Tuesday 23 July 2013

9 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்த தோழியின் தந்தை

- 0 comments
அரியானா மாநிலம், குர்கான் 31வது செக்டர் பகுதியில் வசிக்கும் 9 வயது மாணவி தனது பள்ளித் தோழியை சந்திக்க கடந்த திங்கட்கிழமை அவளது வீடு தேடி சென்றாள்.

வீட்டில் அந்த மாணவியின் தந்தை மட்டும் தனியே இருந்தார்.

உன் தோழி கடைக்கு போய் இருக்கிறாள். அவள் வரும் வரை உள்ளே வந்து உட்கார் என்று கூறிய அவர் சிறுமி உள்ளே நுழைந்ததும் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.

அவரது பிடியில் இருந்து விடுபட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்ற சிறுமி, நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதாள்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பரிசோதனை முடிவில் அவள் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதால் குற்றம் சாட்டப்பட்ட செடிலால் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
[Continue reading...]

முத்துநகரில் ஒரு முத்துக்குமார்

- 0 comments

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முத்துநகர்
எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திங்கள்(22-07-2013)
காலை 7.30 மணிக்கு வந்தது. பயணிகள்
அனைவரும் இறங்கி சென்ற பின்னர்,
ஒரே ஒரு சிறுவன் மட்டும்
தனியே நின்று கொண்டிருந்தான். இதனைப்
பார்த்த ரயில்வே போலீஸ் ஏட்டுகள்
அசோக்குமார், சித்திரையப்பன் ஆகியோர்
சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த சிறுவன் முன்னுக்குப்பின் முரணான
தகவல்களை தெரிவித்தான். இதையடுத்து சப்
இன்ஸ்பெக்டர் ஜாண் பீட்டர் மேத்யூவிடம்
சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். அவர்
சிறுவனிடம் நடத்திய விசாரணையில், அந்த
சிறுவனின் பெயர் முத்துக்குமார் (எ)
முத்து சாமி (8), தகப்பனார் பெயர்
உண்ணிகிருஷ்ணன், தாயார் பெயர்
சரஸ்வதி என்றும், தனக்கு 2 தங்கைகள்
உள்ளதாகவும் கூறியுள்ளான்.
மேலும், தனது தயார் வீட்டில்
வைத்து தன்னை சூடுபோட வந்தபோது,
வீட்டிலிருந்து 100 ருபாய்
பணத்தை எடுத்துக்கொண்டு அவரிடம்
இருந்து தப்பித்து பஸ்
ஏறி திருநெல்வேலி சென்றேன்.
அங்கிருந்து ரயிலில் மதுரை சென்றேன்.
மதுரையில் பணம் முழுவதும் காலியானதும்
ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்தேன்.
அப்போது அங்கு ஒருவர்
எனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து முத்துநகர்
ரயிலில் ஏற்றிவிட்டார் என்று கூறியுள்ளான்.
ஆனால், இவ்வளவு விவரங்கள் கூறும் அந்த
சிறுவனால் தனது முகவரியை மட்டும்
கூறத்தெரியவிலலை.
தனது வீடு தூத்துக்குடியில் தான்
உள்ளது எனவும், வீட்டருகே நிறைய லாரிகள்
நிற்கும் என்று கூறியுள்ளான். அந்த சிறுவன்
சைல்டு லைன் பாதுகாவலர் காசிராஜனிடம்
ஒப்படைக்கப்பட்டான். அவர்
சிறுவனை முத்துக்குவியல் காப்பகத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளார். # நண்பர்கள்
இதை ஷேர் செய்து சிறுவன்
பெற்றோரை சென்றடைய செய்ய உதவலாமே!

[Continue reading...]

திருமணம் 4 முறை தடை ஏற்பட்டதால் தூக்கில் தொங்கிய வாலிபர்

- 0 comments
4 முறை நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனதால் மனம் உடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லிவாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு டெல்லி கஜூரி காஸ் பகுதியை சேர்ந்தவர் அதீக் அகமது (22). வாலிபத்தின் வசந்த காலத்தில் நிற்கும் மகனுக்கு விரைவாக திருமணம் செய்து வைக்க விரும்பிய பெற்றோர் பெண் தேட தொடங்கினர்.

கடந்த ஓராண்டு காலத்தில் 3 முறை பெண் பார்க்கும் படலங்கள் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தும், 3 தடவையும் கடைசி நேரத்தில் அவரது திருமணம் தடைபட்டு நின்றது.

இந்நிலையில், கடந்த வாரம் அதீக் அகமதுவுக்கு மற்றொரு பெண் பார்த்தனர். இந்த முறையும் திருமண தேதி முடிவாகாமல், புதுமண முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால், மனம் உடைந்த அதீக் அகமது நேற்று அதிகாலை தனது படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு பிணமாக தொங்கினார்.

பிணத்தை கைப்பற்றிய போலீசார், அந்த அறையில் தற்கொலை தொடர்பான கடிதம் ஏதும் கிடைக்காததால் குடும்பத்தாரிடம் விசாரித்து வருகின்றனர்.
[Continue reading...]

நடிகை மஞ்சுளா திடீர் மரணம் Cini actress Manjula death

- 0 comments
நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா சென்னையை அடுத்த ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். அவர் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கட்டிலில் இருந்து நேற்று இரவு கீழே விழுந்தார். அப்போது கட்டில் கால் அவருடைய வயிற்றில் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது (59).
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger