Friday 4 October 2013

கன்னியாஸ்திரியாக மாற நயன்தாரா முடிவு மூன்றாவது காதலும் தோல்வி nayanthara 3rd love news

மூன்றாவது காதலும் தோல்வியா..? கன்னியாஸ்திரியாக மாற நயன்தாரா முடிவு.

by abtamil
Tamil newsToday,

சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவரையும் வெறித்தனமாக காதலித்த நயன் தாரா, பின்னர் காதல் தோல்வி அடைந்தபின், மிகவும் கலங்கினார். அவர் மீண்டும் சகஜ நிலைக்கு வர பல மாதங்கள் ஆகியது. 
தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக காதலில் தோல்வி அடைந்துள்ளதால் இனி என் வாழ்வில் காதலே இல்லை. நான் விரைவில் கன்னியாஸ்திரியாக மாறப்போகிறேன் என தனக்கு நெருங்கிய தோழிகளிடம் கூறியுள்ளார். இதனால் தென்னிந்திய படவுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
மன இறுக்கம், முகத்தில் சுருக்கம். மீண்டும் அதே கலக்கம்.நயன்தாராவை பற்றி கோலிவுட்டார் திரும்ப பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
பிரபு தேவாவுடன் காதல் முறிந்தபோது எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்போது இருக்கிறார். ஆனால் பிரபுதேவாவுடன் உறவு முறிந்து, சில மாதங்கள் சோகமாக இருந்தாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தார். தற்போது மீடியாவை தவிர்க்கிறார். ஷாட் முடிந்ததும் அரட்டை அடிக்காமல் தனியாக இருக்கவே விரும்புகிறார்
 ராஜா ராணி ஷூட்டிங்கிற்கு இடையே ஆர்யாவுடன் நெருங்கி பழகினார் நயன் தாரா. இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் என சொல்லும் அளவுக்கு டாக் பரவிப்போனது. அந்த சமயத்தில்தான் நயன், மீண்டும் பழைய நயனாக மாறி கலகலப்பாக இருந்தார்.
வழக்கம்போல் ஆங்கில மீடியாவுக்கு மட்டுமாவது பேட்டிகளை கொடுத்தார். ராஜா ராணி ஷூட்டிங் முடிந்தபோதுதான் வந்தது சோதனை. அனுஷ்கா ரூபத்தில். ஐதராபாத்தில் ஆர்யாவும் அனுஷ்காவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். இது தெரிந்து நயன்தாரா நொறுங்கிப்போனார் என்கிறது அவருக்கு வேண்டப்பட்ட வட்டாரம்.
 

Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger