Friday 4 October 2013

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக சந்தானம் பாடும் பாடல் “சரக்கடி நண்பா நீ சரக்கடி” sivakarthikeyan and santhanam song in movie

- 0 comments

"சரக்கடி நண்பா நீ சரக்கடி" சந்தானத்தின் குரலில் உருவான பாடல்

by abtamil

நகைச்சுவை நடிகர் சந்தானம் முதன் முறையாக முழுப்பாடலை பாடியுள்ளார்.

ஸ்ரீகாந்த்- சந்தானத்தின் நடிப்பில் உருவாகும் படத்தில் நம்பியார் என்ற படத்தில் தான் பாடலை பாடியுள்ளார்.

விவேகாவின் எழுத்தில், விஜய் ஆண்டனியின் இசையில் பாடி அசத்தி உள்ளார்.

சந்தானம் பாடியது குறித்து இயக்குனர் கணேஷா, இந்த படத்தில் ஸ்ரீகாந்துடன் இன்னொரு ஹீரோவாக சந்தானம் நடித்து வருகிறார்.

ஏன் இன்னொரு ஹீரோ சந்தானம் என்று சொல்கிறேன் என்பதை படம் வரும்போது நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத கதைக்களம், அதற்காக வெறும் நகைச்சுவையை மட்டும் நம்பி பயணப்படும் படம் அல்ல.

சந்தானம் சார் பட்டைய கிளப்பிய படங்களில் இதுவும் ஒன்றாக அமையும். ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தில் மற்ற படங்களுக்கும் இந்த படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.

படத்தில் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் வரும் பாடலை யாரை வைத்துப் பாட வைத்தால் சரியாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, விஜய் அண்டனி சார் சந்தானம் பாடினால் நன்றாக இருக்கும் என்றார்.

சந்தானம் மறுத்துவிடுவார் என்றுதான் நினைத்தோம். ஆனால் சந்தோஷமாக பாட வந்துவிட்டார்.

ஐந்து மணி நேரம் எடுக்கும் என்று நினைத்த பாடலை பதினைந்து நிமிடங்களில் முடித்துக்கொடுத்துவிட்டார்.

'ஆற அமர உக்காந்து சரக்கடி நண்பா நீ சரக்கடி' என்று ஆரம்பிக்கும் வரிகள்.

மனதுக்கும் நிஜத்துக்கும் நடக்கும் ஒரு போர் என்று சொல்லலாம் அந்த காட்சியை.

அதுவரை தன் நண்பர்கள் தண்ணியடித்தால் கோக்கை வாங்கி வைத்துக்கொண்டு கம்பனி கொடுக்கும் ஸ்ரீ முதல்முறையாக தண்ணியடிக்கும் சங்கடமான சூழ்நிலை.

இந்த காட்சியில் சந்தானம் இருக்கமாட்டார். ஆனால் சந்தானம் குரல் ஸ்ரீகாந்துக்கு செமையா பொருந்தி வந்திருக்கு என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் கூறுகையில், சினிமாவில் எனக்கு கிடைத்திருக்கும் மரியாதைக்குரிய நண்பர் சந்தானம். எனக்காக நடித்துக்கொடுப்பதோடு பாடியும் உதவியிருக்கிறார்.

அவரது நம்பிக்கையை நம்பியார் நிறைவேற்றும் என்றும், சந்தானத்துக்கு நிறைய நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Show commentsOpen link

[Continue reading...]

விஜய்யுடன் ரொமான்சில் புகுந்து விளையாடும் காஜல் vijay romance with kajal agarwal

- 0 comments

விஜய்யுடன் ரொமான்சில் புகுந்து விளையாடும் காஜல்

by abtamil

விஜய்யுடன் எனக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகிறது என்கிறார் காஜல் அகர்வால்.

துப்பாக்கி படத்தையடுத்து விஜய்யும், காஜல் அகர்வாலும் ஜோடி சேர்ந்துள்ள படம் ஜில்லா.

முந்தைய படம் ஆக்ஷன் கதையில் உருவானதால், அவர்களின் ரொமான்ஸ் காட்சிகள் அதில் மிகவும் குறைவாக இருந்தன.

ஜில்லாவில் இந்த குறை இருக்க கூடாது என்பதற்காக விஜய்-காஜல் ஜோடியின் காதல் காட்சிகள் அதிக அளவில் படமாக்கப்பட்டுள்ளதாம்.

தமிழில் தனக்கு போட்டி அதிகமாகி விட்டதால் காஜலும் இந்த படத்தில், காதல் காட்சிகளில் கூடுதல் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறாராம்.

மேலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான சில காட்சிகளையாவது படத்தில் வையுங்கள் என இயக்குனரிடம் கெஞ்சி கேட்டு அதுபோன்ற காட்சிகளில் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் எனக்கும், விஜய்க்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும். ரசிகர்களுக்கு இது விருந்தாக இருக்கும் என்கிறாராம் காஜல்.

Show commentsOpen link

[Continue reading...]

இங்கிலாந்தில் கண்ணிழந்தவருக்கு பல் வழியே பார்வை திரும்பிய அற்புதம் blind man gets vision through tooth transplant

- 0 comments

இங்கிலாந்தில் கண்ணிழந்தவருக்கு பல் வழியே பார்வை திரும்பிய அற்புதம் blind man gets vision through tooth transplant

Tamil NewsYesterday,

லண்டன், அக். 5-

1998-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் இயன் டிபெட்ஸ் (43) என்ற தொழிலாளியின் வலது கண்ணில் இரும்பு துண்டு பாய்ந்தது. அடிப்பட்ட கண்ணில் அடிக்கடி வலியுடன் நீர் வடியும் நிலையில் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார்.

நாளடைவில், அந்த கண்ணின் பார்வை சுத்தமாக பறிபோனது. இதனால் அவர் வேலையை விட்டு நிற்க வேண்டிய பரிதாப சூழ்நிலை ஏற்பட்டது.

அவரது இடது கண்ணின் பார்வையும் ஓரிரு ஆண்டில் பறிபோனதால், உலகமே இருண்ட நிலையில் சூன்ய பிரதேசத்தில் வசிக்க வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

புரட்சிகரமான ஓர் அறுவை சிகிச்சையின் மூலம் இயான் டிபெட்சுக்கு மீண்டும் கண்ணொளியை ஏற்படுத்த பிரைட்டனில் உள்ள சுசெக்ஸ் கண் ஆஸ்பத்திரியின் பேராசிரியர் கிரிஸ்டோபர் லியு முடிவு செய்தார்.

இதன்படி, அவரது தாடையின் ஒரு பகுதியையும், முன் பல்வரிசையில் ஒன்றையும் டாக்டர்கள் அகற்றினர்.

தாடையை தொட்டிலாக்கி, அதில் பல்லை இணைத்து அவரது கன்னப் பகுதியில் பொருத்தி விட்டனர். அந்த பல்லில் அதிநவீன காண்டாக்ட் லென்சை இணைத்து 3 மாதங்களுக்கு அப்படியே விடப்பட்டது.

இதற்கிடைப்பட்ட காலத்தில் அந்த புதிய இணைப்பில் திசுக்களும் ரத்த நாளங்களும் வளரத் தொடங்கின.

அதை அப்படியே மொத்தமாக எடுத்து அவரது வலது கண்ணுக்குள் திணித்து, மூளைக்கு செல்லும் நரம்பு மண்டலத்திற்கு இணைப்பு வழங்கப்பட்டது.

இந்த நவீன அறுவை சிகிச்சை நடந்த சில வாரங்களில் கண்ணொளி திரும்பப் பெற்று பழைய மனிதராக இயான் டிபெட்ஸ் தற்போது நடமாட தொடங்கி விட்டார்.

...
Show commentsOpen link

[Continue reading...]

சிறுநீரை குடிக்கச் சொல்லி என்னை கொடுமைப்படுத்தினார்: டெல்லியில் மீட்கப்பட்ட வேலைக்கார சிறுமி பேட்டி rescued delhi girl accuses of making to drink urine

- 0 comments

சிறுநீரை குடிக்கச் சொல்லி என்னை கொடுமைப்படுத்தினார்: டெல்லியில் மீட்கப்பட்ட வேலைக்கார சிறுமி பேட்டி rescued delhi girl accuses of making to drink urine

Tamil NewsYesterday,

புதுடெல்லி, அக். 5-

வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானியை போலீசார் கைது செய்தனர்.

தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதபடி கூச்சலிட்டாள்.

சிறுமியின் கூக்குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.

அவர்கள் விரைந்து வந்து உடல் முழுக்க காயங்களுடன் மிக மோசமான நிலையில் இருந்த அந்த பரிதாபத்திற்குரிய சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அந்த சிறுமி போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் என்னை வெளியே போக விடாமல் அடைத்து வைத்திருந்த முதலாளி அம்மா, சற்று நேரம் கூட ஓய்வு தராமல் தொடர்ந்து என்னிடம் வேலை வாங்கி வந்தார்.

நான் செய்த வேலையில் எப்போதும் குறை கண்டுபிடிக்கும் அவர் சூடு போட்டும், பெல்ட், பிரம்பு போன்றவற்றால் அடித்தும் சித்ரவதை செய்வார். சில வேளைகளில் வெட்டுக்கத்தியால் தாக்கியும் கொடுமை படுத்துவதுண்டு என்று கூறினார்.

அவர் கூறுவது அனைத்தும் உண்மை என்பதை அந்த சிறுமியின் தலை மற்றும் உடலில் உள்ள வெட்டு காயங்கள் மற்றும் தீக்காயங்கள் உறுதிப்படுத்துகின்றன.

அந்த சிறுமியை இந்த நிலைக்கு ஆளாக்கிய வந்தனா திர் என்ற 50 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் அந்த சிறுமியை சந்தித்த டெல்லி அரசின் குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை மந்திரி கிரண் வாலியா, சிறுமிக்கு நேர்ந்துள்ள இந்த கொடுமை கொடூரமானது, காட்டுமிராண்டித்தனமானது என்று கூறியுள்ளார்.

தற்போது ஆஸ்பத்திரியில் உடல்நலம் தேறிவரும் அந்த பெண் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

'என்னை கத்தி, நாய் சங்கிலி, தோசைக்கல் போன்வற்றால் அடித்து கொடுமைப்படுத்திய எஜமானி தனது சிறுநீரை குடிக்கச் சொல்லியும் என்னை கொடுமைப்படுத்தினார்.

கழிவறையிலேயே சாப்பிட்டு அங்கேயே தூங்கியும் நான் அவதிப்பட்டேன்' என்று அவர் கூறினார்.

டெல்லியில் கடந்த ஆண்டு 13 வயது வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு முதலாளி குடும்பத்தினர் தாய்லாந்து சுற்றுலா சென்றதும், பூட்டிய வீட்டினுள் பல நாட்கள் தனியாக தவித்த அந்த சிறுமியை போலீசார் மீட்டதும் நினைவிருக்கலாம்.
...
Show commentsOpen link

[Continue reading...]

16 வயதினிலே ரஜினி கமல் நட்பு மாறவில்லை 16 vayathinile rajini kamal friendship

- 0 comments

எங்கள் நட்பு மாறவில்லை: கமல்
by veni
Tamil news, Tamil culture, செய்திகள் .

16 வயதினிலே டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கமலஹாசன் பங்கேற்று பேசியதாவது:–

16 வயதினிலே அப்போது பெரிய வெற்றி படமாக அமைந்தது. 36 வருடங்கள் கழித்து அந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இங்கே விழா எடுக்கப்படுகிறது. 16 வயதினிலே அற்புதமான படம். அதில் நடித்த எல்லோரும் சிறப்பாக நடித்து இருந்தார்கள். அதை மீண்டும் நினைவூட்டுவது போல் இவ்விழா இருக்கிறது. இந்த படத்தில் இருந்த எல்லோருமே வெற்றி கண்டு இருக்கிறார்கள். இளையராஜா இசை சிறப்பாக இருந்தது. நவீன தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே 'ஸ்லோ மோஷன்' காட்சி இப்படத்தில் இருந்தது. தயாரிப்பாளர் எல்லாவற்றையும் கொட்டி இந்த படத்தை எடுத்தார்.

இப்படத்தின் முதல் நாயகன் பாரதிராஜாதான். படம் எடுத்தபோது சிலர் எதிர்மறை கருத்துக்கள் சொன்னார்கள். தயாரிப்பாளர் நிலையை நினைத்து பயந்தேன். ஆனால் படம் வெற்றி பெற்றது. அதை மீண்டும் ரிலீஸ் செய்ய நடக்கும் இது போன்ற விழா அரிதான ஒன்று.

துவக்கத்தில் நானும் ரஜினியும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்தோம். பிறகு முதலீடு காரணமாக பிரிந்தோம். ரஜினி ஆரம்ப காலத்தில் எங்கு தங்கினார் என்று தெரியாது. ஒரு படம் முடிந்ததும் வேறு படத்துக்கு போக வண்டி வரும். வண்டியிலேதான் தங்கினாரா என்று நினைக்க தோன்றியது. 16 வயதினிலே படத்தில் நடித்தபோது எங்களுக்கு சில ஆயிரங்கள்தான் சம்பளம் கிடைத்தது. அப்போது ரஜினி எப்படி இருந்தாரோ அப்படித்தான் 10 வருடங்களுக்கு முன்பும் இருந்தார். இன்றும் அப்படியே தான் இருக்கிறார்.

இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியே இருக்கிறது. இதற்கான பெருமை எங்கள் இருவரையுமே சாரும். நான் உங்களுக்கு செய்த நட்பு நீங்கள் செய்த அன்பின் பலம். இந்த விழாவில் இளையராஜாவும் ஸ்ரீதேவியும் பங்கேற்று இருந்தால் சந்தோஷமாக இருந்து இருக்கும். அவர்கள் சார்பில் நாங்கள் வந்து இருக்கிறோம். எனக்கு நல்ல நண்பர்களும் ரசிகர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு கமல் பேசினார்.

The post எங்கள் நட்பு மாறவில்லை: கமல் appeared first on ekuruvi is a tamil news Portal offering online tamil news.

Show commentsOpen link

[Continue reading...]

இதுதான் ‘கயல்’ படத்தின் கதையாம்? லீக்கான விசயம்! Movie kayal story

- 0 comments

இதுதான் 'கயல்' படத்தின் கதையாம்? லீக்கான விசயம்!

by abtamil
Tamil newsToday,

'கும்கி' படத்துக்கப்புறம் ரொம்ப கேப் விட்டதால பிரபுசாலமன் அடுத்து சுனாமியைப் பத்தித்தான் படமா எடுக்கப்போறார்னு சொன்னாங்க, ஆனா சுனாமி எப்போ வரும்ணே தெரியாத மாதிரி அவர் அடுத்த படத்தை எப்போ ஆரம்பிப்பார்ங்கிற விஷயமே தெரியாம இருந்தது தான் மிச்சம்.

திடீர்னு ஒருநாள் 'கயல்'ங்கிற பேர்ல ஒரு படத்தை ஆரம்பிச்சி அதற்கான ஆரம்ப விழாவுல பிரஸ் பீப்புளை மீட் பண்ணினார்.
பிரஸ்மீட்ல படத்தோட டைட்டில், ஆர்ட்டிஸ்ட், டெக்னிஷியன்களை மட்டும் தான் செய்தியாச் சொன்னாரே தவிர ஒரு ரெண்டு வரிக்கூட செய்தி எழுதுறக்கு படத்தைப் பத்தி எந்த விஷயத்தையும் அவர் சொல்லல.

ஹீரோ சந்திரன், ஹீரோயின் அனந்தின்னு மட்டும் சொல்லிட்டு வழக்கம் போல ஒரு வரிச் சொன்னாக்கூட படத்தொட கதை 'லீக்'காயிடும்ணு எஸ்கேப் ஆயிட்டார்.

ஆனா இந்தப்படத்துல கண்டிப்பாக காதல் இருக்கும்னு மட்டும் சொன்னார். அப்படி பொத்தி பொத்தி வெச்ச 'கயல்' படத்தோட கதை லீக்காயிருக்கு.

அதாவது மைனா படத்தை காடும், காடு சார்ந்த இடங்களுமாக காட்டிய பிரபு சாலமன், அடுத்த படமான கும்கியில மலையும் மலை சார்ந்த இடங்களுமா காட்டினார். இப்போ இந்தப்படத்துல கடலும் கடல் சார்ந்த இடங்களுமாக திரைக்கதையை அமைச்சிருக்காராம்.

நகரும் கதைங்கிறதுனால நாகர்கோவில்ல தொடங்கி கன்னியாகுமரி, சென்னை, மைசூர், சிமோகா, மேகாலயா, லால், லடாக்குன்னு டோட்டல் இந்தியாவையும் ஒரு ரவுண்டு வரப்போறாராம் பிரபு சாலமன்.

சரி கதைக்குள்ள வருவோம்…
நாகர்கோவில் அருகே உள்ள ஒரு சொன்ன வில்லேஜ்ல உள்ள பொண் தான் படத்தோட ஹீரோயின் கயல்விழி. மின்சாரம்கூட இல்லாத குடிசையில் வாழ்கிறவள். அப்பாவும் அம்மாவும் விவசாய கூலிகள்.

காதல் என்கிற வார்த்தையை கூட அறிந்திருக்காத ஆனந்திக்கு உள்ளூர் இளைஞன் சந்திரன் மேல காதல் வருகிறது. காதல் ஹை-ஸ்பீடுல போய்க்கிடுக்கிற நேரத்துல தான் விவசாயம் பொய்த்துப் போய் கொடிய பஞ்சம் வருது. அதனால பஞ்சம் பிழைக்கிறதுக்காக ஆனந்தியின் குடும்பம் வடநாட்டுக்குச் செல்கிறது.

காதலர் இருவரும் திசைக்கு ஒருவராக பிரிக்கப்படுகிறார்கள். காதலன் நம்மை தேடி வருவான் என்ற நம்பிக்கையில் ஆனந்தியும், அவளை எப்படியாவது கண்டுபிடித்து கரம் பிடிப்பது என்று காதலன் சந்திரனும் தங்களோட பயணத்தை தொடர்கிறார்கள்.

ஆனந்தி எங்கிருக்கிறாள் என்பது தெரியாமல் அவளை இந்தியா முழுவதும் தேடுகிறான் சந்திரன். அவளை கண்டுபிடித்தானா, கரம் பிடித்தானா என்பதுதான் கயல் படத்தின் கதையாம்.

பொத்தி பொத்தி வெச்ச கதை லீக்காயிடுச்சி என ஒரு பக்கம் பேச்சிக்கொண்டிருக்க, இதுதான் கதையா என்பது பிரபுசாலமனுக்கே வெளிச்சம்.

Show commentsOpen link

[Continue reading...]

விஜயின் நடனத்தைப் பார்த்து நடுநடுங்கி விட்டேன்- அமலாபால் vijay dance with amalapaul

- 0 comments

விஜயின் நடனத்தைப் பார்த்து நடுநடுங்கி விட்டேன்: அமலாபால்

by abtamil
Tamil newsToday,

சென்னை: தலைவா படத்தில் நடிக்கும் போது, விஜயின் நடனத்தைப் பார்த்து தனக்கு உள்ளூர நடுக்கம் உண்டானதாகத் தெரிவித்துள்ளார் அமலாபால். இயக்குநர் விஜய் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் ஜோடியாக அமலாபால் நடித்திருந்தப் படம் 'தலைவா'. படம் ரிலீசாவதில் பலப் பிரச்சினைகளைச் சந்தித்தப் போதும், அமலாவின் விஜயுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது.

அத்தோடு, தற்போது தனுஷுடன் வேலையில்லாப் பட்டதாரி படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார். அந்தவகையில் விஜயுடன் தலைவாவில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்தார் அமலா. அதில் 'சிறு வயதிலிருந்தே தான் விஜயின் தீவிர ரசிகை என்றும், இவ்வளவு சீக்கிரத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், விஜயுடன் நடனக் காட்சிகளில் நடிப்பது குறித்து உள்ளூர படபடப்பாக இருந்ததாம். இது குறித்து அமலா பால் கூறுகையில், 'விஜய் மிகச் சிறந்த டான்சர். இதனால், அவருடன் நடனம் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளூர நடுக்கம் உண்டாகி விட்டது. ஆனால், விஜயின் நிதானமான நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு எனக்கு தன்னம்பிக்கை அளிப்பதாக இருந்தது' எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு, தனது ஆஸ்தான நாயகர்களில் ஒருவரான விஜயுடன் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக இயக்குநர் விஜய்க்கும் தனது நன்றியை தெரிவித்தார் அமலாபால்.

Show commentsOpen link

[Continue reading...]

கன்னியாஸ்திரியாக மாற நயன்தாரா முடிவு மூன்றாவது காதலும் தோல்வி nayanthara 3rd love news

- 0 comments

மூன்றாவது காதலும் தோல்வியா..? கன்னியாஸ்திரியாக மாற நயன்தாரா முடிவு.

by abtamil
Tamil newsToday,

சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவரையும் வெறித்தனமாக காதலித்த நயன் தாரா, பின்னர் காதல் தோல்வி அடைந்தபின், மிகவும் கலங்கினார். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு வர பல மாதங்கள் ஆகியது. 
தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக காதலில் தோல்வி அடைந்துள்ளதால் இனி என் வாழ்வில் காதலே இல்லை. நான் விரைவில் கன்னியாஸ்திரியாக மாறப்போகிறேன் என தனக்கு நெருங்கிய தோழிகளிடம் கூறியுள்ளார். இதனால் தென்னிந்திய படவுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
மன இறுக்கம், முகத்தில் சுருக்கம். மீண்டும் அதே கலக்கம்.நயன்தாராவை பற்றி கோலிவுட்டார் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
பிரபு தேவாவுடன் காதல் முறிந்தபோது எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போது இருக்கிறார். ஆனால் பிரபுதேவாவுடன் உறவு முறிந்து, சில மாதங்கள் சோகமாக இருந்தாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தார். தற்போது மீடியாவை தவிர்க்கிறார். ஷாட் முடிந்ததும் அரட்டை அடிக்காமல் தனியாக இருக்கவே விரும்புகிறார்
 ராஜா ராணி ஷூட்டிங்கிற்கு இடையே ஆர்யாவுடன் நெருங்கி பழகினார் நயன் தாரா. இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு டாக் பரவிப்போனது. அந்த சமயத்தில்தான் நயன், மீண்டும் பழைய நயனாக மாறி கலகலப்பாக இருந்தார்.
வழக்கம்போல் ஆங்கில மீடியாவுக்கு மட்டுமாவது பேட்டிகளை கொடுத்தார். ராஜா ராணி ஷூட்டிங் முடிந்தபோதுதான் வந்தது சோதனை. அனுஷ்கா ரூபத்தில். ஐதராபாத்தில் ஆர்யாவும் அனுஷ்காவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இது தெரிந்து நயன்தாரா நொறுங்கிப்போனார் என்கிறது அவருக்கு வேண்டப்பட்ட வட்டாரம்.
 

Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger