Friday 1 November 2013

ஐ.நா. சபை கணக்காளர் குழுவின் பதவிக்கு இந்திய தலைமை கணக்காளர் தேர்வு Shashi kant sharma wins UN board of auditors elections

- 0 comments

ஐ.நா. சபை கணக்காளர் குழுவின் பதவிக்கு இந்திய தலைமை கணக்காளர் தேர்வு Shashi kant sharma wins UN board of auditors elections

நியூ யார்க், நவ. 2-

ஐக்கிய நாடுகள் சபையின் வரவு - செலவு கணக்குகளை சரிபார்க்கவும், ஐ.நா. சார்பில் நடத்தப்படும் திட்டங்கள் தொடர்பான செலவுகளை கண்காணித்து ஆண்டறிக்கையும், பரிந்துரையும் தாக்கல் செய்ய கணக்காளர்கள் குழு இயங்கி வருகிறது.

இந்த குழுவின் உறுப்பினர் பதவிக்கு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். ஐ.நா. சபையில் இணைந்துள்ள 186 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்து புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பார்கள்.

இம்முறை இப்பதவிக்கு இந்தியாவின் சார்பில் தற்போதைய இந்திய தலைமை கணக்காளராக பொறுப்பு வகிக்கும் சசி காந்த சர்மா போட்டியிட்டார்.

மோத்தம் உள்ள 186 வாக்குகளில் 124 வாக்குகளை பெற்ற சசி காந்த் சர்மா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு வேட்பாளரை விட 62 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

1-6-2014 அன்று இந்த புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் சசி காந்த் சர்மா, தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்.

...

shared via

[Continue reading...]

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் Today diwali festival celebration people

- 0 comments

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம் Today diwali festival celebration people

தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்தும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் பரிமாறியும் பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மயிலாப்பூர் காபலீஸ்வரர் கோவில், வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை இன, மத வேறுபாடின்றி கொண்டாடப்பட்டு வருகிறது. 

...

shared via

[Continue reading...]

பணவீக்கம் தொடர்ந்து சவாலாக இருக்கிறது: ப.சிதம்பரம் Inflated continues challenge pa Chidambaram

- 0 comments

பணவீக்கம் தொடர்ந்து சவாலாக இருக்கிறது: ப.சிதம்பரம் Inflated continues challenge pa Chidambaram

புதுடெல்லி, நவ. 1-

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பண வீக்கம் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக் குறை தொடர்வாக அவர் கூறியதாவது:-

நடப்பு கணக்கு பற்றாக்குறையைப் பொருத்தவரையில் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை இந்த ஆண்டு 60 பில்லியன் டாலராக இருக்கும். கடந்த ஆண்டு இது 88 பில்லியன் டாலராக இருந்தது.

பணவீக்கம் தொடர்ந்து சவாலாகவே இருந்து வருகிறது. ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக, பணவீக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நடப்பு ஆண்டு ஏற்றுமதி வளர்ச்சிப்பாதையில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

...

shared via

[Continue reading...]

இசைப்பிரியா வீடியோ தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன் The central Government must take action isaipriya Video jayanthi natarajan

- 0 comments

இசைப்பிரியா வீடியோ தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன் The central Government must take action isaipriya Video jayanthi natarajan

சென்னை, நவ. 1-

விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் பிடித்துச் சென்று கொலை செய்ததற்கான வீடியோ ஆதாரத்தை சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சியைப் பார்த்த பல்வேறு தலைவர்கள், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கொடூரமான போர்க்குற்றத்தில் ஈடுபட்ட  இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை வந்த மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஜெயந்தி நடராஜனிடம், இசைப்பிரியா தொடர்பான வீடியோ பற்றி நிருபர்கள் கேட்டனர். இதற்குப்பதில் அளித்த ஜெயந்தி நடராஜன், "இசைப்பிரியா பற்றிய வீடியோ உண்மை எனில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்பதே எனது கருத்து. தமிழர்களின் உணர்வுகளுக்கு பிரதமர் மதிப்பளிப்பார்" என்று தெரிவித்தார்.

...

shared via

[Continue reading...]

சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி 5 மாணவர்கள் கைது chennai congress office siege 5 student arrested

- 0 comments

சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி 5 மாணவர்கள் கைது chennai congress office siege 5 student arrested

சென்னை, நவ. 1–

இலங்கையில் வரும் 10–ந்தேதி முதல் 17–ந் தேதி வரை நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ள திட்ட மிட்டுள்ளார். இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிடப் போவதாக மாணவர்கள் அறிவித்தனர். இதையடுத்து சத்தியமூர்த்தி பவனில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சத்தியமூர்த்தி பவன் அருகே தடுப்பு வேலி அமைத்து போலீசார் நிறுத் தப்பட்டுள்ளனர். என்றாலும் தமிழ்நாடு மாணவர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சத்தியமூர்த்தி பவனை இன்று முற்றுகையிட போவதாக தகவல்கள் வெளியானது. இதனால் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண் காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பகல் 11 மணி அளவில் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சுமார் 10 மாணவர்கள் எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் வந்து இறங்கினார்கள். அங்கிருந்து கோஷம் போட்டப்படி சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட வந்தனர்.

உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

கார்த்திக் என்ற மாணவர் தலைமையில் 5 மாணவர்கள் கைதானார்கள். இதற்கிடையே சத்தியமூர்த்தி பவன் முற்றுகையிடப்படும் தகவல் அறிந்து காங்கிரஸ் தொண்டர்களும் சத்திய மூர்த்தி பவனில் குவிந்தனர்.

அவர்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger