Saturday 14 December 2013

Today comedy - ஊழலற்ற ஆட்சிக்கு உத்தரவாதம் அளித்ததால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு: ஷிண்டே Shinde says that Congress supporting for AAP as promised a non corrupt government

- 0 comments

Today comedy : ஊழலற்ற ஆட்சிக்கு உத்தரவாதம் அளித்ததால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு: ஷிண்டே Shinde says that Congress supporting for AAP as promised a non corrupt government

பெங்களூர், டிச. 14-

டெல்லியில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்த ஆதரவை ஏற்பது பற்றி முடிவு செய்வதற்கு முன்பாக, தனது பிரச்சாரத்தின்போது முன்வைத்த வாக்குறுதிகள் மற்றும் டெல்லியின் தான் எழுப்பிய பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக காங்கிரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆதரவு கொடுத்தபோதும் ஆட்சியமைக்காத அரவிந்த் கெஜ்ரிவால் மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்தது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்திற்கு வந்து, தூய்மையான அரசை வழங்க விரும்பியது. தூய்மையான மற்றும் ஊழலற்ற அரசாங்கம் பற்றி பேசியதால் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவு செய்திருக்கிறது.

இந்த வாய்ப்பை ஆம் ஆத்மி கட்சி நிராகரித்தால் அரசியலமைப்பு அதிகாரம் அதன் மீது முடிவு எடுக்கும். ஆம் ஆத்மி உறுப்பினர்கள் கவர்னரை சந்தித்த பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும். இதுதொடர்பாக கவர்னரை நான் சந்தித்து ஆலோசிக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
...

Shinde says that Congress supporting for AAP as promised a non corrupt government

[Continue reading...]

நடிகை ராதாவிடம் மோசடி: தொழில் அதிபர் பைசூல் பாஸ்போர்ட் முடக்கம் Actress Radha and cheating entrepreneur passport confiscate faizal

- 0 comments

Img நடிகை ராதாவிடம் மோசடி: தொழில் அதிபர் பைசூல் பாஸ்போர்ட் முடக்கம் Actress Radha and cheating entrepreneur passport confiscate faizal

'சுந்தரா டிராவல்ஸ்', 'அடாவடி', 'மானஸ்தன்' உள்ளிட்ட படங்களில் நடித்த ராதா சினிமா பைனான்சியர் பைசூல் மீது பரபரப்பான புகார் கூறினார். ஐந்து ஆண்டுகள் இருவரும் கணவன்–மனைவியாக வாழ்ந்தோம் என்றும் தற்போது தன்னிடம் ரூ.50 லட்சத்தை மோசடி செய்து விட்டார் என்றும் பைசூல் மீது ராதா குற்றம் சாட்டி உள்ளார்.

படுக்கையறை காட்சிகளை படம் பிடித்து மிரட்டுவதாகவும் கூறினார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இது தொடர்பாக மனு அளித்து நடவடிக்கை எடுக்க கோரினார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைசூலிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ராதா தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறுகிறார் என்றார்.

ராதா பற்றிய ரகசியங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் அறிவித்தார். போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க சென்னை செசன்ஸ் கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு இரண்டு முறை மனு தாக்கல் செய்தார். அவை தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து ராதா மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனரிடம் மீண்டும் புகார் அளித்தார். பைசூல் சாட்சிகளை கலைக்கவும், என் மேல் பொய் புகார் அளிக்கவும் முயற்சிக்கிறார் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் வடபழனி போலீசார் நேற்று பைசூலுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். பைசூல் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை முடக்கினர். பைசூல் உறவினர்களிடமும் விசாரணை நடத்தினார்கள். பைசூலை விரைவில் கைது செய்யவும், தீவிரம் காட்டுகிறார்கள். அவர் தலைமறைவாக இருக்கும் இடத்தை கண்காணித்து வருகிறார்கள். சில தினங்களில் பைசூல் கைதாவார் என போலீசார் தெரிவித்தனர்.
...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger