Monday 30 September 2013

ஸ்ரேயா இளமையின் ரகசியம்

- 0 comments

ஸ்ரேயா இளமையின் ரகசியம்

யோகா, தியானம்தான்
by abtamil
... - Tamil newsToday,
எனக்கு 20 உனக்கு 18 படத்தில் தமிழுக்கு வந்தவர் ஸ்ரேயா. அதன்பிறகு ஜெயம்ரவியுடன் நடித்த மழை படத்தில் மழையில் நனைந்தபடி இவர் ஆடிய கலக்கல் ஆட்டம் தமிழக இளவட்ட ரசிகர்களை கலக்கி எடுத்தது. அதனால் அந்த படத்திலிருந்தே ஸ்ரேயாவுக்கென்று ஒரு ரசிகர் வட்டம் உருவானது. அதன்பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்ததின் மூலம் டாப்மோஸ்ட் ஹீரோயினியானார் ஸ்ரேயா.

இருப்பினும் அந்த பெயரை அவரால் நீண்டகாலம் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. வேகமாக ஏறிய மார்க்கெட் அதே வேகத்தில் இறங்கி விட்டதால், பின்னர் சரியான படங்கள் இன்றி மீண்டும் தெலுங்கு, கன்னடம் என்று செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் நடிகை. ஆனால், இந்த நேரத்தில் மாதக்கணக்கில் படமே இல்லாமல் அவர் வீடே கதியென்றும் இருந்திருக்கிறார்.

ஆனபோதும், தனது உடல்கட்டை சரியாக மெயின்டெயின் பண்ணி வந்திருக்கிறார் ஸ்ரேயா. இதன் காரணமாகத்தான் தற்போது நாகார்ஜூனாவின் மனம் மெகா படத்தில் நடிப்பதற்கு ஸ்ரேயாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

இந்த நிலையில், சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகி விட்டபோதும், இன்னும் உடல்கட்டை அப்படியே இளமையாக வைத்திருப்பதின் ரகசியம் குறித்து சில இளவட்ட நடிகைகள் அவரிடம் கேட்டபோது, தினமும் நான் கடைபிடித்துவரும் யோகா மற்றும் தியான பயிற்சிதான் என் இளமையின் ரகசியம் என்றாராம் ஸ்ரேயா.

அதோடு, தினமும் ஜிம்முக்கு சென்று வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வதை விட யோகா பயிற்சி பெரிய பலனை தருகிறது என்றும் அனுபவத்தை சொன்னாராம் ஸ்ரேயா.

Show commentsOpen link

[Continue reading...]

மிஷ்கின் இயக்கத்தில் கமல்? Kamal in Miskin direction

- 0 comments

மிஷ்கின் இயக்கத்தில் கமல்?
by veni
is Tamil news, Tamil culture, செய்திகள் ...Yesterday,

மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைத்து வெளிவந்துள்ள 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இப்படம் வெளிவந்த சில நாட்களிலேயே பலருடைய பாராட்டுக்களையும் பெற்ற வண்ணம் உள்ளது.  வழக்கமான மசாலா படங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமான படமாக வெளிவந்துள்ள இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஹீரோயின், பாடல்கள், குத்து பாடல், பகல் காட்சிகள் ஆகியவை இல்லாமல் இருட்டில் மட்டுமே கதை நகரும் இந்த படத்தில் சமீபகால தமிழ் சினிமாக்களில் வித்தியாசமான, சிறந்த படம் என ரசிகர்களே பாராட்டுகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் கமலஹாசனை இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு பிரத்யேகமாக அழைத்து இப்படத்தை அவருக்கு திரையிட்டு காட்டியிருக்கிறார்.

முழு படத்தை பார்த்து பிரமித்துப்போன கமல், நெகிழ்ந்துபோய் மிஷ்கினை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். மேலும், சீக்கிரமாக நாம இரண்டு பேரும் இணைந்து ஒரு படம் பண்ணலாம் என்று சொல்லி மிஷ்கினை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளாராம் கமல்.

The post மிஷ்கின் இயக்கத்தில் கமல்? appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

அமெரிக்கா: திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர் US police man helps woman in delivery process

- 0 comments

அமெரிக்கா: திருடனை பிடிக்கச் சென்ற இடத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த போலீஸ்காரர் US police man helps woman in delivery process
Tamil NewsYesterday,

நியூயார்க், அக்.1-

அவசர அழைப்பையடுத்து உருவிய துப்பாக்கியுடன் திருடனை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர், உள்ளே இடுப்பு வலியால் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த சுவாரஸ்ய சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் நடந்துள்ளது.

டெக்சாஸ் நகரில் உள்ள கரோல்டன் பகுதி வழியாக சென்ற போலீஸ் ரோந்து காருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது.

மறுமுனையில் பேசிய சிறுவன் ஒரு விலாசத்தை குறிப்பிட்டு மேற்கண்ட விலாசத்தில் எமர்ஜன்ஸி . உடனடியாக உதவி தேவை என்று கூறினான்.

ஏதோ திருட்டு சம்பவம் நடந்திருக்க வேண்டும் என யூகித்துக்கொண்டு உருவிய துப்பாக்கியுடன் அந்த விலாசத்தில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்காரர் ஜீன் கிம்ப்டன் என்பவரை வரவேற்ற ஒரு சிறுவனை அவரை வீட்டின் உட்புறத்தில் இருந்த குளியலறைக்கு அழைத்து சென்றான்.

உள்ளே, குழந்தையின் தலை பாதி வெளியேறிய நிலையில் அந்த சிறுவனின் தாயார் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

சற்றும் தயங்காமல் தனது கைகளில் உறைகளை மாட்டிக்கொண்ட ஜீன் கிம்ப்டன், அந்த பெண்ணுக்கு தைரியம் கூறி, தாயையும் சேயையும் பிரித்தெடுத்தார். பின்னர், ஆம்புலன்சை வரவழைத்த அவர் பிரசவித்த பெண்ணையும், பிறந்த ஆண் குழந்தையையும் கரோல்டனில் உள்ள பேய்லர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க உதவினார்.

இச்சம்பவம் தொடர்பாக புல்லரிப்புடன் பேட்டியளித்த ஜீன் கிம்ப்டன், எமர்ஜன்சி என்று அந்த சிறுவன் போன் செய்ததும் ஒரு திருடனை பிடிக்கப் போகிறோம் என்ற சுதாரிப்புடன் நான் துப்பாக்கியுடன் அந்த வீட்டினுள் நுழைந்தேன். ஆனால், இந்த பூமிக்கு ஒரு புதிய உயிரை அறிமுகப்படுத்திய பணியில் எனது பங்கும் உண்டு என்பதை எண்ணி மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறேன் என்றார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

9 ஆண்டு கால பெட்ரோல் விலை உயர்வு சதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம்: ஞானதேசிகன் பேட்டி I will vote in parliamentary elections the 9 year record gnanadesikan interview

- 0 comments

பாராளுமன்ற தேர்தலில் 9 ஆண்டு கால சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம்: ஞானதேசிகன் பேட்டி I will vote in parliamentary elections the 9 year record gnanadesikan interview
Tamil NewsToday,

கோவை, செப். 30–

தமிழக காங்கிரஸ் சார்பில் பேச்சாளர்களுக்கான பயிற்சி முகாம் கோவையை அடுத்த சாடிவயலில் இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாமை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தொடங்கி வைத்தார். முன்னாள் மத்திய மந்திரி பிரபு முன்னிலை வகித்தார். புறநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி. மனோகரன் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு முழுவதும் இருந்து 150 பேச்சாளர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமை தொடங்கி வைத்த ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:–

திருச்சியில் நரேந்திர மோடி பங்கேற்ற பாரதீய ஜனதா கூட்டத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறுகிறார்கள். ஆனால் அந்த மைதானத்தில் 35 ஆயிரம் பேர்தான் பங்கேற்க முடியும். லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்று திரித்து கூறுகிறார்கள்.

காங்கிரசில் வாரிசு அரசியல் உள்ளது என்று கூறுகிறார்கள். அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் உள்ளது. அதனை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்க விரும்புகிறோம். பாரதீய ஜனதா கட்சியினர் மோடியை வைத்து அரசியல் நடத்துகிறார்கள்.

பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளைக் கூறி ஓட்டு கேட்போம். எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசர சட்டம் தொடர்பான விஷயத்தில் ராகுல் காந்தி கருத்தை வரவேற்கிறோம்.

பிரதமர் மன்மோகன்சிங் கிராமத்து பெண் போல பேசுகிறார் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் பிரதமர் அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை.

கோவை மாநகர் மாவட்டத்தில் டிவிசன் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில தலைவர் அனுமதி இல்லாமல் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த நியமனம் செல்லாது. பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டை வைத்து கூட்டணி அமையும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

தரங்கம்பாடி அருகே பலாத்கார முயற்சியில் இளம் பெண் தற்கொலை: 2 பேர் கைது try to woman molested two arrested

- 0 comments

தரங்கம்பாடி அருகே பலாத்கார முயற்சியில் இளம் பெண் தற்கொலை: 2 பேர் கைது try to woman molested two arrested

Tamil NewsToday,

குத்தாலம், செப்.30-

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கொத்தங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 35). இவரது மனைவி விஜயராணி (26). இவர்கள் குடும்பத்திற்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாலச்சந்திரன், அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் வேலி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. புஷ்பராஜ் பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் வேலை செய்து வந்தார்.

வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் விஜயராணியிடம், பாலச்சந்தரும், ரவிச்சந்திரனும் தகராறு செய்தனர். அப்போது தட்டிக்கேட்க வந்த புஷ்பராஜியின் தந்தை கணபதியையும் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயராணி வீட்டிற்கு வந்தவுடன் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.

பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி விஜயராணி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த விஜயராணி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது விஜயராணி, போலீசாரிடம் கூறியதாவது:–

எனது கணவர் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாலச்சந்திரன், அவரது சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோர் என் கையைப் பிடித்து இழுத்தனர். இதனால் மனவேதனை ஏற்பட்டு, மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த விஜயராணி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ரவிச்சந்திரன், பாலச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

பாலச்சந்திரன் மயிலாடுதுறை கிளை சிறையிலும், ரவிச்சந்திரன் மைனர் என்பதால் தஞ்சை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

Sunday 29 September 2013

முன்னாள் கனவுக் கன்னியான ஹேமமாலினி, சின்ன வயசு ஹீரோக்களுடன் குத்தாட்டம் ஆடுவது hema malini kuththattam tamil song

- 0 comments

சின்னப் பசங்களுடன் போய் எப்படி குத்தாட்டம் ஆடுவது! வெட்கப்படும் முன்னாள் கனவுக் கன்னி!
by abtamil

முன்னாள் கனவுக் கன்னியான ஹேமமாலினி, சின்ன வயசு ஹீரோக்களுடன் குத்தாட்டம் ஆடுவது குறித்த கேள்விக்கு வெட்கப் புன்னகையுடன் பதிலளித்துள்ளார்.

அது சரியாக இருக்குமா என்றும் அவர் கேட்டுள்ளார். முன்னாள் கனவுக் கன்னியான ஹேமமாலினி பாட்டி ஆன பிறகும் கூட படு ப்யூட்டியாகத்தான் இருக்கிறார். இன்றும் கூட அதே கம்பீர அழகுடன், ரசிகர்களின் விருப்ப நாயகிகள் வரிசையில்தான் இருக்கிறார்.

மும்பையில் நடந்த நீதா லல்லாவின் புதிய ஸ்டோர் திறப்பு விழாவுக்கு வந்த அவரிடம் குத்தாட்டம் குறித்து கேட்கப்பட்டது.

இப்போதெல்லாம் வயதில் சிறிய ஹீரோக்களுடன் முன்னாள் நாயகிகள் குத்தாட்டம் ஆடுகிறார்களே.. அதுகுறித்து என்ன சொல்றீங்க என்று கேட்டபோது ஹேமமாலினி முதல் வெட்கப் புன்னகையைச் சிந்தினார்.

மாதுரி தீட்சித் சமீபத்தில் ஒரு படத்தில் மிகவும் சிறிய வயது ஹீரோவுடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியது குறித்து மீண்டும் கேட்டபோது வாய் விட்டுச் சிரித்தார் ஹேமா.

பின்னர் அவர் பதிலளிக்கையில் இது வேடிக்கையாகவும், முட்டாள்தனமாகவும் இருக்கிறது. சின்ன வயது ஹீரோக்களுடன் ஆடினால் நல்லாவா இருக்கும் என்றார் ஹேமா.

ஆனால் தொடர்ந்து பேசிய ஹேமா, நாங்கள் கலைஞர்கள். தேவைப்பட்டால், அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் நானே கூட ஆட வேண்டியது வரலாம்.. யார் கண்டார்கள் என்று முடித்தார்.

 

Show commentsOpen link

[Continue reading...]

ஜிம்முக்கு போகணும்! கிளாமரா நடிக்கனும்! – லக்‌ஷ்மி மேனன்! Actress lakshmi menon sexy news

- 0 comments

ஜிம்முக்கு போகணும்! கிளாமரா நடிக்கனும்! – லக்‌ஷ்மி மேனன்!

by admin
TamilSpyToday,

நடிகை லக்‌ஷ்மி மேனன் தற்போதைய தமிழ்த்திரையுலக ரசிகர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவர். இளைய தலைமுறையினரின் ஆதரவு பெற்றுவிட்ட லக்‌ஷ்மி மேனனுக்கு பட வாய்ப்புகளில் குறை ஏற்படவா போகிறது.

விமலுடன் மஞ்சா பை, கௌதம் கார்த்தியுடன் சிப்பாய், விஷாலுடன் பாண்டிய நாடு, சித்தார்த்துடன் ஜிகர்தண்டா என யூத்ஃபுல்லான பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார் லக்‌ஷ்மி மேனன். இத்தனை படங்களை லையில் வைத்திருக்கும் லக்‌ஷ்மி மேனனைப் பார்த்து திரையுலகமே வியக்கும் ஒரே விஷயம, இதுவரை லக்‌ஷ்மி மேனன் கிளாமராக ஒரு சீனில் கூட நடிக்காதது தான்.

கிளாமராக நடிப்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் "கிளாமராக நடிக்க நல்ல உடலமைப்பு தேவை. ஆனால் எனக்கு அந்த உடலமைப்பு இல்லை. நான் ஜிம்முக்கு சென்று என் உடலமைப்பை மாற்ற வேண்டும். அதன்பிறகு கிளாமராக நடிப்பது பற்றி யோசிப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

Show commentsOpen link

[Continue reading...]

நடிகர் துனியா விஜய் விவாகரத்து : மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்டு அடம் actor duniya vijai divorce

- 0 comments

நடிகர் விஜய் விவாகரத்து : மனைவியிடம் ஜீவனாம்சம் கேட்டு அடம்

by abtamil
Tamil newsToday,

"என் மனைவிக்கு போதுமான அளவு பணம், சொத்துகளை கொடுத்துள்ளேன். இனிமேல் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வாடகை வீட்டில் நான் குடியிருப்பதால், அவர் தான், எனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என, நடிகர் துனியா விஜய் தெரிவித்துள்ளார்.
கன்னட நடிகர் விஜய், தன் மனைவி, நாகரத்னாவிடமிருந்து விவாகரத்து கோரி, பெங்களூரு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அதற்கு, கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என, நாகரத்னா பதில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜீவனாம்சம் தர மறுத்துள்ள விஜய், குடும்பநல நீதிமன்றத்தில், ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் என் மனைவிக்கு, ஏற்கனவே, 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை கொடுத்துள்ளேன். செங்கல் தொழிற்சாலை, ஜவுளி தொழிற்சாலை வாங்கி கொடுத்தேன்.

சமீபத்தில் திரைக்கு வந்த, ஜெயம்மன மகா திரைப்படம், என் மனைவி நாகரத்னா தயாரிப்பு என்பதால், அதன் மொத்த இலாபமும், அவரையே சேரும்.

நான், 13 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனவே, எனக்கு தான், நாகரத்னா ஜீவனாம்சம் தர வேண்டும். அவருக்கு, நான் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என, குறிப்பிட்டுள்ளார்

 

Show commentsOpen link

[Continue reading...]

டாக்டர் சுப்பையா படுகொலை: கூலிப்படையினரை பிடிக்க நெல்லையில் வேட்டை doctor suppaiah murder investigation in Nellai

- 0 comments

டாக்டர் சுப்பையா படுகொலை: கூலிப்படையினரை பிடிக்க நெல்லையில் வேட்டை doctor suppaiah murder investigation in Nellai

Tamil NewsToday,

சென்னை, செப். 29–

துரைப்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் சுப்பையா, கடந்த 14–ந்தேதி அபிராமபுரத்தில் வைத்து மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் 25–ந் தேதி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊரான குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ள சொத்து தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான பொன்னுசாமிக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இதில் ஏற்பட்ட தகராறில்தான் டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து பொன்னுசாமி, மற்றும் அவரது மனைவி மேரிபுஷ்பம், மகன்கள் வக்கீல் பெய்சில், என்ஜினீயர் போஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பெய்சில், போஸ் இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சில நாட்களுக்கு முன்னர் சரண் அடைந்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பொன்னுசாமி, மேரி புஷ்பம் ஆகியோரை கைதுசெய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதையடுத்து 2 பேரும் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். பின்னர் 2 பேரும் சென்னை போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். இன்று காலையில் பொன்னுசாமியும், மேரிபுஷ்பமும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

அபிராமபுரத்தில் டாக்டர் சுப்பையா வெட்டுப்பட்ட காட்சி அப்பகுதியில் ஒரு வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகி உள்ளது. இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கேமராவில் 3 பேரின் உருவம் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கூலிப்படை கொலையாளிகள் நெல்லையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றுள்ளனர். கொலையாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதேபோல கோவை மற்றும் பெங்களூரிலும் 2 தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

Saturday 28 September 2013

நயன்தாராவை நான் காதலிக்கவே இல்லை nayanthara aarya love news

- 0 comments

நயன்தாராவை நான் காதலிக்கவே இல்லைங்க.. வீட்ல பொண்ணு பாக்கிறாங்க!

– ஆர்யா
by abtamil
.. - Tamil newsToday,
சென்னை: நயன்தாராவை நான் காதலிக்கவே இல்லை. வீட்டில் எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிசுகிசுக்கள் வருகின்றன. இருவரும் நடித்த முதல் படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இப்போது ராஜாராணி படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். நயன்தாராவுடன் இணைத்து தொடர்ந்து வெளியாகும் கிசுகிசுக்களுக்கு ஆர்யா அளித்துள்ள விளக்கத்தில், "ரொம்ப நாளா என்னையும் நயன்தாராவையும் இணைச்சி கிசுகிசுக்கள் வந்துக்கிட்டிருக்கு. குறிப்பா நயன்தாராவுக்கும், எனக்கும் திருமணம் என ராஜா ராணிக்காக அழைப்பிதல் வெளியிட்டதில் இருந்து எங்களை இணைத்து வதந்திகள் அதிகமாக பரவி வருகின்றன.

கணவன் – மனைவியாக ராஜா ராணி படத்தில் நாங்கள் கணவன்-மனைவியாக நடிக்கிறோம். எனவே படத்தை விளம்பரப்படுத்த அழைப்பிதழ் அச்சிட்டு வெளியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நயன்தாராவிடம் பேசி அவரது அனுமதியும் பெற்றுத்தான் அழைப்பிதழ் வெளியிட்டோம்.
நயன்கோபமாக இருக்கிறார் என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை. நயன்தாரா என்னுடன் நடித்த சக நடிகை. அந்த வகையில் எனக்கு அவருடன் தொடர்பு உள்ளது. எங்களுக்குள் இருப்பது நட்புதான். அதை தாண்டி எந்த உறவும் இல்லை.
வீட்டில் பெண் பார்க்கிறார்கள் எனக்கு திருமணத்துக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் பெண் எனக்கு பிடித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்.
6 ஆண்டுகள் காதலித்தேன் பள்ளியில் படித்த போது ஒரு பெண்ணை காதலித்தேன். ஆறு வருடம் இந்த காதல் இருந்தது. படிப்பு முடிந்து வெளியே போனதும் அது மறந்து போய்விட்டது.

ராஜா ராணி ராஜா ராணி படம் தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என்பதில் உண்மை இல்லை. தமிழ் பண்பாட்டை அவமதிக்கும் காட்சிகள் எதுவும் கிடையாது. ஜாலியான காமெடி படமாக இருக்கும்.

இரட்டை கதாநாயகர்கள் படம் இரு கதாநாயகர்களை உள்ளடக்கிய கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உள்ளம் கேட்குமே படத்தில் இருந்து இரண்டு ஹீரோ படங்களில் நடித்து வருகிறேன். திறமையான இயக்குநர் அமைந்தால் அது போன்ற படங்களில் தாராளமாக நடிக்கலாம்.

அஜீத்துடன் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடிக்கிறேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

பாலா படத்திலிருந்து நீக்கமா? பாலா எடுக்கும் புதிய படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அவர் என்னை அணுகவே இல்லை. ஏற்கனவே இரண்டு படங்களில் என்னை நடிக்க வைத்ததே பெரிய விஷயம்.

Show commentsOpen link

[Continue reading...]

சிறுமிகளிடம் சுகம் அனுபவிக்க 80 ஆயிரம் இத்தாலியர்கள் ஆண்டுதோறும் வெளிநாடு பயணம் 80 thousand Italians fly abroad to have pleasure with children

- 0 comments

சிறுமிகளிடம் சுகம் அனுபவிக்க 80 ஆயிரம் இத்தாலியர்கள் ஆண்டுதோறும் வெளிநாடு பயணம் 80 thousand Italians fly abroad to have pleasure with children

Tamil NewsYesterday,

ரோம், செப். 29-

சிறுமிகளிடம் உடல் சுகம் அனுபவிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகளாவிய அளவில் சிறுமிகள் கடத்தப்படுவதும், அவர்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதும் பெருகிக்கொண்டே வருகிறது. உலகின் ஏதாவது ஒரு மூலையில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது.

ஏழ்மை மிகுந்த நாடுகளில் வசிக்கும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் பல சமூக விரோதிகள் கடத்தி வந்து பணம் சம்பாதிப்பது எல்லாம் பழைய நடைமுறையாகி விட்டது.

இதில் புதிய பரிணாமத்தை இத்தாலியர்கள் தற்போது எட்டியுள்ளனர். முன்னேறிய நாடான இத்தாலியில் கூட சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், சிறுமிகள் தாராளமாக கிடைக்கும் வெளிநாடுகளுக்கு இத்தாலியர்கள் செக்ஸ் சுற்றுலா செல்வதும் தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது.

இவ்வகையில், ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் உடல் சுகத்துக்காக சிறுமிகளை தேடி வெளிநாடுகளுக்கு செக்ஸ் சுற்றுலா சென்று வருவதாக எக்பட் இட்டாலியா என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிறுவனத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

[Continue reading...]

உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தேர்வு MISS PHILIPPINES MEGAN YOUNG CROWNED MISS WORLD 2013

- 0 comments

உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தேர்வு MISS PHILIPPINES MEGAN YOUNG CROWNED MISS WORLD 2013

Tamil NewsYesterday,

பாலி, செப். 29-

இந்தோனேசிய நாட்டின் பாலியில் உள்ள நாசா துவா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற உலக அழகி இறுதிப் போட்டியில் மிஸ். பிலிப்பைன்ஸ் பட்டம் பெற்ற மேகன் யங் 2013 ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 127 போட்டியாளர்களை சந்தித்து மேகன் யங் இந்த முதலிடத்தைப் பெற்றுள்ளார். சென்ற வருடத்தின் உலக அழகியான சீனாவின் யூ வென்சியா இவருக்கு உலக அழகியாக முடி சூட்டினார். மிஸ் பிரான்ஸ் அழகியான மரைன் லோர்பலின் முதல் ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார். கானா நாட்டு அழகியான கரன்சார் நா ஒகைலி ஷூட்டார் இரண்டாவது ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார்.

இவர்கள் தவிர பியூட்டி வித் பர்பஸ், மல்டிமீடியா, பீப்பிள்ஸ் சாம்பியன், பீச் பேஷன், ஸ்போர்ட்ஸ் அன்ட் பிட்நெஸ்,டேலன்ட் காம்படிஷன் மற்றும் டாப் மாடல் போன்ற பல பிரிவிலும் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான நீதிபதிகள் குழுவில் உலக அழகிப் போட்டி அமைப்பின் தலைவி ஜூலியா மோர்லே, இந்தோனேசிய அழகிப் போட்டி அமைப்பின் தலைவி லிலியானா தனோசோடிப்ஜோ, டைம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் ஜெயின் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தப் போட்டி உலகின் கண்கவர் இடங்களில் ஒன்றான இந்தோனேசியாவில் நடந்தது. அழகிய கடற்கரைகள், பிரமிப்பூட்டும் கோவில்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் கொண்ட பாலி தீவில் களிப்பூட்டும் இந்தக் கோலாகலமான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் போட்டிகளை உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

அமெரிக்காவில் பரபரப்பு நடுவானில் பைலட் மாரடைப்பால் சாவு 161 பயணிகள் உயிர் தப்பினர் amrica pilot dead 161 passengers safe

- 0 comments

அமெரிக்காவில் பரபரப்பு நடுவானில் பைலட் மாரடைப்பால் சாவு 161 பயணிகள் உயிர் தப்பினர்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

இடாக்:நடுவானில் பறந்த போது விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு பைலட் இறந்தார். மற்றொரு பைலட் சாமர்த்தியமாக விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 161 பயணிகளும் உயிர் தப்பினர். அமெரிக்காவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் இருந்து வாஷிங்டன் ஷீட்டல் கடற்கரை நகருக்கு போயிங் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. அதில் 161 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்த போது பைலட்டுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரால் தொடர்ந்து விமானத்தை ஓட்டி செல்ல முடியவில்லை. விவரம் அறிந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடன் இருந்த மற்றொரு பைலட் விமானத்தை சாமர்த்தியமாக ஓட்டி, போயிஸ் டார்மாக் ஏர்போர்ட்டில் அவசரமாக தரையிறக்கினர்.

அங்கு மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பைலட்டை மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். எனினும் செயின்ட் அல்போன்ஸ் மண்டல மருத்துவ மையத்தில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மாரடைப்பால் இறந்த பைலட் டெக்சாசை சேர்ந்த ஹென்றி ஸ்லம் (63) என்பது தெரிய வந்தது. அமெரிக்க விமானத்தில் 26 ஆண்டுகள் பைலட்டாக பணியாற்றி உள்ளார். விமானம் தரையிறங்கியதும் அதில் இருந்த பயணிகள் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Show commentsOpen link

[Continue reading...]

ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி பரிதாப சாவு: பெற்றோர் கதறல் aarani near tube well recovered child death

- 0 comments

ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில்
இருந்து மீட்கப்பட்ட சிறுமி பரிதாப
சாவு: பெற்றோர் கதறல் aarani near tube
well recovered child death

28 Sep 13 11:35:30 AM by Tamil | Tags : தினசரி செய்திகள் , Daily News

ஆரணி, செப். 28-
ஆரணி அடுத்த
புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த
பழனி-மலர்க்கொடி தம்பதியரின் மகள்
தேவி (வயது 7),
இன்று தனது பெற்றோருடன்
நிலத்துக்குக் சென்றார். அங்கு பக்கத்தில்
உள்ள சங்கர் என்பரின் நிலத்தில்
விளையாடிக் கொண்டிருந்த தேவி,
சாக்குப்பை போட்டு மூடி வைத்திருந்த
ஆழ்துளை கிணற்றில்
தவறி விழுந்தாள்.
இதுபற்றி தகவல் அறிந்த களம்பூர்
ஆரணி தீயணைப்பு படையினர்
விரைந்து வந்து சிறுமியை மீட்கும்
பணியில் ஈடுபட்டனர். 200 அடி ஆழம்
கொண்ட ஆழ்துளை கிணற்றின் 20
அடியில்
சிறுமி சிக்கியிருந்தது தெரியவந்தது.
முதற்கட்டமாக அவள் இருக்கும்
இடத்திற்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
உள்ளே இருந்து சிறுமியின் குரல்
கேட்டதால், பக்கவாட்டில் பொக்லைன்
எந்திரம் மூலம் குழிதோண்டி மீட்க
முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வேறு சில உபகரணங்கள் கொண்டும்
முயற்சி செய்தனர்.
10 மணி நேரத்துக்கும் மேலாக
முயற்சி செய்து, பக்கவாட்டில்
குழிதோண்டி,
சிறுமி சிக்கியிருக்கும்
இடத்தை நெருங்கினர். பின்னர்
பக்கவாட்டில்
ஓட்டை போட்டு சிறுமியை பத்திரமாக
மீட்டனர்.
சிறுமி சுயநினைவை இழந்து இருந்ததால்,
தயாராக நிறுத்தப்பட்டிருந்த
ஆம்புலன்ஸ் மூலம்
ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர்,
மேல் சிகிச்சைக்காக வேலூர்
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தேவிக்கு, நவீன மருத்துவ
கருவிகள் மூலம்
சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியின்
உடல்நிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக
மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான
பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர்.
ஆனால்
சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக
உயிரிழந்தாள்.
இதுபற்றி வேலூர்
மருத்துவக்கல்லூரி முதல்வர்
சிவக்குமார் கூறும்போது,
''சிறுமியின் உடல் உறுப்புக்கள்
செயலிழந்ததால் சிகிச்சை பலன்
அளிக்கவில்லை. நீண்ட நேரம் குழிக்குள்
இருந்ததால் போதிய ஆக்சிஜன்
கிடைக்கவிலிலை" என்றார்.
10 மணி நேரம் போராடி மீட்டும்
உயிரைக் காப்பாற்ற முடியாமல்
போனதால், அந்த சிறுமியின் பெற்றோர்
கதறித் துடித்தனர். சிறுமி எப்படியும்
பிழைத்து விடுவாள்
என்று எதிர்பார்த்து மருத்துவமனை வளாகத்தில்
காத்திருந்தவர்கள் அனைவரும்
கண்கலங்கினர்.

[Continue reading...]

நந்தம்பாக்கத்தில் இளம்பெண் எரித்து கொலை young girl murder in nandambakkam

- 0 comments

நந்தம்பாக்கத்தில் இளம்பெண் எரித்து கொலை young girl murder in nandambakkam

Tamil NewsToday,

ஆலந்தூர், செப். 28–

பரங்கிமலையை அடுத்த நந்தம்பாக்கத்தில் மத்திய அரசின் நிறுவனமான 'ஐ.டி.பி.எல்.' குடியிருப்பு உள்ளது. நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் காவலாளி ரோந்து சென்றபோது குடியிருப்பு அருகே உள்ள முட்புதரில் கிணற்றின் அருகே தீ எரிந்து கொண்டிருந்தது.

அருகில் சென்று பார்த்த போது நிர்வாண நிலையில் இளம்பெண் உடல் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பெண்ணின் உடல் முழுவதும் எரிந்து கரிக் கட்டையாக கிடந்தது. நகை எதுவும் இல்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பிணம் கிடந்த முட்புதர் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு கிடந்த கையுறை ஒன்றை கைப்பற்றினர். அது கொலையாளி பயன்படுத்தியதாக இருக்கலாம் என்று தெரிகிறது.

பெண் எரிக்கப்பட்ட இடம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத முட்புதர் நிறைந்த பகுதி ஆகும். எனவே விபசார அழகியை யாரேனும் அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்து விட்டு எரித்து கொன்று இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

பிணமாக கிடந்தவர் உடலில் நகை எதுவும் இல்லாததால் நகைக்காக அவரை மர்ம கும்பல் கடத்தி வந்து எரித்து கொன்றனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

நந்தம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாயமான இளம்பெண்கள் குறித்த பட்டியலை சேகரித்து விசாரிக்கின்றனர். மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு அருகே இளம் பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

...
Show commentsOpen link

[Continue reading...]

ஆரணி அருகே 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம் Girl near Arni 300 feet fell down well firefighters struggle to recover

- 0 comments

ஆரணி அருகே 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம் Girl near Arni 300 feet fell down well firefighters struggle to recover

Tamil NewsToday,

ஆரணி, செப்.28-

ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு இங்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. 300 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. இதனால் குழாய் கிணற்றை சாக்கு பை கட்டி மூடியிருந்தனர். இவர்களது பக்கத்து நிலத்துகாரர் பழனி.

இவரது மனைவி மலர்கொடி பழனி தனது நிலத்துக்கு பயிரிப்பட்டு இருந்த மணிலாவை பறிப்பதற்காக தனது மனைவி மற்றும் 4 வயது மகள் தேவியுடன் இன்று காலை 7 மணிக்கு நிலத்துக்கு வந்தார். சிறுமி தேவி சங்கர் நிலம் அருகே விளையாடி கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு சாக்கு பையால் மூடிவைக்கப்பட்டு இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழந்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்தனர். மகள் குழாய் கிணற்றில் தவறி விழந்ததை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து களம்பூர் ஆரணி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறுமி 30 அடி ஆழத்தில் உயிருடன் உள்ளார். அவரை உயிருடன் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆழ்துளை கிணறு பக்கவாட்டில் ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டும் பணி நடந்து வருகிறது.மேலும் களம்பூர் ஆரணி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறுமியுடன் குழாய் ஒலிபெருக்கி மூலம் பேசினர். சிறுமி தற்போது நலமாக உள்ளார்.

சிறுமியை உயிருடன் மீட்கும் வகையில் குழாய் கிணற்றுக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு சிறுமி சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை கேள்விபட்டதும் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் பதட்டத்துடன் கூடியுள்ளனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

தொட்டு பார்க்க முயற்சித்த ரசிகர்! கோபத்தோடு வெளியேறினார்!ஐஸ்வர்யா! Ishwarya rai jewellery opening function

- 0 comments

தொட்டு பார்க்க முயற்சித்த ரசிகர்! கோபத்தோடு வெளியேறினார்!ஐஸ்வர்யா!

by abtamil
- Tamil newsToday,

லூதியானாவில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த ஐஸ்வர்யாவை தொட்டுப் பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் மொய்த்த காரணத்தால் தடுமாறி விழப்போனார் ஐஸ்வர்யா. இதனால் கோபம் கொண்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பைக்கூட கேன்சல் செய்து விட்டு வெளியேறினார் ஐஸ்வர்யா.

உலக அழகியாக தேர்வான பின்னர் சினிமாவில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியாகவும், பிற நடிகர்களுடன் நெருக்கமாகவும் நடித்தவர் ஐஸ்வர்யா. ஆனால் குழந்தை பிறந்த பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை. மாறாக விளம்பரப்படங்களில் நடித்துவருகிறார்.

பிரபல நகைக்கடையில் பிராண்ட் அம்பாசிடராக உள்ள ஐஸ்வர்யாராய் கடை திறப்பு விழாவில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றார்.

ஐஸ்வர்யா ராய் வருவது தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஐஸ்வர்யாராய் அந்த இடத்துக்கு வந்தததும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செல்போனில் போட்டோ எடுக்க முண்டியடித்தனர்.

தற்போது ஐஸ்வர்யாராய் முன்னை விட பொலிவாக இருக்கிறார் என்று ரசிகர்களிடையே பேச்சு நிலவுகிறது. இதனால் சிலர் ஆர்வத்தில் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை தொட்டுப்பார்க்க அவர் மீது பாய்ந்தார்கள்.

இதனை எதிர்பார்க்காத ஐஸ்வர்யா தடுமாறி கீழே விழ இருந்தார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை தாங்கிப்பிடித்தனர்.

கோபம் அடைந்த ஐஸ்வர்யாராய் அங்கு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு புறப்பட்டார்.

அந்த நிலையிலும் ஒரு நிருபர் ஐஸ்வர்யா முன்பு மைக்கை நீட்டவே, 'லுதியானாவுக்கு முதன்முறையாக வருகிறேன். ரசிகர்களின் அன்பு என் மீது பொங்கி வழிகிறது என்று கோபமாக பதில் அளித்தபடி காரில் ஏறி பறந்தார் 

Show commentsOpen link

[Continue reading...]

Friday 27 September 2013

சாம்பியன்ஸ் லீக்: மும்பை அணி வெற்றி CLT20 league stage Mumbai won

- 0 comments

சாம்பியன்ஸ் லீக்: மும்பை அணி வெற்றி CLT20 league stage Mumbai won

Tamil NewsYesterday, 05:30

ஜெய்ப்பூர், செப். 28-

5-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. போட்டியின் 7-வது நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெறும் ஏ பிரிவு லீக்கில் ஐ.பி.எல். சாம்பியன் மும்பை இந்தியன்சும், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த லயன்சும் சந்தித்தன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

இதையடுத்து முதலில் களம் இறங்கிய லயன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்தது.

பின்னர் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.

மும்பை அணியில் அதிபட்சமாக 63 ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்சர்) குவித்த டெயின் ஸ்மித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி danush and iswarya latest news

- 0 comments

மனைவியை விவாகரத்து செய்கிறார் நடிகர் தனுஷ் – ரஜினி குடும்பம் அதிர்ச்சி

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

மனைவியுடன் தனுஷ் சமீபத்தில் பல நாட்களாகப் பேசுவதில்லை. தனுஷ¨டன் ஒரு இளம் நடிகை உறவை பலப்படுத்திக் கொண்டதால், மனைவி தனுஷ் மீது செம கடுப்பில் இருக்கிறார். வெளிப்பார்வைக்கு தனுஷ் அப்பாவியாகத் தெரிகிறார்.

ஆனால் பலான விஷயத்தில் தீரர். அதனால்தான் சுருதிஹாசன் தனுஷிடம் ரொம்பவே நெருக்கமாக இருந்தார். பொதுவாக படத்துக்குப்படம் கதாநாயகிகளை மாற்றும் தனுஷ்க்கு அனைத்து நடிகைகளுடன் சூப்பராக கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆவதோடு எல்லா நடிகைகளும் தனுஷ் அணுகுமுறையை பாராட்டுகிறார்கள்.

இருந்தாலும் மனைவி ஐஸ்வர்யாவை பார்ப்பதையே தவிர்க்கும் தனுஷ், தன் குடும்பத்தில் புயல் வீசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இவர்களது மோதல் முற்றுவதை பார்த்தால் எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவார்கள் என்று தெரிகிறது.

 

Show commentsOpen link

[Continue reading...]

சூர்யா நடிக்கும் ’எஸ்கிமோ காதல்’! சூது கவ்வும் இயக்குனரின் அடுத்த படைப்பு! Surya next movie

- 0 comments

சூர்யா நடிக்கும் 'எஸ்கிமோ காதல்'! சூது கவ்வும் இயக்குனரின் அடுத்த படைப்பு!

by admin
TamilSpyToday,

சிறிய பட்ஜெட் படம். சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கதை இல்லை. படத்தில் ஹீரோ ஒரே ஒருமுறை தான் சிரிப்பார். ஆனால் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று, அதிக வசூலை அள்ளியது. சூது கவ்வும் திரைப்படத்தைப் பற்றி எதிர்காலத்தில் இப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்படலாம்.

மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சூது கவ்வும் திரைப்படத்தின் இயக்குனர் நளன் குமாரசாமி இயக்கவிருக்கும் திரைப்படத்திற்கு 'எஸ்கிமோ காதல்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நளனின் முதல் திரைப்படத்தைப் போலவே, இந்த திரைப்படத்தையும் திருமுருகன் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கிறது.

சூதுகவ்வும் திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோ அதே அளவிற்கு திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்தது உண்மை தான். சிங்கம் திரைப்படத்திற்குப் பிறகு ஜாலியாக ஒரு படம் நடிக்கவேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு நளனிடம் சூர்யா ஒரு ஸ்கிரிப்ட் கேட்டார். நளன் சுருக்கமாக கூறிய கதை மிகவும் பிடித்துவிட முழு கதையையும் தயார் செய்யச் சொல்லியிருந்தார்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த திரைப்படமும் தாமதமாகிக்கொண்டிருக்க, தற்போது நளன் 'எஸ்கிமோ காதல்' என்ற திரைப்படத்தை துவங்குவதால் சூர்யாவுடன் நளன் இணையும் படம் தான் இது என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பல பெண்களை தனது வலையில் விழவைத்த ராணுவ வீரர்!. உண்மைச் சம்பவம், காணொளி

Show commentsOpen link

[Continue reading...]

I Will Marry Simbu Only after 5 Years Says Hansika இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை

- 0 comments

I Will Marry Simbu Only after 5 Years Says Hansika - இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம
by vijigermany
New Tamil Jokes -  12:39

இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை : ஹன்சிகா அதிரடி!

இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார் ஹன்சிகா.

தமிழ் சினிமாவில் குட்டி குஷ்புவாக வலம் இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்ட இவர் அதனை ஒப்பனாக வேறு சொல்லிவந்தார்.

தற்போது 22 வயதையே எட்டியுள்ள இவர் கைவசம் 7 படங்கள் உள்ளனவாம்.

தமிழ், தெலுங்கு என நடித்து வரும் இவரது கால்ஷீட் டைரி குறைந்தது 5 வருடங்களுக்கு பிசி ஷெடியுல்தானாம்.

அதனால் காதலை ஒரங்கட்டிவிட்டு நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

இன்னும் 5 வருடங்களுக்கு திருமணம் இல்லை என்றும் தனது நடிப்புதான் முக்கியம் என கூறுகிறார் குட்டி குஷ்பு.

Show commentsOpen link

[Continue reading...]

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் சேர்ந்த சமந்தா! Vijay murugadass

- 0 comments

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் சேர்ந்த சமந்தா!

by abtamil

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படமான 'துப்பாக்கி' சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மாபெரும் வெற்றி வெற்றது. விஜய் சமீபத்தில் நடித்த படங்களில் இப்படம் பிரம்மாண்டமான படைப்பாக இருந்ததால் முருகதாஸ் மீது விஜய்க்கு தனி மரியாதையும் ஏற்பட்டது. ஆகையால், முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்கலாம் என முடிவெடுத்தார் விஜய்.

'துப்பாக்கி'யைத் தொடர்ந்து 'தலைவா', 'ஜில்லா' ஆகிய படங்களுக்கு நடிக்க ஒப்புக்கொண்டிருந்த விஜய், 'தலைவா' வெளியானதைத் தொடர்ந்து தற்போது 'ஜில்லா' படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தை முடித்ததும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன.

மிகப்பெரிய கதைக்களத்துடன் உருவாகும் அப்படத்திற்கு அதிரடி என பெயர் வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், முருகதாஸ் படத்திற்கான தலைப்பை மறுத்துவிட்டார். ஆனால், இவருடைய இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார் என்பதற்கு எந்தவித பதிலும் கூறவில்லை.

இந்நிலையில், விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில்தான் நடிக்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ஆனால் கதாநாயகி தேர்வு நடந்துவிட்டது. இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறாராம். மேலும், 'கொலவெறி' புகழ் அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இவர் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'ராஜாராணி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் இந்த புதிய படம் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என தெரிகிறது.

Show commentsOpen link

[Continue reading...]

3–வது நாளாக மழைநீடிப்பு: குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது 50 ஆயிரம் மக்கள் மீட்பு three days rain continue gujarat flood 50 thousand people Recovery

- 0 comments

3–வது நாளாக மழைநீடிப்பு: குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது 50 ஆயிரம் மக்கள் மீட்பு three days rain continue gujarat flood 50 thousand people Recovery
Tamil NewsToday, 05:30

ஆமதாபாத், செப். 27–

குஜராத்தில் 3 நாட்களாக பெய்த மழையில் பல நகரங்கள் வெள்ளத்தில் மதிக்கிறது. 50 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சவுராஷ்டிரா பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் ராஜ்கோட், ஆமதாபாத் நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. ராஜ்கோட்டில் சுரங்கப் பாதைகள் நீரில் மூழ்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.

சவுராஷ்டிரா பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 3000 மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 7,700 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதே போல் மற்ற பகுதிகளில் வெள்ளத்தில் தந்தளித்த 50 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டு பள்ளிக்கூடங்கள் போன்ற பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜ்கோட்டில் 36 மணி நேரத்தில் 500 மி.மீ மழை கொட்டியது. ராஜகோட்டுக்கு குடிநீர் வழங்கும் பாதர் அணை நிரம்பி ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதே போல் அஜி நயாரி அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராஜ்கோட், வதோதரா பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அரசு அலுவலகங்கள் இயங்கினாலும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.

ராஜ்கோட்டில் ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியதால் மும்பை ரெயில் உள்பட நீண்ட தூரம் செல்லும் ரெயில்கள் 8 ரத்து செய்யப்பட்டன. இதில் வதோதரா வழியாக செல்லும் விஸ்வாமித்ரி ஆற்றில் 29.6 அடி உயரத்துக்கு அபாய அளவை தொட்டவாறு வெள்ளம் ஓடுகிறது. கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாமா, ரபோரா நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மீட்பு பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வதோதராவில் வெள்ளத்தில் சிக்கிய 159 பேரை மீட்டனர்.

இதே போல் 4 படகுகளில் 4 அதிகாரிகள் தலைமையில் 45 மீட்பு படை வீரர்கள் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்தது 60 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு Mumbai building collapse 60 people trapped anxiety

- 0 comments

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்தது 60 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு Mumbai building collapse 60 people trapped anxiety
Tamil NewsToday, 05:30

மும்பை, செப். 27–

மும்பையில் 5 மாடி கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. இதில் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் 60 பேரை மீட்கும் பணி நடைபெறுகிறது.

மும்பை டக்யார்டு ரோடு பாபுகெனு மார்க்கெட் பகுதியில் உள்ள 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. மும்பை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த குடியிருப்பு கட்டிடத்தில் மாநகராட்சி ஊழியர்கள் வசித்து வந்தனர்.

இது 60 ஆண்டு பழமையான கட்டிடம் என்றும் பராமரிப்பு இன்றி மோசமான நிலையில் இருந்தது. இன்று காலை 6.25 மணி அளவில் திடீர் என்று இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

அப்போது கட்டிடத்தின் உள்ளே 50 முதல் 60 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இடிபாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள்.

உடனே போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மும்பையின் பல்வேறு இடங்களில் இருந்து 12 தீயணைப்பு வண்டிகளில் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

4 ஆம்புலன்ஸ் வேன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் இடிபாடுகளை அகற்றி 4 பேரை மீட்டனர். உடனடியாக அவர்கள் அரசு ஜெ.ஜெ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

5 மாடி கட்டிடத்தில் தரை தளம் குடோனாக செயல்பட்டது என்றும், கட்டிடத்தில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் அருகில் வசித்து வரும் ஒருவர் தெரிவித்தார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

Thursday 26 September 2013

ரன்பிரின் அம்மாவுக்கு தீபிகாவை கண்டாலே எரிச்சலாக வருமாமே ranbeer mother deepika news

- 0 comments

ரன்பிரின் அம்மாவுக்கு தீபிகாவை கண்டாலே எரிச்சலாக வருமாமே
by abtamil

ரன்பிர் கபூரின் அம்மா நீத்துவுக்கு தீபிகா படுகோனேவை கண்டாலே பிடிக்காதாம். ரன்பிர் கபூர் நடிக்க வந்த புதிதில் தீபிகா படுகோனேவை காதலித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டனர். அவர்கள் பிரிந்ததற்கு ரன்பிரின் அம்மா நீத்து கபூர் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் ரன்பிரோ தானும், தீபிகாவும் பிரிந்ததற்கு தனது அம்மா காரணம் இல்லை என்று கூறினார். இந்நிலையில் நீத்து உண்மையை தெரிவித்துள்ளார்.

தீபிகா படுகோனே ரன்பிர் சினிமாவில் நடிக்கத் துவங்கியபோது அவனுடைய ஒரு காதலியை பார்த்து நான் கோபப்படுவேன். அந்த பெண்ணால் என் மகன் சரியாகத் தூங்காமல் இருந்தான். ஒரு நடிகர் புத்துணர்வாகத் தெரிய வேண்டும் என்றால் நல்ல தூக்கம் வேண்டும் அல்லவா என்று நீத்து தெரிவித்துள்ளார். அவர் மறைமுகமாக தீபிகாவைத் தான் தெரிவித்துள்ளார்.

ஓவர் அதிகாரம் தீபிகா ரன்பிரை காதலித்த நேரத்தில் அவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்குவாராம். ரன்பிர் வெளியே சென்றுவிட்டாலும் தீபிகா அவரது வீட்டில் இருந்து கொண்டு வேலையாட்களை ஓவராக அதிகாரம் செய்வாராம். ஏதோ வீட்டின் எஜமானி போன்று தீபிகா அதிகாரம் செய்தது நீத்துவுக்கு சுத்தமாகப்

மகனுக்காக தீபிகாவை கண்டாலே நீத்துவுக்கு பிடிக்காவிட்டாலும் மகனுக்காக அதை வெளிக்காட்டாமல் இருந்துள்ளார்.

பிரிந்ததில் மகிழ்ச்சி ரன்பிர் தீபிகாவை விட்டு பிரிந்ததில் நீத்துவுக்கு உள்ளூர மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

Show commentsOpen link

[Continue reading...]

டோனிக்கு பாடல்கள் சி.டி.யை பரிசளித்த இளம் பாடகர் Dhoni gifted CD by upcoming singer

- 0 comments

டோனிக்கு பாடல்கள் சி.டி.யை பரிசளித்த இளம் பாடகர் Dhoni gifted CD by upcoming singer
Tamil NewsToday, 05:30

ராஞ்சி, செப். 26-

கடந்த 2002ம் ஆண்டில் பள்ளி மாணவனாக பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமால் பாராட்டப்பட்டவர் ரோகன் டியோ பதக். 22 வயது வாலிபரான இவர், இப்போது வளர்ந்துவரும் ஒரு பாடகராக விளங்குகின்றார்.

இவர் தனது இசையமைப்பில் கிரிக்கெட் குறித்த இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் ஒன்று ஜேஎஸ்சிஏ மைதானத்தில் கேப்டன் டோனி இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய ஒரு நாள் போட்டிக்குப் பின்னர் அவரது ஆட்டத்திறனைப் புகழ்ந்து பாராட்டியதாகும்.

மற்றொன்று டீம் இந்தியா அணியினர் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியபோது இந்த அணி குறித்து பாடியதாகும். இந்த இரண்டு பாடல்களும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையின் பாராட்டுகளைப் பெற்றன.

ஜூலை மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின்போது இந்தப் பாடல்கள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டன. இந்திய கிரிக்கெட் அணியினரைப் புகழ்ந்து பாடிய மற்றொரு பாடல் இணையதளத்தில் யூ டியூபில் வெளிவந்துள்ளது.

ராஞ்சியில் ஹர்மு காலனியில் இருக்கும் கேப்டன் டோனியின் வீட்டிற்கு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ரோகன் சென்றுள்ளார். தனது பாடல்கள் மூன்றும் அடங்கிய சிடி ஒன்றினை டோனிக்கு அவர் பரிசளித்தபோது டோனி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்திய அணி பற்றி தான் பாடியுள்ள மூன்றாவது பாடல் குறித்து அவரது கருத்தை தனக்குத் தெரிவிக்குமாறு கேட்டதற்கு டோனி சம்மதித்ததாகக் கூறும் ரோகன், அவரது எளிமையைப் பற்றி வானளாவப் புகழ்கிறார். 
...
Show commentsOpen link

[Continue reading...]

சீனாவில் கற்பழிப்பு வழக்கில் ராணுவத் தளபதியின் மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை China court jails generals son in sexual harassment

- 0 comments

சீனாவில் கற்பழிப்பு வழக்கில் ராணுவத் தளபதியின் மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை China court jails generals son in sexual harassment
Tamil NewsToday, 05:30

பெய்ஜிங், செப். 26-

சீனாவின் ராணுவத்தளபதியாக இருப்பவர் லீ ஷூவாங்ஜியாங். இவர் நாட்டுப்பற்று மிக்க பாடல் ஒன்றை எழுதி சீன மக்களால் நன்கு அறியப்பட்டவர் ஆவர். இவரது மனைவி மெங் ஜீயும் சீன ராணுவத்தில் ஒரு சிறந்த பாடகராக விளங்குகிறார். 

இவர்களது 17 வயது மகன் லீ தியானி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் மது அருந்தியிருக்கிறார். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்த பெண் ஒருவரை கற்பழித்திருக்கின்றனர். 

இதுகுறித்த வழக்கு பெய்ஜிங்கின் மேற்குப்பகுதியில் உள்ள ஹைதியான் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது லீ தியானி அந்த பெண் ஒரு விலை மாதர். அவருடன் எந்த ஒரு தகாத உறவும் நான் வைத்துக்கொள்ள வில்லை என்று வாதிட்டார். 

இருந்தும், அவர்கள் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது நிரூபணம் ஆனது. இதையடுத்து ஹைதியான் நீதிமன்றம், லீ தியானிக்கு 10 வருட சிறை தண்டனையும், மற்ற நால்வருக்கு 3 வருடம் முதல் 12 வருடம் வரை சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இதற்கு முன்பு கடந்த 2011-ம் ஆண்டு முறைகேடாக வாகனம் ஓட்டியது, வாகனத்திற்கு வழிவிடாமல் இருந்ததாக ஒரு ஜோடியினை தாக்கியது உள்ளிட்ட வழக்குகளில், லீ தியானி வாகனம் ஓட்ட நீதிமன்றம் 1 வருடம் தடை விதித்திருந்தது. 

இச்சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. பின்னர் லீ தியானியின் தந்தையான ராணுவத்தளபதி லீ ஷூவாங்ஜியாங், அந்த தம்பதியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 
...
Show commentsOpen link

[Continue reading...]

அமலாபாலுடன் அதிருப்தி கொண்ட விஜய்:கடும் அதிர்ச்சியில் நடிகை vijay and amalapaul

- 0 comments

அமலாபாலுடன் அதிருப்தி கொண்ட விஜய்:கடும் அதிர்ச்சியில் நடிகை

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday, 10:04

விஜய்யின் நட்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தார் அமலா பால்.இப்போதெல்லாம் ஒரே ஹீரோயினை அடுத்தடுத்த படங்களுக்கு டாப் ஹீரோக்கள் ரிபீட் செய்வதில்லை. இதில் விஜய் மட்டும் விதிவிலக்கு. தொடர்ந்து இவரது படங்களில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். அதையடுத்து அசின். இப்போது காஜல் அகர்வால். ஒரே ஹீரோயினை தனது படங்களில் விஜய் தொடர ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.

அது நட்பு. குறிப்பிட்ட ஹீரோயினுடன் விஜய்க்கு நட்பு ஏற்பட வேண்டும். அந்த ஹீரோயின் எந்த படத்துக்கு கால்ஷீட் சொதப்பினாலும் விஜய்யின் படத்தில் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். இந்த விஷயங்களாலேயே முன் குறிப்பிட்ட நடிகைகள் விஜய்யுடன் தொடர்ந்து நடித்துள்ளனர். அந்த வகையில் தலைவா படத்தில் நடித்த அமலா பாலுக்கு லக் அடிக்குமா என அவரது அபிமானிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அடிக்கவில்லை. இதனால் அமலா ஏமாற்றம் அடைந்துள்ளாராம்.

தலைவா படத்தில் ஹீரோயினாக நடிக்க அமலாபாலை ஒப்பந்தம் செய்தவுடன் விஜய் தனது அதிருப்தியை இயக்குனர் விஜய்யிடம் தெரிவித்தாராம். ஆனால் இயக்குனர் விஜய், நடிகர் விஜய்யை சமாதானப்படுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தாராம். இந்த விஷயம் இப்பொழுதுதான் அமலாபாலுக்கு தெரியவந்துள்ளது. எனவே மீண்டும் ஒருமுறை தனக்கு விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டதால் இருக்கிறார் அமலாபால்.

Show commentsOpen link

[Continue reading...]

Wednesday 25 September 2013

அனுஷ்காவின் காதல் தோல்வி ரகசியம் anushka love story

- 0 comments

அனுஷ்காவின் காதல் தோல்வி ரகசியம்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

அனுஷ்காவின் காதல் தோல்விக்கான காரணங்களுக்கு பதில் தெரியவந்துள்ளன.

மற்ற நாயகிகளைப் போல் அனுஷ்காவின் காதலை பற்றி அதிகம் செய்திகள் வந்ததில்லை.

ஆரம்பத்தில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் அவர் நெருக்கமாக இருந்தது பற்றி நிறைய தகவல்கள் வந்தது. அந்த காதல் தோற்ற பிறகு அனுஷ்காவுக்கு மேலும் 2 முறை காதல் வந்ததும் அது தோல்வியில் முடிந்ததும் ரகசியமாகவே இருந்தது.

தமிழில் ரெண்டு படத்தில் நடித்த பிறகு தெலுங்கு சினிமாவிலேயே செட்டில் ஆகியிருந்தார் அனுஷ்கா.

அப்போதுதான் அந்த ஒளிப்பதிவாளரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் நெருங்கி பழகியதால காதல் வசப்பட்டார்.

சினிமா உலகை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன் என்றும் அனுஷ்காவே தனக்கு நெருங்கிய சிலரிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வானம் பட இயக்குனர் கிரீஷுடன் அவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

இந்த நெருங்கிய நட்பிலும் சில மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டது.

ஒளிப்பதிவாளருடன் காதல் தோல்விக்கு திருமணத்தை அனுஷ்கா தள்ளிப்போட்டதே காரணமாம்.

கிரிஷுடன் காதல் தோல்விக்கு ஈகோ பிரச்னை காரணமாக கூறப்படுகிறது.

Show commentsOpen link

[Continue reading...]

இன்று திருச்சியில் இளந்தாமரை மாநாடு ilanthamarai Conference happening today

- 0 comments

திருச்சியில் இளந்தாமரை மாநாடு இன்று நடக்கிறது: ராஜ்நாத்சிங் நரேந்திரமோடி பங்கேற்பு ilanthamarai Conference happening today
Tamil NewsYesterday, 05:30

சென்னை, செப். 26-

திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்-மந்திரியுமான நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகின்றனர்.

இந்த மாநாட்டிற்கு தமிழக இளைஞர் அணி மாநில தலைவர் பொன்.வி.பாலகணபதி தலைமை தாங்குகிறார். இளைஞர் அணியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.முருகானந்தம் வரவேற்று பேசுகிறார். இளைஞர் அணி அகில இந்திய தலைவர் அனுராக் தாக்கூர் எம்.பி., அகில இந்திய செயலாளர் பி.முரளிதர்ராவ் ஆகியோர் மாநாட்டு தொடக்கவுரை ஆற்றுகின்றனர். பிரசார தொடக்க பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் எம்.பி. சிறப்புரையாற்றுகிறார். குஜராத் மாநில முதல்-மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி எழுச்சியுரையாற்றுகிறார். அகில இந்திய அமைப்பு துணை பொதுச்செயலாளர் வி.சதீஷ், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், அகில இந்திய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், அகில இந்திய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, லலிதா குமாரமங்கலம், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு, மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சரவண பெருமாள், மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் உள்பட பலர் பேசுகின்றனர். மாநில செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் நன்றியுரையாற்றுகிறார்.

இளந்தாமரை மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான விரிவான ஏற்பாடுகளை திருச்சி மாநகர பொறுப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டிற்கான அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு முக்கிய விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அழைப்பிதழில் முன்பகுதியில் தாமரையில் பாராளுமன்ற வளாகம் மலர்வது போன்று வடிவமைக்கப்பட்டு, அதில் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழின் பின்பக்கத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

மாநாட்டையொட்டி சென்னையின் பல பகுதிகளில் இருந்து கார், வேன், லாரிகளில் பாரதீய ஜனதா தொண்டர்கள் திருச்சிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த மாநாடு காரணமாக திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. மாநாடு மேடை டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றிலும் சுழலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

...
Show commentsOpen link

[Continue reading...]

திருவள்ளூரில் நள்ளிரவில் மனைவி கண்முன் கணவர் அடித்து கொலை midnight wife before husband murder near Tiruvallur

- 0 comments

திருவள்ளூரில் நள்ளிரவில் மனைவி கண்முன் கணவர் அடித்து கொலை midnight wife before husband murder near Tiruvallur
Tamil NewsToday, 05:30

திருவள்ளூர், செப். 25–

திருவள்ளூர் ரெயில்வே பாலம் அருகே கூடாரம் அமைத்து தங்கி இருந்தவர் சந்துரு (60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி. இவர்களுக்கு விஜய் என்ற மகன் உள்ளான்.

சந்துருவுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று இரவு மது போதையில் கூடாரத்தின் வெளியே தூங்கினார்.

நள்ளிரவு 1 மணி அளவில் அவ்வழியே வந்த 5 பேர் கும்பல் சந்துருவை எழுப்பி 'சிகரெட்' பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டனர். அவர்களை சந்துரு திட்டினார்.

இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கும்பல் சந்துருவை கட்டையால் தாக்கினர். அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த சாவித்திரி அவர்களை தடுக்க முயன்றார்.

அவரையும் கீழே தள்ளிவிட்டு சந்துருவை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டனர்.

உடனடியாக சந்துருவை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

சந்துரு தங்கி இருந்த இடம் அருகே சினிமா தியேட்டர் உள்ளது. இரவு காட்சி பார்த்து சென்றவர்கள் அவரை எழுப்பிய போது ஏற்பட்ட மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இரவில் தியேட்டருக்கு வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவி கண்முன் கணவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

...
Show commentsOpen link

[Continue reading...]

Tuesday 24 September 2013

‘ஆரம்பம்’ அஜித் பஞ்ச் aarambam ajith punch dialogue

- 0 comments

இதாங்க, 'ஆரம்பம்' படத்துல தல பேசுற பஞ்ச்
by abtamil

Tamil newsYesterday,

பொதுவாக பஞ்ச் டயலாக் பேசினால் தான் ஹீரோ என்ற காலநிலை சிலகாலங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் நிலவியது. சில ஹீரோக்கள் படம் முழுவதும் பஞ்ச் பேசி ரசிகர்களைக் கொடுமைப் படுத்திய படங்களும் உண்டு. ஆனால், ரசிகர்கள் பஞ்ச் டயலாக்கை கலாய்க்க ஆரம்பித்த பின்னர், அந்த டிரண்ட் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஆனாலும், இன்றும் கூட சில நடிகர்களின் படங்களில் ஒரு பஞ்ச் டயலாக்காவது வைத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அதனை ரசிகர்கள் ரசிக்கவும், ஆதரிக்கவும் செய்கின்றனர். அந்த வகையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீசாக உள்ள ஆரம்பம் படத்தில் அஜீத் பேசும் பஞ்ச் டயலாக் வெளியாகியுள்ளது
.
நல்லவனுக்கு நல்லவன்… இதற்கு முன்பு அஜீத் நடிப்பில் வெளியான 'மங்காத்தா'வில் 'நானும் எவ்வளவு நாளைக்குதான் நல்லவனா இருக்கிறது' என பஞ்ச் பேசினார் தல

தலயின் எதிரி…. 'பில்லா 2′-வில் 'எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்' என பஞ்ச் பேசி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார் அஜீத்.

தலயின் எதிரி…. 'பில்லா 2′-வில் 'எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்' என பஞ்ச் பேசி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார் அஜீத்

தல போல வருமா…. இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது அஜீத்தின் பஞ்ச் டயலாக் வெளியாகியுள்ளது
.

அது….! அதில், 'சாவுக்கு பயந்தவன் தினம் தினம் சாவான், பயப்படாதவன் ஒரு தடவைதான் சாவான்' என அஜீத் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.

.

Show commentsOpen link

[Continue reading...]

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா மீதான இலாகாபூர்வ விசாரணை ரத்து IAS officer Durga Inquiry revoked by UP govt

- 0 comments

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா மீதான இலாகாபூர்வ விசாரணை ரத்து IAS officer Durga Inquiry revoked by UP govt
Tamil NewsYesterday

லக்னோ, செப். 25-

உத்தரபிரதேச மாநிலம் கவுதமபுத்தா நகர் மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் மணல் கடத்தும் கும்பல் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் மசூதியின் சுற்றுச்சுவரை இடித்து, கலவரம் உருவாக காரணமாக இருந்ததாக கூறி அவரை உத்தரபிரதேச அரசு கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கைக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடு முழுவதும் பரபரப்புக்கு உள்ளாகியது. இந்த நிலையில் துர்கா நாக்பால் மீண்டும் கடந்த 22-ந் தேதி அன்று பணி அமர்த்தப்பட்டார். இதை அடுத்து அவர் தனது கணவருடன், முதல்மந்திரி அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் துர்கா நாக்பால் மீதான இலாகா பூர்வ விசாரணையை முடித்துக் கொள்வதாக உத்தரபிரதேச அரசு நேற்று அறிவித்தது. இத்துடன் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

...
Show commentsOpen link

[Continue reading...]

சொல்வதெல்லாம் உண்மை. நடிகை லெட்சுமியின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர் sollvathellam unmai nadigai lakshmi ramakrishnan love story

- 0 comments

சொல்வதெல்லாம் உண்மை. நடிகையின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர்.
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் சாந்தமயமான நடிகையின் வீட்டில் புயல் வீசுவதாக கூறப்படுகிறது. நடிகைக்கும், பிரபல குணசித்திர நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயமானவருடன் நடிகை அடிக்கடி தொடர்பில் இருப்பது சில நாட்களாக ஊடகங்களில் செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தது. முதலில் இதை நம்ப மறுத்த நடிகையின் கணவர், பின்னர் அவருடைய நடத்தையில் சிறிது சந்தேகம் கொண்டதாக தெரிகிறது.

சென்னை அண்ணா சாலையில் இயங்கும் பிரபல துப்பறியும் நிறுவனத்திடம் நடிகையின் கணவர் இதுகுறித்து ரகசியமாக விசாரிக்க சொன்னாராம். அவர்களும் நடிகைக்கு தெரியாமல் பின் தொடர்ந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிட்டியுள்ளதாக தெரிகிறது. இந்த கள்ளத்தொடர்பால் வெறுத்துப்போன நடிகையின் கணவர், நடிகையை நேரில் கண்டித்துள்ளார். இவையெல்லாவற்றையும் முதலில் மறுத்த நடிகை, பின்னர் ஒரு கட்டத்தில் கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமல், ஆமாம், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது உண்மைதான், இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளாராம். இதனால் மனம் வெறுத்த போன நடிகையின் கணவர், நடிகையை விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் கோடம்பாக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

Show commentsOpen link

[Continue reading...]

நரேந்திர மோடி வருகை சென்னையில் கல்லூரி, பூங்காக்களில் ஆன்லைனில் பெயர் பதிவு narendra modi visit chennai college park online name register

- 0 comments

நரேந்திர மோடி வருகை சென்னையில் கல்லூரி, பூங்காக்களில் ஆன்லைனில் பெயர் பதிவு narendra modi visit chennai college park online name register
Tamil NewsToday, 05:30

சென்னை, செப். 24–

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (வியாழன்) திருச்சி வருகிறார். அங்கு பொன்மலையில் நடை பெறும் பிரமாண்டமான கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக 130–க்கு 40 அடி அகலத்தில் செங்கோட்டை வடிவில் பிரமாண்ட மான மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடை சுற்றிலும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

கூட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

மாநில முழுவதிலும் இருந்து விண்ணப்பம் மற்றும் ஆன்–லைன் மூலம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் பூங்காக்கள், மெரீனா கடற்கரையில் நடை பயிற்சிக்கு வருபவர்களிடம் திருச்சி மாநாட்டுக்கு வரும்படி அழைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். கையில் லேப்–டாப்பும் வைத்து இருக்கிறார்கள். மாநாட்டுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு உடனடியாக பெயர் பதிவு செய்யப்பட்டது.

இதே போல் கல்லூரி வாசல்களிலும் லேப்–டாப்புடன் நின்றபடி மாநாட்டுக்கு வரவிருப்பம் தெரிவித்த மாணவர்களின் பெயர்கள் ஆன்–லைனில் பதிவு செய்யப்பட்டது.

கே.கே.நகர் சிவன் பூங்காவில் இன்று காலையில் தென்சென்னை மாவட்டம் சார்பில் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் காளிதாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர், இளைஞர் அணி தலைவர் அலங்காரமுத்து, பொது செயலாளர் பிரேம் ஆனந்த், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

Monday 23 September 2013

காந்திஜி வழியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார்: சுப்பிரமணிய சுவாமி Modi following Gandhiji way Subramanya Swamy

- 0 comments

காந்திஜி வழியை நரேந்திர மோடி பின்பற்றுகிறார்: சுப்பிரமணிய சுவாமி Modi following Gandhiji way Subramanya Swamy
Tamil NewsYesterday, 05:30

மும்பை, செப். 24-

நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் விதிக்கும் முறையை பா.ஜனதா நடைமுறைப்படுத்தியது. பா.ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி இதற்கு ஆதரவு தெரிவித்து கூறியதாவது:–

இதில் என்ன தவறு இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட்சியினர் கட்டணங்கள் விதித்து அதனை தங்கள் பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள். ஆனால் மற்ற கட்சியினர் கட்டண தொகையை கட்சியின் வளர்ச்சி பணிக்காக வழங்குகிறார்கள்.

இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

மேலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் மும்பையில் போட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளித்து பேசுகையில், ''இந்த முடிவை நான் எடுக்க முடியாது. கட்சியின் மேலிடம் தான் இதனை தீர்மானிக்கும். மும்பை எனக்கு புகுந்த வீடு. ஏற்கனவே 2 முறை இங்கிருந்து நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்'' என்றார். மேலும் பா.ஜனதா தலைவர் அத்வானி மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி வாழ்த்து தெரிவித்தது அதற்கு அவர் கூறுகையில், ''குடியரசு நாட்டில் மற்ற கட்சி தலைவர்களை நாம் விரும்பாதபோது கூட அவர்களை சந்தித்தால் நமக்கு தயக்கம் ஏற்படும். மேலும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எங்கு சென்றாலும் நமது ஓட்டு இரட்டிப்பாகும். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பம்'' என்றார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

கவுதம் கார்த்திக் என்னோட ஃப்ரண்ட்… சூர்யா தான் என் கனவு நாயகன் : லட்சுமி மேனன் actor gowtham karthik lakshmi menon love

- 0 comments

கவுதம் கார்த்திக் என்னோட ஃப்ரண்ட்… சூர்யா தான் என் கனவு நாயகன் : லட்சுமி மேனன்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

சிப்பாய் படத்தின் ஜோடியாக நடிக்கும் கவுதம் கார்த்திக்தான் திரை உலகில் தன்னுடைய க்ளோஸ் ஃப்ரண்ட் என்று கூறியுள்ளார் லட்சுமி மேனன். சினிமாவில் நடிக்க வரும் முன்பிருந்தே சூர்யாதான் தன்னுடைய ஃபேவரைட் ஹீரோ என்று கூறியுள்ளார் அவர். சூர்யா உடன் நடிக்க கால்ஷீட் கேட்டால் கதையே கேட்காமல் ஓகே சொல்லிவிடுவாராம் லட்சுமி மேனன். சமீபத்தில் நாளிதழ் ஒன்றிர்க்கு அவர் அளித்த இன்டர்வியூவை படியுங்களேன்.
லட்சுமி மேனன் சிப்பாய், பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தாண்டானு நாலு படங்களில் நடிக்கிறார். நல்ல கதைகள் வந்தால் கால்ஷீட் தர தயார் என்கிறார்.
கவர்ச்சியான உடை அணிந்து நடித்தால் லட்சுமி மேனனுக்கு செட் ஆகாதாம். எனவே இப்போதைக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் டீசன்டாக நடித்துவிட்டு எதிர்காலத்தில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிப்பேன் என்கிறார் லட்சுமி மேனன்.
கவுதம் கார்த்திக் உடன் சிப்பாய் படத்தில் நடிக்கிறார். இப்போதைக்கு கெளதம் கார்த்திக்தான் லட்சுமி மேனனின் க்ளோஸ் ஃப்ரெண்ட் அவ்வளவு தான்."
சூர்யாதான் அவரது கனவு நாயகனாம். காக்க காக்க, கஜினி போன்ற படங்களை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறாராம். சூர்யாவோடு நடிக்க தேதிகள் கேட்டா, கதையே கேட்காமல் கால்ஷீட் ரெடி என்கிறார்.
விஜய், அஜித் என்று லட்சுமி மேனன் இணைந்து நடிக்க ஆசைப்படும் கதாநாயகர்கள் லிஸ்ட் ரொம்ம்ம்ப பெரிசு. விரைவில் இது நடக்கும் என்று நம்புகிறார் லட்சுமி மேனன்
 

Show commentsOpen link

[Continue reading...]

ஐஸ்வர்யாராயே தான் வேணும்…. அடம் பிடித்துக் காத்திருக்கும் பவர்ஸ்டார் power star with ishwaryarai

- 0 comments

ஐஸ்வர்யாராயே தான் வேணும்…. அடம் பிடித்துக் காத்திருக்கும் பவர்ஸ்டார்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,

சென்னை: வாழ்நாளில் ஒருமுறையாவது நடிகை ஐஸ்வர்யாராயுடன் நடித்து விட வேண்டும் என்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்பதை மீண்டும் பதிவு செய்துள்ளார் பவர்ஸ்டார் சீனிவாசன். சன்டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி 'சூப்பர் குடும்பம்'. அத்தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிப்போர் தங்களது தனித்திறமைகளை நிரூபிக்கும் நிகழ்ச்சியான இதில் நடுவர்களாக நடிகைகள் மீனா மற்றும் சங்கீதா, மற்றும் விஜய டி.ராஜேந்தர் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் சில வாரங்களில் சிறப்பு விருந்தினர்கள் பங்கெடுத்துக் கொள்வதுண்டு. அந்தவகையில் இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பவர்ஸ்டார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட சில சுவாரஸ்யமான கேள்விகளும், அதற்கு அவரது டிரேட்மார்க் பதில்களும் உங்களுக்காக….

இப்பவும் 'பெட்ரோமாஸ்'லைட் தானா…? முன்பொரு முறை அளித்த பேட்டியில் ஐஸ்வர்யாராயுடன் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் பவர்ஸ்டார். அதனை நிகழ்ச்சித் தொகுப்பாளரான தீபக் மீண்டும் நினைவு படுத்தி, தற்போது யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் எனக் கேட்டார்.

ஐஸ் தான் வேணும்…. அதற்குப் பவர்ஸ்டார், 'தன் விருப்பத்தில் மாற்றமேயில்லை. ஐஸ்வர்யாவுடன் தான் நடிக்க வேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.

யாரோடு ஜோடி போட ஆசை….? நிகழ்ச்சியில் இரண்டு நடிகைகள் நடுவர்களாக அமர்ந்துள்ளனரே, அவர்களில் யாருடன் ஹீரோவாக நடிக்க ஆசை என மீண்டும் தொகுப்பாளர் கேட்டார்.

நா சின்னப் பையன் மேடம்… அக்கேள்விக்கு டக்கென பதிலளித்த பவர், 'அவர்கள் இருவரும் நான் பள்ளி மாணவராக இருந்த போது ஹீரோயின்களாக அறிமுகமானவர்கள். எனவே, அவர்களுடன் நடிக்கும் எண்ணமில்லை' எனத் தெரிவித்தார்.

ரசித்து சிரித்த நடிகைகள்…. நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னமே பவர்ஸ்டாரை கலாய்க்க முன் அனுமதி வாங்கியிருந்தார்கள் நடுவர்களாக இருந்த மீனாவும், சங்கீதாவும். எனவே, பவர்ஸ்டார் பேசுவதை இருவருமே ரசித்து சிரித்தார்கள்.

கலக்குறே பவர்…. பவரின் ஒரு பதிலுக்கு நடிகை சங்கீதா 'வாழ்றீங்க சார்' என சூது கவ்வும் பட டயலாக்கை கூறி கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.

Show commentsOpen link

[Continue reading...]

கருப்பசாமி பாண்டியனுக்கு நிபந்தனை ஜாமீன் woman torture case karuppasamy pandian bail

- 0 comments

பெண் பாலியல் புகார் வழக்கு: கருப்பசாமி பாண்டியனுக்கு நிபந்தனை ஜாமீன் woman torture case karuppasamy pandian bail
Tamil NewsToday,

மதுரை, செப். 23–

தி.மு.க.வின் நெல்லை மாவட்ட செயலாளராக உள்ள கருப்பசாமி பாண்டியன் மீது நெல்லை டவுனை சேர்ந்த தமிழரசி என்ற பெண் பாலியல் புகார் கொடுத்தார். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கருப்பசாமி பாண்டியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வக்கீல் செல்லப்பாண்டியன் போலீசாரிடம் விளக்கம் கேட்டு பதிலளிப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் விசாரணைக்கு வந்தபோது பாலியல் புகார் கொடுத்த தமிழரசி கோர்ட்டில் ஆஜராகி தன்னையும் வழக்கில் சேர்த்து கொள்ளும்படி மனுத்தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (இன்று) நீதிபதி சி.டி.செல்வம் ஒத்தி வைத்திருந்தார். மேலும் தமிழரசியின் விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக கோர்ட்டில் தாக்கல் செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று முன் ஜாமீன் மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது கருப்பசாமி பாண்டியன் தரப்பில் மூத்த வக்கீல் ரமேஷ், வக்கீல் ஆனந்த் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் கூறும்போது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் 3 பிரிவு ஜாமீனில் விடக்கூடியதுதான். பெண் கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு–4–ன் கீழான வழக்கில் இந்த புகார் வரவில்லை. பொது இடத்தில் பெண்களை துன்புறுத்தினால்தான் அந்த சட்டம் பொருந்தும். ஆனால் மனுதாரர் ஒரு அறையில் நடந்த சம்பவமாக புகாரில் தெரிவித்துள்ளார். எனவே கருப்பசாமி பாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றனர்.

ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் செல்லப்பாண்டியன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கருப்பசாமி பாண்டியனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என அவர் கூறினார். இதற்கு பதிலளித்த நீதிபதி செல்வம் அனைத்து வழக்குகளிலும் போலீஸ் காவல் தேவையற்றது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே அவரிடம் தேவைப்பட்டால் நீங்கள் விசாரிக்கலாம் என்றார்.

மேலும் கருப்பசாமி பாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கிய அவர் குற்றாலம் போலீஸ் நிலையத்தில் ஒரு வாரம் தொடர்ந்து கையெழுத்திடவும் உத்தரவில் கூறியிருந்தார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

அபிஷேக்குடன் ரீஎண்ட்ரியாகும் ஐஸ்வர்யா abisek and ishwarya rai

- 0 comments

அபிஷேக்குடன் ரீஎண்ட்ரியாகும் ஐஸ்வர்யா
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
தனது கணவருடன் மீண்டும் நடிக்க வருகிறாராம் ஐஸ்வர்யா ராய்.

பாலிவுட்டின் கனவு கன்னியான ஜஸ்வர்யா ராய் குழந்தை பெற்ற பின்பு படங்கள் எதுவும் நடிக்காமல் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார்.

பின்பு பன்சாலி இயக்கத்தில் குத்துப்பாடல் ஒன்றுக்கு நடனமாடி ரீ எண்ட்ரி ஆகப்போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவின.

ஆனால் குத்துபாடலுக்கு நான் நடனம் ஆடவில்லை என்று மறுத்துவந்தார் ஜஸ்வர்யா.

இந்நிலையில் ரீ எண்ட்ரியை தனது கணவருடன் ஆரம்பிக்கப்போகிறாராம்.

இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்ட ஹிமேஸ் ரேஷாமியா மாசும் படத்தினை ரீமேக் செய்யப்போகிறாராம்.

இந்த படத்தில் நசுதின் ஷா மற்றும் சபானா அசிம் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயை ஒப்பந்தம் செய்ய உள்ளராம்.

இதற்காக பச்சன் குடும்பத்திடம் இருந்து வரும் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கிறாராம்.

Show commentsOpen link

[Continue reading...]

விதவை பெண்ணை மிரட்டி 9 பேர் கற்பழிப்பு: 5 பேர் கைது mumbai woman molested 5 people arrest

- 0 comments

மும்பையில் விதவை பெண்ணை மிரட்டி 9 பேர் கற்பழிப்பு: 5 பேர் கைது mumbai woman molested 5 people arrest
Tamil NewsYesterday, 05:30

மும்பை, செப். 23-

மராட்டிய மாநிலம் சதாராவை சேர்ந்தவர் சங்கீதா (வயது40, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் இறந்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி தனது 2 குழந்தைகளுடன் மும்பை வந்தார்.

காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்த சங்கீதாவிற்கு, முலுண்டு அமர்நகரை சேர்ந்த டெம்போ டிரைவர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இதனையடுத்து தினமும் இரவில் அந்த டெம்போவிலேயே தனது குழந்தைகளுடன் தூங்கிவந்தார். வழக்கம்போல் நேற்று சங்கீதா டெம்போவில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது நள்ளிரவு டெம்போ டிரைவர் தனது நண்பர் ஒருவருடன் வந்து சங்கீதாவை எழுப்பி தன்னுடன் வரும்படி அழைத்தார். இதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்தார். உடனே 2 பேரும் டெம்போவில் ஏறி சங்கீதாவை மிரட்டி கற்பழித்தனர்.

இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் கவனித்துக் கொண்டிருந்தனர். பின்னர் டெம்போ டிரைவரும், அவரது நண்பரும் சென்ற பிறகு அந்த 2 பேரும் சங்கீதா அருகே சென்றனர். அவரை மிரட்டி அருகில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக கற்பழித்தனர்.

பின்னர் அந்த வழியாக வந்த மேலும் 5 பேர் கொண்ட கும்பல் சங்கீதாவை அருகில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்கா காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்றது. 5 பேரும் காட்டுமிராண்டிதனமாக சங்கீதாவை கற்பழித்து அங்கேயே விட்டு விட்டனர்.

இந்த நிலையில் காலையில் காட்டுப்பகுதியில் இருந்து வெளியே வந்த சங்கீதா அலங்கோலமான நிலையில் முல்லுண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். போலீசாரிடம் தன்னை 9 பேர் சீரழித்து விட்ட கதையை கூறி கதறி அழுதார். உடனே போலீசார் அவருக்கு மாற்று உடை கொடுத்து மருத்துவ பரிசோதனை மற்றும் முதலுதவி சிகிச்சைக்காக நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் மகேஷ் குரே முல்லுண்டு போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரித்தார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே, முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சங்கீதா போலீசாருடன் சென்று தான் கற்பழிக்கப்பட்ட இடங்களை அடையாளம் காட்டினார். அங்கு கிடந்த ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். சங்கீதா கொடுத்த அடையாளத்தின் பேரில் முல்லுண்டு பகுதியை சேர்ந்த அஜய் மகாவீர், மகேஷ் ராமசந்திரா, வாகித் கயூம் சேக், வசிம் சமத் சேக், தஸ்தகீர் அப்துல் கான் ஆகிய 5 பேரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர்கள் 5 பேரும் சங்கீதாவை கற்பழித்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களை விடுமுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வருகிற 30–ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சமீபத்தில் மும்பையில் பாழடைந்த சக்தி மில் வளாகத்தில் 23 வயது பத்திரிகை பெண் புகைப்பட நிபுணர், 18 வயது பெண் டெலிபோன் ஆபரேட்டர் ஆகியோர் கும்பல் கற்பழிப்புக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த அதிர்வலை அடங்குவதற்கு முன் மற்றொரு கும்பல் கற்பழிப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
...
Show commentsOpen link

[Continue reading...]

இந்தியன் ஆயில் அணி ‘சாம்பியன்’ india hockey match indian oil team win

- 0 comments

அகில இந்திய ஆக்கி போட்டி: இந்தியன் ஆயில் அணி 'சாம்பியன்' india hockey match indian oil team win
Tamil NewsYesterday,

சென்னை, செப்.23-

சென்னையில் நடந்த அகில இந்திய ஆக்கி போட்டியில் இந்தியன் ஆயில் அணி 6-4 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.பி.யை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

88-வது எம்.சி.சி-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி நேற்று மாலை நடந்தது.

இதில் இந்தியன் ஆயில்-ஐ.ஓ.பி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியன் ஆயில் 6-4 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.பி. அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.

இந்தியன் ஆயில் அணியில் கேப்டன் தீபக் தாகூர், பிரப்ஜோத்சிங் ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்தனர். ஐ.ஓ.பி.அணியில் ரூபிந்தர் பால்சிங் 2 கோலும், எஸ்.எம்.ரபீக், அமர்தீப் எக்கா தலா ஒரு கோல் திருப்பினார்கள். பரிசளிப்பு விழாவில் முருகப்பா குழும சேர்மன் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.

சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் ஆயில் அணிக்கு கோப்பையுடன் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும், 2-வது இடம் பெற்ற ஐ.ஓ.பி. அணிக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. இந்தியன் ஆயில் வீரர் ரகுநாத் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
...
Show commentsOpen link

[Continue reading...]

Sunday 22 September 2013

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய்க்கு நடந்த அவமரியாதை!

- 0 comments

"வந்தார்; ஓரமாய் உட்கார்ந்தார்; சென்றார்…" : இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய்க்கு நடந்த அவமரியாதை!

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

அடுத்த சூப்பர்ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ந்து விட்ட நடிகர் விஜய்க்கு நேரு ஸ்டேடியத்தில் நடந்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா பங்ஷனில் அவமரியாதை செய்யும் விதமாக சம்பவம் நடைபெற்றுள்ளது.

நேற்று ஆரம்பித்த இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்புரையாற்றி தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட 10 கோடி ரூபாய் பணத்துடன் தடபுடலாக நடந்து வரும் இந்த விழாவுக்கு கருணாநிதி, பாலுமகேந்திரா மாதிரியான பெரும்பாலான சினிமா பிரபலங்களுக்கு எந்தவித அழைப்பும் இல்லை.

இது ஒருபுறமிருக்க இன்விடேஷன் கொடுத்து அழைக்கப்பட்ட நடிகர் விஜய்க்கோ அவ்வளவு பெரிய ஸ்டேடியத்தில் எங்கோ ஒரு மூலையில் உட்கார இடம் கொடுத்து அவமரியாதை செய்து அனுப்பியிருக்கிறார்கள் விழாக் குழுவினர்.

முக்கியமான நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்ட இந்த விழாவின் போது தமிழ்சினிமாவை போற்றும் வகையில் அனைத்து நடிகர் படங்கள் அடங்கிய சிறிய வீடியோ க்ளிப்பிங்ஸ் திரையிடப்பட்டது. இதில் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகர்களை பெற்றுள்ள நடிகரான அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் நடிகர் விஜய்யின் வீடியோ க்ளிப்பிங்ஸ்கள் மட்டும் திட்டமிட்டு புறக்கணிப்பட்டது.

அது மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த நடிகர், நடிகைகளுக்கு கூட முன் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழ் நடிகரான விஜய்க்கு வி.ஐ.பி இருக்கைகளின் கடைசி வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதை பொருட்படுத்தாமல் அமைதியாக சென்ற விஜய் தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டார். அவரைப் பார்த்த பல முண்ணனி நடிகர்கள் அனைவரும் அமைதி காக்க, இளம் நடிகர்கள் மட்டும் அவரை முன் பக்கம் வந்து உட்காருமாறு அழைத்தனர். ஆனால் யாரும் அவர் பக்கத்தில் வரவில்லை.

இருப்பினும் சைகையால் இங்கேயே அமர்ந்து கொள்வதாக கூறினார் விஜய். இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகர் விக்ரம் மட்டும் எதையும் பொருட்படுத்தாமல் சென்று விஜய்க்கு அருகில் அமர்ந்து கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

பிறகு விழா முடியும் போது விக்ரமிடம் மட்டும் சொல்லி விட்டு தானாகவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பிச் சென்றாராம் விஜய்.

Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger