Friday 16 March 2012

இலங்கையில் ராணுவமயமாக்கல் வன்முறையை தூண்டலாம்!

- 0 comments
 

இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் ராணுவமயமாக்கலும், பொறுப்புக்கூறும் வகையிலான அரசாங்கம் இல்லாமையும், அந்த பிரதேசத்தில் இயல்புநிலை உருவாகாமல் தடுப்பதோடு, எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று இண்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப் என்கிற சர்வதேச நெருக்கடிகளை ஆராயும் குழு தெரிவித்திருக்கிறது.

ஐசிஜி என்று பரவலாக அறியப்படும் சர்வதேச நெருக்கடிகளை ஆராய்வதற்கான குழுமம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையானது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த குழுமன் இலங்கை நிலவரம் குறித்து வெளியிட்ட விரிவான அறிக்கையின் தொடர்ச்சியாக வந்திருக்கிறது.

இன்றைய அறிக்கை இரண்டு பகுதிகளை கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்கில் மறுக்கப்படும் சிறுபான்மை உரிமைகள் என்பது முதல் பகுதி. இரண்டாவது பகுதி வடக்கில் ராணுவத்தின் கீழ் நடக்கும் மீள்குடியேற்றம் பற்றி பேசுகிறது.

இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடைய விடயங்களை சுட்டிக்காட்டுகின்றன. இனமோதலின் மிக மோசமான விளைவுகளை எதிர்கொண்ட, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடபிராந்தியம் தொடர்ந்தும் இலங்கை ராணுவத்தின் மறைமுக ஆட்சியின் கீழ் இயங்குவதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கொழும்பில் இருக்கும் சிங்கள அதிகாரிகளே முக்கிய முடிவுகளை எடுப்பதாக கூறும் ஐசிஜி, படிப்படியாக இலங்கையின் பெரும்பான்மை சிங்களவர்கள், நாட்டின் வடபகுதியில் அரச உதவியுடன் குடியேற்றப்படுவதாகவும், இப்படியான சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் வடபகுதி தமிழர்கள் மத்தியில் நிலவிய பழைய மனக்குறைகளை மீண்டும் தூண்டுவதாக அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறது.

மேலும் அரசின் இந்த போக்கு தமிழர்கள் உள்ளிட்ட மற்ற சிறுபான்மையினர் மத்தியில் உண்மையான மீள்குடியேற்றத்திற்கான வாய்ப்புகளை பலவீனப்படுத்துவதாகவும் ஐசிஜி அமைப்பு கூறுகிறது.

அரச உதவியுடன் நடக்கும்'சிங்களமயமாக்கல்'

ஆயிரக்கணக்கான இலங்கை ராணுவத்தினர் நாட்டின் வடபகுதியில் நிலை கொண்டிருப்பது பலவகையான சிங்களமயமாக்கலுக்கு வழிவகுப்பதாக கூறும் ஐசிஜி அமைப்பு, தெருப் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றுவதில் துவங்கி, சிங்கள போர் வீர்ர்களுக்கான நினைவிடங்கள் கட்டுவது, தமிழ் பேசும் மீனவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அளிக்கப்படாத தனி சலுகைகளை சிங்களம் பேசும் மீனவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அளிப்பது, ராணுவம் மற்றும் அரசின் ஒத்துழைப்போடு தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களில் சிங்களர்கள் குடியமர்வது விவசாயம் செய்வது போன்ற செயல்கள் தங்களுக்கு பெரும் கவலை அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இலங்கையின் கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த நிலைமை படிப்படியாக மாறி இன்று பல்லின மக்களும் வாழும் சூழல் உருவாகியிருப்பதை போல, வடக்கிலும் தமிழர்கள் பெரும்பான்மையாக இருக்கும் யதார்த்த களநிலவரத்தை மாற்றியமைக்கவேண்டும் என்கிற கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த நடவடிக்கைகளுக்கு அதிபரின் ஆதர்வாளர்கள் ஆலோசகர்களின் ஆதரவு இருப்பதாகவும் ஐசிஜி கூறியுள்ளது.

வடபகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் ராணுவமயமாக்கல் மற்றும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள், அந்த பிராந்தியத்தின் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவாகி வருவதாகவும் இந்த அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

'தமிழர்களின் கவலைகள் தீர்க்கப்படவில்லை'

விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பது என்கிற நியாயமான தேவைக்காகவே ராணுவம் அங்கே இருப்பதாக கூறப்பட்டாலும், இத்தகைய தேவைக்கதிகமான ராணுவமயமாக்கல் அந்த பகுதியில் வாழும் தமிழர்கள் மத்தியில் பயத்தையும் கோபத்தையும் அதிகரித்துவருவதாக கூறும் ஐசிஜி அமைப்பு, இலங்கை அரசின் இந்த உத்திகள், எந்த தமிழர்களின் வன்முறை கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த கிளர்ச்சிகளை உருவாக்கும் வகையில் முடியக்கூடும் என்றும் ஐசிஜி அமைப்பு அச்சம் வெளியிட்டிருக்கிறது.

சர்வதேச சமூகம் என்ன செய்யவேண்டும்

இந்திய அமெரிக்க அரசுகளின் நிர்பந்தங்களையும் மீறி நாட்டின் மாகாணங்களுக்கு மேலதிக அதிகாரங்களை அளிப்பதில் இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை என்பதோடு, ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களையும் நடைமுறைப்படுத்தாமல் தவிர்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த பின்னணியில், சர்வதேச சமூகம் தற்போது தடைப்பட்டிருக்கும் இலங்கை அரசுக்க்கும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சபேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு உதவ வேண்டும் என்றும் இன்றைய அறிக்கை கோரிக்கை விடுக்கின்றது.

வடபிராந்தியத்தில் இருக்கும் ராணுவத்தை அகற்றுவது, ராணுவ ஆட்சிக்கு பதிலாக முழுமையான சிவில் நிர்வாகத்தை அனுமதிப்பது, ஜனநாயக தேர்தல்களை நடத்துவது, அரசு உதவியுடன் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவது ஆகியவை உடனடியாக செய்யப்படவேண்டும் என்றும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

இலங்கை அரசே நியமித்த கற்றறிந்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ள ஐசிஜி அமைப்பு, இது தொடர்பில் இலங்கையில் செயற்படும் ஐ நா உள்ளிட்ட சர்வதேச தொண்டு அமைப்புக்களும், இலங்கையின் கொடையாளி நாடுகளும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.

தங்களின் சேவைகள் மற்றும் நிதிஉதவிகள் பாதிக்கப்பட்டவர்களின் விருப்பத்துக்கேற்ப அவர்களுக்கு நேரடியாக சென்று சேரும் வகையில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது சர்வதேச சமூகத்தின் பொறுப்பு என்றும் ஐசிஜி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

[Continue reading...]

அப்பாடா, ஒருவழியாக 100வது சதமடித்து சச்சின் புதிய சாதனை!

- 0 comments
 
கடந்த ஓராண்டிற்கு மேலாக 100வது சதமடிக்க முடியாமல் திணறி வந்த சச்சின் இன்று வங்கதேசத்திற்கு எதிரான போட்டியி்ல் ஒரு வழியாக அந்த மைல்கல்லை எட்டினார். துவக்க முதலே பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 138 பந்தில் 100 ரன்கள் எடுத்தார்.




கிரிக்கெட் உலகில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அரங்கில் அதிக போட்டிகளில் பங்கேற்றவர், இரண்டிலும் அதிக ரன்களை எடுத்தவர், அதிக சதங்கள், அதிக அரைசதங்கள் என்று நீண்ட சாதனைப்பட்டியல் வைத்துள்ளவர் சச்சின் டெண்டுல்கர்.

இதுவரை 188 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 51 சதம், 65 அரைசதம் உட்பட மொத்தம் 15,470 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 55.44 ரன்களை வைத்துள்ளார். அதிகபட்சமாக 248 ரன்கள் எடுத்துள்ளார்.

அதேபோல 453 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் இதுவரை 48 சதங்கள், 95 அரைசதங்கள் உட்பட 18,111 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சராசரியாக 45.16 ரன்களை வைத்துள்ளார். அதிகபட்சமாக 200 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையில் சச்சின் தனது 99வது சதத்தை அடித்தார். ஆனால் அதன்பிறகு பல டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்றாலும் அவரால் 100வது சதம் சாதனையை எட்ட முடியவில்லை. இந்த நிலையில் ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் சச்சினுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதல் போட்டியில் இலங்கைக்கு எதிராக 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

இன்றைய போட்டியில் தனது ஹேர்ஸ்டைலை மாற்றிவிட்டு வந்திருந்த அவர் துவக்கத்தில் இருந்தே பொறுமையாக ஆடினார். அரைசதத்தை கடந்த அவர் 138வது பந்தில் சதமடித்து சாதனை படைத்தார். இது ஒருநாள் போட்டிகளில் சச்சின் அடிக்கும் 49வது சதமாகும்.

2,000வது பவுண்டரி:

சச்சின் இன்றைய போட்டியில் 10 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸ்சும் அடித்தார். அதில் முதல் பவுண்டரியை அடித்தபோது ஒருநாள் போட்டியில் 2,000 பவுண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சாமி கும்பிட்ட ரசிகர்கள்:

கடந்த ஓராண்டாக 100வது சதம் அடிக்க முடியாமல் திணறி வந்த சச்சின் இன்றைய போட்டியில் அச்சாதனையை படைக்க வேண்டும் என்று ரசிகர்கள் மைதானத்தில் சாமி கும்பிட்டனர். அவர் சதமடித்த உடன் சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
Tags - Sachin , Cricket , 100 century , sachin century news
[Continue reading...]

மத்திய பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள்

- 0 comments
 
 
 
மொபைல் போன் பாகங்கள் மீதான அடிப்படை சுங்க வரி ரத்து
 
பட்ஜெட் சொல்வது என்ன?: ஆடம்பர பொருள்கள், ஓட்டல் உணவுகள், விமானப் பயணங்கள், கார்கள் விலை கிடுகிடு உயர்வு!
 
பிராண்டட் ஆடைகள் மீதான கலால் வரி (excise duty) 12 சதவீதம் உயர்வு
 
எல்ஈடி, எல்சிடி மீதான சுங்க வரி ரத்து
 
பங்குகளை வாங்கி விற்க 20 சதவீத வரிவிலக்கு
 
சேவை வரி 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்வு
 
சிகரெட் மீதான கலால் வரி உயர்வு
 
அனல் மின் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளிக்கு சுங்க வரி ரத்து
 
உரத் தொழிற்சாலைகளுக்கான கருவிகளுக்கு 5 சதவீத சுங்க வரி ரத்து
 
2012-13ம் ஆண்டில் அரசின் செலவுகள் 29% உயரலாம்
 
சமையல் எரிவாயு மீதான சுங்க வரி (customs duty) நீக்கம்
 
நிலக்கரி இறக்குமதி மீதான சுங்க வரி முழுமையாக நீக்கம்
 
2012-13ம் ஆண்டில் நிதி பற்றாக்குறை நாட்டின் மொத்த உற்பத்தியில் (GDP) 5.1 சதவீதக்குள் அடக்க இலக்கு
 
பெரிய கார்கள் மீதான வரி 27% உயர்வு
 
2013 நிதியாண்டில் சந்தையில் ரூ. 4.8 லட்சம் கோடி கடன் திரட்ட திட்டம்
 
பள்ளிக் கல்விக்கு சேவை வரியிலிருந்து விலக்கு
 
அடிப்படை கலால் வரி (excise duty) 12% உயர்வு
 
சேவை வரி (service tax) உயர்வு மூலம் ரூ. 18,660 கோடி அதிக வருவாய் கிடைக்கும்
 
7 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆராய்ச்சி மையங்களாக தரம் உயர்வு
 
விவசாயிகள் கடன் அட்டைகளை அனைத்து ஏடிஎம்களிலும் பயன்படுத்தலாம்
 
பான் கார்டு மூலம் வருமான வரி செலுத்தாதோரை கண்டறிய திட்டம்
 
பட்ஜெட் சொல்வது என்ன?: வருமான வரி கட்டுவோருக்கு பெரிய சலுகைகள் ஏதும் இல்லை.. கொஞ்சமே கொஞ்சம் சலுகை
 
வருமான வரி விலக்கு ரூ. 2 லட்சமாக உயர்வு (ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை வரி இல்லை)
 
ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியத்துக்கு 10% வருமான வரி
 
ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20%
 
ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானத்துக்கு 30% வருமான வரி
 
2012ம் ஆண்டில் திட்டமில்லா செலவுகள் ரூ. 9.7 லட்சம் கோடி
 
கறுப்புப் பணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். சிறப்பு பிரிவும் தொடங்கப்படும்
 
பிரணாபின் 'தனியார், அந்நிய மய பட்ஜெட்' - தூங்கி வழியும் பங்கு மார்க்கெட் - ரிலையன்ஸ், டாடா பங்குகள் சரிவு
 
2012ம் ஆண்டில் வரிகள் மூலமான வருவாய் ரூ. 10.77 லட்சம் கோடி
 
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.8 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு
 
2012ம் நிதியாண்டில் நாட்டின்நிதிப் பற்றாக்குறை 5.9% சதவீதம்
 
மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி
 
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட உற்பத்தித் திறன் உயர்வு
 
நாட்டில் போலியோ முற்றாக ஒழிக்கப்பட்டது
 
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 6000 புதிய பள்ளிகள்
 
பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 1.95 லட்சம் கோடியாக உயர்வு
 
பட்ஜெட் சொல்வது என்ன: இனி மானியங்கள் பெருமளவு 'கட்'. ரேஷன், விவசாயத்தில் மட்டும் குறைந்த அளவு தொடரும்!
 
அடிப்படைக் கல்விக்கான திட்ட ஒதுக்கீடு ரூ. 25,555 கோடி
 
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களுக்கு வட்டி குறைப்பு
 
ராஜிவ் காந்தி பெயரிலான முதலீட்டுத் திட்டத்தில் ரூ. 50,000 வரை வரி விலக்கு
 
பங்குகள் மூலமான புதிய சேமிப்புத் திட்டம் அறிமுகம்
 
பின்தங்கிய மாவட்டங்களை மேம்படுத்த ரூ 12040 கோடி
 
குடிமைப் பொருள் வழங்கல் முழுக்க முழுக்க கணிணிமயமாக்கப்படும்
 
இனி கிஸான் கிரடிட் கார்டுகளை அனைத்து ஏடிஎம்களிலும் உபயோகிக்கலாம்
 
ஊரக குடிநீர், கழிவு நீர் வெளியேற்ற திட்டங்களுக்கு ரூ. 14,000 கோடி ஒதுக்கீடு
 
நாடு முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க ரூ 11937 கோடி
 
கிராமப்புற வேலை வாய்ப்புக்கு ரூ 24000 கோடி
 
அரசின் சொத்துக்களை விற்று ரூ. 30,000 கோடி திரட்ட திட்டம்
 
அடிப்படைக் கட்டமைப்புத் துறைக்கு நிதி திரட்ட ரூ. 60,000 கோடிக்கு வரியில்லா பத்திரங்கள்
 
தேசிய அடையாள அட்டைத் திட்டத்துக்கு இந்த ஆண்டு மேலும் ரூ. 14,232 கோடி ஒதுக்கீடு
 
பட்ஜெட் சொல்வது என்ன?: விவசாயிகளின் ஓட்டுக்கு மீண்டும் குறி.. கடன், மானியத்துக்கு 1 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கீடு
 
விவசாயத்துறைக்கு உதவும் நபார்ட் வங்கிக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு
 
விவசாய கடன்களுக்கான வட்டி இந்த ஆண்டும் தளர்வு
 
இந்த ஆண்டு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க ரூ. 5.75 லட்சம் ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டைவிட 1 லட்சம் கோடி அதிகம்
 
நீர்ப்பாசனத்துக்கு என தன நிறுவனம். நீர்ப் பாசன திட்டங்களுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு
 
பட்ஜெட் சொல்வது என்ன?: உள்கட்டமைப்பு, சில்லறை வர்த்தகம், தொழில்துறை, வங்கிகள், போக்குவரத்து உள்ளிட்டவற்றில் அந்நிய முதலீடுகளுக்கு தாராளம்
 
பட்ஜெட் சொல்வது என்ன?: அனைத்துத் துறைகளிலும் தாராள தனியார் மயம்
 
பட்ஜெட் சொல்வது என்ன?: கிங்பிஷருக்கு உதவ விமானத்துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி!
 
நிலக்கரி பற்றாக்குறையால் நாடு முழுவதும் மின் உற்பத்தி பாதிப்பு
 
மின்துறை, வீடுகள்-சாலை கட்டுமான நிறுவனங்கள் வெளிநாட்டு கடன்கள் வாங்க அனுமதி
 
2013ம் ஆண்டில் 8,800 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்
 
2013ம் ஆண்டில் விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 18% அதிகரிக்கப்பட்டு ரூ. 20,208 கோடி ஒதுக்கீடு
 
12-வது ஐந்தாண்டு திட்டத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு 50 லட்சம் கோடி இலக்கு - தனியாரைச் சேர்க்கவும் முடிவு
 
மின் உற்பத்தித் துறைக்கு நிதி திரட்ட ரூ. 10,000 கோடி வரியில்லா பத்திரங்கள் வெளியிடப்படும்
 
5 ஆண்டுகளில் யூரியா உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டம்
 
விமானப் போக்குவரத்துத் துறையில் 49 சதவீதம் அந்நிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி
 
இந்திய அரசின் கடன் பத்திரங்களில் அன்னிய முதலீடுகளுக்கு தாராள அனுமதி
 
பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ. 15,890 கோடி நிதியுதவி
 
பட்ஜெட் எபெக்ட்: வாகனங்கள் மீது வரி உயரலாம் என்ற யூகத்தால் கார், பைக் நிறுவன பங்குகள் விலை சரிவு
 
'பட்ஜெட் எபெக்ட்'- பங்குச் சந்தைகள் துள்ளல்- சென்செக்ஸ் குறியீட்டு எண் 180 புள்ளிகள் உயர்வு
 
சில்லறை வணிகத்தில் முதலீடுகளுக்கு வரிச் சலுகைகள்
 
மானியங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரம்
 
சில்லறை வணிகத்தில் முதலீடுகளை ஈர்க்கவும் திட்டம்
 
ராஜிவ் காந்தி பெயரில் புதிய முதலீட்டுத் திட்டம்
 
மாநில அரசுகள் ஒத்துழைப்புடன் சில்லறை வணிகத் துறையில் மேலும் அதிக அந்நிய நேரடி முதலீட்டுக்கு முயற்சி
 
கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள்
 
தனியார் முதலீடுகளை வேகமாக அதிகரிக்க நடவடிக்கை
 
இந்த ஆண்டில் பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை மூலம் ரூ. 30,000 கோடி திரட்ட திட்டம்
 
மண்ணெண்ணெய்க்கு நேரடியாக மானியம் தர திட்டம்
 
3 ஆண்டுகளில் மானியங்களின் அளவை நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.7%க்குள் குறைக்க திட்டம்
 
மானியங்களின் அளவு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் (GDP) 2%க்குள் கட்டுப்படுத்தப்படும்
 
உணவுப் பொருட்களுக்கு அதிக மானியம்
 
சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய்க்கும் மானியத்தை நேரடியாக வழங்க திட்டம்
 
அந்நியச் செலாவணி 29 சதவீதம் அதிகரிப்பு
 
விவசாயிகள், குடிமக்களுக்கான மானியங்கள் நேரடியாக வழங்கப்படும். சோதனை முறையில் 50 மாவட்டங்களில் இப்படி வழங்கப்படும்.
 
பொதுப் பணவீக்கம் இன்னும் இரட்டை இலக்கத்தில்
 
பெட்ரோலிய எண்ணெய் விலைகளின் கடும் உயர்வால். கடந்த ஆண்டில் கச்சா எண்ணெய் சராசரி விலை 1 பேரல் $115
 
மானியங்களால் தான் நிதிப் பற்றாக்குறை மிகவும் அதிகரிப்பு
 
நடப்புக் கணக்கு பற்றாக்குறை 3.6%. இந்த ஆண்டு அதைக் குறைக்க நடவடிக்கை
 
ஐரோப்பிய பொருளாதார நிலைமை படுமோசம்
 
தனியார் முதலீடுகளை அதிகரிக்க நடவடிக்கை
 
உற்பத்தித் துறை மீட்சியடைந்து வருகிறது
 
கடந்த 2 ஆண்டுகளாகவே வளர்ச்சி கடுமையாக பாதிப்பு
 
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பொருளாதார நிலைமை பரவாயில்லை
 
பணவீக்கத்தை கட்டுப்படுத்த சந்தையில் நிதியை கட்டுப்படுத்தியதால் வளர்ச்சி பாதிப்பு
 
சர்வதேச பொருளாதார சீர்குலைவு இந்தியாவையும் பாதிக்கிறது
 
2012ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது
 
பணவீக்க விகிதம் அடுத்த சில மாதங்களில் குறையும்
 
அடுத்த ஆண்டில் இந்திய வளர்ச்சி 7.6% ஆக உயரும்
 
கருப்புப் பணம், ஊழலை ஒழிக்க நடவடிக்கை
 
ஊட்டச் சத்து குறைபாடு உள்ள 200 மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும்
 
நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதமாக இருக்கும்



[Continue reading...]

ஆப்கன் முஸ்லீ்ம் பெண்ணுடன் பிரான்ஸில் சுற்றிய ராகுல்-சாமி சொல்கிறார்

- 0 comments
 

தற்போது இத்தாலியில் வசித்து வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம் பெண்ணுடன், ராகுல் காந்தி பிரான்ஸில் சுற்றினார் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் பின்னாலேயே செல்வதை முழு நேர வேலையாக மாற்றிக் கொண்டுள்ளார் சாமி. இருவர் மீதும் சரமாரியான புகார்களை அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி குறித்த ஒரு புதிய செய்தியை ட்விட்டர் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்ச் 13ம் தேதி அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், ராகுல் காந்தி இப்போது அழகான ஒரு காரியத்தை செய்து கொண்டிருக்கிறார். இத்தாலியில் செட்டிலாகி விட்ட, ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம் பெண் ஒருவருடன் அவர் பிரான்ஸில் காணப்பட்டார். அந்தப் பெண்ணின் கையில் திருமண மோதிரமும் பளிச்சிட்டது என்று கூறியுள்ளார் சாமி.

சமீபத்தில்தான், தனது கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து விட்டதாக பிரேக்கிங் நியூஸ் கொடுத்தார் சாமி. இதையடுத்து மார்ச் 14ம் தேதி அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், இந்த ஆண்டு இறுதிக்குள் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வரப் போவதைப் பாருங்கள். அதன் பிறகு திஹார் சிறை நிரம்பி வழியும் என்று சீரியஸாகவே கூறியிருந்தார்.

ஏற்கனவே உ.பி. சட்டசபைத் தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்தபோது மார்ச் 9ம் தேதி ராகுல் காந்தியை கடுமையாக வாரி ட்விட்டரில் செய்தி வெளியிட்டிருந்தார் சாமி. அதில், அகிலேஷுக்கும், இந்த 'புத்து' ராகுல் காந்திக்கும் என்ன வித்தியாசம். அகிலேஷுக்கு 38 வயதாகிறது, 3 குழந்தைகள் உள்ளனர். ஆனால் புத்துக்கு 42 வயதாகிறது, இன்னும் குழந்தையாகவே இருக்கிறார் என்று வம்பிழுத்திருந்தார் சாமி. புத்து என்பதற்கு இந்தியில் முட்டாள் என்று பொருள்!.
[Continue reading...]

2ஜி ஸ்பெக்ட்ரம்: தயாநிதி மாறன்-கலாநிதி மாறனுக்கு சம்மன்

- 0 comments
 
 
 
மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரியாக கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது, தொழில் அதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனம், 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சு கோரி விண்ணப்பித்தது. ஆனால், அந்த நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்பந்தித்து, ஸ்பெக்ட்ரம் லைசென்சு வழங்காமல் தயாநிதி மாறன் இழுத்தடித்ததாக சிவசங்கரன் குற்றம் சாட்டி இருந்தார்.
 
அதன்பேரில், மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தை விற்ற பிறகுதான், ஸ்பெக்ட்ரம் லைசென்சை தயாநிதி மாறன் வழங்கியதாகவும், இதற்கு பிரதிபலனாக, ரூ.550 கோடி லஞ்சம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு தயாநிதி மாறன், மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
 
ரூ.550 கோடி லஞ்சம் கைமாறிய விவகாரம் தொடர்பாக, கடந்த மாதம் தயாநிதி மாறன் மீதும், அவருடைய சகோதரரும், சன் டி.வி. நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன் மீதும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது.
 
வருகிற 20-ந் தேதி, தயாநிதி மாறனோ அல்லது அவரது அதிகாரப்பூர்வ பிரதிநிதியோ நேரில் ஆஜராகுமாறு அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது. மறுநாள் (21-ந் தேதி) கலாநிதி மாறனோ அல்லது அவரது அதிகாரப்பூர்வ பிரதிநிதியோ ஆஜராக வேண்டும் என்று அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது. இருவரும் தங்கள் தனிப்பட்ட பணபரிவர்த்தனை மற்றும் வர்த்தகம் தொடர்பான பணபரிவர்த்தனைக்கான ஆவணங்களுடன் விசாரணைக்கு வருமாறு அமலாக்கப்பிரிவு கூறியுள்ளது.
 
இந்த விவகாரத்தில், இருவருக்கும் நெருக்கமான சிலரிடம் அமலாக்கப்பிரிவு ஏற்கனவே விசாரணை நடத்தி, வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது. மேலும், தனிப்பட்ட நபர்கள் சிலரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இதுதவிர, இதே குற்றச்சாட்டின் பேரில், தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் பற்றி சி.பி.ஐ.யும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், அன்னிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகிறது.



[Continue reading...]

நளினிக்கு முதல் வகுப்புச் சிறை வசதி – சென்னை உயநீதிமன்றம் உத்தரவு!

- 0 comments
 

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த 21 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினிக்கு முதல் வகுப்புச் சிறை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.ராஜிவ் கொலை வழக்கில் முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் கடந்த திமுக ஆட்சியில் அவரை விடுதலை செய்யும் கோரிக்கை எழ திமுக அரசோ அவர் சிறைக்குள் செல்போன் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி அவருக்கு வழங்கப்பட்ட முதல் வகுப்புச் சிறை வசதியை ரத்து செய்ததோடு நன்னடத்தை விதிகளிலும் குற்றங்களை பதிவு செய்து வந்தது.

இந்நிலையில் இந்த ரத்துக்கு எதிராக நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று உத்தரவொன்றை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம் நளினிக்கு முதல் வகுப்பு உரிமையை ரத்து செய்த முந்தைய அரசின் ஆணையை ரத்து செய்து அவருக்கு முதல் வகுப்பு வசதியை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

முன்னர் வேலூரில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட நளினி அவரது கணவர் முருகனுக்கு தூக்குத் தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்டதையடுத்து மீண்டும் அதிமுக ஆட்சியில் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger