Thursday 1 August 2013

4 வது ஒருநாள் போட்டி இந்தியா வெற்றி

- 0 comments

இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில்
சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள்
போட்டி கொண்ட தொடரில்
விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 3
போட்டிகளிலும்
இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இன்று 4-வது ஒருநாள்
போட்டி புலவாயோவில்
இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய
அணியின் கேப்டன் வீராட் கோலி பீல்டிங்
தேர்வு செய்தார்.

ஜிம்பாப்வேயின் சிபாண்டா- சிகன்டர்
ரஸா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம்
இறங்கினார்கள். ரஸா 7 ரன்னினல் மோகித்
சர்மா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த
மககட்ஷா 11 ரன்னி்ல ரன் அவுட் அனார்.

அதன்பின் வந்த கேப்டன் டெய்லர்,
வில்லியம்ஸ் அடுத்தடுத்து ரன் ஏதும்
எடுக்காமல் அவுட் ஆக ஜிம்பாப்வே அணி 42.4
ஓவரிக்குள் 144 ரன் எடுத்து ஆல்அவுட்
ஆனது.

சிகிம்புரா மட்டும் அவுட்டாகாமல் 50 ரன்
எடுத்தார். இந்திய அணி சார்பில் மிஸ்ரா 3
விக்கெட்டும், மோகித் சர்மா, ஜடேஜா தலா 2
விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 145
ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்
இந்திய அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாராவும்,
ரோகித் சர்மாவும் களமிறங்கினர்.

இருவரும்
நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். அணியின்
ஸ்கோர் 23-ஆக இருந்தபோது, சதாரா பந்தில்
ஸ்டம்புகளை பறிகொடுத்து புஜாரா வெளியேறினார்.
அவர் 13 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
பின்னர் ரோகித் சர்மாவுடன், சுரேஷ்
ரெய்னா இணைந்தார். இருவரும் பொறுப்புடன்
விளையாடி அரை சதத்தை கடந்தனர். 30.5
ஓவர்களில் இந்திய
அணி வெற்றி இலக்கை எட்டியது. ரோகித்
சர்மா 64 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 65
ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல்
இருந்தனர். இதனால் இந்திய அணி 9 விக்கெட்
வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது.
இதன்மூலம் இந்திய அணி 5 போட்டிகள்
கொண்ட இந்த தொடரில் 4-0 என்ற புள்ளிக்
கணக்கில்
தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

[Continue reading...]

சேலத்தில் பாரதீய ஜனதா பிரமுகர் வெட்டிக் கொலை

- 0 comments
சேலம் கன்னங்குறிச்சி 6–வது வார்டு பகுதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 47). பாரதீய ஜனதா கட்சியில் மாவட்ட விவசாய அணி தலைவராக உள்ள இவர் கட்சி நடத்தும் அனைத்து கூட்டங்களிலும், போராட்டங்களிலும் ஆர்வமாக கலந்து கொள்வார்.
இவர் கன்னங்குறிச்சி காந்தி சிலை அருகே கறிக்கடையும் வைத்து உள்ளார். இவருக்கு சொந்தமான நிலம் கன்னங்குறிச்சி புது ஏரிக்கரை அருகே உள்ளது. இன்று காலை 11 மணிக்கு முருகன் தன்னுடைய நிலத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது 10 பேர்கொண்ட கும்பல் அங்கு வந்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சேலம் அரசு மோகன்குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து போனார்.
[Continue reading...]

ரோஷினி மீது ஒருதலை காதல்

- 0 comments

ஒருதலை காதலில் கல்லூரி மாணவியை கோடாரியால் வெட்டிய டெல்லி மாணவன் விஷம் குடித்து தற்கொலை

புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஆகாஷ்(23) என்ற மாணவர் ரோஷினி(22) என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 

அவரது காதலை ரோஷினி ஏற்றுக்கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆகாஷ் நேற்று காலை 11 மணியளவில் ரோஷினியை வெறித் தனமாக கோடாரியால் வெட்டினார்.

படுகாயமடைந்த ரோஷினி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதை கண்ட ஆகாஷ் விஷத்தை குடித்துவிட்டு கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்.

இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஆகாஷிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கி, கோடாரி, கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ரோஷினியையும் ஆகாஷையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். ரோஷினியின் உடல்நிலை தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger