Tuesday 24 September 2013

‘ஆரம்பம்’ அஜித் பஞ்ச் aarambam ajith punch dialogue

- 0 comments

இதாங்க, 'ஆரம்பம்' படத்துல தல பேசுற பஞ்ச்
by abtamil

Tamil newsYesterday,

பொதுவாக பஞ்ச் டயலாக் பேசினால் தான் ஹீரோ என்ற காலநிலை சிலகாலங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் நிலவியது. சில ஹீரோக்கள் படம் முழுவதும் பஞ்ச் பேசி ரசிகர்களைக் கொடுமைப் படுத்திய படங்களும் உண்டு. ஆனால், ரசிகர்கள் பஞ்ச் டயலாக்கை கலாய்க்க ஆரம்பித்த பின்னர், அந்த டிரண்ட் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஆனாலும், இன்றும் கூட சில நடிகர்களின் படங்களில் ஒரு பஞ்ச் டயலாக்காவது வைத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அதனை ரசிகர்கள் ரசிக்கவும், ஆதரிக்கவும் செய்கின்றனர். அந்த வகையில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீசாக உள்ள ஆரம்பம் படத்தில் அஜீத் பேசும் பஞ்ச் டயலாக் வெளியாகியுள்ளது
.
நல்லவனுக்கு நல்லவன்… இதற்கு முன்பு அஜீத் நடிப்பில் வெளியான 'மங்காத்தா'வில் 'நானும் எவ்வளவு நாளைக்குதான் நல்லவனா இருக்கிறது' என பஞ்ச் பேசினார் தல

தலயின் எதிரி…. 'பில்லா 2′-வில் 'எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்' என பஞ்ச் பேசி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார் அஜீத்.

தலயின் எதிரி…. 'பில்லா 2′-வில் 'எனக்கு எதிரியா இருக்கறதுக்கு தகுதி வேணும்' என பஞ்ச் பேசி ரசிகர்களின் கைத்தட்டலை அள்ளினார் அஜீத்

தல போல வருமா…. இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. ஏற்கெனவே படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது அஜீத்தின் பஞ்ச் டயலாக் வெளியாகியுள்ளது
.

அது….! அதில், 'சாவுக்கு பயந்தவன் தினம் தினம் சாவான், பயப்படாதவன் ஒரு தடவைதான் சாவான்' என அஜீத் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார்.

.

Show commentsOpen link

[Continue reading...]

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா மீதான இலாகாபூர்வ விசாரணை ரத்து IAS officer Durga Inquiry revoked by UP govt

- 0 comments

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா மீதான இலாகாபூர்வ விசாரணை ரத்து IAS officer Durga Inquiry revoked by UP govt
Tamil NewsYesterday

லக்னோ, செப். 25-

உத்தரபிரதேச மாநிலம் கவுதமபுத்தா நகர் மாவட்ட உதவி கலெக்டராக பணியாற்றும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால் மணல் கடத்தும் கும்பல் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் மசூதியின் சுற்றுச்சுவரை இடித்து, கலவரம் உருவாக காரணமாக இருந்ததாக கூறி அவரை உத்தரபிரதேச அரசு கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கைக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடு முழுவதும் பரபரப்புக்கு உள்ளாகியது. இந்த நிலையில் துர்கா நாக்பால் மீண்டும் கடந்த 22-ந் தேதி அன்று பணி அமர்த்தப்பட்டார். இதை அடுத்து அவர் தனது கணவருடன், முதல்மந்திரி அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் துர்கா நாக்பால் மீதான இலாகா பூர்வ விசாரணையை முடித்துக் கொள்வதாக உத்தரபிரதேச அரசு நேற்று அறிவித்தது. இத்துடன் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

...
Show commentsOpen link

[Continue reading...]

சொல்வதெல்லாம் உண்மை. நடிகை லெட்சுமியின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர் sollvathellam unmai nadigai lakshmi ramakrishnan love story

- 0 comments

சொல்வதெல்லாம் உண்மை. நடிகையின் கள்ளத்தொடர்பால் விவாகரத்து வரை செல்லும் கணவர்.
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsToday,
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குடும்ப கட்டப்பஞ்சாயத்து நடத்தும் சாந்தமயமான நடிகையின் வீட்டில் புயல் வீசுவதாக கூறப்படுகிறது. நடிகைக்கும், பிரபல குணசித்திர நடிகரும், தயாரிப்பாளருமான ஜெயமானவருடன் நடிகை அடிக்கடி தொடர்பில் இருப்பது சில நாட்களாக ஊடகங்களில் செய்தியாக வெளிவந்து கொண்டிருந்தது. முதலில் இதை நம்ப மறுத்த நடிகையின் கணவர், பின்னர் அவருடைய நடத்தையில் சிறிது சந்தேகம் கொண்டதாக தெரிகிறது.

சென்னை அண்ணா சாலையில் இயங்கும் பிரபல துப்பறியும் நிறுவனத்திடம் நடிகையின் கணவர் இதுகுறித்து ரகசியமாக விசாரிக்க சொன்னாராம். அவர்களும் நடிகைக்கு தெரியாமல் பின் தொடர்ந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிட்டியுள்ளதாக தெரிகிறது. இந்த கள்ளத்தொடர்பால் வெறுத்துப்போன நடிகையின் கணவர், நடிகையை நேரில் கண்டித்துள்ளார். இவையெல்லாவற்றையும் முதலில் மறுத்த நடிகை, பின்னர் ஒரு கட்டத்தில் கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமல், ஆமாம், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது உண்மைதான், இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளாராம். இதனால் மனம் வெறுத்த போன நடிகையின் கணவர், நடிகையை விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் கோடம்பாக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

Show commentsOpen link

[Continue reading...]

நரேந்திர மோடி வருகை சென்னையில் கல்லூரி, பூங்காக்களில் ஆன்லைனில் பெயர் பதிவு narendra modi visit chennai college park online name register

- 0 comments

நரேந்திர மோடி வருகை சென்னையில் கல்லூரி, பூங்காக்களில் ஆன்லைனில் பெயர் பதிவு narendra modi visit chennai college park online name register
Tamil NewsToday, 05:30

சென்னை, செப். 24–

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை மறுநாள் (வியாழன்) திருச்சி வருகிறார். அங்கு பொன்மலையில் நடை பெறும் பிரமாண்டமான கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக 130–க்கு 40 அடி அகலத்தில் செங்கோட்டை வடிவில் பிரமாண்ட மான மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடை சுற்றிலும் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

கூட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

மாநில முழுவதிலும் இருந்து விண்ணப்பம் மற்றும் ஆன்–லைன் மூலம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் பூங்காக்கள், மெரீனா கடற்கரையில் நடை பயிற்சிக்கு வருபவர்களிடம் திருச்சி மாநாட்டுக்கு வரும்படி அழைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். கையில் லேப்–டாப்பும் வைத்து இருக்கிறார்கள். மாநாட்டுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு உடனடியாக பெயர் பதிவு செய்யப்பட்டது.

இதே போல் கல்லூரி வாசல்களிலும் லேப்–டாப்புடன் நின்றபடி மாநாட்டுக்கு வரவிருப்பம் தெரிவித்த மாணவர்களின் பெயர்கள் ஆன்–லைனில் பதிவு செய்யப்பட்டது.

கே.கே.நகர் சிவன் பூங்காவில் இன்று காலையில் தென்சென்னை மாவட்டம் சார்பில் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் காளிதாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர், இளைஞர் அணி தலைவர் அலங்காரமுத்து, பொது செயலாளர் பிரேம் ஆனந்த், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger