Sunday 24 February 2013

இத்தாலி முன்னாள் பிரதமர் முன் மேலாடை இன்றி பெண்கள்

- 0 comments
இத்தாலியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில், ஏற்கனவே 3 முறை பிரதமராக இருந்து செக்ஸ் மற்றும் ஊழல் வழக்கில் சிக்கி பதவி இழந்த சில்வியோ பெர்லஸ் கோனி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியை சேர்ந்த பியர் லுகி பெர்சானி களத்தில் உள்ளார்.

தற்போது இத்தாலியின் பொருளாதார நிலை மிகவும் வீழ்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. இந்த தேர்தல் மூலம் அமையும் புதிய அரசால் தான் அந்த நாட்டின் பொருளாதார சூழ்நிலை சீரடையும் என்ற நிலை உள்ளது. எனவே, இந்த தேர்தலில் ஓட்டு போட மக்கள் நீண்ட “கியூ” வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இந்த நிலையில் மிலன் நகரில் ஒரு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் ஓட்டு போட நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்தனர். அங்கு ஓட்டு போட முன்னாள் பிரதமர் பெர்லஸ் கோனியும் வந்திருந்தார். அப்போது, மேலாடை அணியாத 3 பெண்கள் திடீரென அவர் முன்பு ஓடி வந்து நின்றனர்.

சில்வியோ பெர்லஸ் கோனியே இந்த நாட்டின் பிரதமர் என வாழ்த்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் விரைந்து வந்து அந்த 3 பெண்களையும் கைது செய்து இழுத்து சென்றனர். விசாரணையில், அவர்கள் உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு பெண்கள் அமைப்பினர் என தெரிய வந்தது.

[Continue reading...]

40 வயது காதலியுடன் வாழத்துடிக்கும் இளைஞன்

- 0 comments

ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்த சேட்டு என்ற விஜய் (வயது 30) பாலிடெக்னிக் படித்து விட்டு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.
அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் இவரது மனைவி சசிகலா (வயது 45). இவர்களுக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். நாராயணபுரத்தை சேர்ந்த தினேஷ்க்கு இவரை திருமணம் செய்து கொடுத்தார்.
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு பன்னீர்செல்வம் இறந்துவிட்டார். இதனால் திருப்பூருக்கு சென்று பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த சேட்டுவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
பின்னர் சசிகலாவை சேட்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருப்பூரில் வசித்து வந்தனர். மின்வெட்டு காரணமாக தற்போது அங்கு வேலை இல்லாததால் ஆம்பூர் பெரியாங்குப்பத்துக்கு வந்தனர்.
இதற்கிடையில் சசிகலாவின் மகள் ஜோதிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உனது அம்மா வயது குறைந்தவரை திருமணம் செய்துள்ளார். இது சரியில்லை என்று கூறி தினேஷ், ஜோதியை தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
இதனால் மனமுடைந்த சசிகலா தன்னை சேட்டுவிடம் இருந்த பிரித்து வைக்ககோரி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் இருவரையும் அழைத்து பேசினர்.
அப்போது சேட்டு சசிகலா இல்லாமல் என்னால் வாழமுடியாது எங்களை பிரித்து விடாதீர்கள் என்று போலீசாரிடம் மன்றாடினார். போலீசார் அவரை சமாதானம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger