Tuesday 31 December 2013

பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலகலா? Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

- 0 comments

Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

பதவியில் இருந்து மன்மோகன் சிங் விலகலா?: மத்திய மந்திரி திட்டவட்ட மறுப்பு Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மன்மோகன் சிங் செயல்படாத பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

பல தருணங்களில், மீண்டும் பிரதமர் ஆவதை நான் விரும்பவில்லை. பிரதமராக ராகுல்காந்தி பொறுப்பேற்றால் அவருக்கு வழி காட்ட தயராக இருக்கிறேன் என்று மன்மோகன்சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் இதை தெரிவித்து விட்டார்.

ராகுல்காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் பிரதம வேட்பாளர் என்று வரும் 17–ந்தேதி நடைபெறும் காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இதற்கென தனித் தீர்மானமும் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பிரதமர் மன்மோகன்சிங் வருகிற 3–ந்தேதி பகல் 11 மணிக்கு அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்திக்கிறார். அன்றைய தினம் எதிர்கால திட்டம் பற்றிய முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று டெல்லி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த தகவலை மையமாக வைத்து பத்திரிகையாளர்களுடனான அன்றைய சந்திப்பின் போது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மன்மோகன் சிங் அறிவிப்பார் என்ற வதந்தி பரவத் தொடங்கியுள்ளது.

மேற்கண்ட யூகத்திற்கும், வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதுடெல்லியில் நேற்று பேட்டியளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி மணிஷ் திவாரி, பிரதமர் ராஜினாமா செய்கிறார் என்று வெளியாகும் யூகங்கள் தவறானவை என்று கூறியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை என ஊடகங்கள் குறை கூறி வந்தன. சரி, 2014-ம் ஆண்டு பிறக்கும் வேளையில் அவர்களை சந்திக்கலாமே என்று கருதிய பிரதமர், 3-ம் தேதி பேட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அன்றைய தினம் பதவி விலகப் போவதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என சில ஊடகங்கள் புரளியை கிளப்பி வருகின்றன. என்னைப் பொருத்த வரையில், இத்தகைய யூகங்களுக்கு எல்லாம் பதில் அளித்துக் கொண்டிருப்பது தேவையற்ற வேலை என்றே கருதுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
...

Manish tevari rufutes rumour of Manmohan singh quitting PM post

[Continue reading...]

2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடிய ஆஸ்திரேலியா: உலகம் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் 2014 year first celebration Australia welcomed

- 0 comments

Img 2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடிய ஆஸ்திரேலியா: உலகம் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகள் 2014 year first celebration Australia welcomed

ஆக்லாந்து, டிச. 31-

உலகம் முழுவதும் நாளை தொடங்கவுள்ள 2014 ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடுவதற்கு தயாராகி வரும் நிலையில் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் புத்தாண்டு வாணவேடிக்கைகள் தொடங்கின. கிரீன்விச் நேரப்படி இன்று 11 மணியளவிலேயே அவர்களுக்குப் புத்தாண்டு பிறந்துவிடுவதால் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன.

2014ஆம் ஆண்டை முதலில் வரவேற்று கொண்டாடியது ஆஸ்திரேலியாவில்தான். இதையொட்டி சிட்னி நகரத்தில் பிரமாண்ட வாண வேடிக்கைகள் நடைபெற்றன. இங்கு பிரபலமாக நடைபெறும் வாணவேடிக்கைகளைக் கண்டு களிப்பதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். ஜப்பானில் உள்ள ஷிண்டோ மதகுருமார்கள் புதிய ஆண்டை வரவேற்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உலக நாடுகள் பலவற்றிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. துபாய் நகரம் இந்த ஆண்டுக் கொண்டாட்டத்தில் ஒரு சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளது. கடற்கரைக்கு முன்னால் 30 மைல் தொலைவிற்கு நீண்டு செல்லும் இந்த வாணவேடிக்கைகள் ஒரு கி.மீ உயரம் வரை செல்லுமென்று கூறப்படுகின்றது. இந்தக் கொண்டாட்டங்கள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது.

சீனாவின் பல நகரங்களிலும் பெரிய அளவிலான கொண்டாட்டங்கள் எதிர்பார்க்கப்படும்போது மோசமான பனிமூட்டம் காரணமாக வுஹான் நகரம் மட்டும் இந்தக் கொண்டாட்டங்களைக் கைவிட்டுள்ளது. ஐரோப்பிய நகரங்களான மாஸ்கோ, பாரிஸ், லண்டன் போன்ற நகரங்களிலும் பின்னர் கொண்டாட்டங்கள் நடைபெறும். தென் அமெரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த 5 ஆம் தேதி மறைந்த கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் லேசர் காட்சிகள், வாணவேடிக்கைகள் அடங்கிய ஒரு முப்பரிமாண சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரின் டைம் சதுக்கத்தில் எப்போதும்போல் பாரம்பரிய முறையிலான புத்தாண்டுத் துவக்கத்தினைக் குறிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வண்ணமயமான திருவிழாக்களுக்குப் பெயர்போன பிரேசில் இந்த ஆண்டும் கோபகபானா கடற்கரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புத்தாண்டை வரவேற்க 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger