Monday 22 August 2011

விஜய் டி.வி.ல எனக��கு உயிர் பயத்தைக் காட்டிட்டாங்க ���ரமா!

- 0 comments




ஆணிகள் குறைவாக இருந்ததால், நேற்று இரவு கொஞ்சம் முன்னதாகவே நேரத்திலேயே வீட்டிற்கு திரும்பி விட்டதால் தான் இப்படி ஒரு தலைப்பு வைக்கும் கொடுமை நடந்தது எனக்கு.. சீரீயல் நேரம் என்பதால், இந்தியாவின் தேசிய பொழுதுபோக்கான டிவி பார்த்தலில்;  வீட்டிலிருந்தவர்கள் ஏற்கனவே மூழ்கியிருந்தனர்.

ஏதோ ஒரு சீரியல். அதே டிரேட் மார்க் "டொம் டும் டொம்..." பின்ணணி இசையுடன், யாரையோ கவிழ்க்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர் இரு பெண்கள்.( ஏம்மா...பெண்ணுரிமைவாதிகளே.. இப்படி பெண்களே எப்போதும் மற்றவர்களை கவிழ்க்க திட்டம் போடுவதாகவே சீரியல்களில் காட்டுகிறார்களே... இதை கொஞ்சம் கண்டிக்கக்கூடாதா?)

பெரும் போரட்டத்திற்கு பிறகு ரிமோட் என் கைகளுக்கு வந்தது. வழக்கம் போல ரிமோட்டில் "டைப்" அடிக்க துவங்கினேன். வேகமாய் சேனல் மாற்றிக்கொண்டே வந்ததில், விஜய் டிவி வந்தது.

இளந்தொப்பையை மறைக்க வழக்கமாய் பெரியதொரு கோட் அணிந்து வரும் "நீயா நானா"  கோபிநாத், சின்னதாய் கறுப்புக்கோட் அணிந்து, சற்று பக்கவாட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சி "நடந்தது என்ன? குற்றமும், பின்ணனியும்" என்றார்கள்.

ஓ... கோபிநாத் பெரிய கோட் போட்டிருந்தால் நீயா நானா.... கறுப்பு கோட் அணிந்திருந்தால் நடந்தது என்ன?  பைஜமா போட்டிருந்தால் சூப்பர் சிங்கர்ஸ்....

சரி விஷயத்திற்கு வருகிறேன்.., சில நாள்களுக்கு முன், சூரியனில் உண்டான காந்தபுயல், பூமியை தாக்கியதாம். அதன் காரணமாக ஏற்கனவே காந்தம் போன்று செயல்படும் பூமியின் காந்த விசைக்கோடுகள் பெருத்த மாற்றத்திற்கு உள்ளாகியதாம். இதையெல்லாம் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வேறு விளக்கினார்கள்.

அடுத்து சொன்ன விஷயம் தான் அதிர்ச்சியில் உறையவைத்து விட்டது. லண்டனில் ஏற்பட்ட கலவரத்துக்கும், அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுக்கும் சூரியனில் ஏற்பட்ட காந்தப்புயலால்,  நமது பூமியில் ஏற்படுத்திய மாற்றங்கள் தான் காரணம் என்றார்கள்.

அதாவது காந்தப்புயலின் காரணமாக மனிதர்களின் மனநிலையில் தீவிர மாற்றங்கள் உண்டானது தான் காரணம் என்றார்கள்.

அவர்கள் சொன்னதை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை.

பூமி நெருக்கமான காந்த விசைக்கோடுகளுடன் ஒரு காந்தம் போன்று செயல்படுகிறது என்பது உண்மை தான். சூரியனில் காந்தப்புயல்கள் உண்டாகும் என்பதும் உண்டாகும் என்பது உண்மைதான்.

ஆனால் சூரிய காந்தப்புயல்கள், மனித மனங்களை மாற்றுமா என்பது சந்தேகத்திற்கு உரிய விஷயமாகவே தெரிகிறது. அறிவியலை பொறுத்த வரை எந்த விஷயத்தையும் ஆய்வின் மூலமாக நிருபித்தால் மட்டுமே ஒரு விஷயம் ஏற்றுக்கொள்ளப்படும். ஆய்வு விபரங்களையும் குறிப்பிடவில்லை.

பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில், மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்படுவது கூட, அறிவியலில் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஏன் இப்படி மீடியாவை வைத்துக்கொண்டு  பீதியை கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை.

தற்கொலைகள், நோய் தீவிரமடைதல், கொடூர விபத்துகள் ஏற்படுதல்  போன்றவை பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அதிகம் நடப்பதாக தமிழகத்தில் பரவலாக நம்பப்படுகிறது. இத்தகைய நம்பிக்கைகளை அதிகப்படுத்துவதற்காகத்தான், தொலைக்காட்சிகள் நிஜம், குற்றம் நடந்தது என்ன போன்ற புலன் விசாரணை நிகழ்ச்சிகளை நடத்துவதாகவே தெரிகிறது.

2012-ல் உலகம் அழியப்போகிறது என்ற பீதி ஏற்கனவே கிளம்பி, குறுஞ்செய்திகள் மூலம் விஸ்ரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், சூரியனில் 2012-ல் ஏற்பட இருக்கும் காந்த சுனாமி, பூமியை தாக்கி அழிக்கப்போவதாக புதுசா லிங்க் கொடுத்திருக்கிறார்கள் விஜய் டிவி புண்ணியவான்கள்.
(இப்படித்தான் 2000-ல் உலகம் அழியப்போகிறது என்று கிளப்பினார்கள்...நான் கூட, ஒளிந்து கொள்ள பெரியதொரு அட்டைப்பெட்டியை தயார் நிலையில் வைத்திருந்தேன்..ம்ம்ம் ஒண்ணும் நடக்கவில்லை)


டிஸ்கி:


பிரபல விண்வெளி ஆய்வாளர் டாக்டர் ராஜ் பல்தேவ் Two Big Bangs Created the Universe என்ற தலைப்பில் கடந்த 2003ல் ஒரு நூலை வெளியிட்ட புத்தகத்திலிருந்து மேலும் சில தகவல்கள்:


சூரியனிலும் புயல், சோலார் சுனாமி ஏற்படும். இதனை coronal mass ejection என்பார்கள். கடந்த 2005-ம் ஆண்டு மற்றும் 2010-ம் ஆண்டு சூரிய புயல் ஏற்பட்டது. 


சூரிய புயலின் வெப்பம் பூமியை நோக்கி வரும் என்பது உண்மைதான்.ஆனால் பூமிக்கு மேல் இருக்கும் காற்று மண்டலம் உள்பட பல மண்டலங்களை தாண்டிதான் இந்த சூரிய புயல் பூமிக்கு வர வேண்டும். அத்தனை மண்டலங்களும் இந்த சூரிய புயல் வேகத்தின் தாக்கத்தை குறைத்து விடும். மேலும் பூமியை சுற்றி காந்த வளையம் உள்ளது. இந்த சக்தி வெப்பத்தை பூமிக்கு வரவிடாமல் தடுத்து விடும்.


பூமியின் காந்த வளையத்தை அது அடையும்போது வெப்பக் கதிர் வீச்சு புவி காந்தப் புயலாக (geomagnetic storm) மாறும்.


இதனால் செயற்கைக்கோள்கள் முற்றாக அழியக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. தகவல் தொடர்பு முற்றிலும் சீர்குலையும். அதாவது மின்ணனு சாதனங்கள் அனைத்தும் செயல் இழக்ககூடும்.



http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    விகடன் பாணியில் ���து சிறப்பு வலைப��பாயுதே - கலக்கல் ���லாய்ப்பு ட்விட்டுகளின் தொகுப்ப��.

    - 0 comments


    முஸ்கி:

    இந்த வார வேட்டையில் சிக்கிய சிறந்த ட்விட்டுகளின் தொகுப்பு இது.
    இதனில் சிறந்த ஒன்றினை தெரிவு செய்து, பின்னூட்டத்தில் தர முடியுமா உங்களால்...




     
    தமிழகத்தில் 50 டுவீலர் வரிசையா ரோடு ஓரமா நின்னா அங்க ஒரு TASMAC இருக்குன்னு அர்த்தம்!! 

     
    மனைவியின் ஐந்து மிஸ்டு கால்களை மொபைலில் பார்க்கும் தருணத்தை விட கலவரமான தருணம் வாழ்க்கையில் வர வாய்ப்பில்லை.!



    அப்படியே சரவண பவன்ஹோட்டலையும் ரெய்டு பண்ணுங்க சாமி # தோசை 90 ரூபா


     
    பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? #லோக்பால் vs ஜன்லோக்பால்..,


     
    முதலாளியை குறை கூறாத ஒரே தொழிலாளி பாரத பிரதமர் மட்டும்தான்.!
     
    சுட்டால் பொன் சிவக்கும் என்பதற்கு துப்பாக்கியால் சுடுவதைப் போன்று ஆக்‌ஷன் செய்யும் எஸ்ஜே சூர்யாவை என்ன செய்யலாம் :-)


     
    எமதர்மனுக்கு கருப்பு எருமையும், காமதேனுவுக்கு வெள்ளை பசுவும் கொடுத்திலிருந்தே ஆரம்பித்துவிட்டது நமது வெள்ளை மோகம்.




    நடிப்புதான் என்று தெரிந்து விடாமல் எல்லோரிடமும் நடிக்கிறேன்... ஆனால் என்னிடம் மட்டும் என்னால் நடிக்க முடியவில்லை ...

    கூட்டுக்குடித்தனம்னா மனைவியுடன் வாழ்வது , தனிக்குடித்தனம்னா மனைவியைப்பிரிஞ்சு வாழ்வது # 2011

    ஊழலை ஒழிக்க லோக்பாலோ அமலா பாலோ தேவையில்லை. நேர்மையான மனசாட்சி இருந்தால் போதும்.
    arasu1691 
    பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளில் கொடுமையானது ''ஆப்-பாயில்'' சாப்பிட வாய்ப்பு வழங்காதது #முனியாண்டிவிலாஸ்சிந்தனைகள்



    http://girls-stills.blogspot.com




  • http://girls-stills.blogspot.com


  • [Continue reading...]

    முத்துக்கள் மூன��று தொடர்....

    - 0 comments


    முத்துக்கள் மூன்று தொடர் எழுதுடா தம்பின்னு கோமதி அக்கா அன்பால் "மிரட்டுனதினால்," இன்னொரு முறை எழுதுறேன் சற்று வித்தியாசமாக..
    .http://haasya-rasam.blogspot.com/2011/08/blog-post_17.html[[இது கோமதி அக்காள் லிங்க்]]


    [[இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?

    என்னை எப்பொழுதும் வம்புக்கு இழுக்கும் இரண்டு தம்பிகள்
    1-திவா
    2-நாஞ்சில் மனோ
    3-வம்பு பண்ணாத சகோதரி சித்ரா]]

    ------------------------------------------
    1) விரும்பும் மூன்று விஷயங்கள்?

    ௧ : அன்பு
    ௨ : பாசம் 
    ௩ : நேசம் 

    2) விரும்பாத மூன்று விஷயங்கள்?

    ௧ : கோபம்
    ௨ : வஞ்சகம் 
    ௩ : வெறுப்பு 

    3) பயப்படும் மூன்று விஷயங்கள்?

    ௧ : உயரம்
    ௨ : ஆழம்
    ௩ : ஏணிப்படி 

    4) புரியாத மூன்று விஷயங்கள்?

    ௧ : பெண் மனசு
    ௨ : பெண்ணின் கோபம் 
    ௩ : பெண்ணின் அன்பு 

    5) மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?

    ௧ : லேப்டாப்
    ௨ : இப்போ புதுசா வாங்குன கண்ணாடி
    ௩ : செல்போன் மற்றும் அருவாக்கள், கத்திகள் ஹி ஹி..

    6) சிரிக்கவைக்கும் மூன்று விசயங்கள் அல்லது மனிதர்கள்?

    ௧ :பன்னிகுட்டி ராம்சாமி
    ௨ : தம்பி "கோமாளி" செல்வா [[ரயில் தண்டவாளத்துலையே ஸ்பீட் பிரேக் வைக்க சொல்றான்]]
    ௩ : சுப்ரமணியன் சுவாமி 

    7) தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?

    ௧ : பிளாக் எழுதுவது 
    ௨ : நெட் கனெக்சன் கிடைக்காமல் லேப்டாப்பை அலற வைத்தல்
    ௩ : லீவில் இருப்பதால் கடுமையான ஊர் சுற்றல், நண்பர்களுடன், குடும்பத்துடன்..

    8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?

    ௧ : சுவிஸ்ல இருக்குற கருப்பு பணத்தை கொண்டு வந்து, "கருப்பு பணம் மாநிலம்" அமைத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்...
    ௨ : ஈழத்தமிழ் மக்களுக்கு தனி ஈழம்..
    ௩ : காங்கிரஸ் கட்சியை, வேரும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிந்து சாய்க்கவேண்டும்...

    9) செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?

    ௧ : சீக்கிரம் ஊரில் செட்டில் ஆகவேண்டும் 
    ௨ : என்னால் முடிந்த அளவு உதவிகள் செய்வது
    ௩ : நன்றே செய் அதை இன்றே செய் 

    10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?

    ௧ : அண்ணா ஹசாரே'வுக்கு காங்கிரஸ் அளிக்கும் சல்சாப்பு பதில்கள்..
    ௨ : பால்தாக்கரேயின் இன துவேஷம்..
    ௩ : ஜாதி...

    11) கற்றுக் கொள்ள விரும்(பிய)பும் மூன்று விஷயங்கள்?

    ௧ : கார் ஓட்டுவது [[இன்னும் கனவாவே இருக்கு அப்பிடியே கார் ஓட்டினாலும் பக்கத்துல ஒரு ஆள் வேணும், ஆனால் லைசென்ஸ் பக்காவா வச்சிருக்கேன் ஹி ஹி...
    ௨ : எல்லார் மேலும் நான் அன்பு கூறனும், என் மீதும் எல்லாரும் அன்பு கூறனும்..
    ௩ : சினிமா டைரக்ஷன்...

    12) பிடித்த மூன்று உணவு வகைகள் ?

    ௧ : சில்லி சிக்கன்..
    ௨ : என் வீட்டம்மா செய்யும் நல்லி மட்டன்...
    ௩ : என் அம்மா செய்யும் மீன் கறி...

    13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?

    ௧ : நிலா நீ வானம் காற்று மழை....
    ௨ : நீ ஒரு காதல் சங்கீதம்...
    ௩ : மேகம் கொட்டட்டும் மின்னல் வெட்டட்டும் ஆட்டம் உண்டு [[எனக்குள் ஒருவன்]]

    14) பிடித்த மூன்று படங்கள்?

    ௧ : விருமாண்டி...
    ௨ : மைனா...
    ௩ : அன்பே சிவம்...

    15)இல்லாம வாழமுடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?)

    ௧ : நான் காதலித்து மணந்த என் மனைவி...
    ௨ : பணம் கண்டிப்பா வேணும்..
    ௩ : பிரயாணங்கள்.....


    டிஸ்கி : கிண்டல் பண்ணி குதறாம எழுதணும்னா என்னா கஷ்டமா இருக்குடா சாமீ......


    டிஸ்கி : கோமதி அக்காளுக்காக என் பாணியை மாத்தி எழுதி இருக்கேம்டே மக்கா....


    ஓ இதை தொடர்ந்து எழுத ஆள் வேணுமே......ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......யாரை மாட்டிவிடலாம்....????..........


    ஆங்.......விக்கி உலகம்...
    ஆங்......வானதி...
    ஆங்.......திருமதி சங்கரலிங்கம் [[உணவு உலகம்]]


    http://sugamananeram.blogspot.com




  • http://sugamananeram.blogspot.com


  • [Continue reading...]

    தோனியுடன் பட்ஜெ��் மொபைல்

    - 0 comments




    பட்ஜெட் விலையில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க்கும் மேக்ஸ் (MAXX) நிறுவனம், அண்மையில் கிரிக்கெட் வீரர் மஹேந்திர தோனியின் கையெழுத்துடன் கூடிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, இதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளுக்காகவும், குறைந்த விலைக்காகவும் இந்த போன்களை மக்கள் விரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

    MAXX MSD7 என்ற பெயரில் வெளியாகியுள்ள மேக்ஸ் மொபைல் போன், கருப்பும் ஆரஞ்ச் சிகப்பு நிறமும் கலந்து அழகான வண்ணத்தில் தோற்றம் கொண்டுள்ளது. குவெர்ட்டி எம்.எஸ்.2020 என்ற போன் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. இவற்றின் சிறப்பம்சங்கள் கீழே தரப்படுகின்றன.

    1.MAXX MSD7 : மிகவும் ஸ்டைலான கருப்பு போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.2 அங்குல அகலத்தில், 176x144 பிக்ஸெல் ரெசல்யூசனில் வண்ணத்திரை, 1.3 எம்பி திறனில் கேமரா, 128 எம்பி +64 எம்பி நினைவகம்,இணைந்த 2 ஜிபி மெமரி கார்ட், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன், 500 முகவரிகள் கொள்ளக் கூடிய அட்ரஸ் புக், மற்ற மாடல்களில் உள்ளதைப் போல பல பார்மட் ஆடியோ, வீடியோ பைல்களைக் கையாளும் திறன் கொண்ட பிளேயர்கள் ஆகியவை இதன் குறிப்பிட்டுச் சொல்லும் அம்சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ.1,690.

    2.MAXX MS2020: கோல்டன் பாய் என்று அழைக்கப்படும் வகையில் தங்க நிறத்தில் இந்த போன் மேலே எம்.எஸ்.டி.7 போன் கொண்டுள்ளதாகத் 2.2 அங்குல அகலத்தில், 240 x 320 பிக்ஸெல் ரெசல்யூசனில் வண்ணத்திரை, 1.3 எம்பி திறனில் கேமரா, ரெகார்டிங் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, 128 எம்பி +32 எம்பி நினைவகம், இணைந்த 2 ஜிபி மெமரி கார்ட், பல பார்மட் (.MP3,.AAC,.WAV,.AMR) ஆடியோ பைல்களை இயக்கும் ஆடியோ பிளேயர், ஆகிய பார்மட்களில் உள்ள வீடியோ பைல்களை இயக்கும் வீடியோ பிளேயர், A2DP இணைந்த புளுடூத், 1000 mAH திறன் கொண்ட பேட்டரி மற்றும் தொடர்ந்து 4 மணி நேரம் பேசும் வசதி ஆகியவை இந்த போனில் கிடைக்கின்றன.
    இதன் அதிக பட்ச விலை ரூ.2.097.


    Read This Story In English :-

    MAXX company produce mobile phone in lower prices, recently MAXX mobile introduced new model with the signature of cricketer Mahendra. Not only cricket fans this mobile will like by all the people because this mobile has lots of features. This mobile named as MAXX . Also this mobile available in multicolour like black, orange, red colours kuvertti. M.S. .2020 phone is shining golden color of the phone. Ffeatures are given below.

    1.MAXX MSD7: This is designed to be a very stylish black phone. 2.2 inches in width, 176×144 pixel resolution on the color screen, 1.3 MP capacity camera, 128 MB +64 MB memory, integrated 2 GB memory card, 8 GB expanded memory, 500 addresses possible Address Book, and various Format audio options, video to specific aspects of its players are capable of handling files. The maximum price of Rs .1,690.

    2.MAXX MS2020: Golden Boy, called the golden color of this phone is 2.2 inches in width 240 x 320 pixel resolution the color screen, 1.3 MB camera is capable , FM with recording facility., 128 MB +32 MB memory capacity , upto 2 GB expanded memory card, Audio player accept MP3,. AAC,. WAV,. AMR audio files, video files and running the video player in Farmat, A2DP Bluetooth combined, 1000 mAH capacity battery and the ability to continue talking on the phone for 4 hours.



    ------------------- நன்றி -------------------

    இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?



    http://tamil-actress-photo.blogspot.com




  • http://tamil-actress-photo.blogspot.com


  • [Continue reading...]

    லேப்டாப் கம்யூட��டரில் மின்சக்தி பயன்பாடு !

    - 0 comments



    பேட்டரி சக்தியில் இயங்கும் லேப்டாப்பில், நாம் எந்த அளவிற்கு அதனைச் சரியாக, செட் செய்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு அதன் திறன் நமக்கு நீண்ட நேரம் கிடைக்கும். லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைத்திடும் விண்டோக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

    மின்சக்தி நிர்வாக அமைப்பினை மேற்கொள்ள நமக்குத் தரப்படும் விண்டோ Power Options என்பதாகும். இதனைப் பெற ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் உள்ளன. எக்ஸ்பி, விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில், Run கட்டளை மூலம் இயக்கிப் பெறலாம். Win+R கீகளை அழுத்திக் கிடைக்கும் கட்டத்தில் powercfg.cpl என டைப் செய்திடவும். அல்லது விஸ்டாவிலும், விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் ரன் கட்டளை கொடுக்காமல், power options என ஸ்டார்ட் சர்ச் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டினால், இந்த விண்டோ கிடைக்கும். கிடைக்கும் பவர் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில், மின்சக்தி யை நிர்வாகம் செய்திட பல ஆப்ஷன்ஸ் தரப்பட்டுள்ளதைக் காணலாம்.

    விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில், Balanced, Power saver, and High performance. Power saver எனப் பல வழிமுறைகள் காட்டப்படுகின்றன. இவை வழக்கமான மின் சக்தி மிச்சப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு வழி காட்டுகின்றன. இவற்றுடன் தரப்படும் Balanced என்ற திட்டம், மின்சக்தி சேமிப்பு மற்றும் கூடுதல் திறன் இயக்கத்தினை இணைத்துத் தருகிறது. மூன்றாவதாக, High performance என்ற திட்டம், எப்படி அதிக திறன் கொண்டதாக லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கலாம் என்று வழி காட்டுகிறது.

    இந்த விண்டோவின் இடது பக்கத்தில் மேலும் சில ஆப்ஷன்கள் காட்டப் படுகின்றன. இவற்றில் ஒன்று நாம் லேப்டாப் கம்ப்யூட்டரின் மேல் பகுதியைக் கொண்டு அதனை மூடுகையில் (Choose what closing the lid does) என்ன நடக்கிறது என்று சொல்கிறது.

    இதில் Change plan settings என்ற லிங்க்கில் கிளிக் செய்கையில், Edit Plan Settings என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படுகிறது. இங்கு எப்படி மின்சக்தியை மிச்சப்படுத்துவதுடன், கம்ப்யூட்டரையும் கூடுதல் திறனுடன் இயக்கலாம் என்பதற்கான வழிகள் காட்டப்படுகின்றன.

    நாம் அமைத்த மாற்றங்களை, சில காரணங்களுக்காக நீக்க வேண்டும் என்றால், Restore default settings for this plan என்பதில் கிளிக் செய்திட மீண்டும் தொடக்க நிலைக்கு நாம் அழைத்துச் செல்லப்படுவோம்.

    Power Options டயலாக் பாக்ஸில் Change advanced power settings என்பதில் கிளிக் செய்தால், மேலும் சில கூடுதல் வழிகள் காட்டப்பட்டிருப்பதனைக் காணலாம். இதனைக் கிளிக் செய்தவுடன் Advanced settings என்ற விண்டோ கிடைக்கும். இதன் மூலம் மின்சக்தியினை நிர்வாகம் செய்திட, கூடுதலாக அது குறித்து நன்கு அறிந்திருப் பது நல்லது. அல்லது இதனைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்.




    ------------------- நன்றி -------------------

    இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?



    http://tamil-actress-photo.blogspot.com




  • http://tamil-actress-photo.blogspot.com


  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger