Friday 22 March 2013

மார்பகங்களின் அளவு மற்றும் செயல்பாடு உணவுப் பழக்கம் பொறுத்து மாறுபடும்

- 0 comments

உயிர் வாழத் தேவையான வெப்பத்தை தன் உடலில் உற்பத்தி செய்து கொள்ளும் உயிரினங்கள் வெப்ப இரத்தப் பிராணிகள் எனப்படுகின்றன. இந்த
வகையில் 29 தொகுதிகளில் மொத்தம் 5400 உயிரினங்களை நவீன அறிவியல் பட்டியலிட்டிருக்கிறது.   

இந்த பட்டியலில் மனிதனும் ஒருவன். இந்த உயிரினங்களுக்கு இருக்கும் மற்றொரு பொது அம்சம், இவை யாவும் பாலூட்டிகள் என்பதே.
பாலூட்டுதல் அல்லது முலையூட்டுதல் எனப்படும் இந்த செயலே ஒரு உயிரினம் வாழையடி வாழையாய் பிழைத்துக் கிடப்பதில் பெரும்பங்கு
வகிக்கிறது.

இந்த செயலுக்கான மனித உறுப்பான மார்பகம் பற்றிய சில புரிதல்களோடு, சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வொன்றினையும் பகிர்வதே இந்த பதிவின்
நோக்கம்.

பிறந்த குழந்தைக்கு பாலூட்டுவதே மார்பகங்களின் செயல்பாடு. இவற்றின் அளவு பரம்பரை உடல் வாகு மற்றும் உணவுப் பழக்கம் பொறுத்து
மாறுபடும். எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும்.

இடது புற மார்பகத்தின் கீழே இதயம் அமைந்திருப்பதால் இடது மார்பகம் வலப்பக்கத்தை விட பெரியதாக தெரியும். கீழே உள்ள படம் மார்பகத்தின்
குறுக்கு வெட்டுத் தோற்றம்.

ஒருவரின் மார்பக அளவு பெரிதாகவும், சிறியதாகவும் தெரிய அங்கே சேர்ந்திருக்கும் கொழுப்புதான் காரணம் என்பதை மேலே உள்ள படத்தில்
இருந்து எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
மருத்துவ மொழியில் சொல்வதானால் பாலை உற்பத்தி செய்துதரும் நொதியங்களையும், திசுக்களையும் உள்ளடக்கிய தசைக் கோளமே மார்பகம்.
தாய்மையின் அம்சமான இந்த உறுப்பினை மற்றெந்த உடல் உறுப்புகளைப் போல கருதிடாமல் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகுவது வாழ்வியல்
முரண்பாடுகளில் ஒன்று.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரையிலும் கூட இறுக்கமான மார்க்கச்சை அணியும் பழக்கம் தமிழரிடம் இல்லை. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த
வெள்ளையர்கள் குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டி உடலின் மீது பல அடுக்கு ஆடைகளை அணிந்தனர்.
அவர்களின் ஆதிக்கத்தில் வந்த பின்னர் நாமும் நாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான உள்ளாடைகள், அதன் மேல் ரவிக்கைகள் என அணிய
ஆரம்பித்தோம்.

இப்படி இறுக்கமான உள்ளாடைகளை பயன்படுத்துவதினால் உண்டாகும் மேலதிக வியர்வை காரணமாக நோய்த் தொற்று, தோல் பாதிப்புகள், அழுக்கு
சேர்தல், மார்பகத்தில் இரத்த ஓட்டம் தடைப் படுதல் போன்ற பாதிப்புகளை நமது பெண்கள் எதிர்கொள்ள ஆரம்பித்தனர்.

இது ஒரு புறம் என்றால், அழகியல் தேவை என்ற பெயரில் மார்பகங்களை பெரிதாக்குகிறேன், சிறியதாக்குகிறேன் என நவீன மருத்துவ
செய்முறைகள், அறுவை சிகிச்சைகளுக்கு தங்களை உட்படுத்தி பாதிப்புக்குள்ளாவதும் தொடர்கிறது.

இயற்கையை மீறிய இம் மாதிரி செயல்பாடுகளினால் பெண்கள் படும் வேதனைகள் சொல்லி மாளாது. இன்றைய நவ நாகரீக யுகத்தில் பெண்ணாக
பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருக்கிறது என்கிறார்கள்.

இதன் தீவிரம் இப்போதுதான் உணரப் பட்டு சீரான இடைவெளியில் ஒவ்வொரு பெண்ணும் மார்பக புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்ள
நவீன மருத்துவம் வலியுறுத்துகிறது.

மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறோம். இது பெரும்பாலும் பால் சுரப்பி நாளங்களின்
அல்லது அந்த குழாய்களுக்கு பாலைக் கொண்டு சேர்க்கும் நுண்ணறைகளின் உள் அடுக்குகளில் தோன்றும்.

இந்த மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இல்லையேல் உயிராபத்தை உண்டாக்கும்.
புற்று நோய் தொடர்பாகவும், அதற்கு சித்தர் பெருமக்கள் முன் வைத்திருக்கும் தீர்வுகள் பற்றியும் தனியொரு பதிவில் விரிவாய் பகிர்ந்து
கொள்கிறேன். இன்றைய பதிவில் தேரையர் பெண்களின் மார்பக வளர்ச்சிக்கென அருளிய வைத்திய முறை ஒன்றை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆம்!, பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கக் கூடிய ஒரு வைத்திய முறையினை தேரையர் அருளியிருக்கிறார். கூறியிருக்கிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!
தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு…
தப்பாது நிலக்கடம்பு ரசத்தை வாங்கி
தையலர்கள் கொங்கைமுலைத் தவிரப் பூசி
யப்பாது சார்பிழிந்து தோணியில் விட்டாட்டி
யறிவாயிந் தப்படியே முறைநாள் மூன்று
வேப்பாது யிருதனமு யிருமல்
விரியுமடா தெள்ளுவனென் றரியா ளைக்கி
மப்பாது வணங்கி அடிவேர்தான் மூன்று
மாதித்த நாளிலெடுக் குளிச்சங் கட்டே
மார்பக வளர்ச்சி இல்லாத பெண்கள் நிலக்கடம்பு சாற்றை தங்கள் மார்பகங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் பூசிவர மார்பகம் பூரண வளர்ச்சியடையும்
என்கிறார்.

மேலும், ஒரு நிலக் கடம்புச் செடியை தேர்ந்தெடுத்து அதனை ஓர் ஞாயிற்றுக் கிழமையன்று வணங்கிக் கொள்ள வேண்டுமாம். அந்த ஞாயிற்றுக்
கிழமையில் இருந்து மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை அன்று அந்த செடியின் வேரை எடுத்துக் கொண்டு வந்து தாயத்துக் குடுவையில் அடைத்து, அந்த
தாயத்தைக் கட்டிக் கொள்வதாலும் வளர்ச்சி அடையாத பாகங்கள் வளர்ச்சி அடைந்து உடல் மிக அழகாக ஆகும் என்கிறார்.
இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது.
[Continue reading...]

நான் தான் அடுத்த பிரதமர் - ராகுல் காந்தி

- 0 comments

பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரஸ் ஏற்கனவே தயாராகி விட்டது. இதற்காக ராகுல்காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரசை வழிநடத்திச் செல்ல திட்ட மிடப்பட்டுள்ளது.தேர்தலில் வெற்றி பெற்றால் மன்மோகன் சிங்குக்கு மீண்டும் பிரதமர் பதவி இல்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறிவிட்டனர். எனவே அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ராகுல்காந்திக்கு இருப்பதாக காங்கிரசார் கூறி வருகிறார்கள்.இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பிரதமர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்றும், திருமணம் பற்றி யோசிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி கூறியதாக செய்தி பரவியது.இந்த தகவலை உடனடியாக மறுத்த ராகுல்காந்தி தற்போது தான் அப்படி கூறவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த ராகுல்காந்தி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பாராளுமன்ற தேர்தல் பற்றியும், பிரதமர் பதவி பற்றியும் பேச்சு எழுந்தது.பிரதமர் பதவி மீது ஆசையில்லை என்று கூறியது பற்றி ராகுல்காந்தியிடம் கேட்டபோது, தான் அந்த கருத்தில் சொல்லவில்லை. நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் என்று சொன்னதாக காங்கிரஸ் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.காங்கிரசின் பிரதமர் வேட்பாளர்ராகுல்காந்தி தான். அவர் தலைமையில் காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் என்றும் காங்கிரஸ்வட்டாரங்கள் தெரிவித்தன. பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க திட்டமிட்டுள்ளது. எனவே காங்கிரசும், பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger