Wednesday 15 January 2014

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன்: தேவயானி கோப்ரகடேயின் தந்தை அறிவிப்பு Devyani Khobragade father to contest Lok Sabha elections

- 0 comments

Img மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன்: தேவயானி கோப்ரகடேயின் தந்தை அறிவிப்பு Devyani Khobragade father to contest Lok Sabha elections

புதுடெல்லி, ஜன. 15-

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தேவயானி கோப்ரகடேயின் தந்தையும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான உத்தம் கோப்ரகடே வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், சில கட்சிகளுடன் இது தொடர்பாக பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலை இதுவரை உறுதி செய்யாமல் இருந்த உத்தவ் கோப்ரகடே, இப்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு இதுபற்றிய பேச்சு தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ள கோப்ரகடே எந்த கட்சியில் இணைவது என்ற தகவலை வெளியிட மறுத்துவிட்டார்.

பல்வேறு கட்சிகளுடன் பேசி வருவதாக குறிப்பிட்ட கோப்ரகடே, எந்த கட்சியில் சேருவது என்பதை சரியான நேரத்தில் அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

தனது மகள் தேவயானியின் இரண்டு குழந்தைகளை இந்தியாவிற்கு கொண்டு வருவது பற்றி கேட்டபோது, அடுத்த மாதம் டெல்லி வரும் குழந்தைகள் டெல்லியில் படிப்பை தொடருவார்கள் என்று பதிலளித்தார்.

...

[Continue reading...]

டெல்லியில் 51 வயது வெளிநாட்டு பெண் கற்பழிப்பு: 15 பேர் கைது 51 year old Danish tourist Gang seduced in Delhi

- 0 comments

Img டெல்லியில் 51 வயது வெளிநாட்டு பெண் கற்பழிப்பு: 15 பேர் கைது 51 year old Danish tourist Gang seduced in Delhi

புது டெல்லி, ஜன. 15-

டென்மார்க் நாட்டை சேர்ந்த 51 வயது பெண் இந்தியாவை கண்டு களிப்பதற்காக புது டெல்லி வந்தார். பர்கஞ்ச் பகுதியில் உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கிய அவர், நேற்றிரவு கன்னவ்ட் பேலஸ் பகுதியை சுற்றிப் பார்த்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பினார்.

ஓட்டலுக்கு போகும் வழியை மறந்துவிட்ட அந்த பெண், திக்கு திசை தெரியாமல் தடுமாறினார். புது டெல்லி ரெயில் நிலையம் அருகே நின்றிருந்த சிலரிடம் ஓட்டலின் பெயரை கூறி எந்த வழியாக போக வேண்டும்? என்று விசாரித்தார்.

தாங்களே அழைத்து சென்று விடுவதாக தெரிவித்த அந்த கும்பல், அவரை அழைத்து சென்றது. இருட்டான ஒரு வீதி வழியாக சென்றபோது கத்தியை காட்டி தனிமையான ஓரிடத்துக்கு அழைத்து சென்றது.

7 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட அந்த சுற்றுலா பயணி, இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
தனது கைப்பையையும் அவர்கள் பறித்து கொண்டு ஓடி விட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், இதுவரை 15 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் உள்ள டென்மார்க் நாட்டின் தூதரத்திலும் இந்த கொடிய அனுபவம் தொடர்பாக புகார் அளித்து உடனடியாக நாடு திரும்ப தனக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger