Monday 29 July 2013

தெலுங்கானா அறிவிப்பு இன்று மாலை துணை ராணுவம் ஆந்திரா விரைந்தது

- 0 comments
ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. அதில் தெலுங்கானாவுக்கு ஒப்புதல் பெறப்படும்.
இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி, துணை முதல்– மந்திரி தாமோதர் ராஜா நரசிம்மா, மாநில காங்கிரஸ் தலைவர் போட்சா சத்திய நாராயணா ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்கள் இன்று காலை ஐதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இந்த கூட்டத்தில் தெலுங்கானா பற்றிய அனைத்து அம்சங்களும் விவாக்கப்பட உள்ளது. பிறகு தெலுங்கானா மாநிலம் அமைக்க தீர்மானம் கொண்டு வரப்படும். இதை யடுத்து தெலுங்கானா மாநிலம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றே வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா மாநிலம் உருவாவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டதால் ஆந்திராவில் இதுவரை இல்லாத அளவுக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடலோ ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில் நேற்றே பல இடங்களில் போராட்டங்கள் தொடங்கிவிட்டது. மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வீடு முன்பு பொதுமக்களும், மாணவர்களும் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விசாகப்பட்டினத்தில் மத்திய மந்திரி புரந்தேஸ்வரி வீடு முன்பும், எலுருவில் மத்திய மந்திரி கே.எஸ்.ராவ் வீடு முன்பும், விஜயவாடாவில் மத்திய மந்திரி ராஜகோபால் வீடு முன்பும் மாணவர்கள் இன்று ஆயிரக்கணக்கில் திரண்டு ஒன்றுபட்ட ஆந்திரா நீடிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் போராட் டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தலைநகர் ஐதராபாத்திலும் இன்று ஆந்திரா பிரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் வெடித்தது. இதனால் ஆந்திராவில் குறிப்பாக கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் அறிவிப்பு வெளியான பிறகு ஆந்திராவில் போராட்டங்கள் பெரிய அளவில் நடைபெறலாம். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை நேரடியாக தலையிட்டு ஆந்திராவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறது.
மத்திய உள்துறை மந்திரி சுசீல்குமார் ஷிண்டே ஆந்திரா தலைமை செயலாளர் மற்றும் டி.ஜி.பி.யை இன்று காலை தொடர்பு கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பி வைக்க ஏற்பாடுள் நடந்து வருகிறது.
ஆந்திராவில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் தவிர ஆந்திராவின் பல பகுதிகளிலும் சுமார் 1200 துணை நிலை ராணுவ வீரர்களை மத்திய அரசு நிறுத்தி இருந்தது. நேற்று கூடுதலாக 1000 ராணுவ வீரர்கள் ஆந்திரா விரைந்தனர்.
கடலோர ஆந்திரா மாவட்டங்களில் போராட்டம் வலுப்பதால் மேலும் 20 கம்பெனி ராணுவப்படை வீரர்கள் ஆந்திராவுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். அந்த 20 கம்பெனி படையில் திபெத் எல்லைப் படை வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதிகளில் முக்கிய நகரங்களில் நிறுத்தப்படுவார்கள்.
ஐதராபாத் நகரில் கர்நாடகா ஆயுதப்படை போலீசார் 200 பேரும், தமிழக ஆயுதப்படை போலீசார் 100 பேரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஐதராபாத்தில் உள்ள முக்கிய நிலை களை பாதுகாக்கும் பொறுப்பு இவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர அதிரடிப்படையும் ஆந்திராவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளம், விஜி நகரம், விசாகப்பட்டினம், கிருஷ்ணா மாவட்டங்களில் அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். சீமந்திரா மண்டலத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
[Continue reading...]

இடிந்தகரை மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற சீமான் உண்ணாவிரதம்

- 0 comments
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– 
கூடங்குளம் அணு உலையை இயக்குவதற்கு முன்னர், அணு உலைகளுக்கு எதிராக அங்கு போராடிவரும் மக்கள் மீது தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடை முறைப்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூடங்குளம் அணு உலைகள் தங்கள் வாழ்விற்கும், வாழ்வாதாரங்களுக்கும், எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்பதனாலேயே அதனை எதிர்த்து இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் அறவழியில் கடந்த 700 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அப்படிப்பட்ட மக்களின் மீது நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தது என்பது போன்ற மிகக்கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
[Continue reading...]

சென்னை யில் வேலை செய்யும் பெண்களின் நிலமை ? - கற்பழித்த கொல்லப்பட்ட பெண்

- 0 comments
தயவுசெய்து இதனை பகிருங்கள்
உண்மை சம்பவம் ... முழுவதும்
படித்துவிட்டு அனைவரும் பகிரவும்! ! ! !
....குழி தோண்டி புதைக்கப்படும் உண்மைகள்...
சென்னை தி.நகரில் உள்ள சரவணா மற்றும்
ஜெயசந்திரன் குழுமங்களில்
வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில்
தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும்
பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும்
நடத்தபடுகின்றனர
பெரும்பாலான பெண்கள்
[Continue reading...]

2015 ஆம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் அட்டவணை

- 0 comments

11-வது உலக கோப்பை ஒருநாள்
போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
(ஐ.சி.சி) அனுமதியுடன்
ஆஸ்திரேலியா மற்றும்
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள்
இணைந்து நடத்துகிறது. இந்த போட்டி 2015-
ம் ஆண்டில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில்
நடைபெறுகிறது.
14 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியின் லீக்
மற்றும் நாக்-அவுட் ஆட்டங்கள்
ஆஸ்திரேலியா மற்றும்
நியூசிலாந்து நாடுகளில் சரிசமமான
எண்ணிக்கையில் நடைபெறும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்
இடம் பெறும் பிரிவுகள், அணிகள் மோதல்
அட்டவணை, ஆட்டங்கள் நடைபெறும் இடம்
ஆகியவை குறித்து சர்வதேச கிரிக்கெட்
கவுன்சில் மற்றும் ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள்
கலந்து ஆலோசித்து முடிவு செய்து இருக்கின்றன.
போட்டி அட்டவணை வெளியிடும்
நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை)
ஒரே நேரத்தில் மெல்போர்ன் (ஆஸ்திரேலியா),
வெலிங்டன் (நியூசிலாந்து) ஆகிய இடங்களில்
நடைபெறுகிறது. இந்திய
நேரப்படி அதிகாலை 5.30
மணிக்கு அட்டவணை வெளியாகிறது.
அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சியில்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கிரிக்கெட்
வாரிய நிர்வாகிகள், இன்னாள் மற்றும்
முன்னாள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மெல்போர்னில் நடைபெறும்
அட்டவணை அறிவிப்பு நிகழ்ச்சியில் ஐ.சி.சி.
துணைத்தலைவர் முஸ்தபா கமால்,
தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன்,
உள்ளூர் போட்டி அமைப்பு குழு சேர்மன்
ரால்ப் வாட்டர்ஸ், தலைமை செயல்
அதிகாரி ஜான் ஹார்டென் ஆகியோரும்,
வெலிங்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில்
ஐ.சி.சி.தலைவர் ஆலன் ஐசக்,
நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர்
தெரஸ் வால்ஷ் ஆகியோர் பங்கேற்பார்கள்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

[Continue reading...]

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 96 உயர்வு ரூ.21 ஆயிரத்தை தாண்டியது gold rate again increased 21 thousands

- 0 comments
சில மாதங்களாக ஜெட் வேகத்தில் விர்ரென உயர்ந்த தங்கம் விலை ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்தை தொட்டது. பின்னர் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக கடந்த ஜூன் மாதம் 28–ந்தேதி ஒரு பவுன் ரூ. 19 ஆயிரத்து 168 ஆக குறைந்தது.


பிறகு படிப்படியாக அதிகரித்து கடந்த 26–ந்தேதி ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 984 ஆனது. இந்த நிலையில் இன்று பவுனுக்கு மேலும் ரூ.96 உயர்ந்தது.
அதன் மூலம் பவுன் மீண்டும் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 80 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.12 அதிகரித்து ரூ.2635–க்கு விற்கிறது.


தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதே முக்கிய காரணமாக கருதப் படுகிறது.
வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.650 அதிகரித் துள்ளது. ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 710 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.60 ஆகவும் உள்ளது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger