Saturday 28 September 2013

நயன்தாராவை நான் காதலிக்கவே இல்லை nayanthara aarya love news

- 0 comments

நயன்தாராவை நான் காதலிக்கவே இல்லைங்க.. வீட்ல பொண்ணு பாக்கிறாங்க!

– ஆர்யா
by abtamil
.. - Tamil newsToday,
சென்னை: நயன்தாராவை நான் காதலிக்கவே இல்லை. வீட்டில் எனக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிசுகிசுக்கள் வருகின்றன. இருவரும் நடித்த முதல் படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இப்போது ராஜாராணி படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். நயன்தாராவுடன் இணைத்து தொடர்ந்து வெளியாகும் கிசுகிசுக்களுக்கு ஆர்யா அளித்துள்ள விளக்கத்தில், "ரொம்ப நாளா என்னையும் நயன்தாராவையும் இணைச்சி கிசுகிசுக்கள் வந்துக்கிட்டிருக்கு. குறிப்பா நயன்தாராவுக்கும், எனக்கும் திருமணம் என ராஜா ராணிக்காக அழைப்பிதல் வெளியிட்டதில் இருந்து எங்களை இணைத்து வதந்திகள் அதிகமாக பரவி வருகின்றன.

கணவன் – மனைவியாக ராஜா ராணி படத்தில் நாங்கள் கணவன்-மனைவியாக நடிக்கிறோம். எனவே படத்தை விளம்பரப்படுத்த அழைப்பிதழ் அச்சிட்டு வெளியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நயன்தாராவிடம் பேசி அவரது அனுமதியும் பெற்றுத்தான் அழைப்பிதழ் வெளியிட்டோம்.
நயன்கோபமாக இருக்கிறார் என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை. நயன்தாரா என்னுடன் நடித்த சக நடிகை. அந்த வகையில் எனக்கு அவருடன் தொடர்பு உள்ளது. எங்களுக்குள் இருப்பது நட்புதான். அதை தாண்டி எந்த உறவும் இல்லை.
வீட்டில் பெண் பார்க்கிறார்கள் எனக்கு திருமணத்துக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். அவர்கள் பார்க்கும் பெண் எனக்கு பிடித்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்.
6 ஆண்டுகள் காதலித்தேன் பள்ளியில் படித்த போது ஒரு பெண்ணை காதலித்தேன். ஆறு வருடம் இந்த காதல் இருந்தது. படிப்பு முடிந்து வெளியே போனதும் அது மறந்து போய்விட்டது.

ராஜா ராணி ராஜா ராணி படம் தமிழ் கலாசாரத்துக்கு எதிரானது என்பதில் உண்மை இல்லை. தமிழ் பண்பாட்டை அவமதிக்கும் காட்சிகள் எதுவும் கிடையாது. ஜாலியான காமெடி படமாக இருக்கும்.

இரட்டை கதாநாயகர்கள் படம் இரு கதாநாயகர்களை உள்ளடக்கிய கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உள்ளம் கேட்குமே படத்தில் இருந்து இரண்டு ஹீரோ படங்களில் நடித்து வருகிறேன். திறமையான இயக்குநர் அமைந்தால் அது போன்ற படங்களில் தாராளமாக நடிக்கலாம்.

அஜீத்துடன் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடிக்கிறேன். அவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

பாலா படத்திலிருந்து நீக்கமா? பாலா எடுக்கும் புதிய படத்தில் இருந்து என்னை நீக்கி விட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அவர் என்னை அணுகவே இல்லை. ஏற்கனவே இரண்டு படங்களில் என்னை நடிக்க வைத்ததே பெரிய விஷயம்.

Show commentsOpen link

[Continue reading...]

சிறுமிகளிடம் சுகம் அனுபவிக்க 80 ஆயிரம் இத்தாலியர்கள் ஆண்டுதோறும் வெளிநாடு பயணம் 80 thousand Italians fly abroad to have pleasure with children

- 0 comments

சிறுமிகளிடம் சுகம் அனுபவிக்க 80 ஆயிரம் இத்தாலியர்கள் ஆண்டுதோறும் வெளிநாடு பயணம் 80 thousand Italians fly abroad to have pleasure with children

Tamil NewsYesterday,

ரோம், செப். 29-

சிறுமிகளிடம் உடல் சுகம் அனுபவிக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகளாவிய அளவில் சிறுமிகள் கடத்தப்படுவதும், அவர்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதும் பெருகிக்கொண்டே வருகிறது. உலகின் ஏதாவது ஒரு மூலையில் இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை யாராவது ஒரு சிறுமி பாலியல் கொடுமைக்குள்ளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது.

ஏழ்மை மிகுந்த நாடுகளில் வசிக்கும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் நோக்கில் பல சமூக விரோதிகள் கடத்தி வந்து பணம் சம்பாதிப்பது எல்லாம் பழைய நடைமுறையாகி விட்டது.

இதில் புதிய பரிணாமத்தை இத்தாலியர்கள் தற்போது எட்டியுள்ளனர். முன்னேறிய நாடான இத்தாலியில் கூட சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்துவதும், சிறுமிகள் தாராளமாக கிடைக்கும் வெளிநாடுகளுக்கு இத்தாலியர்கள் செக்ஸ் சுற்றுலா செல்வதும் தற்போது வெகுவாக அதிகரித்து வருகிறது.

இவ்வகையில், ஆண்டுதோறும் சுமார் 80 ஆயிரம் இத்தாலியர்கள் உடல் சுகத்துக்காக சிறுமிகளை தேடி வெளிநாடுகளுக்கு செக்ஸ் சுற்றுலா சென்று வருவதாக எக்பட் இட்டாலியா என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்நிறுவனத்துக்கு 70க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளை அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
...
Show commentsOpen link

[Continue reading...]

உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தேர்வு MISS PHILIPPINES MEGAN YOUNG CROWNED MISS WORLD 2013

- 0 comments

உலக அழகியாக மிஸ்.பிலிப்பைன்ஸ் தேர்வு MISS PHILIPPINES MEGAN YOUNG CROWNED MISS WORLD 2013

Tamil NewsYesterday,

பாலி, செப். 29-

இந்தோனேசிய நாட்டின் பாலியில் உள்ள நாசா துவா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்ற உலக அழகி இறுதிப் போட்டியில் மிஸ். பிலிப்பைன்ஸ் பட்டம் பெற்ற மேகன் யங் 2013 ஆம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 127 போட்டியாளர்களை சந்தித்து மேகன் யங் இந்த முதலிடத்தைப் பெற்றுள்ளார். சென்ற வருடத்தின் உலக அழகியான சீனாவின் யூ வென்சியா இவருக்கு உலக அழகியாக முடி சூட்டினார். மிஸ் பிரான்ஸ் அழகியான மரைன் லோர்பலின் முதல் ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார். கானா நாட்டு அழகியான கரன்சார் நா ஒகைலி ஷூட்டார் இரண்டாவது ரன்னர்-அப் பரிசினைப் பெற்றார்.

இவர்கள் தவிர பியூட்டி வித் பர்பஸ், மல்டிமீடியா, பீப்பிள்ஸ் சாம்பியன், பீச் பேஷன், ஸ்போர்ட்ஸ் அன்ட் பிட்நெஸ்,டேலன்ட் காம்படிஷன் மற்றும் டாப் மாடல் போன்ற பல பிரிவிலும் அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான நீதிபதிகள் குழுவில் உலக அழகிப் போட்டி அமைப்பின் தலைவி ஜூலியா மோர்லே, இந்தோனேசிய அழகிப் போட்டி அமைப்பின் தலைவி லிலியானா தனோசோடிப்ஜோ, டைம்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் ஜெயின் போன்றோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தப் போட்டி உலகின் கண்கவர் இடங்களில் ஒன்றான இந்தோனேசியாவில் நடந்தது. அழகிய கடற்கரைகள், பிரமிப்பூட்டும் கோவில்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள் கொண்ட பாலி தீவில் களிப்பூட்டும் இந்தக் கோலாகலமான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் போட்டிகளை உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு களித்தனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

அமெரிக்காவில் பரபரப்பு நடுவானில் பைலட் மாரடைப்பால் சாவு 161 பயணிகள் உயிர் தப்பினர் amrica pilot dead 161 passengers safe

- 0 comments

அமெரிக்காவில் பரபரப்பு நடுவானில் பைலட் மாரடைப்பால் சாவு 161 பயணிகள் உயிர் தப்பினர்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

இடாக்:நடுவானில் பறந்த போது விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்டு பைலட் இறந்தார். மற்றொரு பைலட் சாமர்த்தியமாக விமானத்தை அவசரமாக தரையிறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 161 பயணிகளும் உயிர் தப்பினர். அமெரிக்காவில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் இருந்து வாஷிங்டன் ஷீட்டல் கடற்கரை நகருக்கு போயிங் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. அதில் 161 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்த போது பைலட்டுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரால் தொடர்ந்து விமானத்தை ஓட்டி செல்ல முடியவில்லை. விவரம் அறிந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடன் இருந்த மற்றொரு பைலட் விமானத்தை சாமர்த்தியமாக ஓட்டி, போயிஸ் டார்மாக் ஏர்போர்ட்டில் அவசரமாக தரையிறக்கினர்.

அங்கு மருத்துவ குழுவினர் விரைந்து வந்து பைலட்டை மீட்டு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். எனினும் செயின்ட் அல்போன்ஸ் மண்டல மருத்துவ மையத்தில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். மாரடைப்பால் இறந்த பைலட் டெக்சாசை சேர்ந்த ஹென்றி ஸ்லம் (63) என்பது தெரிய வந்தது. அமெரிக்க விமானத்தில் 26 ஆண்டுகள் பைலட்டாக பணியாற்றி உள்ளார். விமானம் தரையிறங்கியதும் அதில் இருந்த பயணிகள் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Show commentsOpen link

[Continue reading...]

ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி பரிதாப சாவு: பெற்றோர் கதறல் aarani near tube well recovered child death

- 0 comments

ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில்
இருந்து மீட்கப்பட்ட சிறுமி பரிதாப
சாவு: பெற்றோர் கதறல் aarani near tube
well recovered child death

28 Sep 13 11:35:30 AM by Tamil | Tags : தினசரி செய்திகள் , Daily News

ஆரணி, செப். 28-
ஆரணி அடுத்த
புலவன்பாடி கிராமத்தைச் சேர்ந்த
பழனி-மலர்க்கொடி தம்பதியரின் மகள்
தேவி (வயது 7),
இன்று தனது பெற்றோருடன்
நிலத்துக்குக் சென்றார். அங்கு பக்கத்தில்
உள்ள சங்கர் என்பரின் நிலத்தில்
விளையாடிக் கொண்டிருந்த தேவி,
சாக்குப்பை போட்டு மூடி வைத்திருந்த
ஆழ்துளை கிணற்றில்
தவறி விழுந்தாள்.
இதுபற்றி தகவல் அறிந்த களம்பூர்
ஆரணி தீயணைப்பு படையினர்
விரைந்து வந்து சிறுமியை மீட்கும்
பணியில் ஈடுபட்டனர். 200 அடி ஆழம்
கொண்ட ஆழ்துளை கிணற்றின் 20
அடியில்
சிறுமி சிக்கியிருந்தது தெரியவந்தது.
முதற்கட்டமாக அவள் இருக்கும்
இடத்திற்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
உள்ளே இருந்து சிறுமியின் குரல்
கேட்டதால், பக்கவாட்டில் பொக்லைன்
எந்திரம் மூலம் குழிதோண்டி மீட்க
முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
வேறு சில உபகரணங்கள் கொண்டும்
முயற்சி செய்தனர்.
10 மணி நேரத்துக்கும் மேலாக
முயற்சி செய்து, பக்கவாட்டில்
குழிதோண்டி,
சிறுமி சிக்கியிருக்கும்
இடத்தை நெருங்கினர். பின்னர்
பக்கவாட்டில்
ஓட்டை போட்டு சிறுமியை பத்திரமாக
மீட்டனர்.
சிறுமி சுயநினைவை இழந்து இருந்ததால்,
தயாராக நிறுத்தப்பட்டிருந்த
ஆம்புலன்ஸ் மூலம்
ஆரணி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின்னர்,
மேல் சிகிச்சைக்காக வேலூர்
அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தேவிக்கு, நவீன மருத்துவ
கருவிகள் மூலம்
சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமியின்
உடல்நிலை பற்றி தெரிந்து கொள்வதற்காக
மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான
பத்திரிகையாளர்கள் திரண்டிருந்தனர்.
ஆனால்
சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக
உயிரிழந்தாள்.
இதுபற்றி வேலூர்
மருத்துவக்கல்லூரி முதல்வர்
சிவக்குமார் கூறும்போது,
''சிறுமியின் உடல் உறுப்புக்கள்
செயலிழந்ததால் சிகிச்சை பலன்
அளிக்கவில்லை. நீண்ட நேரம் குழிக்குள்
இருந்ததால் போதிய ஆக்சிஜன்
கிடைக்கவிலிலை" என்றார்.
10 மணி நேரம் போராடி மீட்டும்
உயிரைக் காப்பாற்ற முடியாமல்
போனதால், அந்த சிறுமியின் பெற்றோர்
கதறித் துடித்தனர். சிறுமி எப்படியும்
பிழைத்து விடுவாள்
என்று எதிர்பார்த்து மருத்துவமனை வளாகத்தில்
காத்திருந்தவர்கள் அனைவரும்
கண்கலங்கினர்.

[Continue reading...]

நந்தம்பாக்கத்தில் இளம்பெண் எரித்து கொலை young girl murder in nandambakkam

- 0 comments

நந்தம்பாக்கத்தில் இளம்பெண் எரித்து கொலை young girl murder in nandambakkam

Tamil NewsToday,

ஆலந்தூர், செப். 28–

பரங்கிமலையை அடுத்த நந்தம்பாக்கத்தில் மத்திய அரசின் நிறுவனமான 'ஐ.டி.பி.எல்.' குடியிருப்பு உள்ளது. நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் காவலாளி ரோந்து சென்றபோது குடியிருப்பு அருகே உள்ள முட்புதரில் கிணற்றின் அருகே தீ எரிந்து கொண்டிருந்தது.

அருகில் சென்று பார்த்த போது நிர்வாண நிலையில் இளம்பெண் உடல் எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பெண்ணின் உடல் முழுவதும் எரிந்து கரிக் கட்டையாக கிடந்தது. நகை எதுவும் இல்லை. அவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.

உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் இன்று காலை பிணம் கிடந்த முட்புதர் பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு கிடந்த கையுறை ஒன்றை கைப்பற்றினர். அது கொலையாளி பயன்படுத்தியதாக இருக்கலாம் என்று தெரிகிறது.

பெண் எரிக்கப்பட்ட இடம் ஆட்கள் நடமாட்டம் இல்லாத முட்புதர் நிறைந்த பகுதி ஆகும். எனவே விபசார அழகியை யாரேனும் அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்து விட்டு எரித்து கொன்று இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

பிணமாக கிடந்தவர் உடலில் நகை எதுவும் இல்லாததால் நகைக்காக அவரை மர்ம கும்பல் கடத்தி வந்து எரித்து கொன்றனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

நந்தம்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாயமான இளம்பெண்கள் குறித்த பட்டியலை சேகரித்து விசாரிக்கின்றனர். மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு அருகே இளம் பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

...
Show commentsOpen link

[Continue reading...]

ஆரணி அருகே 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம் Girl near Arni 300 feet fell down well firefighters struggle to recover

- 0 comments

ஆரணி அருகே 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமியை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராட்டம் Girl near Arni 300 feet fell down well firefighters struggle to recover

Tamil NewsToday,

ஆரணி, செப்.28-

ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு இங்கு ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. 300 அடி ஆழம் தோண்டியும் தண்ணீர் வரவில்லை. இதனால் குழாய் கிணற்றை சாக்கு பை கட்டி மூடியிருந்தனர். இவர்களது பக்கத்து நிலத்துகாரர் பழனி.

இவரது மனைவி மலர்கொடி பழனி தனது நிலத்துக்கு பயிரிப்பட்டு இருந்த மணிலாவை பறிப்பதற்காக தனது மனைவி மற்றும் 4 வயது மகள் தேவியுடன் இன்று காலை 7 மணிக்கு நிலத்துக்கு வந்தார். சிறுமி தேவி சங்கர் நிலம் அருகே விளையாடி கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு சாக்கு பையால் மூடிவைக்கப்பட்டு இருந்த 300 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழந்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடிவந்தனர். மகள் குழாய் கிணற்றில் தவறி விழந்ததை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து களம்பூர் ஆரணி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறுமி 30 அடி ஆழத்தில் உயிருடன் உள்ளார். அவரை உயிருடன் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆழ்துளை கிணறு பக்கவாட்டில் ஜேசிபி எந்திரம் மூலம் தோண்டும் பணி நடந்து வருகிறது.மேலும் களம்பூர் ஆரணி போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிறுமியுடன் குழாய் ஒலிபெருக்கி மூலம் பேசினர். சிறுமி தற்போது நலமாக உள்ளார்.

சிறுமியை உயிருடன் மீட்கும் வகையில் குழாய் கிணற்றுக்குள் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டு சிறுமி சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை கேள்விபட்டதும் அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் பதட்டத்துடன் கூடியுள்ளனர்.
...
Show commentsOpen link

[Continue reading...]

தொட்டு பார்க்க முயற்சித்த ரசிகர்! கோபத்தோடு வெளியேறினார்!ஐஸ்வர்யா! Ishwarya rai jewellery opening function

- 0 comments

தொட்டு பார்க்க முயற்சித்த ரசிகர்! கோபத்தோடு வெளியேறினார்!ஐஸ்வர்யா!

by abtamil
- Tamil newsToday,

லூதியானாவில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த ஐஸ்வர்யாவை தொட்டுப் பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் மொய்த்த காரணத்தால் தடுமாறி விழப்போனார் ஐஸ்வர்யா. இதனால் கோபம் கொண்டு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பைக்கூட கேன்சல் செய்து விட்டு வெளியேறினார் ஐஸ்வர்யா.

உலக அழகியாக தேர்வான பின்னர் சினிமாவில் நடித்து பிரபலமான ஐஸ்வர்யாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியாகவும், பிற நடிகர்களுடன் நெருக்கமாகவும் நடித்தவர் ஐஸ்வர்யா. ஆனால் குழந்தை பிறந்த பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை. மாறாக விளம்பரப்படங்களில் நடித்துவருகிறார்.

பிரபல நகைக்கடையில் பிராண்ட் அம்பாசிடராக உள்ள ஐஸ்வர்யாராய் கடை திறப்பு விழாவில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றார்.

ஐஸ்வர்யா ராய் வருவது தெரிந்ததும் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஐஸ்வர்யாராய் அந்த இடத்துக்கு வந்தததும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. செல்போனில் போட்டோ எடுக்க முண்டியடித்தனர்.

தற்போது ஐஸ்வர்யாராய் முன்னை விட பொலிவாக இருக்கிறார் என்று ரசிகர்களிடையே பேச்சு நிலவுகிறது. இதனால் சிலர் ஆர்வத்தில் ரசிகர்கள் ஐஸ்வர்யாவை தொட்டுப்பார்க்க அவர் மீது பாய்ந்தார்கள்.

இதனை எதிர்பார்க்காத ஐஸ்வர்யா தடுமாறி கீழே விழ இருந்தார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை தாங்கிப்பிடித்தனர்.

கோபம் அடைந்த ஐஸ்வர்யாராய் அங்கு ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு புறப்பட்டார்.

அந்த நிலையிலும் ஒரு நிருபர் ஐஸ்வர்யா முன்பு மைக்கை நீட்டவே, 'லுதியானாவுக்கு முதன்முறையாக வருகிறேன். ரசிகர்களின் அன்பு என் மீது பொங்கி வழிகிறது என்று கோபமாக பதில் அளித்தபடி காரில் ஏறி பறந்தார் 

Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger