Tuesday 10 September 2013

சேலையூரில் பள்ளி மாணவியிடம் சப்–இன்ஸ்பெக்டர் பாலியல் பலாத்கார முயற்சி try to school student molested sub inspector police investigation

- 0 comments
தாம்பரத்தை அடுத்த சேலையூர் பவானி நகரை சேர்ந்தவர் ராஜாராம் கூலி தொழிலாளி. பா.ஜனதா தொண்டர். இவரது மகள் ஷோபா (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார்.
இதே தெருவில் குடியிருப்பவர் கிளமென்ட்ராஜ் (30). இவர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை மாணவி ஷோபா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ‘‘நீ கேட்ட புத்தகம் என்னிடம் இருக்கிறது. வீட்டுக்கு வா’’ என்று கிளமென்ட்ராஜ் அழைத்துள்ளார்.

[Continue reading...]

வேடசந்தூர் அருகே பள்ளி மாணவி எலும்பு கூடு vedasandur near school student skeleton police investigation to Mother Father

- 0 comments
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள பாலப்பட்டி கிராமம் புது அழகாபுரியை சேர்ந்த நாச்சிமுத்து மகள் நித்யா (16). இவர் இதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி மாலை தான் அணிந்திருந்த தங்க மோதிரம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை வீட்டில் கழற்றி வைத்து விட்டு கையில் டார்ச் லைட் மட்டும் எடுத்துக்கெண்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
[Continue reading...]

ஏழைகளுக்கு உணவு வழங்குவதால் பணம் வீணாகாது: ராகுல் காந்தி பேச்சு Rahul says providing food to poor is not wastage of money

- 0 comments

ஏழைகளுக்கு உணவு வழங்குவதால்
பணம் வீணாகாது: ராகுல்
காந்தி பேச்சு Rahul says providing food to
poor is not wastage of money

புதுடெல்லி, செப். 10-
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்
காந்தி பேசியதாவது:-
நாட்டில் உள்ள ஏழைகளின் பசியைப்
போக்கும் நோக்கத்துடன்
உணவு பாதுகாப்பு சட்டம்
கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த
சட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள்
வழங்குவதால் அரசுப் பணம்
வீணாகிறது என்று எதிர்க்கட்சி கூறுகிறது.
ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்கு செலவு செய்வதால்,
பொருளாதார வளம்
விரயமாகிறது என்று கூற
முடியாது. நாட்டில் உள்ள ஏழைகள்
தங்கள் சொந்தக் கால்களில் நிற்க
வேண்டும் என்று நாங்கள்
விரும்புகிறோம்.
நாங்கள்
மக்களுக்கு உரிமைகளை வழங்கிக்
கொண்டிருக்கிறோம். உரிமைகள்
என்பது வளர்ச்சிக்கான உத்தரவாதம்.
உணவு பாதுகாப்பு சட்டம்
அமல்படுத்தப்பட்ட பிறகு, நாட்டில்
ஒருவரும் பசியுடன் இருக்க
மாட்டார்கள்.
உணவு பாதுகாப்பு சட்டம், தகவல்
அறியும் உரிமைச் சட்டம்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக
வேலை உறுதியளிப்பு சட்டம்
போன்று கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற
வளர்ச்சித்
திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.
மக்களின்
உரிமையை உறுதி செய்வதே இந்த
சட்டங்களின் நோக்கமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

[Continue reading...]

டெல்லி மாணவி கற்பழித்து கொலை: தண்டனை நாளை அறிவிப்பு Delhi student murder case Tomorrow sentence announced

- 0 comments

டெல்லி மாணவி கற்பழித்து கொலை:
தண்டனை நாளை அறிவிப்பு Delhi student
murder case Tomorrow sentence announced

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர்
மாதம் 16–ந்தேதி ஓடும் பஸ்சில் 23
வயது மருத்து மாணவியை 6
வாலிபர்கள் மிகக் கொடூரமாக
தாக்கி கற்பழித்தது உலகம் முழுவதும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
படுகாயம் அடைந்த அந்த
மாணவி டெல்லி சப்தர்ஜங்
மருத்துவமனையில் 10 நாட்கள்
உயிருக்குப் போராடினார்.
பிறகு மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர்
ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட
அந்த மாணவி டிசம்பர் 29–ந்தேதி மரணம்
அடைந்தார்.
மருத்துவ
மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம்
நாடெங்கும் மக்களிடம் குறிப்பாக
பெண்களிடம் கடும்
கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து டெல்லி போலீசார்
அதிரடி வேட்டை நடத்தி குற்றவாளிகளான
ராம்சிங், வினய், அக்ஷய், முகேஷ், பவன்
மற்றும் மைனர் சிறுவன் ஆகிய 6
பேரை கைது செய்தனர்.
மைனர் சிறுவன் மீதான வழக்கு சிறார்
நீதிமன்றத்தில் நடந்தது. மற்ற 5
வாலிபர்களும் விரைவு நீதிமன்றத்தில்
விசாரிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் முக்கிய
குற்றவாளியான பஸ் டிரைவர் ராம்சிங்
கடந்த மார்ச் மாதம் 11–
ந்தேதி டெல்லி திகார் ஜெயிலில்
உள்ள தன் அறைக்குள் தூக்குப்
போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
இதனால் மற்ற 4 வாலிபர்கள் மீதான
குற்றச்சாட்டுக்களை விரைவு கோர்ட்டு நடத்தி வந்தது.
இதற்கிடையே மைனர் சிறுவன் மீதான
விசாரணை கடந்த மாதம் முடிந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 31–
ந்தேதி மைனர் சிறுவனுக்கு 3
ஆண்டு தண்டனை விதித்து சிறார்
நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மைனர் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட
தண்டனை போதாது என்ற
உணர்வு மக்களிடம் நிலவி வரும்
நிலையில் மற்ற 4 வாலிபர்களுக்கும்
எத்தகைய தண்டனை அளிக்கப்படும் என்ற
எதிர்பார்ப்பு நாடெங்கும்
ஏற்பட்டது கடந்த பிப்ரவரி மாதம் 2–
ந்தேதி தொடங்கிய அவர்கள் மீதான
வழக்கு விசாரணை கடந்த 3–
ந்தேதி முடிந்தது.
மாணவியை மீட்ட போலீஸ்காரர்கள்,
சிகிச்சை அளித்த டாக்டர்கள்,
மாணவியின் நண்பர்கள் என 84 பேர்
சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு பப்ளிக்
பிராசிக்யூட்டர் தயான் கிருஷணன்
இறுதி நாள் வாதாடுகையில், 4
வாலிபர்களும் குற்றம் செய்ததற்கான
ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளேன்.
அது நிரூபிக்கப்பட்டும் உள்ளது.
எனவே 4 குற்றவாளி களுக்கும்
அதிகபட்ச தண்டனையாக மரண
தண்டனை விதிக்கக் கேட்டுக்
கொள்கிறேன் என்றார்.
4 வாலிபர்கள் மீதும் கும்பலாக
கற்பழித்தல், கொலை, கடத்தல்,
இயற்கைக்கு மாறாக குற்றம் புரிதல்,
கொலை முயற்சி, கொள்ளை,
ஆதாரங்களை அழித்தல், சதி திட்டம்
என்பன போன்ற 13 பிரிவுகளில்
வழக்குகள் பதிவாகி இருந்தன. இந்த 13
குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்டது.
கடந்த 3–ந்தேதி சாட்சிகள்
விசாரணை உள்பட
எல்லா விசாரணைகளும் முடிந்ததும்
தீர்ப்பை விரைவு கோர்ட்டு நீதிபதி ஒத்தி வைத்திருந்தார்.
இன்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும்
என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4
பேரையும் குற்றவாளிகள்
என்று அறிவித்த நீதிபதி,
தண்டனை விவரத்தை நாளை வெளியிடுவதாக
அறிவித்தார்.
இன்று கோர்ட்டுக்கு வந்திருந்த
மாணவியின் தாயும், தந்தையும் 4
குற்றவாளிகளையும் தூக்கில் போட
வேண்டும் என்று கண்ணீர் மல்க
கூறினார்கள்.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger