Tuesday 10 February 2015

வாய் துர்நாற்றத்தை தவிர்க்க.. The most common cause of bad breath

- 0 comments

வாய் துர்நாற்றத்தை தவிர்க்க... நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேச முடியாது. ஏனெனில் அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியாக வாயை பராமரிக்காமல் இருப்பது மட்டுமின்றி, இன்னும் வேறு பல காரணங்களும் உள்ளன. ஆனால் அந்த காரணங்களைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துர்நாற்றம் அடிப்பதற்கு வாய் வறட்சியும் ஒரு காரணம். பொதுவாக இந்த நிலையானது வாயின் வழியாக சுவாசிக்கும் போது ஏற்படும். இப்படி வறட்சி அடைவதால், வாயில் உள்ள எச்சில் வறண்டு துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே எப்போதும் மூக்கின் வழியாக சுவாசித்துப் பழகுங்கள். மௌத் வாஷ் பயன்படுத்தினால் வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால் சரியான மௌத் வாஷ் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஆல்கஹால் குறைவாக உள்ள மௌத் வாஷ்களை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மூக்கு ஒழுகல்: சளி அல்லது மூக்கு ஒழுகல் இருந்தால், மூக்கின் வழியாக சுவாசிக்க முடியாமல், வாயின் வழியாக சுவாசிப்போம். மேலும் காய்ச்சல் இருந்தால் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருக்கும். காலை உணவு: பெரும்பாலானோர் காலையில் அலுவலகத்திற்கு நேரம் ஆகிவிட்டது என்று காலை உணவை உட்கொள்ளாமல் செல்வார்கள். ஆனால் காலை உணவை சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தாலும், வாய் துர்நாற்ற பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். எனவே சரியான வேளையில் உணவுகளை உட்கொண்டு வர வேண்டும். கார்போஹைட்ரேட் குறைவான உணவு: டயட் என்ற பெயரில் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தாலும், வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே சரியான முறையில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்து வாருங்கள். ஆல்கஹால்: ஆல்கஹால் பருகி னாலேயே நாற்றம் வீசும். ஏனெனில் ஆல்கஹால் வாயை வறட்சியடையச் செய்து, வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கிறது. ஆகவே ஆல்கஹால் பருகுவதை நிறுத்துங்கள். உணவில் சேர்க்கும் பொருட்கள்: உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சாப்பிட்டால் கூட, வாய் துர்நாற்றம் வீசும். ஆகவே இத்தகைய உணவுப் பொருட்களை உட்கொண்ட பின்னர் புதினா அல்லது சோம்பை வாயில் போட்டு மெல்லுங்கள். வாய் துர்நாற்றம் வீசாமல் இருக்கும். தண்ணீர்: தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அப்படி போதிய அளவில் தண்ணீரை குடிக்காமல் இருந்தால், அது கூட வாய் துர்நாற் றத்தை ஏற்படுத்தும். மேலும் தண்ணீரானது வாய் வறட்சியை தடுப்பதுடன், எச்சில் உற்பத்தியை அதிகரிக்கும். கல்லீரல் கோளாறு: இன்னொரு காரணம் என்னவென்றால், கல்லீரலில் பிரச்னை இருந்தாலும், வாய் துர்நாற்றம் வீசும். எனவே வாயை நன்கு பராமரித்து வந்து, மேற்கூறியவற்றை பின்பற்றிய பின்னரும் வாய் துர்நாற்றம் அதிக அளவில் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் உடலில் அம்மோனியாவானது அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் தான் வாய் துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு சிகிச்சை அவசியம். The most common cause of bad breath

heart,kidney,health,greens,yoga,child care,pregnancy care,water,food habits,relationship,natural food,ayurvedic,herbal,baby care,teeth care,vitamins,blood pressure

[Continue reading...]
- 0 comments

1.       நயன்தாரா

நயன்தாரா தமிழில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறார். இவர் தமிழில் "ராஜா ராணி" மற்றும் "இது கதிர்வேலன் காதல்" ஆகிய வெற்றிப்படங்களில் நடித்ததன் மூலம் தனது முதலிடத்தை தக்க வைத்துள்ளார். தற்பொழுது இவர் தமிழில் ஐந்து படங்களில் பணியாற்றி வருகிறார். இவர் 2014ல் தமிழில் ஒரு படமும், பிற மொழிகளில் ஒரு படமும் நடித்திருந்தார். அவை மிகப்பெரிய வெற்றியை கொடுத்தன.

2.       சமந்தா

இவர் தமிழ் நடிகைகளின் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். சமந்தா தாம் குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் நடித்து தமிழ் திரைப்பட உலகில் தமக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். இவர் நடித்த திரைப்படமான "அஞ்சான்" தோல்வியை தழுவினாலும், அடுத்த படமான "கத்தி" மாபெரும் வெற்றியைத் தழுவியது. இவர் மேலும் "10என்றதுக்குள்ள" என்ற படத்தில் பணியாற்றி வருகின்றார்.

3.        ஹன்சிகா

இவர் தமிழ் நடிகைகளின் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 2014ல் 3 படங்களும் 2015ல் ஒரு படமும் நடித்துள்ளார். மேலும் 6 படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடித்த படங்களில் "அரண்மனை" மற்றும் "ஆம்பள" ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

4.       அனுஷ்கா

நடிகை அனுஷ்கா தமிழில் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். தெலுங்கு நடிகையான இவர் தமிழில் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தாலும் தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து முதலிடத்தியே பெற்றுள்ளார். இவர் தமிழில் 2014 மற்றும் 2015ல் மொத்தம் இரண்டு படங்களை நடித்துள்ளார். இவர் நடித்த "லிங்கா" படமானது சுமாரான வெற்றியைத்தழுவினாலும் "என்னை அறிந்தால்" மாபெரும் வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

5.       காஜல் அகர்வால்

இவர் தமிழ் நடிகைகளின் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஏனெனில் கடந்த வருடத்தில் நடிகை "காஜல் அகர்வாலுக்கு ஒரு படம் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. இதன் மூலம் தனது நடிப்பை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் மூலம் சினிமா நடிகைகளின் வரிசையில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

[Continue reading...]

உலகத்தின் ஒளிச்சுடர் எடிசன்

- 0 comments

ஒளிச்சுடர் :-எடிசன் உலகத்தின் ஒளிவிளக்கு ;நீ அன்று இந்த ஒளியை காணாது இருந்தால் நாங்கள் இருட்டிலே உலகை தேடி கொண்டு இருந்து இருப்போம் ;மனித உலகத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு நாயகனே; உனக்கு தான் சிலைகள் இல்லை

[Continue reading...]

People wave இது தான் உண்மையான மக்கள் அலை !

- 0 comments

 

இது தான் உண்மையான மக்கள் அலை! மோடி அலையெல்லாம் எதுவுமில்லை.. அரவிந்த்க்கு வரலாறு மற்றொரு சிறப்பான வாய்ப்பை கொடுத்திருக்கிறது.. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டாரென்றால் இளைய தலைமுறைக்குஅரசியலுக்குள் நுழைவதற்கான மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கும் அது.. not Narendra Modi wave.. this only people wave...

 

[Continue reading...]

முதல் அடியே மரண அடியாக BJP Delhi status

- 0 comments

எட்டு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் 7 நாடாளுமன்ற தொகுதிகளையும் பாரதிய ஜனதா அளித்த வாக்காளர்கள் தற்போது, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட அளிக்கவில்லை. எட்டு மாதங்களாக இந்துத்துவா அமைப்புகள் தெரிவித்த கருத்துகள், அதற்கு மோடியின் மவுனம், பெரிய மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது போன்றவை இந்த படுதோல்விக்கு காரணமாகியுள்ளது. முதல் அடியே மரண அடியாக உள்ளது. இனியாவது பேச்சு மட்டும் இல்லாமல் செயல்பட வேண்டிய நேரம். காங்கிரசிற்கு மாற்றாக தான் மராட்டியம், ஹரியானா மாநிலங்களில் பாரதிய ஜனதாவை தேர்ந்தெடுத்தார்கள் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

 

[Continue reading...]

New Delhi political news புது டெல்லி அரசியல்

- 0 comments

Karikalan Karkki புது டெல்லி அரசியல் வரலாற்றில் ஏழாவது முதல்வராக கெஜ்ரிவால் பதவி ஏற்க உள்ளார்.அதுபோல் காங்கிரஸ் பிஜேபி அல்லாத முதல் ஆட்சி டெல்லியில் மலர இருக்கிறது. முன்பு 49 நாட்கள் மட்டுமே தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவரால் ஆட்சி புரிய முடிந்தது.அப்போது அவர் எடுத்த தவறான முடிவுக்காக திறந்த மனத்தோடு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.மக்கள் அதை ஏற்று மறுவாய்ப்பு அளித்துள்ளனர். இத்தேர்தலில் காங்கிரசின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துவிட்டது பரிதாபத்துக்குரியது.இம்முறை முஸ்லீம் வாக்காளர்கள் காங்கிரசைப் புறக்கணித்து ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளனர். மோடி அணிந்த விலை உயர்ந்த சூட்கள் மக்களிடம் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.மாறாக மப்ளர் அணிந்த கெஜ்ரிவாலின் நடுத்தர வர்க்கத் தோற்றமோ மக்களிடம் ஆதரைப் பெற்றது. மேலும் கலகக்காரர் என்கிற இமேஜையும் இந்த தேர்தலின் மூலம் கடந்து வந்திருக்கிறார்.பிரச்சாரத்தில் எங்கும் தன் பழைய சகாவான பேடியை அவர் விமர்சிக்கவே இல்லை.மதத்தை தேர்தல் பிரச்சனையாக்காமல் தவிர்த்ததும் புத்திசாலித்தனமான முடிவு. புது டெல்லியில் 75% சதவீத வாக்குகளைப் பெற்று புதியசாதனை படைத்திருக்கும் கெஜ்ரிவால்மக்களின் நம்பிக்கையைப் பாதுகாக்க வேணடும் என்பதே நம் விருப்பம். காத்திருப்போம்.

 

[Continue reading...]

Tamil Doctor Jokes அவர் ஒரு போலி மருத்துவர்

- 0 comments

 

நண்பர் 1: மச்சி அவரு ஒரு போலி டாக்டர்தா !!!!

நண்பர் 2: எதவச்சு அப்படி சொல்லுற மாமு ???

நண்பர் 3: இல்லடா நோயாளிகளின் blood test , 

 

urine test எல்லாம் திருத்த அனுபவம் வாய்ந்த 

 

ஆசிரியர் தேவை என்று விளம்பரம் போடிருக்கார்டா !!!

 

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger