர்களும் தங்களிடம் நீண்ட காலம் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கு நிலம் வாங்கி கொடுக்க தயாராகிறார்கள்.

 

Show commentsOpen link

[Continue reading...]

இன்ஸ்பெக்டர் லட்சுமணன் 2 தீவிரவாதிகளை பிடித்தது எப்படி?: பரபரப்பு தகவல்கள் How 2 militants captured information

- 0 comments

2 தீவிரவாதிகளை பிடித்தது எப்படி?: பரபரப்பு தகவல்கள் How 2 militants captured information
Tamil NewsYesterday,

சென்னை, அக்.6-

ஆந்திராவில் புத்தூர் கிராமத்தில் 12 மணி நேரம் கடும் போராட்டம் நடத்தி தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் சினிமா திகில் காட்சிகளை மிஞ்சும் வகையில் பரபரப்பாக காணப்பட்டது.

கடந்த 3 மாதங்களாக தமிழகத்தையே பயமுறுத்தி மிரட்டி வந்த பயங்கர தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேரும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஆடிய ஆட்டத்துக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலையே தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும், சென்னை நகர போலீசாரும் இதற்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டனர்.

மேற்கண்ட 3 தீவிரவாதிகளில், முக்கியமான தீவிரவாதியான போலீஸ் பக்ருதீன் சென்னை பெரியமேடு பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் கைது செய்யப்பட்டார். சென்னையில் நடந்த திருப்பதி குடை ஊர்வலத்தை சீர்குலைக்கும் சதித்திட்டத்தோடு போலீஸ் பக்ருதீன் சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியிருந்தார்.

இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், போலீஸ் படையோடு பெரியமேடு லாட்ஜை சுற்றி வளைத்தார். ஆனால், லாட்ஜில் போலீஸ் பக்ருதீன் இல்லை. திருப்பதி குடை ஊர்வலம் வரும் வழியான சூளை பகுதியில் போலீஸ் பக்ருதீன் நோட்டம் பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்த தகவலும் இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு கிடைத்தது. உடனே லட்சுமணன் சூளை பகுதிக்கு சென்று போலீஸ் பக்ருதீனை சுற்றி வளைத்து பிடித்தார். அப்போது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. போலீஸ் பக்ருதீனும், இன்ஸ்பெக்டர் லட்சுமணனும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

போலீஸ் பக்ருதீன், இன்ஸ்பெக்டர் லட்சுமணனின் கழுத்தை நெறித்து கொல்லப்பார்த்தார். ஆனால் இன்னொரு இன்ஸ்பெக்டர் லட்சுமணனை காப்பாற்றினார். அதன்பிறகு போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் பக்ருதீனை சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தார்கள். விசாரணையில், போலீஸ் பக்ருதீன் தான் செய்த குற்றச்செயல் அனைத்தையும் ஒப்புக்கொண்டார்.

அவரது கூட்டாளிகளான பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் ஆந்திர மாநிலம் புத்தூரில் ஒரு வாடகை வீட்டில் பதுங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். உடனடியாக போலீஸ் படையினர் நேற்று முன்தினம் இரவோடு இரவாக பன்னா இஸ்மாயிலையும், பிலால் மாலிக்கையும் சுற்றி வளைத்து கைது செய்ய அதிரடி வியூகம் வகுத்தார்கள்.

சிறப்பு புலனாய்வு பிரிவு டி.ஜி.பி. நரேந்திர பால்சிங் உத்தரவின் பேரில், ஐ.ஜி.க்கள் மகேஷ்குமார் அகர்வால், கண்ணப்பன், போலீஸ் சூப்பிரண்டுகள் அன்பு, நாகஜோதி, கூடுதல் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், ரவீந்திரன், லட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், வெற்றிவேல், எட்வர்டு பிரபு மற்றும் 200 போலீசார் ஆந்திர மாநிலம் புத்தூருக்கு விரைந்தனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தொடர்பாக ஆந்திர போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆந்திர போலீஸ் படையினர் புத்தூரில் தயார் நிலையில் காத்திருந்தனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம் புத்தூர் ரெயில் நிலையம் அருகேயுள்ள கேட்புத்தூர் எனப்படும் பகுதியாகும்.

அங்கு தாசர்கொண்ட வீதி, கேட் வீதி, மேதர் வீதி, முகமது வீதி என்ற நான்கு தெருக்கள் உள்ளன. அங்கு சுமார் 500 குடும்பங்கள் வசிக்கிறார்கள்.

அதில் மேதர் வீதியில் ஒரு பழமையான ஓட்டு வீட்டில் தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் தங்கியிருந்தனர்.

அந்த பழமையான வீடு மத்திய கலால் வரித்துறையின் முன்னாள் அதிகாரியான யாசின் பாஷா என்பவரது வீடாகும். யாசின் பாஷா இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் திருப்பதியில் வசிக்கிறார்கள்.

இந்த ஓட்டு வீட்டை மாதம் ரூ.1,000 வாடகைக்கு தீவிரவாதிகளுக்கு விட்டுள்ளனர். கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் பழைய இரும்பு பொருட்கள், பழைய துணிமணிகளை வாங்கி விற்கும் வியாபாரிகள் போல தீவிரவாதிகள் அந்த பகுதிக்கு சென்றனர்.

தமிழகத்தில் இருந்து சென்ற போலீஸ் படையினர் புத்தூருக்கு அதிகாலை 3 மணிக்கு போய் சேர்ந்தனர். உடனடியாக ஆந்திர போலீசாரும், தமிழக போலீசாரும் இணைந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த ஓட்டு வீட்டை முற்றுகையிட்டனர்.

இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வீட்டின் கதவை தட்டினார். நீண்டநேரம் கதவை தட்டிய பிறகு தீவிரவாதி பிலால் மாலிக் வந்து கதவை திறந்தார். வெளியில் போலீஸ் படையினர் நிற்பதை பார்த்ததும், அதிர்ச்சியடைந்தார்.

இதற்குள் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், பிலால் மாலிக்கை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் சென்றார். உடனே பிலால் மாலிக் கதவை பூட்டிவிட்டார். வீட்டுக்குள் பிலால் மாலிக்கும், இன்ஸ்பெக்டர் லட்சுமணனும் சண்டை போட்டனர். பன்னா இஸ்மாயிலும் சேர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமணனை தாக்கினர். லட்சுமணனை தீவிரவாதிகள் இருவரும் சேர்ந்து சரமாரியாக கத்தியால் குத்திவிட்டனர். அவர் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

இதற்கிடையில், லட்சுமணனின் அபய குரல் கேட்டு, வெளியில் நின்றிருந்த போலீஸ் படையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த லட்சுமணனை போலீஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்குள் தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் வீட்டின் உள்பகுதியில் உள்ள ஒரு அறைக்குள் கதவை உள்பக்கம் பூட்டிக்கொண்டனர். அவர்களுடன் பிலால் மாலிக்கின் மனைவி ஹசினா பானு (வயது 30), மகன்கள் முகமது ஹம்சா (4), முகமது யாசிக் (1), மகள் பாத்திமா (3) ஆகியோரும் இருந்தனர். போலீசார் அவர்களை வெளியே வரும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையில், இன்ஸ்பெக்டர் லட்சுமணனை கத்தியால் குத்தும்போது வெளியில் நின்றிருந்த போலீசார் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். அந்த துப்பாக்கி குண்டு பன்னா இஸ்மாயிலின் வயிற்றில் பாய்ந்துவிட்டது. அந்த குண்டு காயத்தோடு பன்னா இஸ்மாயில் வீட்டுக்குள் இருந்தார்.

தீவிரவாதிகள் இருவரும் போலீசாருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர். நாங்கள் பயங்கர வெடிகுண்டுகளை வீட்டுக்குள் வைத்துள்ளோம். கதவை உடைத்து எங்களை பிடிக்கமுற்பட்டால், குண்டுகளை வெடிக்கச் செய்து நாங்களும் அழிந்து, ஊரையே அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இதனால் போலீஸ் படையினர் கதவை உடைத்து அதிரடி நடவடிக்கை எடுக்காமல், வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர். வீட்டை சுற்றி போலீசார் காவலுக்கு நின்றனர். அறைக்குள் இருந்த தீவிரவாதிகளிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தனர்.

அடுத்தகட்ட நடவடிக்கையை பொழுது விடிந்தபிறகு எடுக்கலாம் என்று போலீசார் முடிவு செய்துவிட்டனர். தொடர்ந்து தீவிரவாதிகள் பிடிவாதமாக இருந்தனர். அறைக்குள் சமையல் கியாஸ் இருப்பதாகவும், சமையல் கியாஸை திறந்துவிட்டு தீவைத்துக்கொள்வோம் என்றும் மிரட்டினார்கள்.

தீவிரவாதிகள் இதுபோல் வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தமிழகம், ஆந்திரா மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

பொழுது விடிந்தவுடன் போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கினார்கள். மேலும், மேலும் போலீஸ் படை குவிக்கப்பட்டது.

புத்தூர் கிராம மக்கள் காலையில் எழுந்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் ஊரைச் சுற்றி இவ்வளவு போலீஸ் படை உள்ளதே என்று ஆச்சரியப்பட்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரையும் போலீசார் வீட்டை விட்டு வெளியேற்றினார்கள். தீவிரவாதிகள் இங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்றும், அவர்களை பிடிக்கும்வரை யாரும் இங்கு வரக்கூடாது என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். போலீசாரின் இந்த எச்சரிக்கையால், புத்தூர் கிராமமே பதற்றமும், பீதியும் அடைந்து வீடுகளைவிட்டு வெளியேறினார்கள்.

இதற்கிடையில், இந்த தகவல் தெரிந்து பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் நூற்றுக்கணக்கில் குவிந்து புத்தூர் கிராமத்தை முற்றுகையிட்டனர். அடுத்து என்ன நடக்குமோ? என்ற பயங்கர பீதி அங்கு நிலவியது.

போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்கு வெளியில் நின்று தீவிரவாதிகளிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தனர். ஆனால், தீவிரவாதிகள் நாங்கள் செத்து மடிவோமே தவிர, வீட்டை விட்டு வெளியே வரமாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தனர்.

இதற்கிடையில், தீவிரவாதிகளை பிடிப்பதில் திறமைவாய்ந்த ஆக்டோபஸ் எனப்படும் ஆந்திர மாநில கமாண்டோ போலீஸ் படையினர் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

புத்திசாலித்தனமாக செயல்பட்டு, 2 தீவிரவாதிகளும் அவர்களோடு இருக்கும் பெண் மற்றும் குழந்தைகளையும் நல்லபடியாக மீட்கும் முயற்சியில் போலீஸ் அதிகாரிகள் இறங்கினார்கள். புதிய வியூகம் வகுக்கப்பட்டது.

புதிய வியூகத்தின்படி, தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டின் மேற்கூரையில் ஒரு பெரிய துவாரம் போடப்பட்டது. அந்த துவாரத்தின் வழியாக தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் அறைக்குள் போலீசார் ஒரு கேமராவை இறக்கி பார்த்தனர். அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை வெளியில் இருந்து டி.வி. மானிடரில் போலீசார் பார்த்தனர். கேமரா மூலம் பார்த்தபோது, வீட்டுக்குள் பெரிய அளவில் வெடிகுண்டு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. கேமரா வழியாக பார்ப்பதை தீவிரவாதிகள் தெரிந்துகொண்டு, கேமராவை உடைத்துவிட்டனர்.

அடுத்தகட்டமாக தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அறைக்குள் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வெடிக்க செய்தனர். இதன்மூலம் தீவிரவாதிகளுக்கும், அவர்களோடு இருந்த இளம்பெண் மற்றும் குழந்தைகளுக்கும் கண்கள் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதை தாங்கமுடியாமல், தீவிரவாதிகளோடு இருந்த இளம் பெண்ணும், 3 குழந்தைகளும் முதல்கட்டமாக கதவை திறந்துகொண்டு வெளியே வந்தனர்.

அடுத்தகட்டமாக ஆக்டோபஸ் கமாண்டோ படையினர் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து தீவிரவாதிகள் பன்னா இஸ்மாயிலையும், பிலால் மாலிக்கையும் மடக்கிப்பிடித்தனர். பிற்பகல் 3 மணிக்கு இந்த அதிரடி நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

குண்டு காயத்துடன் இருந்த தீவிரவாதி பன்னா இஸ்மாயில் உடனடியாக புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் பிலால் மாலிக் முகத்தை மூடி போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்றனர். மீட்கப்பட்ட பிலால் மாலிக்கின் மனைவி, குழந்தைகள் போலீஸ் பாதுகாப்போடு தமிழகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களை உறவினர்களிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

மெளனராகம் படத்தை அப்படியே காப்பியடித்து ‘ராஜா ராணி’ mounaragam remake as raja rani

- 0 comments

டல்லடிக்கிறதா 'ராஜா ராணி' வசூல்? : கலக்கத்தில் ஆர்யா!

by abtamil

ஒருபக்கம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்ற ஒரு நல்ல படத்தை எடுத்து விட்டு மனக்கஷ்டத்துடன் பணக்கஷ்டமும் ஒருசேர, ஊர் ஊராக பசை வாளியைத் தூக்கிக் கொண்டு போஸ்டர் ஒட்டப் போய்க் கொண்டிருக்கிறார் டைரக்டர் மிஷ்கின்.

எந்த தழுவலும் இல்லாமல் ஒரு நல்ல படத்தைக் கொடுத்த மிஷ்கினின் நிலைமை இப்படி இருக்க, மெளனராகம் படத்தை அப்படியே காப்பியடித்து விட்டு டைரக்டர் ஷங்கர் போல பிரம்மாண்டம் என்னும் மெஸ்மரிசத்தை ஸ்கீரினில் காட்டி 'ரஜா ராணி' படத்தை ஹிட் லிஸிட்டில் சேர்த்து விட்டார் டைரக்டர் அட்லி.

போதாக்குறைக்கு பாக்ஸ் ஸ்டார் கம்பெனியும் தன் பங்குக்கு பப்ளிசிட்டி என்ற பெயரில் ராஜாராணியை தனது சொந்த சேனலில் பிய்த்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால் என்னதான் தலைகீழாக தொங்கிப் பார்த்தும் பட வசூல் என்னவோ ஏ சென்டரில் தான் ஸ்டெடியாக இருக்கிறதாம். பி அண்ட் சி செண்டர்களில்  உள்ள பல தியேட்டர்களில் படம் காத்து தான் வாங்குகிறதாம்.

இதனால் கலக்கமடைந்த டைரக்டர் அட்லியும் ஹீரோ ஆர்யாவும் வசூலை அதிகப்படுத்த தமிழகத்தின் முக்கிய ஊர்களில் உள்ள தியேட்டர்களுக்கு விசிட் செய்து ரசிகர்களை நேரில் சந்திக்க கிளம்பி விட்டார்கள்.

ஏற்கனவே மதுரை, திருச்சி, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று இன்டெர்வெல்லில் ரசிகர்களை சந்தித்து பேசிவிட்டு வந்த ஆர்யா அடுத்து ஈரோடு, திருப்பூர், கோவை, கொச்சி என மற்ற ஊர்களுக்கும் விசிட் அடிக்கப் போயிருக்கிறாராம்.

என்ன தான் படம் நல்லாயிருக்கு என்று வெளியில் மவுத் டாக் கிளம்பினாலும் உண்மையில் சென்னை சிட்டி தவிர மற்ற இடங்களில் ராஜா ராணி படத்தின் வசூல் ரொம்ப ரொம்ப கம்மி என்பது தான் நிஜமான உண்மையாம்.

அதனால் தான் டல்லடிக்கும் வசூலை தூக்கி நிறுத்த டைரக்டர் அட்லி கொடுத்த ஐடியா தான் இந்த ஊர் ஊரா திரியில டூர் ப்ளானாம்.

Show commentsOpen link

[Continue reading...]

என் வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர்கள் ரஜினி கமல்! Director barathi raja

- 0 comments

என் வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர்கள் ரஜினி கமல்!

16 வயதினிலே விழாவில் பாரதிராஜா பேச்சு!

by admin
TamilSpyYesterday,

சப்பாணி, பரட்டை, மயிலு என்றதும் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் நினைவுகூறத்தக்க ஒரு கலைப்படைப்பை பாரதிராஜா 36 வருடங்களுக்கு முன்பு 16 வயதினிலே என்ற பெயரில் செதுக்கினார்.

ஸ்டூடியோக்களில் ஒரே இடத்தில் நிற்கவைக்கப்பட்டிருந்த கேமராவை கட்டவிழ்த்து கிராமங்களின் வரப்புகளிலும், கோழி ஆடுகளின் பின்பும் ஓடவிட்ட பாரதிராஜா என்ற இயக்குனர் இமயத்தை தமிழ்த்திரையுலகத்திற்குக் கொடுத்த பெருமையைக் கொண்ட 16 வயதினிலே திரைப்படம் டிஜிட்டலில் புதுப்பொலிவுடன் மெருகேற்றப்பட்டிருக்கிறது.

தமிழ்த் திரையுலக வரலாற்றை 16 வயதினிலே திரைப்படத்திற்குப் பின், 16 வயதினிலே திரைப்படத்திற்கு முன் என்று பிரிக்கக் கூடிய அளவிற்கு தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய படம். 16 வயதினிலே திரைப்படத்தின் டிஜிட்டல் பதிப்பின் டிரெய்லர் வெளியீட்டு விழா கமலா திரையரங்கத்தில் இன்று(04.10.13) காலை நடந்தது. பாரதிராஜா,தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கிரன், ரஜினி, கமல், கே.பாக்யராஜ், பார்த்திபன் உட்பட பல திரைநட்சத்திரங்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

பாக்யராஜ் பேசிய போது "ஸ்கூல் பையன் பாஸ் ஆனதும் எப்புடி சந்தோசமா இருப்பானோ அந்த மாதிரி தான் நான் இருக்கேன். என் பேர் முதல் முதலில் டைட்டிலில் வந்த படம் இது. இந்த படத்தை பத்தி எவ்வளவோ சொல்லலாம். கமல்ஹாசன் 'ஆத்தா ஆடு வளத்தா… கோழி வளத்தா… நாய் வளக்கல… இந்த சப்பாணியத்தான் வளத்தா…' டையலாக் சொல்லும்போது செட்டில் இருந்த லைட் பாய் உட்பட எல்லாருமே அழுதுட்டோம்.

ஸ்ரீதேவி, ரஜினி மேல் துப்ப வேண்டிய சீனில். சோப்பு நுரையெல்லாம் வெச்சு ட்ரை பண்ணோம். அதைப் பார்த்துவிட்டு ரஜினி 'ஷாட் நேசுரலா இருக்கனும், நீயே காரி துப்பிடும்மா' என்று உண்மையாகவே துப்ப சொன்னார். அந்த சீன பாக்கும் போது எனக்கு உண்டாகும் உணர்வை வார்த்தைகளில் சொல்லமுடியாது. எனக்கு 16 வயதினிலே படம் தன்னம்பிக்கைக்கு உதாரணமான படமா இன்னைக்கு வரைக்கும் இருக்கு. பல தடைகளைத் தாண்டி கஷ்டப்பட்டு உழைத்து உருவானது 16 வயதினிலே" என்று பேசினார்.

டிரெய்லர் வெளியிட்ட பின்பு ரஜினி பேசியபோது " 36 ஆண்டுகள் ஆன பிறகு 16 வயதினிலே படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது ஆச்சர்யமாக இருக்கிறது. தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு கர்வமானவர் என்று சொல்லக்கூடாது… ரொம்ப கண்ணியமான ஆள். 5 லட்சத்தில் அந்த காலத்தில் படம் எடுப்பது சாதாரணம் இல்லை. அவ்வளவு செலவு செய்து எடுத்து, சரியான விலை வராததால் தைரியமாக அவரே ரிலீஸ் செய்தார்.

கமலுக்கு பிரச்சனை ஏற்பட்ட போது '16 வயதினிலே டிஜிட்டலில் உருவாகிறது. அதில் வரும் லாபத்தை கமலுக்கே கொடுக்கிறேன்' என்று அறிவித்தார். அதன்பிறகு அவரை பார்க்கவேண்டும் என்று இருந்தபோது தான் இந்த விழா பற்றி பேச அவரே வந்தார். நான் அவரிடம் இந்த திரைப்படத்தின் லாபம் யாருக்கு போய் சேரும் என்று கேட்டேன். அவருக்குத் தான் கிடைக்கும் என்று சொன்னார். அவருக்கு நல்லது என்பதால் வருகிறேன் என உடனே சம்மதம் சொன்னேன்.

சினிமாவில் பணம் அதிகமாக இருந்தாலும் சுயமரியாதை அதிகமாக இருந்தால் ரொம்ப கஷ்டம். அவர் வாழ்ந்து கஷ்டப்பட்டவர். கஷ்டம், துன்பம் இதெல்லாம் எப்போதும் நிலையாய் இருக்காது. அவர் நல்லா இருக்கணும்னா இந்த படம் ஒடனும். நீங்க ஓட வைக்கனும். ஓட வைப்பீங்கனு எனக்கு தெரியும். " என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

கமல் பேசியபோது "இந்த திரைப்படத்தின் வெற்றி என்னவென்று தெரியாது. இந்த படத்தில் வேலை செய்தவர்களின் தன்னம்பிக்கையை பார்த்து அன்றும் வியந்தேன் இன்றும் வியக்கிறேன். இவர்களின் உறுதியைப் பார்த்துத்தான் எனக்கு நம்பிக்கை வந்தது. இந்த இயக்குனரை எனக்கு உதவி இயக்குனராக இருந்தபோதிலிருந்தே தெரியும். பாரதிராஜாவைப்போல் ஊரைவிட்டு வந்துவிட்டேன் என்று சொன்னால் கோபம் வரும் எனக்கு. அவர் கஷ்டப்பட்டு தாண்டிய படிகள் எனக்கு தெரியும்.

36 வருடங்கள் கழித்து விழா எடுப்பார்கள் என்று தெரியாமல் 'ஏன் படத்திற்கு விழா எடுக்கவில்லை?' என்று நான் அப்போது சின்னப்பிள்ளைத் தனமாக கேட்டேன். நானும் ஸ்ரீதேவியும் ஸ்லோமோஷனில் ஓடவேண்டிய காட்சி இருந்தது. ஆனால் அப்போது ஸ்லோமோஷனில் எடுக்க வசதி இல்லை. அதற்காக நானும் ஸ்ரீதேவியும் ஸ்லோமோஷனிலேயே நடித்தோம். சித்ராலக்‌ஷ்மணன் படம் ரிலீஸானதும் காரில் வந்த என்னை ஓவர்டேக் செய்து 'கோவனத்தை அவுத்துடாங்க' என்று சொல்லிவிட்டுச் சென்றார். நம்ம கோவணம்னா பரவால்ல பாவம் தயாரிப்பாளர் கோவணம் என்ன செய்வது என்று யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளருக்கு தங்க கிரீடம் வைத்துவிட்டார்கள் ரசிகர்கள்.

இடைத்தரகர்கள் அதிகம் இருந்தும், எனக்கும் ரஜினிக்குமான நட்பு அப்படியே தான் இருக்கிறது. இந்த பெருமை எங்களையே சேரும். எங்கள் நட்பெல்லாம் இவர்கள் செய்த அன்பின் பலன். ஸ்ரீதேவி, ராஜா வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்கள் வராததால், அவர்கள் சார்பாக நாங்கள் வந்திருக்கிறோம். எனக்கு தனியாக கர்வம் எதுவும் இல்லை. நல்ல நண்பர்கள், நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் நம்பிக்கையில் தான் நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். அவர்கள் தான் என் சக்தி" என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

பாரதிராஜா பேசியபோது "சில நேரங்களில் மனிதன் உணர்ச்சிவசப்படும்போது வார்த்தைகள் வசப்படாது. 36 வருடங்களை நான் திரும்பிப்பார்க்கிறேன். கண்ணாடியில் என் முகத்தை பார்க்கும் போது காலம் என் முகத்தில் வரைந்த கோடுகள் தெரியும். ஆனால் காலம் மாறினாலும் ரஜினி, கமலின் கலை உணர்ச்சிகள் இன்றும் மாறவில்லை. இவர்கள் இந்த நாட்டின் பொக்கிஷங்கள்.

நான் எப்போதும் முதலாளி என்றழைக்கும் எஸ்.ஏ.ராஜ்கண்ணு இன்றும் நல்ல நிலையில் இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இசைஞானி, ஸ்ரீதேவி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். புகழின் உச்சியில் இருக்கும் இவர்களை கமல், ரஜினி என்று பெயர் சொல்லி அழைக்காமல் சூப்பர்ஸ்டார், உலகநாயகன் என சொல்லத்தோன்றும். எனக்கு கமல், ரஜினி என்று சொல்ல உரிமை இருப்பதால் இதுவரை சொன்னதில்லை. கமல் பிறக்கும்போது அழுதபோதே கலையுடன் தான் அழுதிருப்பாய்.

இந்த உலகநாயகனோடு எந்த வசதியுமில்லாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தினேன். நானும் ரஜினியும் வராண்டாவில் படுத்து உறங்குவோம். இன்றைய நடிகர்கள் யாரும் அப்படிப்பட்ட வசதியுடன் நடிக்கமாட்டார்கள். பரட்டைக்கு ஆள் தேடியபோது மோட்டார் பைக்கில் படபூஜைக்கு வந்த ரஜினியைப் பார்த்தேன். அதன்பிறகு தேடிப்பிடித்து ரஜினியிடம் கதை சொல்லி, இது அவார்டுக்கான படம் என்று பொய் சொன்னேன். கமலிடம் கோமனத்தில் நடிக்கவேண்டும் என கேட்க கூச்சமாக இருந்தது. அதைக்கண்ட கமல் என்னவென்று விசாரித்து விறுவிறுவென துணியை அவிழ்த்து கோமனத்துடன் நின்றார். கமல் படத்தில் மட்டும் ஹீரோ இல்லை வாழ்க்கையிலும் ஹீரோ.

என்னை ஒரு விதையாக தயாரிப்பாளர் நட்டார். எனக்கு உரமாக இருந்தவர்கள் ரஜினி, கமல், ஸ்ரீதேவி. இன்று ரசிகர்களால் விருச்சகமாக நிற்கிறேன். இதற்கு ரத்தமும் நாளமுமாக இருந்த இசைஞானி இங்கு இல்லை. அவன் இல்லையென்றால் இந்த படத்தின் பெருமை பாதி குறையும். ஒரு பாமரத்தனமாக என்னுடன் பயணப்பட்டவன், இவர்களைப்போல அவனும் இந்த நாட்டின் சொத்து. மேடையில் இல்லையென்றாலும் பாராட்டவேண்டியவன் இசைஞானி.

இவ்வளவு வளர்ச்சிக்குப் பிறகும் என் முதலாளியை கௌரவிக்க வந்ததற்கு ரஜினி, கமலுக்கு நன்றி. 'ஆத்தா ஆடு வளத்தா… கோழி வளத்தா… நாய் வளக்கல… இந்த சப்பாணியத்தான வளத்தா." என்ற வசனத்தை எழுதிய கலைமணி இப்போது இல்லை" என்று உணர்ச்சிபட பேசி, பல வருடங்கள் பின்னோக்கிச் சென்ற நினைவுகளில் பல முறை அழுதுவிட்டார்.

Show commentsOpen link

[Continue reading...]

பாடசாலை கணினியில் ஆபாச படம் பார்த்த டீச்சர்! – படம் இணைப்பு! Teacher watch sex movie in classroom

- 0 comments

பாடசாலை கணினியில் ஆபாச படம் பார்த்த டீச்சர்! – படம் இணைப்பு!

by abtamil

பாடசாலை கணினியில் ஆபாசப்படம் பார்த்த பெண் ஆசிரியை ஒருவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் STOCKTON பகுதியில் உள்ள Lincoln பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றிய 37 வயதாகும் Heidi Kaeslin என்ற பெண்ணே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை கணினியில் இவரது கணக்கு ஊடாக ஆபாச தளங்கள் பார்வையிடப்பட்டதை அறிந்த நிர்வாகம், அது தொடர்பில் விசாரிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்திருந்தது.

அக் குழுவின் விசாரணைகளின் பின்னர், குறித்த ஆசிரியையை பணிநீக்கம் செய்வது தொடர்பில் முடிவு எட்டப்பட்டது.

Show commentsOpen link

[Continue reading...]

கால்நடைத்தீவன ஊழல்: நிதீஷ்குமாரும் சிக்குகிறார் Fodder corruption nitish kumar trap

- 0 comments

கால்நடைத்தீவன ஊழல்: நிதீஷ்குமாரும் சிக்குகிறார் Fodder corruption nitish kumar trap

Tamil NewsToday,

ராஞ்சி, அக். 5–

பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி கால்நடைத்தீவன ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்– மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கால்நடைத் தீவன ஊழல் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.

இதற்கிடையே கால்நடைத் தீவன ஊழலில் தற்போதைய பீகார் முதல்–மந்திரி நிதீஷ் குமாருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 1995–ம் ஆண்டு தேர்தலின் போது அவர் கால்நடைத்துறை அதிகாரி சின்கா என்பவரிடம் இருந்து ரூ.1.40 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டப்படி மிதிலேஷ்குமார் சிங் என்பவர் இதை கண்டு பிடித்தார். ரூ.1.40 கோடி லஞ்சம் பெற்ற பிறகு முதல்–மந்திரி நிதீஷ்குமார் போனில் சின்காவுக்கு நன்றி தெரிவித்ததும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் உதவியுடன் தெரிய வந்துள்ளது.

நிதீஷ்குமாருக்கு எதிரான இந்த தகவல்களின் அடிப்படையில் மிதிலேஷ்குமார் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு வரும் 22–ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

எனவே இந்த வழக்கில் சி.பி.ஐ. என்ன பதில் சொல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நிதீஷ்குமாரும் கால்நடைத் தீவன ஊழலில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger