Thursday 1 September 2011

தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இன்று பத���ியேற்பு

- 0 comments


தமிழக ஆளுநராக கே.ரோசய்யா இன்று பதவியேற்புதமிழகத்தின் ஆளுநராக ரோசய்யா இன்று (புதன்கிழமை) பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநராக பதவி ஏற்றுக் மேலும்படிக்க

http://tamil-smsworld.blogspot.com




  • http://tamil-smsworld.blogspot.com


  • [Continue reading...]

    தினபலன் - 31-08-11

    - 0 comments


    மேஷம்:
    சிலரின் விமர்சனங்கள், ஏச்சு, பேச்சுக்களுக்கு ஆளாகலாம். உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்னை ஒன்றை நீங்கள் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள். அரசியல்வாதிகள் நீண்ட தூரப் பயணங்கள் செல்லலாம். சக ஊழியர்களுக்காக வாங்கிக் கொடுத்த கடன் மேலும்படிக்க

    http://tamil-smsworld.blogspot.com




  • http://tamil-smsworld.blogspot.com


  • [Continue reading...]

    பட்டர் சிக்கன்

    - 0 comments


    பட்டர் சிக்கன்தேவையான பொருள்கள் :

    சிக்கன் -அரை கிலோ
    பெரிய வெங்காயம் மேலும்படிக்க

    http://tamil-smsworld.blogspot.com




  • http://tamil-smsworld.blogspot.com


  • [Continue reading...]

    "மாற்றான்" படத்திலிருந்து பிரகாஷ��ராஜ் நீக்கம்

    - 0 comments


    மாற்றான் படத்திலிருந்து பிரகாஷ்ராஜ் நீக்கம்சூர்யா நடிக்கும் "மாற்றான்" படத்தில் பிரகாஷ்ராஜ் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கே.வி. ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடக்கிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரகாஷ் ராஜ் நடிக்கும் காட்சிகள் மேலும்படிக்க

    http://tamil-smsworld.blogspot.com




  • http://tamil-smsworld.blogspot.com


  • [Continue reading...]

    முன்னாள் அமைச்ச��் பொன்முடி கைது

    - 0 comments


    முன்னாள் அமைச்சர் பொன்முடி கைதுசிகா கல்வி அறக்கட்டளைக்கு தந்தை பெரியார் கூட்டுறவு நலச்சங்க இடத்தை மிரட்டி வாங்கியதாக கூறப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார்.

    விழுப்புரம் அடுத்த பெரியார் நகரில், தந்தை பெரியார் அரசு போக்குவரத்துக் கழக மேலும்படிக்க

    http://tamil-smsworld.blogspot.com




  • http://tamil-smsworld.blogspot.com


  • [Continue reading...]

    தமிழகத்தின் புத��ய ஆளுநராக ரோசய்யா பதவி ஏற்றார்

    - 0 comments


    தமிழகத்தின் புதிய ஆளுநராக ரோசய்யா பதவி ஏற்றார்தமிழகத்தின் புதிய ஆளுநராக ரோசய்யா நேற்று பதவி ஏற்றார். முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    தமிழக ஆளுநராக இருந்த சுர்ஜித்சிங் பர்னாலாவின் பதவிக் மேலும்படிக்க

    http://tamil-smsworld.blogspot.com




  • http://tamil-smsworld.blogspot.com


  • [Continue reading...]

    தங்கம் விலை மீண்���ும் ரூ.21 ஆயிரத்த�� தொடுகிறது

    - 0 comments


    தங்கம் விலை மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொடுகிறதுதங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.448 அதிகரித்து, ஓரு பவுன் ரூ.20,640-க்கு விற்பனையானது. மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. சென்ற மேலும்படிக்க

    http://tamil-smsworld.blogspot.com




  • http://tamil-smsworld.blogspot.com


  • [Continue reading...]

    சாம்பார் பற்றிய ���கவல்!

    - 0 comments


    சாம்பார் என்றதும் நம் நினைவுக்கு வருவது,இரண்டு செய்திகள்.

    ஒன்று தமிழ்நாட்டின் முக்கிய உணவான சாம்பார்.

    மற்றொன்று ஜெமினி கணேசன்!

    அவர் ஏன் சாம்பார் என்றழைக்கப்பட்டார் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது.

    இப்பதிவு ஜெமினி கணேசன் பற்றியதல்ல.
    உண்மையான அசல் சாம்பார் பற்றியது.

    நானூறு ஆண்டுகளுக்கு முன்தான் மிளகாய் என்பது இந்தியாவுக்கு அறிமுகமாயிற்று. தக்காளி,உருளைக் கிழங்கு,வெங்காயம் ஆகியவையும், வெள்ளையர்களால் இங்கு கொண்டு வரப் பட்டவையே!

    எனவே நியாயமாக நமக்கு உடன் எழும் சந்தேகம்"அதற்கு முன் தமிழ்நாட்டில் சாம்பார் எப்படித்தயாரிக்கப் பட்டது?வடநாட்டில்,தக்காளியும்,வெங்காயமும் இல்லாமல் சப்பாத்திக்குப் பக்க வாத்தியமான சப்ஜிகள் எப்படிச் செய்தார்கள்?"

    ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்பே,தென்னாட்டில் புளி பயன்படுத்தப்பட்டது. அப்போதும் அவர்கள் குழம்பு செய்திருக்க வேண்டும்.ஆனால் மிளகாய் இல்லாததால் மிளகு உபயோகப் படுத்தப் பட்டிருக்க வேண்டும்.கேரளாவின் மிளகூட்டலும், தமிழகத்தின் பொரித்த குழம்பும், புளி,மிளகாய் இல்லாமல்,மிளகு,சீரகம் மட்டும் கொண்டு தயாரிக்கப் படுபவையே.


    இந்த சாம்பார் என்பது எப்போது எப்படி வந்தது?

    இது பற்றிய ஒரு தகவல்--
    "தஞ்சை மண் முன்பு மராத்தியர்களால் ஆளப்பட்டது.அவர்களில் ஒரு அரசனான, சம்போஜி சமையலில் வித்தகர்(பீமன்,நளன் போல்!)

    ஒரு நாள் அவர் தனது பிரிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.ஆம்தி என்று அழைக்கப்படும் குழம்பு போன்ற ஒரு பதார்த்தம்.புளிக்குப் பதிலாக 'கொகும் ' என ஒரு பொருளை-மராத்தா பகுதியில் கிடைப்பது- உபயோகிப்பார்கள்.ஆனால் அன்று மராத்தாவிலிருந்து கொகும் வந்து சேரவில்லை .அதை எப்படி ராஜாவிடம் சொல்வது என எல்லோரும் பயந்து கொண்டிருந்தனர்.ராஜாவின் விதூஷகர் அவரிடம் அங்கு புளி என்று ஒன்று கிடைக்கும் அதை உபயோகிக்கலாம் என்று சொல்ல,அன்று சம்போஜி, துவரம் பருப்பு,காய்கள்,மிளகாய் ,புளி உபயோகித்துச் செய்த குழம்பு எல்லோருக்கும் மிகவும் பிடித்து விட்டது.சம்போஜி செய்த அந்த உணவுதான் சாம்பார் எனப் பின்னாளில் வழங்கப்பட்டது!

    வெங்காய சாம்பார் என்றாலே நாக்கில் நீர் ஊறும்!

    அதைச் சுவையாகச் செய்வதெப்படி?

    இதோ திருமதி ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் செய்முறை---

    தேவையான பொருள்கள்:
    சின்ன வெங்காயம் – 25
    புளி – சிறிய எலுமிச்சை அளவு
    தக்காளி – 2
    துவரம் பருப்பு – 1/2 கப்
    சாம்பார்ப் பொடி - 1 1/2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் – 1
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு
    மசாலா அரைக்க:
    சின்ன வெங்காயம் – 6
    தனியா – 1 டீஸ்பூன்
    தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித் தழை - சிறிது
    தாளிக்க:
    எண்ணை, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை
    செய்முறை:
    • துவரம்பருப்பை வேக வைத்துக் கொள்ள்வும்.
    • புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
    • மசாலா சாமான்களை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
    • வாணலியில் எண்ணையச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அத்துடன் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை வதக்கிக் கொள்ள வேண்டும்.
    • வெங்காயம் வதங்கியதும், தக்காளித் துண்டுகள், புளிக் கரைசல், உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்ப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
    • கொதிக்கத் தொடங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும்.
    • இறுதியில் வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
    • இந்தச் சாம்பாருக்கு மணத்தையும் சுவையையும் தருவதில் மசாலாவில் அரைத்துவிடும் சின்னவெங்காயம், கொத்தமல்லித் தழையின் பங்குதான் மிக முக்கியமானது. ஹோட்டல் சாம்பாரின் சுவையை அதுவே தருகிறது. எனவே சாம்பாருக்கு சின்ன வெங்காயம் உரிக்க நேரமில்லாவிட்டாலும், அதற்குப் பதில் பெரிய வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில அரிந்துபோட்டு, மசாலாவிற்கு மட்டும் 4,5 சின்ன வெங்காயம் உபயோகித்தாலே ஓரளவு சுவையைக் கொண்டுவந்து விடலாம்.

    நன்றி ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்!

    சாம்பார் மணக்கிறதா?!




    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    உடன் பிறப்பே!உனக���கொரு சோதனை!

    - 0 comments


    உடன் பிறப்பே!

    உனக்காக நான் வருந்திடுகிறேன்.

    எத்தகைய சோதனையை நீ எதிர்கொள்ளப்போகிறாய் என்பதை அறிந்திடுவாயா?

    திருடனுக்குத் தேள் கொட்டியது போல் என்பார்கள்!அவனால் கத்திட முடிந்திடுமா?கதறிட முடிந்திடுமா?அழுதிடத்தான் முடிந்திடுமா?

    பொறுத்துக் கொண்டிடத்தான் வேண்டும்.

    அது போல்தான் உன் நிலை!

    நாளை முதல் ஒரு வாரம் தினம் ஒரு பதிவென்று உன்னை நான் தாக்கினால்,என்ன செய்திட முடியும்?

    படித்திடுவாய்!

    பொறுத்துக் கொள்வாய்.

    வாக்களிப்பாய்!

    கருத்துச் சொல்வாய்!

    ஆம். ஏனென்றால்,

    நீ என் உடன் பிறப்பாயிற்றே!

    விட்டுக் கொடுத்திடுவாயா? அதுதானே நம் பண்பு,பாடம் ,பகுத்தறிவு!

    வா உடன் பிறப்பே!பள்ளத்தில் பாய்ந்து வரும் வெள்ளம் போல் வா!

    நன்றி!




    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    கடவுள் கேட்கும் ���ரம்!....கவிதை

    - 0 comments


    இந்த வார நட்சத்திரமாக விளங்க அழைத்து எனக்கும் ஒரு அங்கீகாரமும் , கௌரவமும் அளித்த தமிழ்மணத்துக்கு முதற்கண் என் நன்றி!
    .............................
    எதையுமே கடவுள் வாழ்த்துடன் தொடங்குவதுதானே மரபு!இதோ--

    "பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
    நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
    துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
    சங்கத் தமிழ்மூன்றுந் தா !"

    நான் கேட்டுவிட்டேன்,கடவுள் என்ன சொல்கிறார்?!-----இதோ

    உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
    எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?

    பண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்
    உண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்

    பிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்
    பிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்

    கண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்
    எண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.

    கோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று
    ஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.

    உண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்
    கொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.

    திருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்
    தினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்

    பட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்
    பலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்


    நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
    எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று

    இன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா
    என் விருப்பம் என்னவென்று நீ அறிய.

    நான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல!

    படைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு
    உடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.

    குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
    குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.

    எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
    கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.

    கட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ
    கட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.

    திருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே
    திக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை!

    என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
    இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா!


    டிஸ்கி--(இந்தக் கவிதைக்கான விதை பல ஆண்டுகளுக்கு முன் விழுந்தது.அப்போது கரூரில் இருந்தோம்.ஒரு நாள் அம்மன் கோவில் சென்று திரும்பியவுடன் என் தாயார்(தற்போது வயது 93) சொன்னார்கள்."குடம் குடமாப் பாலபிஷேகம் பண்ணினா.அப்ப எனக்குத் தோணித்து இப்படிப் பாலெல்லாம் வீணாப்போறதே.இதுக்குப் பதிலா யாராவது பசித்த ஏழைக் குழந்தைகளுக்குக் குடுக்கக் கூடாதான்னு.உடனே சந்நிதியில் நின்னு இப்படி யோசிக்கறது தப்புன்னு அம்மன் கிட்ட மன்னிப்பும் கேட்டுண்டேன்"

    நான் சொன்னேன் "தவறில்லை.உன்னை அப்படி யோசிக்க வைத்ததே அந்த அம்மன்தானே!")



    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    எழுத்தறிவித்தவன் ---சிறுகதை--

    - 0 comments


    ராமசாமி இறந்து போய் விட்டார்!

    பெரிய செல்வந்தர்.எனவே வீட்டின் உள்ளும்,வெளியிலும் நல்ல கூட்டம்-உறவினர்கள், குடும்ப நண்பர்கள்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் என்று.

    அவருக்கு ஒரே மகன்.அவன் அவர் பேச்சைக் கேட்காமல் வேறு மதப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவன் உறவையே வெட்டி விட்டார்.

    எனவே அவரது தம்பியே ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்டது.

    வந்திருந்தவர்கள் சின்னச்சின்னக் குழுக்களாகக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

    அவர்கள் யாருக்கும் தெரியாது.ராமசாமியின் ஆத்மா அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்பது.

    (ஒரு சிறு பிறிது மொழிதல்(digression).சமீபத்தில் கேட்டது.ஒருவர் இறந்தவுடன் ஆன்மா நேரடியாக எமலோகம் செல்கிறதாம்.அங்கே எமதர்மன் தன் தண்டத்தை அதன் தலையில் வைக்கிறான்.உடனே அது பிறந்தது முதல் மரணம் வரை தான் வாழ்வில் செய்த புண்ணிய பாவங்களைச் சொல்லி விடுகிறது.அந்த ஆன்மாவுக்கு உலக ஆசை இன்னும் நீங்கவில்ல. எனவே எமன்அதை,ஆசை அகன்ற பின் வரச் சொல்லித் திருப்பி அனுப்பி விடுகிறான். ஆன்மா திரும்பி வருகிறது.உடலுக்குள் நுழைய முடியாது எனவே அங்கேயே அழுது கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது..நம்புகிறவர்கள் நம்பலாம்!)

    அப்படி ஒரு குழுவில் இருந்த கணேசன் தாழ்ந்த குரலில் சொன்னார்"என்னத்தைத் தலயில் கட்டிக் கொண்டு போனார்?அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கொடுக்காத மனிதன். எத்தனை முறை அநாதை ஆசிரமத்துக்கு நன்கொடை கேட்டிருப்பேன்! ஒரே ஒரு முறை பிச்சைக்காசு 100 ரூபாய் கொடுத்தான்!"

    அந்த ஆன்மா கத்தியது"பாவி !நீ ஒரு திருடன் என்பது எனக்குத் தெரியாதா? நன்கொடை வாங்கி அதை முழுவதும் ஆசிரமத்துக்கா உபயோகித்தாய்?உன் பங்களா எப்படிக் கட்டினாய்? உனக்கு ஏனடா நான் கொடுக்க வேண்டும்?"

    வேலாயுதம் சொன்னார்"ஆமாங்க!நானும் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பணம் கேட்டேன்.ஒரு பைசா தரவில்லையே.பெரிய பணக்காரர்,பக்தர்.தினமும் கோவிலுக்குப் போகிறவர் .ஆனால் கும்பாபிஷேகத்துக்குக் கொடுக்க மனமில்லை.பிரபுதான்;கஞ்சப்பிரபு!"

    ஆன்மா அலறியது"டேய்,பொம்பளைப் பொறுக்கி!நீ வசூல் பண்ணின பணத்திலிருந்து உன் ஆசை நாயகிக்கு நகை வாங்கியது எனக்குத் தெரியும் .அதுக்காகப் பொய்க்கணக்கு எழுதியவன்தானேடா நீ!"

    பொதுவான அனைவரின் கருத்தும் அவர் தருமம் செய்யாத கஞ்சர் என்பதாகவே இருந்தது!

    உடலை எடுக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

    அப்போதுதான் அவன் வந்தான்.வயது 18 இருக்கும்.சோகம் தோய்ந்த முகம். வெளியில் இருந்தவர்களைத் தாண்டி உள்ளே போனான்.பிணத்தின் முன் வணங்கினான்.கால்களைத் தொட்டுத் தன் கண்களிலொற்றிக் கொண்டான்.கண்ணீர் வடித்தான்.

    அங்கிருந்த பெரிய மனிதர்களுகுச் சந்தேகம்"யார் இவன்? ராமசாமிக்கு வேறு பெண்ணிடம் தொடர்பு இருந்ததோ? அவள் மகனோ?"

    அவன் வெளியேறும் போது அவனை நிறுத்திக் கேட்டனர்".யாரப்பா நீ?" அவன் சொன்னான்.

    "ஐயா!நான் ஓர் ஏழை.பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கையில் பணம் இன்றிக் கஷ்டப் பட்டேன். ஒரு நாள் கோவிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது இவர் அங்கு வந்து என்னை விசாரித்தார்.பின் எனக்குப் பண உதவி செய்தது மட்டுமின்றி என் மேற்படிப்புக்கு உதவித்தொகை கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.இன்று நான் படிப்பது அவர் தயவில்தான்."

    அனைவரும் திகைத்து நின்றனர்.

    அவன் சொன்னதைக் கேட்க அந்த ஆன்மா அங்கில்லை.

    அவன் அவர்பாதங்களை த்தொட்டுக் கண்ணீர் விட்ட போதே ,அந்த ஆன்மாவின் பாதங்கள் சுவர்க்கம் செல்லும் வலிமை பெற்றன.வழி திறந்தது!

    "அன்ன சத்திர மாயிரம் வைத்தல்
    ஆல யம்பதி நாயிர நாட்டல்
    பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
    பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
    அன்ன யாவினும் புண்ணியங் கோடி
    ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் "—பாரதி!






    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    ராமனின் தம்பிகள��!

    - 0 comments


    இங்கு ஒரு சிறு முன்னுரை தேவைப்படுகிறது.

    கம்பராமாயணப் பட்டி மன்றங்களில்,"சிறந்தவன் இராமனா,பரதனா" என்றோ,"வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் செய்தது சரியா" என்றோ வாதிடுவார்கள்.அவர்கள் வாதத்தில் முன்னிறுத்தப்படும் இராமன் ஒரு இலக்கியப் பாத்திரம் மட்டுமே.இந்துக்களின் கடவுள் என்ற நிலையிலிருந்து வேறு பட்ட ஒரு பார்வையே அது.அவர்கள் நோக்கம் இழிவு படுத்துவதல்ல.ஒரு இலக்கியப் பார்வை மட்டுமே.

    அது போலத்தான் இதுவும்.

    ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
    ஸஹஸ்ராம தத்துல்யம் ராமநாம வரானனே---(விஷ்ணு ஸஹஸ்ரநாமம்)

    ஸ்ரீ ராம ராம என்று மனத்துக்கு இனியவனான ராமனிடத்தில் நான் ரமிக்கின்றேன்.அந்த ராம நாமம் ஸஹஸ்ரநாமத்துக்குச் ச்மம்.
    ....................
    பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது.

    என் நண்பன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

    பேச்சு இராமாயணத்தைப் பற்றிக் குறிப்பாகக் கம்ப ராமாயணத்தை பற்றியது.

    ராமனின் பெருமைகளைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
    கம்ப ராமாயணத்தில் வரும் ஒரு பாடலைப் பற்றிச் சொன்னேன்

    "குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
    மகனொடும் அறுவர் ஆனோம்; எம் உழை அன்பின் வந்த
    அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
    புகல் அரும் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை''."

    வேடனான குகனையும்,வானரமான சுக்கிரீவனையும்,அரக்கனான வீடணனையும்
    தன் உடன் பிறப்புகளாக ஏற்றுக் கொண்ட அரசனான ராமனின் பெருந்தன்மை பற்றி,சமத்துவ மனப்பான்மை பற்றி உயர்வாக நான் சொல்லிக் கொண்டிருந்தேன். அரசர் குலத்தோன்றலாக இருந்தும்,தன்னை விடக் கீழான வேடனை, வானரனை, அரக்கனைத் தன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதன் மூலம் மனித வாழ்வில் உயர்வு தாழ்வில்லை என்பதை உணர்த்தியவன் ராமன் என்பதே என் கூற்று.

    நண்பன் சிரித்தான்.

    நான் கேட்டேன்"ஏன் சிரிக்கிறாய்.?"

    அவன்கேட்டான்"குகன் யார்?"

    "ஒரு வேடன்" நான்

    "வேடர் கூட்டத்தைச் சேர்ந்த சாதாரண வேடனா?"

    "இல்லை வேடர்களின் தலைவன்"

    "அதாவது வேடர் குல அரசன்.சரி.சுக்கிரீவன் யார்?"

    "ஒரு வானரம்"

    "சாதாரண வானரமா?"

    "இல்லை.வானரங்களின் அரசன்"

    "சரி வீடணன் வெறும் சாதாரண அரக்கனா?"

    "இல்லை. அரக்கர் வேந்தன் ராவணனின் தம்பி"

    "அடுத்து அரசனாகப் போகிறவன்,அல்லவா?"

    "ஆம்"

    "ஆக,ராமன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதெல்லாம், அரசர்களைத்தான். சாதாரணமானவர்களை அல்ல. சொல்லின் செல்வன் எனப் பாராட்டிய அனுமனையும் ஒரு தொண்டனாகத்தான் ஏற்றுக் கொண்டான்.உடன் பிறப்பாக அல்ல.இதில் எங்கிருந்து வந்தது சமத்துவம்?"

    எனக்குப் பதில் சொல்லத்தெரியவில்லை.

    உங்களுக்குத் தெரியுமா?

    நண்பனின் கருத்து சரியா,தவறா?

    விவாத மேடை திறந்திருக்கிறது—கண்ணியமான.ஆரோக்கியமான விவாதத்துக்காக!

    ராமாயணத்தை கரைத்துக் குடித்தவர்களும்,கம்பனில் ஊறித்திளைத்தவர்களும், மற்ற அனைவரும் வாருங்கள்.வெட்டியும் ஒட்டியும் கருத்துச் சொல்லுங்கள்!

    வாங்கய்யா!உங்க கருத்தைச் சொல்லுங்க,இதோ வாராறு நம்ம முனைவரு,வாங்க.வந்து கலக்குங்க!

    தமிழ் மணம் குறிப்பிட்டுள்ள அணுகு முறைகளில் ஒன்று--//மற்ற வலைப்பதிவர்கள் விவாதிக்க ஒரு மேடை அமைத்துக்கொடுக்கவும் முயலலாம்.//

    இதோ மேடை!




    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    விநாயக சதுர்த்த�� வாழ்த்துகள்

    - 0 comments




    விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துகள்


    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    உயிர்களிடத்து அ��்பு வேண்டும்-கதை

    - 0 comments


    ஒரு மனிதன் தன் நாயுடன் ஒரு நீண்ட சாலையில் நடந்து கொண்டிருந்தான்.

    அழகிய இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே சென்று கொண்டிருந்தான்.

    திடீரென அவன் உணர்ந்தான்,தான் இறந்துவிட்டோம் என்பதை!

    தன் இறப்பும்,அதற்கு முன்பே நிகழ்ந்த அவன் நாயின் இறப்பும் அவனுக்கு நினைவு வந்தது.

    அந்தச் சாலை எங்கு போகிறதோ எனச் சிந்தித்தான்.

    கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் ஒரு பக்கத்தில் உயரமான சலவைகல்லாலான மதிற்சுவரைக் கண்டான்.

    சிறிது தூரத்தில் மலை மேல் அந்த மதிற்சுவரில் அழகிய நுழைவாயில் ஒன்றைக் கண்டான்.

    அருகில் சென்று பார்த்தபோது, அந்த வாயிலின் கதவில் ரத்தினக் கற்கள் பதிக்கப் பட்டிருப்பதையும்,,அந்த வாயிலை நோக்கிச் செல்லும் பாதை தங்கத்தால் போடப் பட்டிருப்பதையும் கண்டான்.

    அந்த வாயிலை நோக்கித் தன் நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.அருகில் செல்லும்போது அந்த வாயிலின் உள்ளே ஒரு மனிதன் தங்க மேசையின் முன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

    அருகில் சென்ற அவன் அந்த மனிதனிடம் கேட்டான்" இந்த இடத்தின் பெயர் என்ன?"

    அந்த மனிதன் சொன்னான்"சொர்க்கம்"

    அவன் கேட்டான்"குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?"

    "நிச்சயமாக!உள்ளே வாருங்கள் குளிர்ந்த நீர் வரவழைக்கிறேன்"சொல்லியவாறே அவன் கதவைத் திறக்கலானான்!

    வழிப்போக்கன் தன் நாயைக் காட்டிக் கேட்டான்"என் நண்பனும் என்னோடு வரலாம் அல்லவா?"

    "மன்னிக்கவும்!நாய்களுக்கு இங்கு அனுமதி இல்லை"

    வழிப் போக்கன் யோசித்தான்.பின் தன் வந்த பாதையில் சாலையை நோக்கி நாயுடன் நடக்க ஆரம்பித்தான்.

    நீண்ட தூரம் நடந்தபின் மற்றொரு வாயிலைக் கண்டான்.துருப்பிடித்த கதவு.அதை நோக்கி ஒரு மண்பாதை சென்று கொண்டிருந்தது.

    அந்த வாயிலை அவன் நெருங்கியதும் ஒரு மனிதன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஏதோ படித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

    அவனிடம் கேட்டான்"குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?"

    "உள்ளே ஒரு குழாய் இருக்கிறது,வாருங்கள் "

    "நாயைக் காட்டிக் கேட்டான் "என் தோழனுக்கும் நீர் வேண்டும்"

    அந்த மனிதன் சொன்னான்"குழாயடியில் ஒரு குவளை இருக்கிறது.எடுத்துக் கொள்ளலாம்"

    அவன் உள்ளே சென்றான்.குழாயையும் குவளையையும் கண்டான்.தண்ணீர் எடுத்து நாய்க்கும் கொடுத்துத் தானும் அருந்தினான்.

    தாகம் தீர்ந்தது.

    மரத்தடி மனிதனை அணுகிக் கேட்டான்"இந்த இடத்தின் பெயர் என்ன?"

    அவன் சொன்னான் "சொர்க்கம் என்றழைக்கப் படுகிறது"

    வழிப் போக்கன் திகைத்தான்,

    "குழப்பமாயிருக்கிறதே!நான் வரும் வழியில் ஒருவர் வேறு இடத்தையும் சொர்க்கம் என்று சொன்னாரே!"

    ஓ!இந்த ரத்தினக்கல் பதித்த கதவுள்ள இடத்தைச் சொல்கிறீர்களா?

    அது---நரகம்!!"

    "அப்படியென்றால் சுவர்க்கம் என்று அவர்கள் சொல்லிக் கொள்வது உங்களுக்கு எரிச்சலாக இல்லையா?"

    "இல்லை .மாறாக மகிழ்ச்சியடைகிறோம்-தங்கள் தாகம் தீர்க்கத் தங்கள் உயிர் நண்பர்களைத் தியாகம் செய்யும் மனிதர்களை இனம் கண்டு நிறுத்துவதற்காக!"

    "நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
    ஒல்லும் வாய் ஊன்றும் நிலை"




    http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • [Continue reading...]

    அந்தபிரிவின் நே��ம் செத்துப்போகா���ா.....!!!

    - 0 comments


    இன்பமான நாட்களை கடந்து
    கடல் கடக்கும் நாள் வந்தது
    மனதில் பாரமா இல்லை
    சந்தோசமா தெரியவில்லை......


    நாளும் தோளிலும்
    நெஞ்சிலும் தூங்கிய
    செல்லமகள் என்னை
    தேடும் அந்நேரம் என்மனம்.....


    ஏங்கி தவிக்கும்
    நேரம் நோக்கி மணித்துளிகள்
    நகர்வதை பார்த்து
    குளத்தில் கல்லாய் மனசு......


    கனவுகள் நனவாகாமல் கலைந்து
    மறுபடியும் கடல்
    என்னை அழைக்கிறது
    வா என்னை கடந்து செல் என.....


    சிலகாலம்
    என் உயிர் நண்பர்களே
    என் உயிர் உற்றார்களே
    உங்களை விட்டு பிரிகிறேன் அழுகையோடு.....


    என்னதான் சந்தோசமாக
    விடுமுறை கழிந்தாலும்
    உறவைப்பிரிந்து செல்லும்
    அந்தபிரிவின் நேரம்
    செத்துப்போகாதா........!!!!


    http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • [Continue reading...]

    நாடு போற போக்கை பாரு......!!!

    - 0 comments


    எலேய் நாடு போற போக்கை பாருலேய் மக்கா...............!!??

    லோக்பல் மசோதாவை நிறைவேற்ற லோக்சபாவில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் மன்மோகன் சிங்[டி] திருவாய் மலர்ந்தார்...காந்தியின் பேத்தி சோனியா பெர்மிஷன் குடுத்துட்டாயிங்க போல, எலேய் என்னலேய் பிலிம் காட்டுறீங்க....?? இதனால் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிடுகிறார்...!!! உங்க உயிர் எங்களுக்கு முக்கியம்னு மக்கள் சொல்றது காதில் கேட்க்குது...!!!

    கே என் நேரு மீது மேலும் ஒரு வழக்கு பாஞ்சிருக்கு, நிலமோசடி வழக்கு அல்லாமல் இன்னும் "வேற" ஒரு கேஸ்'சுக்கு செட்டில் பண்ணிட்டார் போல.....!!!!

    தங்கம் விலை கடுமையா சாஞ்சிடுச்சி.......பொதுமக்கள் சந்தோசம்......!!! அவ்வ்வ்வ்வ்வ்வ் அப்போ நானு.......!!!

    சங்கராச்சார்யார் லேசுபட்ட ஆளு இல்லை போல, நீதிபதிகிட்டேயே பேரம் பேசுன ஆளுன்னா சும்மாவா...!!!

    லாட்டரி சீட்டுக்கும், பறிமுதல்களுக்கும் என்னே ஒரு ஒற்றுமை....அடிங்கோ........!!!

    தமிழக எம்பிக்கள் வெளிநடப்பு, மத்திய அரசு வழக்கம்போல் இலங்கை தமிழர் விவகாரத்தில் மழுப்பலான பதில்....யோவ் மத்திய அரசுதானே இலங்கை தமிழனை நாசமாக்குச்சி, இருந்தாலும் இப்பவாவது ஏதாவது அந்த மக்களுக்கு கிடைக்க போராடுங்க...!!

    தமிழகம் - புதுச்சேரி மாநிலங்களில் இடியுடன் மழை பெய்யும்.....நான் மும்பையில் இருக்கும் போது எப்பிடிய்யா அங்கே இடியும் மழையும்...???

    உடல் தகுதி பெற்றார் கம்பீர்......ஆமாய்யா நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ஹி ஹி.....!!!

    ராஜ[நாய்]பக்ஷேவை போர் குற்றவாளியாக நிறுத்த ஐநா'வை வலியுறுத்த எதிர்கட்சிகள் வலியுறுத்தல்......அதுவும் உடனே கைது பண்ண சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...!!!

    கன்யாகுமரியில் மார்ஷல் நேசமணி'க்கு மணி மண்டபம்.......வாழ்த்துக்கள்....!!!

    எதிர்கட்சியினர் என்மீது தனிப்பட்ட விரோதத்தினால் குற்றம் சுமத்துகிறாகள் - மன்மோகன் சிங்[டி] ......ஏ எய்யா சாமி சோனியாதான் ஸ்கிரீனில் வருவதே கிடையாதே, அப்பிடியே வந்தாலும் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் என்னா சம்பந்தம்...???

    அண்ணா ஹசாரே' பற்றி மீடியாக்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் குடு குடு'ன்னு ஓடிய காந்தி பரம்பரை ராகுல் காந்தி.......ஹா ஹா ஹா ஹா அந்த வீடியோவை [[நியூஸ்]] பார்த்து நான் சிரிச்ச சிரிப்பு இருக்கே வீடே அதிர்ந்து விட்டது ஹா ஹா ஹா ஹா ஹா......!!!

    அன்பில் பெரியசாமி கைது கடலூர் சிறையில் அடைப்பு...........ஹி ஹி ஊறுகா ஊறுகா, அதான் அப்பவே சொன்னேனே ராவா அடிக்கிறவன் ஊறுகாயை ஹி ஹி....!

    ஸ்பெக்ட்ரம் ஊழல் அடுத்த கைது யார்....??? பன்மோகன் சிங்[டி] அதிர்ச்சி....??!!! சோனியா காந்தி [[ @#$%@#$#@!@#$]] இத்தாலி பயணம்.......கைவிட்டுட்டாயிங்களே சிங்கிடியை......!!!

    தமிழக கவர்னராக ஆந்திரா முன்னாள் முதல்வர் ரோசய்யா நியமிக்கப்பட்டார்........ஏ அக்கட சூடு ஏ இக்கட சூடு ஏ எக்கட சூடு ஏமண்டி ஆகாரம் ஷேசியா...??

    எலேய் மக்களே கவனமா சூதானமா இருங்க என்ன.........வர்ட்டா................!!!

    டிஸ்கி : தயவு செய்து நான் பஹ்ரைன் ஏர்போர்ட்டில் இறங்கும் போது பேனர், கொடி எல்லாம் கட்டி என்னை வரவேற்று ஏர்போர்ட்டை நாறடிக்க வேண்டாம்னு எனது தொண்டர்களையும், ஆதாரவாளர்களையும் கண்டிப்பாக கேட்டுக்கொள்கிறேன், முக்கியமாக ரவிகுமார், தினேஷ்குமார், குளச்சல் சதீஷ் இன்னும் நிறைய இருக்காயிங்க பேர் சொல்லமாட்டேன் ஹி ஹி.....



    http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • [Continue reading...]

    கருணை இல்லா காங்���ிரஸ் தலைமை.....!!!

    - 0 comments



    சென்னை, ஆக.26,2011

    பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து தங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, இம்மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து வேலூர் சிறைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
    இம்மூவரையும் தூக்கிலிடக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஏற்க மறுத்து, அண்மையில் தள்ளுபடி செய்து விட்டார்.  இதனால், அவர்கள் 3 பேரும் தூக்கில் இடப்படுவது உறுதியானது.

    இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள், கட்சிகள் ஒருமித்த குரலில் இந்தத் தூக்கு தண்டனைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில், மூவரின் கருணை மனு நிராகரிப்பு குறித்த ஜனாதிபதியின் முடிவு பற்றிய தகவலை, தமிழக அரசு மூலம் வேலூர் மத்தியச் சிறை சிறைக்கு மத்திய உள்துறை வியாழக்கிழமை இரவு அனுப்பியுள்ளது.

    இன்று காலை கிடைக்கப்பெற்ற அந்த அவசர கடிதத்தில் (ஸ்பீட் போஸ்ட்) மத்திய அரசின் கடிதத்தை இதனுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது என உறுதியான தகவல்கள் வெளியாகின.

    தூக்கு தண்டனை விஷயத்தில் ஜனாதிபதியின் முடிவு தெரிவிக்கப்பட்ட 7-வது நாளில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பது மரபு.

    உயர் நீதிமன்றத்தில் அணுக முடிவு...

    மூவரையும் தூக்கிலிட உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

    இந்த நிலையில், மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தை இன்று அணுகுவது என முடிவு எடுக்கப்பட்டது.

    கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவர்களது கருணை மனுக்களை, முந்தைய இரண்டு ஜனாதிபதிகளும் நிராகரிக்காத நிலையில், தற்போது அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை எதிர்த்து வாதிடப்படவுள்ளது.

    மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக, பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானில் ஆஜராவார் எனத் தெரிகிறது.

    சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுவது தொடர்பான நடவடிக்கையை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மேற்கொண்டுள்ளார்.
    இந்த நிலையில், மூவரையும் தூக்கிலிடுவதற்கான நடவடிக்கை குறித்து தங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை என்று வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் இன்று காலை தெரிவித்துள்ளனர்.

    நன்றி : விகடன்.


    http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • [Continue reading...]

    அறிவியல் நாங்கள��ம் சொல்வோமுல்ல...!!!

    - 0 comments



    விண்ணில் சில விண்மீன்கள் ஒரே மாதிரியான அளவுடன் எப்போதும் ஒளிர்வதில்லை. சில விண்மீன்கள் மங்கலாகவும் பின்னர் அதிக பிரகாசத்துடனும் என மாறி மாறி தங்கள் நிலையை மாற்றிக் கொள்கின்றன.
    இது ஒரு சுற்று போல அவற்றில் நிகழ்கிறது. இப்படி ஒரே ஒழுங்கில் மாறுபட்டு ஒளிரும் விண்மீன்களை (cepheid Variables)  அல்லது (Cepheids) என அழைக்கின்றனர். தமிழில் இதை சீபீட் மாறிகள் அல்லது சீபீட்கள் எனவழைக்கலாம்.
    மேலும் இவற்றை மாறும் விண்மீன்கள் (Variable Stars) என்றும் அழைக்கின்றனர். இந்த சீபீட்கள் மங்கலாக மாறுவதில் இருந்து பின் பிரகாசமாகி இறுதியாக மங்கலாக மாறுவது வரை உள்ள காலத்தை அவற்றின் 'கால அளவு' என அழைக்கின்றனர் (Periods). சில சீபீட்களின் கால அளவு ஒரு நாளைக்கும் குறைவாக இருக்கிறது. சிலவற்றின் கால அளவு இரண்டு மாதங்கள் கூட நீள்கிறது.
    சீபீட்கள் என்ற பெயர் எப்படி இந்த விண் மீன்களுக்கு வந்தது என்று நாம் காண்போம். முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இப்படியான விண்மீன் சீபஸ் (Cepheus) என்கிற விண்மீன் தொகுதியில் அமைந்த டெல்டா சீபி (Delta Cephie) என்கிற விண்மீன் தான். அதனால் தான் இப்படி மாறும் விண்மீன்களை சீபீட்கள் என அழைக்கின்றனர். டெல்டா சீபியின் கால அளவு 5.3 நாட்கள் ஆகும். நமக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள சீபீட் துருவ நட்சத்திரம் (Pole Star) ஆகும். இதன் கால அளவு வெறும் 4 நாட்கள் தான். சீபீட்கள் எனப்படும் மாறும் விண்மீன்கள் விண்வெளியில் தொலைவுகளை அளப்பதில் மிகவும் உதவியாக உள்ளன.
    வானத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களுமே என்றென்றும் மாறாதவை என்றும் நிரந்தரமானவை என்றும் நிலவி வந்த கருத்துக்களுக்கு சாவு மணி அடித்தது, இந்த சீபிட்களின் கண்டுபிடிப்பு தான். இன்னொரு வகையான மாறும் விண்மீன்கள் கூட உள்ளன. அவற்றை 'மறைக்கும் மாறிகள்' (Eclipsing Variables) என்கின்றனர். சில விண்மீன்கள் வானத்தில் இரட்டை விண்மீன்களாக (Binary Star‡) உள்ளன. அதாவது இரண்டு விண்மீன்களும் தங்களின் பரஸ்பர ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு ஒன்றை ஒன்று சுற்றி வருகின்றன. இப்படியான இரட்டை விண்மீன்களில் ஒன்று பிரகாசமாக ஒளிரக் கூடியதாகவும் மற்றொன்று மங்கலான விண்மீனாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
    ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் இரு விண்மீன்களும் ஒரு பொது மையத்தைப் பொறுத்து ஒன்றை ஒன்று சுற்றி வரும்போது, மங்கலான விண்மீன் பிரகாசமாக ஒளிரும் விண்மீனுக்கு முன்பாக வர வாய்ப்பு உள்ளது. அப்போது அது ஒளிரும் விண்மீனை மறைத்து விடுகிறது. இது ஒரு தற்காலிக ஒளி இழப்பு தான். மங்கலான விண்மீன் மீண்டும் தன் சுழற்சியில் ஒளிரும் விண்மீனை விட்டு விலகும்போது, அது மீண்டும் பிரகாசிக்கிறது. இது போல ஒரு ஒழுங்கில் எல்லாமே நிகழ்கிறது. முதன் முதலில் (1782ம் ஆண்டு) இந்தக் கருத்தை சொன்னவர் ஆங்கில வானியல் வல்லுனர் ஜான் கூட்ரிக் (John Goodricke) என்பவர் தான். ஆல்கால் (Algol) என்கிற இரட்டை விண்மீன்கள் இதற்கு உதாரணம். இப்போதைக்கு இந்த 'மறைக்கும் மாறிகளை' நாம் கண்டு கொள்ளாமல் விடுவோம்.
    விண்மீன்களை வகைப்படுத்துவதில் அதனுடைய ஒளிரும் தன்மை அல்லது பிரகாசம் (Brightne‡‡) முக்கியமான பங்கு வகிக்கிறது. ஹிப்பார்கஸ் என்பவர்தான் விண்மீன்களை முதன் முதலாக அவற்றின் பிரகாசத்தை வைத்து தரம் பிரித்தார். அவர் மொத்தம் ஆறு அளவு நிலைகளாக (Magnitîde) விண்மீன்களை வரிசைப்படுத்தினார். மிகவும் பிரகாசமாக ஒளிரும் விண்மீன்கள் இவருடைய தரப்படி குறைந்த அளவு நிலைகளைக் கொண்டிருந்தது. விண்ணில் தெரிந்த இருபது பிரகாசமான விண்மீன்களை அவர் முதல் அளவு நிலை (Fir‡t Magnitîde) அல்லது முதல் தர விண்மீன்கள் என அழைத்தார்.
    முதல் தர விண்மீன்களை விட சற்றே மங்கலான விண்மீன்களை அவர் இரண்டாம் அளவு நிலை (Second Magnitîde) அல்லது இரண்டாம் தர விண்மீன்கள் என வகைப்படுத்தினார். இப்படி  மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் அளவு நிலை வரை விண்மீன்களை வரிசைப்படுத்தப் பட்டது. இவற்றில் ஆறாம் தர விண்மீன்கள் மட்டும் ஓரளவு கண்ணுக்குப் புலனாகும் அளவு மங்கலானவை ஆகும்.

    நன்றி : அறிவியல் செய்திகள்.

    டிஸ்கி : என்ன சிபி மட்டும்தான் ஒருநாளைக்கு அஞ்சாறு பதிவு போடுவானா...??? ஏன் என்னால் போடமுடியாதா....??? இதோ இது இன்னைக்கு என் மூணாவது பதுவு...!!!


    http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • [Continue reading...]

    சினி மாலா......!!!

    - 0 comments


    குடும்ப உறவுகளையும் பாசத்தையும் தூக்கி நிறுத்தி வெற்றி கண்ட படம், , மாயாண்டி குடும்பத்தார், இந்த படத்தை தயாரித்த சாமு சிவராஜ் தனது நண்பர் கல்கியுடன் இணைந்து, கண்டுபிடி கண்டுபிடி என்ற புதிய படத்தை தயாரிக்கிறார்.

    இதில் கதை நாயகனாக சீமான் நடிக்கிறார், இவருடன் கேரளா அழகி ஐஸ்வர்யா தேவன், டிவி. புகழ் முரளி, தருண் சத்ரியா, ஜெகன்நாத், செவ்வாளை ஆகியோரும் நடிக்கின்றனர்.

    படத்தைப்பற்றி டைரக்டர் ராம் சுபராமன் கூறியதாவது -
    முழுக்க முழுக்க கிராமத்தில நடந்த நகைச்சுவை கலந்த திகில் படமாகும், கதை இப்படித்தான் நகரும் என்று யாரும் ஆரம்பம் முதல் இறுதி வரை யாராலும் யூகிக்க முடியாதவாறு இருக்கும்.....


    தமிழ் பட உலக பிரபலங்களில், மிகவும் விலை உயர்ந்த கார் வைத்திருப்பவர்கள் மூன்றே மூன்று பேர், ஒருவர் ஆர் கே, இன்னொருவர் ஹாரீஸ் ஜெயராஜ், மற்றொருவர் உதயநிதி ஸ்டாலின், இவர்கள் மூன்று பேரும் வைத்திருக்கும் காரின் பெயர் "ஹம்மர்"!


    கதாநாயர்களையும், டைரக்டர்களையும் கைக்குள் போட்டுக்கொள்கிற கதாநாயகிகள் பட்டியலில் இப்போது புதுசாக இணைந்திருப்பவர், அமலா பால் [[சிபி'யின் கவனத்திற்கு]] இவருடைய வலையில் ஒரு தெலுங்கு டைரக்டரும் சிக்கி இருக்கிறார்....




    சுரேந்தர் என்ற அந்த தெலுங்கு டைரக்டர் அமலா பாலுக்கு சிபாரிசு செய்து, ஒரு புதிய தெலுங்கு பட வாய்ப்பை வாங்கி கொடுத்து இருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்க்காகவே, ஐஸ்வர்யா தனுஷ் டைரக்ட் செய்யும் "3" படத்தை தியாகம் செய்திருக்கிறார் அமலா பால்...!!!


    சினேகா இது வரை ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடை விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார், முதன் முதலாக அவர் அழகு சாதன பொருட்களின் விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார்...




    இந்த விளம்பர படத்தை டைரக்ட் செய்தவர், டான்ஸ் மாஸ்டர் கல்யாண்..!!! இவர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தவர், அந்த அனுபவத்தை வைத்து விளம்பர படத்தை இயக்கினாராம்...!!!


    களவாணி படத்தை இயக்கிய சற்குணம், நல்ல குரல் வளம் கொண்டவர், பிடித்த பாடல்களை சத்தம் போட்டு பாடுவார், இப்போது இவர் டைரக்ட் செய்துள்ள "வாகை சூடவா" படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெறுகின்றன, 




    இந்த ஐந்து பாடல்களையும் மனப்பாடமாக வைத்து இருக்கிறார் சற்குணம், அவரை தேடி செல்பவர்களை உட்கார வைத்து ஐந்து பாடல்களையும் பாடி காட்டுகிறார் சற்குணம்...!!!







    http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • [Continue reading...]

    ரெண்டெழுத்து நட��கரை தொடர்ந்து… ‘பசு’ நடிகராலும் ���ுடைச்சல்!

    - 0 comments



    ரெண்டெழுத்து நடிகரை தொடர்ந்து… 'பசு' நடிகராலும் குடைச்சல்!

    நீங்க நல்லவரா, கெட்டவரா என்று நாயகன் கமலிடம் அவரது பேரப்பிள்ளை கேட்குமே, அப்படிதான் கேட்க வேண்டியிருக்கிறது இப்போதைய தமிழ் சினிமாவின் நிலைமையை! ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழ் சினிமா இப்போ நல்லாயிருக்கா, இல்லையா?

    ஆமாம் என்று சிலரும், இல்லை என்று சிலரும் மண்டையை ஆட்டிக் கொண்டிருக்க, பைத்தியம் பிடிக்காத குறையாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் பலர். அதிலும் பைனான்ஸ் வாங்கி படமெடுப்பவர்கள் பாடு சர்வ பேதி!

    கோடம்பாக்கத்தில் நிகழ்ந்து வரும் அடுத்தடுத்த கைதுகளால் பைனான்ஸ் கிடைப்பதில்லையாம் முன்பு போல. அதுவும் பிரதர்ஸ் இருவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையால் பணம் வரும் வழிகளில் எல்லாம் அடைப்பு ஏற்பட்டுவிட்டதாம். மதுரை ஏரியாவில் வெளியாகும் எல்லா படங்களையும் இவர்கள்தான் வாங்கி வெளியிடுவார்கள். இந்த ஒரு பெரிய ஏரியாவின் வியாபாரமும் முடக்கம் ஆகிவிட்டதாக புலம்புகிறார்கள் இப்போது.

    அரவத்தின் பெயர் கொண்ட ஒரு படத்தில் நடித்த இரண்டெழுத்து ஹீரோ திடீரென்று சம்பளத்தை எண்ணி வைச்சாதான் டப்பிங் பேசுவேன் என்று முரண்டு பிடிக்கிறார். இவரை பார்த்து பசுவான இன்னொரு ஹீரோவும் முரண்டு பிடிக்க, செய்வதறியாது தவிக்கிறதாம் படக்குழு.

    ஒருபுறம் பல பைனான்சியர்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள். நல்லவேளையாக யூடிவி, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட முன் வந்திருப்பதால் பெரிய நெருக்கடியிலிருந்து தப்பித்திருக்கிறது திரையுலகம்.

    ஆபத்துக்கு குடை பிடிக்கிறாங்க. அதுல ஆகாயம் தெரியலையேன்னு கிழிச்சு வச்சுராதீங்க மக்களே…


    http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • [Continue reading...]

    புயல் கிளம்புது��ேய்.....!!!

    - 0 comments



    எலேய் மக்கா நான் இதோ வாரேன் பஹ்ரைன், ஆனால் என்னை பார்க்க வருகிற மக்காக்கள் பலமான கிப்ட் கொண்டு வந்துதான் என்னை பாக்கோணும் ஜாக்கிரதை, அதுக்காக பிஞ்ச தக்காளி [[விக்கி இல்லை ஹி ஹி]] கல்லு, அழுகின முட்டை, கூமுட்டை, அருவா, கடப்பாரை, சுத்தியல், உளி'ன்னு கொண்டு வந்துராதீக.....!!!

    அடுத்து தயவு செய்து எனக்கு பிளக்ஸ் பேனர், கொடி, கம்பு, இத்யாதிகள் வைத்து பஹ்ரைன் அரபிகளை ஓட வைத்து விடாதீர்கள், ஏர்போர்ட்டை நாற வைத்து விடாதீர்கள், பன்னிகுட்டி சவுதியில இருந்து என்னவெல்லாமோ அனுப்பபோறார்னு எனக்கு அப்பவே தகவல் வந்தாச்சு....!!!

    கக்கு மாணிக்கம் வேற மிரட்டிட்டே இருக்காரு, ஷார்ஜா தாதா ஒருத்தர் என்னை பிச்சிபுடுவேன் பிச்சி ராஸ்கல்னு மிரட்டுறார், சிபி சனியன் ஒளிஞ்சதுன்னு சந்தோசப்பட்டு குப்புற கவுந்துட்டானாம்.....

    இருங்கடி உங்களுக்கு அங்கே வந்து வேட்டு வைக்கிறேன்....!!


    http://tamil-shortnews.blogspot.com




  • http://tamil-shortnews.blogspot.com


  • [Continue reading...]

    ஏர் செல் கம்பெனி���ால் பட்டபாடு!

    - 0 comments



                                                                                  சென்னையில் தி.நகரில் நின்று கொண்டிருக்கிறேன்.தம்பி ஒருவன் வர வேண்டும்.சரவணபவன் அருகில் இருப்பதாக சொல்லியிருந்தேன்.வருவதற்கு நேரமாகும் என்றுமுன்னால் உள்ள கோயிலுக்கு சென்று விட்டேன்.வெகு நேரம் என்னைப் பார்க்க  முடியாமல் அலைந்திருக்கிறான்.திரும்பி வந்தவுடன் சொன்னான்."அண்ணா ,முதலில் உங்களுக்கு ஒரு செல்போன் வாங்க வேண்டும்.அன்றே வாங்கியாகி விட்டது.அதன் பிறகு சுகமோ சுகம்.

                                                                                                      தகவல் தொடர்பு என்பது ஒரு பெரிய விஷயமாக இல்லை.இப்போது ஏர்செல் போஸ்ட் பைடு வைத்திருக்கிறேன்.பழகிப்போய் விட்டது.காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போது ஏழரை மணி இருக்கும் .ஒரு மெசேஜ் வந்தது.இது மாதிரி ஏராளம்.சிறுவன் இன்னொரு சிறுவனிடம்,"எங்கள் வீட்டு டி.வி. வரிவரியா தெரியுதுடா! மற்றவனின் பதில் "அதற்கு இப்போ என்ன பண்றது வாங்கும்போதே அன்ரூல்டு என்று கேட்டு வாங்கி இருக்கவேண்டும்." இப்போதைய சிறுவர்கள் அவ்வளவு விவரம் இல்லாமல் இல்லை.போகட்டும்.அந்த குறுஞ்செய்தியோடு என்னுடைய சந்தோசம் காணாமல் போய் விட்டது.


                                                                                                        அவசியமாக ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டும்.பார்த்தால் நெட் ஒர்க்கே காணோம்.இன்னொரு நம்பர் வைத்திருப்பதன் அவசியத்தை அப்போதுதான் உணர்ந்தேன்.நல்ல வேலை கைவசம் ஏர் டெல் இருக்கிறது.மகிழ்ச்சியுடன் தொடர்பு கொண்டால் பலிக்க வில்லை.அவருடையது ஏர் செல் நம்பர்.வேறு நம்பரும் இல்லை.என்னுடைய ஏர் டெல் நம்பரும் அவரிடம் இல்லை.இன்னொரு நண்பர் ஒரு முக்கியமான விஷயம் வீட்டுக்கு சொல்ல வேண்டும்.இப்போ என்ன செய்றதுன்னே தெரியலை என்றார்.கணவன் மனைவி இருவருடையதும் ஏர் செல் .
                                                                                                          பக்கத்து ரூம்காரரும் அதிர்ஷ்டசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.அவரும் இரண்டு கம்பெனி சிம்மை பயன்படுத்துகிறார்.எட்டிப் பார்த்த போது முகம் விழுந்து போய் கிடந்தது.நான் அதிகம் பகலில் செல்போன் உபயோகிப்பதில்லை.அது தர்மமும் அல்ல என்பது வேறு விஷயம்.ஆனால் அவர் அதையெல்லாம் பார்க்கமாட்டார்.அடிக்கடி போனிலேயே இருப்பார்.''என்ன ஆச்சு?'' என்று கேட்டேன்.இரண்டு நெட் ஓர்க்கும் வேலை செய்யவில்லை.இன்னொரு கம்பெனிவீடியோகானாம்.



                                                                                                             வேலை பார்த்தார்களோ இல்லையோ அடிக்கடி ''டவர் வந்து விட்டதா?" என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.நண்பர் ஒருவர் அம்மாவை பேருந்து நிலையத்தில் வந்து தனக்கு போன் செய்யச்சொல்லியிருந்தார்.அவரால் தொடர்பு கொள்ள முடியாது என்று இவரே போய் காத்திருந்து அழைத்து வந்தார்.அவருடைய வேலையையும் நாங்கள் செய்ய வேண்டிய நிலை.எனக்கும் எதிலும் அதிகம் ஒட்டவில்லை.அடிக்கடி செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

                                                                                                                 எப்போதும் செல்போனிலேயே இருக்கும் பையனை பார்த்து "நாங்க எல்லாம் செல்போன் வச்சிகிட்டா வாழ்ந்தோம்?" என்று ஒரு பெரிசு கேட்டது நினைவுக்கு வருகிறது.ஆனால் செல்போன் இல்லாமல் இன்று அணுவும் நகராது.எத்தனையோ மோசடிகள் இருக்கட்டும்,பணம் பிடுங்கட்டும்,அலைக்கழிப்பு இருக்கட்டும்.அது இல்லாமல் இன்று வாழ்க்கை இருக்க முடியாது.மதியம் ஒரு மணிக்கு "டவர் வந்து விட்டது" என்றார்கள் யாரோ! நானும் அப்புறம் தான் பார்த்தேன்.அப்பாடா! பலர் நிம்மதியாக சாப்பிடுவார்கள்.ஆனால் இது அரை மணி நேரம் கூட நீடிக்கவில்லை.மீண்டும் வெறுப்பு.


                                                                                                                 சக நண்பர் ஒருவர் எனக்கு ஐடியா சொன்னார்.''சேலத்தில் ஏர் செல்லில் இருப்பவர் உங்களுக்கு தெரிந்தவர்தானே? அவரிடம் கேட்டுப் பாருங்களேன்! என்ன பிராப்ளம் என்று!" அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.''அவரும் ஏர் செல் நம்பர்தான் வைத்திருக்கிறார்"என்றேன் எரிச்சலுடன்! வேறொரு நண்பர் போன் செய்தார்.அவரிடம் கேட்டேன்,''ஏர் செல்லுக்கு என்ன பிரச்சினை?'' "அதுவா ? அது மலேசியக் கம்பெனி,ஸ்பெக்ட்ரம்  என்று ஏதேதோ ஆரம்பித்தார்.நான் அப்புறம் பேசுவதாக சொல்லி வைத்து விட்டேன்.இந்த நேரம் வரை டவர் கிடைக்க வில்லை.இன்றைய அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் சில!

    •   இரண்டு சிம் கொண்ட செல்போன் பயன்படுத்துங்கள்.(இப்போது நோக்கியாவிலும் இருக்கிறது)
    •    கணவனும் மனைவியும் வேறுவேறு கம்பெனி சிம்மை பயன்படுத்துங்கள்.
    •    இரண்டு சிம் பயன்படுத்தும் போது எந்தெந்த கம்பெனி கூட்டு என்று அறிந்து சிம்மை தேர்ந்தெடுங்கள்.(ஏர் செல்லும் ,வீடியோகானும்  ஒரே டவர்)


    http://sirappupaarvai.blogspot.com




  • http://sirappupaarvai.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger