Saturday 14 June 2014

தூள் பட வில்லி சொர்ணாக்கா மரணம் dhool movie willy swarnakka death

- 0 comments

தூள் பட வில்லி சொர்ணாக்கா மரணம் dhool movie willy swarnakka death

பிரபல வில்லி நடிகை சகுந்தலா திடீர் மரணம் அடைந்தார் அவருக்கு வயது 63. தமிழில் விக்ரமின் 'தூள்' படத்தில் சகுந்தலா வில்லியாக நடித்தார். இதில் சொர்ணாக்கா என்ற கேரக்டரில் அவர் வந்தார். அடியாட்களுடன் அப்பாவிகளை கொன்று வீசும் குரூர வில்லியாக தோன்றினார். இந்த வேடம் பரபரப்பாக பேசப்பட்டது.

ரவுடி பெண்களை பிற படங்களில் சொர்ணாக்கா என பேசும் அளவுக்கு இந்த கேரக்டர் வலுவாக அமைந்தது. விஜய்யின் சிவகாசி படத்தில் பிரகாஷ்ராஜ் மாமியாராக வந்தார். மருமகனை எம்.எல்.ஏ. வாக்க இவர் செய்யும் அடாவடி வில்லத்தனங்கள் ரசிகர்களை கவர்ந்தது. தெலுங்கில் முன்னணி நடிகையா இருந்தார். அங்கு இவரை தெலுங்கானா சகுந்தலா என்று அழைத்தனர்.

1981–ல் 'மா பூமி' என்ற படத்தில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தார். 2003–ல் வெளியான 'ஒக்கடு' தெலுங்கு படம் சகுந்தலாவை முன்னணி நடிகையாக்கியது. தொடர்ந்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடன் வில்லி, காமெடி, மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சகுந்தலா பேசும் 'பஞ்ச்' வசனங்கள் பிரபலமானவை இதுவே அவரை பெரிய நடிகையாக்கியது.

தெலுங்கு ரசிகர்கள் சகுந்தலாவை அடுத்த சூர்யகாந்தம் என்று அழைத்தனர். ஐதராபாத்தில் உள்ள கொம்பள்ளி பகுதியில் உள்ள வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார். நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார்.

சகுந்தலா உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
...

[Continue reading...]

பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம்: சிறுமியை கற்பழித்தவன் கைது

- 0 comments

பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம்: சிறுமியை கற்பழித்தவன் கைது pollachi girl molested criminal arrested

 

பொள்ளாச்சி, ஜூன். 14–

பொள்ளாச்சி பழைய பஸ் நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் உள்ளது. இதன் அருகே ஆதரவற்ற மாணவமாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு 17 மாணவர்கள், 3 மாணவிகள் தங்கியிருந்தனர்.

கடந்த 11–ந் தேதி இரவு இந்த விடுதிக்குள் மர்ம மனிதர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த 10 வயது மற்றும் 11 வயது மாணவிகள் 2 பேரை கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் அவர்களை விடுதி வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு தூக்கிச்சென்று கற்பழித்தனர்.

அந்த மாணவிகள் இருவரும் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் கற்பழிக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

பல்வேறு சமூக அமைப்புகளும் இந்த கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. குற்றவாளிகளை உடனே கைது செய்யுமாறு முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். முதல் கட்டமாக விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது.

மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினார்கள்.

பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடையவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொள்ளாச்சி சி.டி.சி. மேடு பகுதியை சேர்ந்த கோபிநாத் (27) என்பவனை பிடித்து விசாரித்தனர்.

அவன் கொடுத்த தகவலின் பேரில் வால்பாறையை சேர்ந்த வீராசாமி (23)யும், அவனது நண்பனும் விடுதிக்கு சென்று மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

வீராசாமியின் போட்டோவை கோபிநாத்திடம் இருந்து பெற்ற போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் 10 வயது மாணவியிடம் போட்டோவை காட்டி விசாரித்த போது தன்னை சீரழித்தவன் இவன் தான் என்று அந்த மாணவி அடையாளம் காட்டினாள்.

இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த அரவிந்த் (25), அருண் வெங்கடேஷ் (23), ஹரி (22) ஆகியோர் மீதும் தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

பின்னர் அவர்கள் 3 பேருடன் கோபிநாத்தையும் சேர்த்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் 4 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

இந்த நிலையில் உடுமலை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சென்று கொண்டிருந்த ஒருவனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவன் தான் பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த 10 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வீராசாமி என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவனை பொள்ளாச்சி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவனை கைது செய்தனர். பின்னர் அவனை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமி முன்பு நிறுத்தினர். அந்த சிறுமியும் 'இவன் தான் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான்' என்று அடையாளம் காட்டினாள். இதைத்தொடர்ந்து வீராசாமிக்கு ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் ஆனைமலை, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலையங்களில் வீராசாமியிடம் விசாரணை நடைபெற்றது. ஐ.ஜி. டேவிட்சன் தேவாசீர்வாதம், சூப்பிரண்டு சுதாகர் ஆகியோர் முன்னிலையிலேயே இந்த விசாரணை நடந்தது. மேலும் தகவல் பெற வேண்டியதுள்ளதால் வீராசாமியை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள்.

...

 

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger