Friday 26 July 2013

டாக்டரின் மர்ம உறுப்பை மனைவிக்கு பார்சல் அனுப்பிய பெண்

- 0 comments

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள
ரணியா பகுதியில் கடந்த 21-ம் தேதி டாக்டர்
சத்தீஷ் சந்திரா (42), என்பவர் மர்மமான
முறையில் கொல்லப்பட்டார்.

ரணியா பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில்
கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான
முறையில் அவர் இறந்து கிடந்தார்.
அவரது மர்ம உறுப்பையும்
கொலயாளி துண்டித்திருந்ததால் இந்த
கொலையின் பின்னணி பற்றி போலீசார்
பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், இறந்து கிடந்த டாக்டரின்
மனைவிக்கு ஒரு பார்சல் ‘கொரியர்’ மூலம்
அனுப்பட்டது.

அந்த பார்சலில் இருந்து ரத்தம் வடிந்ததால்
சந்தேகப்பட்ட கொரியர் நிறுவன ஊழியர்கள்
போலீசில் புகார் அளித்தனர்.
பார்சலை பிரித்து பார்த்த போலீசார்
திகைப்படைந்தனர்.
கொரியர் நிறுவன ஊழியர்கள் கூறிய
அடையாளங்களை அடிப்படையாக
வைத்து போலீசார்
ஒரு பெண்ணை கைது செய்தனர்.
டாக்டரை கொன்றது ஏன் ? என்பது தொடர்பாக
போலீசாரிடம் வாக்குமூலம்
அளித்த அந்த

பெண் கூறியதாவது:-
சுமார் 13 வருடங்களாக
எனக்கு போதை ஊசி போட்டு டாக்டர்
என்னை தொடர்ந்து கற்பழித்து வந்தார்.

இதேபோல் கடந்த 16-ம் தேதி எனக்கு போன்
செய்து ரணியாவில் உள்ள
லாட்ஜுக்கு வரவழைத்தார்.
சம்பவத்தன்று நாங்கள் இருவரும் லாட்ஜ்
அறையில் ஒன்றாக மது குடித்தோம்.

போதையில் இருந்த டாக்டரின்
கழுத்தை அறுத்துக் கொன்றேன். மர்ம
உறுப்பையும்
வெட்டி எடுத்து அவரது மனைவிக்கு கொரியர்
மூலம் பார்சலாக அனுப்பி வைத்தேன்.
இவ்வாறு அந்த பெண் வாக்குமூலம்
அளித்துள்ளார்.
அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்
இருப்பதாகவும், இதற்காக
அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும்
போலீசார் தெரிவித்தனர்.

[Continue reading...]

பிளாஸ்டிக் கழிவு குப்பைக்கு தங்க நாணயம் வாங்கப் போகிறீர்களா ?

- 0 comments
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர் தன்ராஜ் (அ.தி.மு.க.) எழுந்து சென்னை மாநகராட்சியே துப்புரவு பணியையும், சுகாதார பணியையும் மேற்கொள்ளுமா? என்று கேட்டார். இதற்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:-

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிக்காகவும், சுகாதார பணிக்காகவும்  தற்போது தேவைப்படும் கூடுதல்
[Continue reading...]

என்ன கொடுமை சார் இது ? எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்

- 0 comments

எய்ட்ஸ் நோயால் பெற்றோர் மரணம்: அனாதையான 4 சிறுவர்களை சுடுகாட்டில் குடிவைத்த கிராம மக்கள்


உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தம்பதியர் இறந்துவிட்டனர். இதனால் அவர்களின் பிள்ளைகளுக்கும் அந்த நோய் இருக்கும் என்று அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சினர். இதுபற்றி ஊர் பெரியவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

அப்போது எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் மகன்கள் 4 பேரையும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள சுடுகாட்டில் தங்க வைக்க முடிவு செய்தனர். அதன்படி சிறுவர்கள் 4 பேரும் அவர்களின் பெற்றோரின் கல்லறை அருகில் கூடாரம் அமைத்து 2 மாதமாக வசித்து வருகின்றனர். ஊரில் இருந்து யாராவது உணவு கொடுத்தால் அதை வாங்கி சாப்பிட்டு வேதனையுடன் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.

இது தொடர்பாக அந்த சிறுவர்களில், 17 வயதான மூத்த சிறுவன் நிருபர்களிடம் கூறுகையில், "என் தந்தை எய்ட்ஸ் நோயால் இறந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து தாயும் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டார். அதன்பின்னர் நான், எனது உறவினர்களுடன் கிராமத்திலேயே வசிக்க விரும்பினேன். ஆனால், எங்களுக்கும் எய்ட்ஸ் இருக்கும் என பயந்து வெளியேற்றிவிட்டனர்" என்றான்.

இதுபற்றி தகவல் அறிந்த மாநில சுகாதாரக் குழுவினர் அங்கு சென்று சிறுவர்களுக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. எய்ட்ஸ் பரிசோதனையில் அவர்களுக்கு நோய் பாதிப்பு இல்லை என்று தெரிந்தால் மட்டுமே அவர்களை மீண்டும் ஊருக்குள் அழைத்து வருவோம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே பசி பட்டினியால் சுடுகாட்டிற்கு விரட்டியடிக்கப்பட்ட அந்த சிறுவர்களுக்கு, அரசு இப்போது இலவச வீடு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் அவர்களுக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்போருக்கான ரேஷன் கார்டு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி மற்ற நலத்திட்ட பயன்களையும் பெற முடியும். ஆனால் உறவினர்கள், கிராம மக்களின் ஆதரவு இல்லாமல், அரசின் இத்தகைய உதவிகள் மட்டுமே அந்த சிறுவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த முதல்வர் அகிலேஷ் யாதவ், "பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் அவர்களை சுடுகாட்டில் இருந்து அரசு விருந்தினர் மாளிகைக்கு உடனடியாக மாற்றும்படி உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger