Thursday 13 October 2011

அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடித்து சினிமாவை சீர்குலைக்கும் நடிகைகள்: சோனாலி பிந்த்ரே தாக்கு

- 0 comments

தற்போதுள்ள நடிகைகள் சகட்டுமேனிக்கு ஆடைகளை குறைத்து அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடிப்பதனால் சினிமாவின் தரம் சீர்குலைந்துவி்ட்டது என்று நடிகை சோனாலி பிந்த்ரே குற்றம்சாட்டியுள்ளார்.

காதலர் தினம் படம் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருந்தார். இந்திப் படங்களில் ஆர்வம் காட்டிய அவர் கடந்த 2002ம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான கோல்டிபெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கடந்த 2005ம் ஆண்டு ரன்வீர் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அவருக்கு பட வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்க மறுத்துவருகிறார்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோனாலியிடம் மீண்டும் நடிக்க வருவீ்ர்களா என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது,

மீண்டும் நடிக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையைப்பார்த்து தான் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

முன்பு அழகை அழகாகக் காட்டினார்கள். நடிகைகளின் கவர்ச்சியும் ரசிக்கும் வகையில் இருந்தது. ஏன் நானும் கூட கவர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால் அதில் ஆபாசம் இல்லை. தற்போதுள்ள நடிகைகள் சகட்டுமேனிக்கு ஆடைகளைக் குறைத்து பார்க்க அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடித்து சினிமாவின் தரத்தையே சீர்குலைத்துவிட்டனர். சினிமா கீழ்த்தரமாகவும், அசிங்கமாகவும் ஆகிவிட்டது.

நாளுக்கு நாள் சினிமாவின் தரம் தாழ்ந்துகொண்டே தான் போகிறது. ஆகையால் நான் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்றார்.

இப்படிப் பேசும் சோனாலி ஒரு காலத்தில் கவர்ச்சி ரசம் சொட்டச் சொட்ட நடித்துக் களைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

[Continue reading...]

நடிகை புவனேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி மனு: போலீசுக்கு நோட்டீஸ்

- 0 comments

சென்னை: கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை மிரட்டிய நடிகை புவனேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து 1 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு கே. கே. நகர் போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள கே. கே. நகரைச் சேர்நதவர் குருநாதன். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

டி.வி. தொடர்களில் நடித்து வருவதாக நடிகை புவனேஸ்வரி என்னிடம் தெரிவித்தார். மேலும் டி.வி. தொடர்களை அவரே தயாரித்து வெளியிட இருப்பதாகவும், அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லை என்றும் கூறினார்.

இதற்காக ரூ.1.50 கோடி தொகையை கடனாக தரவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். எனவே நான் அவர் கேட்ட தொகையை வழங்கினேன்.

ஆனால் அவர் டி.வி. தொடர் எதையும் தயாரிக்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். எனவே கடனாக கொடுத்த தொகையை திருப்பிக்கேட்டேன். இதனால் என்னை அவர் ஆள்விட்டு மிரட்டினார்.

இதுபற்றி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தேன். எனது புகாரின் அடிப்படையில் புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். கடன் தராமல் மிரட்டல் விடுத்த அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் இது குறித்து இன்னும் 1 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று கே. கே. நகர் போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

[Continue reading...]

டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு

- 0 comments

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸார் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத் தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வுகளை தேர்வாணையம் நடத்தி வருகிறது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்லமுத்து செயல்படுகிறார். இவர் போக 13 உறுப்பினர்களும் ஆணையத்தில் உள்ளனர்.

இன்று காலை 7 மணிக்கு சென்னை பாடியில் உள்ள செல்லுமுத்துவின் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புப் போலீஸ் குழு வந்தது. பின்னர் அவர்கள் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தத் தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் தேர்வாணையத்தின் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு வேட்டை நடந்து வருவதாக தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்வாணைய உறுப்பினர்களான டி.சங்கரலிங்கம், டாக்டர் கே. லட்சுமணன், எம்.ஷோபினி, டாக்டர் சேவியர் ஜேசு ராஜா, டாக்டர் கே.எம்.ரவி, ஜி.சண்முக முருகன், கேகே ராஜா, டாக்டர் எஸ்.பன்னீர்செல்வம், வி.ரத்தினசபாபதி, டாக்டர் பி.பெருமாள்சாமி, டி.குப்புசாமி, ஜி.செல்வமணி ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.

இவர்களில் சங்கரலிங்கத்தின் வீடு திருச்சியில் உள்ளது. அங்கு ரெய்டு நடந்து வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் 10 அதிகாரிகள் வரை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. எனவே கிட்டத்தட்ட 150 அதிகாரிகள் வரை இந்த 14 பேரின் வீடுகளிலும் குவிந்து சோதனையில் ஈடுபட்டிருப்பதால் அரசு அலுவலக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

[Continue reading...]

நெல்லை- பிஎட் மாணவர் சேர்க்கையில் மாபெரும் ஊழல்- பல கோடி ஸ்வாஹா என பரபரப்பு தகவல்

- 0 comments

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், விதிமுறைகளை மீறி, பிஎட் படிப்பில் 523 மாணவர்களை கூடுதலாக சேர்த்தது தணிக்கை குழு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் பிஎட் படிப்பில் மாணவர் சேர்க்கை, தனியார் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஓப்பந்தம் உள்ளிடவற்றில் சுமார் ரூ.1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தொலை தொடர் கல்வி இயக்குனர் ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.

இது தொடர்பான ஆவணங்களையும் அரசு சட்டத்துறை செயலர் தலைமையில் அமைக்கப்பட்ட பல்கலை கண்காணிப்பு கமிட்டியிடம் சமர்ப்பித்தார்.

ஊழல் தொடர்பான ஆவணங்களை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குனரின் உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தி்ல் இருந்து முதுநிலை தணிக்கையாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் தணிக்கை அதிகாரிகள் செல்வி, அழகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் பல்கலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த 4 வருடங்களாக அலுவலக கோப்புகள், வங்கி கணக்கு, பண பரிவர்த்தனை, மாணவர் சேர்க்கை பதிவேடு உள்ளிட்டவற்றை அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் பிஎட் மாணவர் சேர்க்கையில் ஊழல் நடத்திருப்பதை தணிக்கை குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2009-2010 கல்வியாண்டில் நெல்லை பல்கலையில் தொலைநெறி வழியில் பிஎட் படிப்பை வழங்க என்சிடிஇ அனுமதி அளித்துள்ளது. அந்த ஆண்டில் என்சிடிஇ விதிமுறைப்படி 500 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். 2010-2011 கல்வியாண்டில் பிப்ரவரி மாதம் 523 பேரும், நவம்பர் மாதம் 500 பேரும் பிஎட் படிப்பி்ல் சேர்க்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தணிக்கை குழுவினர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஒரு கல்வியாண்டில் 500 பேர் மட்டுமே சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற விதிமுறையை மீறி கூடுதலாக சேர்க்கப்பட்ட 523 பேருக்கு எப்படி பட்டம் வழங்குவது, அவர்களின் எதிர்காலம் என்ன, என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இன்றும் (14ம்தேதி) தணிக்கை குழு ஆய்வு தொடர்கிறது. ஆய்வின் முடிவில்தான் ஊழல் தொடர்பான முழுவிபரங்களும் தெரிய வரும் என பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பல கோடி முறைகேடு தொடர்பான சர்ச்சையால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

[Continue reading...]

கடனை கேட்டால் மிரட்டுகிறார்! புவனேஸ்வரி மீது புகார்!!

- 0 comments
 
 
 
கொடுத்த கடனை திருப்பிக்கேட்டால் நடிகை புவனேஸ்வரி ஆள் வைத்து மிரட்டுகிறார் என்று சென்னை ஐகோர்ட்டில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த குருநாதன் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டி.வி. தொடர்களில் நடித்து வருவதாக நடிகை புவனேஸ்வரி என்னிடம் தெரிவித்தார். மேலும் டி.வி. தொடர்களை அவரே தயாரித்து வெளியிட இருப்பதாகவும், அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லை என்றும் கூறினார். எனவே இதற்காக ரூ.1.50 கோடி தொகையை கடனாக தரவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நான் அவர் கேட்ட தொகையை வழங்கினேன். ஆனால் அவர் டி.வி. தொடர் எதையும் தயாரிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். இதனையடுத்து கடனாக கொடுத்த தொகையை திருப்பிக்கேட்டேன். ஆனால் அவர் தரமறுத்துவிட்டார். மேலும் என்னை ஆள்வைத்து மிரட்டினார். இதுபற்றி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். கடனை தராமல் மிரட்டல் விடுத்த அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும், என்று தமது மனுவில் கூறியுள்ளார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, குருநாதனின் மனுவுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்கும்படி கே.கே.நகர் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.



[Continue reading...]

அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்

- 0 comments
 
 
பிரபல வக்கீலும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவருமான பிரசாந்த் பூஷன் ராம் சேனாவை சேர்ந்தவர்களால் நேற்று தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் ஸ்ரீராம் சேனா ஆதரவாளர்கள் இன்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்கு வெளியே அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதில், ராஜ்குமார் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டார்.
 
உடனடியாக அவர் அருகில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்னா ஹசாரே ஆகஸ்ட் மாதம் ராம்லீலா மைதானத்த்தில் தனது 13 நாள் உண்ணாவிரதத்தை ராஜ்குமாரின் பேத்திகள் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



[Continue reading...]

ஷமிலா, பல ஆண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது உண்மையா? பரபரப்பு தகவல்கள்

- 0 comments
 
 
மூணாறு தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்ட ஷமிலாவின் தந்தை பெயர் சுந்தரம். மதுரையை சேர்ந்த இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் ஈரோடு வந்தார். ஈரோடு திருநகர் காலனி, சாமியப்பா வீதி பகுதியில் குடியிருந்து சுந்தரம், ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.
 
ஈரோட்டில் சுந்தரம் குடும்பத்துடன் இருந்தபோது ஷமிலாவும், அவருடை தங்கை ஷாலினியும் ஈரோடு திருநகர் காலனியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 வரை படித்தனர். 2004-ம் ஆண்டு பிளஸ்-2 படிப்பை ஈரோட்டில் முடித்த ஷமிலா, பின்னர் மதுரையில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார்.
 
2006-ம் ஆண்டு ஷாலினி பிளஸ்-2 முடித்த பின்னர், சுந்தரம் குடும்பத்துடன் மதுரை திருமங்கலத்தில் குடியேறினார். அங்கு சென்ற ஒரு சில மாதங்களிலேயே உடல் நலம் குன்றி சுந்தரம் இறந்து விட்டார். தாயார் ராணி தனது மகள்களை கவனித்துக்கொண்டார். இதற்கிடையே பட்டப்படிப்பை முடித்த ஷமிலா பெங்களூரில் ஒரு கம்ப்ïட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
 
அப்போதுதான், மகேஷ்குமாருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்டாலும் ஷமிலா, தாய் ராணி தங்கை ஷாலினி ஆகியோருடன் தொடர்பிலேயே இருந்தார். இந்த நிலையில் ஷமிலா கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் ஈரோடு திருநகர் காலனி பகுதியை சேர்ந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-
 
சிறுவயதில் இருந்தே ஷமிலாவையும் மற்றும் ஷாலினியையும் எங்களுக்கு நன்றாக தெரியும். மிக நல்ல குடும்பத்து பெண்கள். ஷமிலாவை பற்றி, இப்போது வந்துள்ள தகவல்கள் எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷமிலா அப்படிப்பட்ட பெண்ணாக இருந்து இருக்க முடியாது. அவர் காதல் திருமணம் செய்தவர் என்பது மட்டும்தான் உண்மை. கடந்த 4 மாதங்கள் முன்பு வரை அவர்கள் வாழ்க்கை மிகவும் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.
 
4 மாதங்களுக்கு முன்பு, ராணியின் பெயரில் தபால் நிலையத்தில் இருந்த ஒரு கணக்கை முடித்து பணம் பெறுவதற்காக ஷாலினி வந்திருந்தார். அப்போது அக்காவின் கணவர் அடிக்கடி பிரச்சினை செய்து அவளை துன்புறுத்துவதாக தெரிவித்தாள். சில மாதங்களுக்கு முன்பு மகேஷ்குமாரை விட்டு பிரிந்து ஷமிலா ஒரு மாதம் ஷாலினியுடன் வந்து தங்கி இருந்தார். பின்னர் மீண்டும் மகேஷ்குமார் வந்து அழைத்துச் சென்றார்.
 
கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஷமிலா திருமங்கலத்தில் அம்மா ராணி வீட்டில்தான் தங்கி இருந்தார். அப்போது அங்கு வந்த மகேஷ்குமார், ஷமிலாவிடம் சமாதானம் பேசினார். பின்னர், மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஏதாவது கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி இருக்கிறார். அதற்கு ஷமிலா ஒப்புக்கொண்டார். உடனே கோவையில் உள்ள மருதமலை கோவிலுக்கு சென்று வரலாம் என்று அழைத்துச்சென்றார்.
 
ஆனால், மூணாறுக்கு கூட்டிச்சென்று மகேஷ்குமார் கொலை செய்து இருக்கிறார். எனவே மகேஷ்குமார் திட்டமிட்டுதான் ஷமிலாவை கொலை செய்து உள்ளார். இந்த பழியில் இருந்து தப்பிக்க போலீசாருக்கும் பெற்றோருக்கும் பொய்யான கடிதங்களை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து இருக்கலாம். இவ்வாறு திருநகர் பகுதியில் ஷமிலாவுடன் பழகிய குடும்பத்தினர் தெரிவித்தார்கள்.
 
மகேஷ்குமாரின் கடிதம் ஷமிலாவைப் பற்றிய ஒரு கருத்தை ஏற்படுத்தி இருக்க... அவரோடு சிறு வயது முதல் பழகியவர்கள் கூறி இருக்கும் கருத்து வேறு விதமாக இருப்பதால், இதுபற்றி போலீசார் முழுமையாக விசாரணை செய்ய தீர்மானித்து இருக்கிறார்கள்.



[Continue reading...]

குடும்ப ஆட்சி ஒழிந்தது, ஓடி விட்டார் அஞ்சா நெஞ்சன்: ஜெ.

- 0 comments
 
 
 
கருணாநிதியின் குடும்ப ஆட்சி நடைபெற்ற போது, "அஞ்சா நெஞ்சன்" என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு ஒருவர் உங்களை துன்புறுத்தி வந்தார். அவருடன் இருப்பவர்கள் அனைவரும் ரவுடிகள். அவர்கள் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இப்போது, குடும்ப ஆட்சி ஒழிந்துவிட்டது. மக்களாட்சி மலர்ந்துவிட்டது. இப்போது, நீங்கள் எல்லாம் அஞ்சா நெஞ்சர்களாக ஆகிவிட்டீர்கள். அஞ்சா நெஞ்சன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டவர் அஞ்சி ஓடிவிட்டார் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
 
மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு
அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது:
 
ஐந்து மாதங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது உங்களை எல்லாம் சந்தித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
எனது அன்பான வேண்டுகோளினை ஏற்று குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை அளித்தீர்கள்.
 
இதனையடுத்து தமிழகத்தில் மக்களாட்சி மலர்ந்தது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி மலர்ந்தது. உங்களின் அமோக ஆதரவுடன் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டேன். இதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை மீண்டும் ஒரு முறை, உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
 
ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில் உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் நிறைவேற்றி இருக்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், அனைவருக்கும் விலையில்லா அரிசி வழங்கினோம்; முதியோர், விதவையர், கணவனால் கைவிடப்பட்டோர், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தி வழங்கினோம்; மகளிர் நலன் காக்கும் வகையில் திருமண உதவித் திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு 25,000/- ரூபாய் உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் வழங்கினோம்;
 
பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்திருக்கும் பெண்களுக்கு 50,000/- ரூபாய் என உயர்த்தப்பட்ட உதவித் தொகையுடன் 4 கிராம் தங்கம் வழங்கினோம்;
மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கினோம்; பெண் அரசு ஊழியர்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கினோம். இந்தத் திட்டங்களின் பயனை நீங்கள் எல்லாம் தற்போது
அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
 
இது மட்டுமல்லாமல், தேர்தல் வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க """"சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை"" என்று ஒரு தனித் துறையினையும் ஏற்படுத்தி இருக்கிறேன். இவை மட்டுமன்றி, தாய்மார்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம்; +1, +2 மற்றும் கல்லூரி படிப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம்;
ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம்; இடை நிற்றலை குறைக்கும் பொருட்டு 10 முதல், 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம்; மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் துவக்கி வைத்துள்ளேன்.
 
சமூக நீதியை காக்கும் வகையில் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல்
69 விழுக்காடு இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து கடைபிடிக்க ஆணையிட்டுள்ளேன்.
 
இலங்கை இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும்; இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்களை இயற்றி உள்ளோம்.
 
சட்டம் - ஒழுங்கைப் பொறுத்த வரையில், கடந்த திமுக ஆட்சியில் ரவுடிகளின் நண்பனாக விளங்கிய காவல் துறை, தற்போது பொதுமக்களின் நண்பனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனது அரசு எடுத்த நடவடிக்கைகளின் பயனாக அமளிக் காடாக விளங்கிய தமிழகம் நான்கே மாதங்களில் அமைதிப் பூங்காவாக மாறி இருக்கிறது.
 
உங்களின் சொத்துக்கள் எல்லாம் எப்போது தி.மு.க-வினரால் பறிக்கப்படுமோ என்று இருந்த நிலை மாறி, நீங்கள் எல்லாம் தற்போது நிம்மதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
 
நில அபகரிப்புகள் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அதிக அளவில் நடைபெற்றன. இதனை அறிந்த நான் முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, மீண்டும் அவற்றின் உரிமையாளர்களுக்கே திரும்பத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின் போது உங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தேன். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு மாநிலம் முழுவதும் நிலம் மற்றும் சொத்து அபகரிப்பு புகார்களை காவல் துறையினர் திறம்பட கவனிக்கும் வகையில் அனைத்து காவல் ஆணையரகங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இந்தப் பிரிவுகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது வழக்குகளை பதிவு செய்து, அபகரிக்கப்பட்ட சொத்துக்களை உரியவர்களிடம் வழங்கிட சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்கென 25 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து இன்று வரை 17,431 புகார்கள் பெறப்பட்டு உள்ளன. 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றுள் 28 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. 755 நில ஆக்கிரமிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 625 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டு நில உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
அபகரிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் உரியவர்களிடம் சட்டப்படி ஒப்படைக்கப் படுவதற்கான நடவடிக்கைகள் தொடரும் என்ற உத்தரவாதத்தை இந்த நேரத்தில் உங்களுக்கு நான் அளிக்க விரும்புகிறேன்.
 
முந்தைய தி.மு.க. ஆட்சியில், மின்சார உற்பத்தியில் மின் குறை மாநிலமாக தமிழகம் விளங்கியது. நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மின் உற்பத்தியைப் பெருக்கவும், மின்வெட்டைப் போக்கவும் போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளேன். தமிழ்நாட்டில் தற்போது, மின் வெட்டு படிப்படியாக, குறைந்து கொண்டே வருகிறது. அடுத்த ஆண்டிற்குள் தமிழ்நாட்டை மின்வெட்டே இல்லாத மாநிலமாக ஆக்குவேன் என்பதை இந்த நேரத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நாங்கள் எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக, அனைத்துத் துறைகளும் முன்னேற்றப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு ஒரு சுபிட்சமான பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இம்மாதம் 17 மற்றும் 19 தேதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. குடிநீர் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி, தெரு விளக்கு வசதி ஆகிய அடிப்படைத் தேவைகளை செய்து தருவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 
கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில்
தி.மு.க-வினரே இருந்தனர். அனைத்துத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. இவர்கள் உங்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்குப் பதிலாக, தங்களை முன்னேற்றிக் கொண்டனர்.
 
கருணாநிதியின் குடும்ப ஆட்சி நடைபெற்ற போது, "அஞ்சா நெஞ்சன்" என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு ஒருவர் உங்களை துன்புறுத்தி வந்தார். அவருடன் இருப்பவர்கள் அனைவரும் ரவுடிகள். அவர்கள் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தனர். இப்போது, குடும்ப ஆட்சி ஒழிந்துவிட்டது. மக்களாட்சி மலர்ந்துவிட்டது. இப்போது, நீங்கள் எல்லாம் அஞ்சா நெஞ்சர்களாக ஆகிவிட்டீர்கள். அஞ்சா நெஞ்சன் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டவர் அஞ்சி ஓடிவிட்டார். அவர், மத்திய அமைச்சராக இருந்து கொண்டு, முதலமைச்சரின் மகன் என்று கூறிக் கொண்டு தன்னை வளப்படுத்திக் கொண்டாரே தவிர உங்களுக்கு என்ன செய்தார்?
 
மதுரை மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக-வின் வசம் தான் இருந்து வந்தது. ஆனால் அவர்கள் உங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை, என்பது தான் உண்மை. திமுக கவுன்சிலர்கள் என்றாலே நீங்கள் பயந்து நடுங்கக் கூடிய நிலைமை தான் இங்கு இருந்தது. அந்த அளவிற்கு திமுக-வினர் வெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர்.
 
உங்களை மிரட்டி உங்கள் சொத்துக்களை அபகரித்து திமுக-வினர் வாழ்ந்து வந்தார்கள். மொத்தத்தில், நீங்களும் வளர்ச்சி அடையவில்லை; இந்த மதுரை மாநகராட்சியும் வளர்ச்சி அடையவில்லை.
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உங்களுடனேயே இருந்து, உங்களின் குறைகளை தீர்ப்பவர்களாக; உங்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக விளங்குவார்கள்; உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதியை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.
 
ஒரு நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவு மறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு நிர்வாகம் செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எறிவதற்கான நல்ல சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது.
 
சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் நிகழ்த்திக் காட்டிய வரலாற்றுச் சாதனையை போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் மீண்டும் ஒரு திருப்பு முனையை நீங்கள் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு; அதை நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையினை தெரிவித்து விடை பெறுகிறேன் என்றார் ஜெயலலிதா.



[Continue reading...]

Stills from Movie Vedi

- 0 comments

[Continue reading...]

Stills from Movie Vedi

- 0 comments

[Continue reading...]

சூர்யாவுக்கு 47 விஜய்க்கு 38 ! விஜய்-சூர்யா ரேக்ளா ரேஸ்....

- 0 comments
 
 
வருமா வராதா என்ற விஜய் ரசிகர்களின் ஏக்கத்தை இன்று காலையிலேயே துடைத்து துர எறிந்திருக்கிறது அந்த விளம்பரம். சென்னை மற்றும் புறநகரை சுற்றியுள்ள தியேட்டர்களில் எந்தெந்த தியேட்டர்களில் வேலாயுதம் ரிலீஸ் ஆகிறது என்ற தகவலுடன் வந்திருக்கும் இந்த விளம்பரம், அதி முக்கியமானது. ஏனென்றால் குழப்பம் தீர்த்த கோமேதக தகவலல்லவா அது?
 
இந்த தீபாவளியை இன்பமாக்கும் இந்த விளம்பரத்தை பார்த்தவர்கள் இன்னொரு விஷயத்தை கவனித்தார்களா தெரியாது. ஆனால் சூர்யா ரசிகர்கள் கவனித்ததால் இரு தரப்பினருக்கும் ஒரு சின்ன ஈகோ ஓடிக் கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது. இதே சென்னை மற்றும் புறநகர் தியேட்டர்கள் 7 ஆம் அறிவு படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த தியேட்டர்களின் விபரங்களை இன்று இப்படத்தின் விளம்பரங்களிலும் அறிவித்திருக்கிறார்கள்.
 
அதன்படி பார்த்தால் 7 ஆம் அறிவு 47 தியேட்டர்களிலும், வேலாயுதம் 38 தியேட்டர்களிலும் வெளியாவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இது சென்னை நிலவரம்தான். வெளியூர்களில் எப்படி என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.
 
யார் யாரை முந்திக் கொள்வார்கள் என்பதை ஸ்கிரீனிங் தீர்மானிக்கிறதோ, இல்லையோ? கலெக்ஷன் தீர்மானிக்கும்!
 



[Continue reading...]

காதல் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்த மகேஷ்குமார் உருக்கம்

- 0 comments
 
 
 
அப்பா எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கே குழந்தையாக பிறக்க விரும்புகிறேன் என்று தற்கொலை செய்துகொள்ளும் முன்பு மகேஷ்குமார் எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்துள்ளது.
 
மூணாறில் சென்னையைச் சேர்ந்த பெண் ஷமீலாவை கொலை செய்த அவரது கணவர் மகேஷ்குமார் தற்கொலை செய்துகொள்ளும் முன்பு ஒரு நோட்டில் 21 பக்கத்திற்கு தந்தை சுப்பிரமணியன், தாய் அமிர்தம், தங்கை பிரபா, மைத்துனர் ஈஸ்வரன் ஆகியோருக்கு உருக்கமான கடிதம் எழுதி அந்த நோட்டை தன் வீட்டு குளியலறையில் வைத்திருந்தார். இது தவிர போலீசாருக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். அவற்றை போலீசார் கைப்பற்றினர்.
 
தனது குடும்பத்தாருக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
 
அப்பா... கடந்த 10 ஆண்டுகளாக நான் உங்களை இவ்வாறு கூப்பிட்டது இல்லை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க கிட்ட பேசணும்னு நிறைய முறை நினைத்தேன். ஆனால், பேச முடியவில்லை. உங்ககிட்ட ஒன்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கவில்லை. பரவாயில்லை, இப்போது எழுத்து மூலம் சொல்லி விடுகிறேன்.
 
வாழ்க்கையில் நான் இப்படி கஷ்டப்பட நீங்கள் காரணம் இல்லை. எல்லாம் நான் பிறந்த நேரம், விதிதான். நீங்கள் எதுவும் வருத்தப்பட வேண்டாம். அடுத்த ஜென்மத்திலேயும் உங்களுக்கு குழந்தையாக பிறப்பேன். உங்களோட அன்பை முழுமையாக பெற "பெண் குழந்தையாக'' பிறப்பேன். இந்த ஜென்மத்தில் இதுவரைக்கும் ஒரு நல்ல பொறுப்பான பையனாக உங்களுக்கு நான் எதுவும் செய்யவில்லை. அடுத்த ஜென்மத்தில் உங்களை நன்றாக பார்த்துக்கொள்வேன். என்னை மன்னிச்சுடுங்க அப்பா...
 
அம்மா... உங்களுக்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. சத்தியம் செய்து கொடுக்கும்போதே தெரியும். ஏன்னா நீங்க எங்கிட்ட, நான் எதுவும் தவறான முடிவை எடுத்து விடக்கூடாது என்று கேட்டு இருந்தீங்க. ஆனால் வேறு வழியில்லை. என்னை முழுசா புரிந்து கொண்டது நீங்கள்தான். அம்மாவை பிடிக்காமல் யாராவது இருப்பார்களா? என்னோட நேரம், எல்லாம் இருந்தும் தனியா இருந்தேன்.
 
நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டபோது கூட எங்கள ஏங்க விடாம பார்த்துக்கொண்ட உங்கள் தாய்மைக்கும், அன்புக்கும் நான் எப்பவும் அடிமை. பக்கத்து வீட்டில் உனக்கு ஏதாவது சாப்பிட கொடுத்தாலும் அத எங்களுக்கு கொண்டு வந்து தரும் அன்பு என் அம்மாவை தவிர யாருக்கு வரும். எனக்கு ஏதாவது சந்தோஷமாக இருந்தாலோ, நீ நல்லா இருந்தாலோ என்னை பக்கத்துல கூப்பிட்டு வெச்சு கன்னத்துல முத்தம் வைக்கணும்னு ஆசை. (இப்ப வெச்சுக்கிறேன் அம்மா) உம்மா...
 
பிரபா... நீ என்னுடைய தங்கச்சியா இருந்தாலும் தங்கச்சின்னு அதிகம் கூப்பிட்டது இல்லை. உன்னை நினைத்தாலே என் கண்கள் கலங்கி விடுகிறது. இதை எழுதும்போதுகூட எழுத முடியாமல் அழுது கொண்டு எழுதினேன்.
 
இந்த ஜென்மத்தில் நம்மால் முழுமையாக அண்ணன், தங்கையாக பாசத்தையோ, அன்பையோ பரிமாறிக்கொள்ள முடியவில்லை. என்னை மன்னித்து விடு. நீ தான் என்றென்றும் என் தங்கை.
 
மச்சான்... என்னால் உங்களுக்கு நிறைய தொல்லைகள் கொடுத்தாச்சு. இனி அது இருக்காது. உங்க பேச்சை மீறிதான் நான் இந்த தப்பை செய்யுறேன். வேற வழியில்லை மச்சான். என்னால் ஷமிலா இல்லாமல் இருக்க முடியாது அதான். உங்கள விட்டு நான் இப்படி பாதியில் போறதுக்கு என்னோட வாழ்க்கைப் பயணம் முடியும் நேரம் வந்தாச்சு. அவ்வளவுதான் என்னை மன்னிச்சுடுங்கோ.
 
வாழ்ந்தால் மரியாதையோடும், மானத்தோடும், நாலுபேர் பாராட்டுகிற மாதிரி கம்பீரமாக சந்தோஷமாக வாழ வேண்டும். அந்த வாழ்க்கை எனக்கு அமையவில்லை. நானும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் முடியவில்லை. அதுக்காக ஷமிலாவிடம் எத்தனையோ முறை விட்டுக்கொடுத்து எல்லாத்தையும் மன்னித்து, கெஞ்சி, மிரட்டி அழுதுகூடப் பார்த்தேன். ஆனால் முடியவில்லை.
 
சாப்பிட்டு போட்ட எச்சில் இலை மாதிரி தூக்கி வீசிட்டு போய்ட்டா மாமா. நன்றி மறந்து விட்டு, வேறு உலகத்துக்கு போய்ட்டா. தொடர்ந்து அவமானப்பட்டு முட்டி, மோதி என் மனைவியை என் பக்கம் திருப்ப நான் எவ்வளவோ கஷ்டப்பட்டுவிட்டேன். ஏனென்றால் என்ன இருந்தாலும் தப்பை உணர்ந்து அவள் வந்து விடுவாள் என்று நினைத்தேன். அவளுக்கு பிடிச்ச விஷயங்களை சென்னையிலேயே அவ்வப்போது தீர்த்து வைத்துக்கொண்டு இருந்தேன்.
 
புத்தியை மாத்தி வச்சிருக்காங்களோ என்று நினைத்து கோவிலுக்கு கூட்டி போய் மாந்திரீகம் செய்து விட்டுக்கூட வந்தேன். ஆனால் என்கிட்ட பொய் சொல்வதே அவளுக்கு வாடிக்கையாக இருந்து விட்டது. ஒவ்வொரு நிமிடமும் இந்த நிமிடம் அவள் மாறிவிட மாட்டாளா?, பழைய நினைவுகளை தூக்கிப்போட்டுவிட்டு வரமாட்டாளா? என்று ஏங்குவேன். ஆழமா போய் விட்டதால் அவள் வர விரும்பவில்லை.
 
3 அல்லது 4 நாட்கள் சுற்றுலா கூட்டிட்டு போய் எனது காதலை உணர்வுப்பூர்வமாக பக்கத்தில் இருந்து அவளுக்கு காட்டினால் திருந்த வாய்ப்பு இருக்குமோ? என்று நினைத்துதான் மூணாறுக்கு செல்ல முடிவு செய்தேன். அதனால் தான் மூணாறு சென்றோம். இதுல திருந்தி வாழ்ந்தால் வாழலாம். இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.
 
அவள் திருந்தி மனம் மாற வேண்டும் என்பதற்காக எல்லாம் செய்தேன். பல்வேறு இடங்களுக்கு கூட்டிச் சென்றேன். அவளும் சந்தோஷமாக இருந்தாள். அவள் மனதில் உண்மையாக எந்த வித மாற்றமும் வரவில்லை. பழைய ஷமிலா எனக்கு கிடைக்கவில்லை. ஒரு வாய்த் தகராறில் இப்படி ஆகிவிட்டது.
 
ஒரு தாய் எப்படி தன் குழந்தையை கொன்று விட்டு பின்பு அவளும் மாய்த்துக்கொள்வாளோ அப்படித்தான் இதுவும். என் குழந்தையை விட்டு செல்ல மனம் இல்லை.
 
இதோ நான் செல்கிறேன் இப்போது... இது இன்று நேற்று எடுத்த முடிவு இல்லை. நாங்கள் காதலிக்கும்போதே எடுத்த முடிவு. எனக்கு வாழ்க்கை, கனவு, லட்சியம், ஒரே ஆசை எல்லாம் எனது மனைவி ஷமிலா தான். அவள்தான் என்னுடைய உலகம். ஷமிலாவை என் உடலில் இருந்தோ, மனதில் இருந்தோ பிரிக்க முடியாது. ரத்தத்தோட ஊறிய விஷயம். இது அவளுக்கே நல்லா தெரியும். ஏன்னா நான் அவளுக்காகவே வாழ்ந்தவன்.
 
அவளோட ஆசைதான் என்னுடைய ஆசை. அவளுக்கு பிடித்ததுதான் எனக்கும் பிடிக்கும். எனக்கென்று எதுவும் இல்லாமல் அவளுக்காக 6 வருடமாக வாழ்ந்துவிட்டேன். இப்போது திடீரென்று என்னை தனியாக வாழச் சொன்னால் என்னால் எப்படி முடியும். என்னால் ஷமிலாவை மறக்க முடியவில்லை. என் மூளை செயல் இழக்கும் வரைக்கும் ஷமிலாவுக்கு நான்தான் அப்பா, கணவன், காதலன் (4 மாதங்களுக்கு முன்பு வரைக்கும்).
 
அவ என்ன தப்பு செய்தாலும், அவமானப்படுத்தினாலும் அவள் மேல் எனக்கு கோபமே வராது. தெரியாம பண்ணுறா என்று தான் இருந்தேன். நான் வாழ்ந்தால் அது ஷமிலாவுடன் மட்டும் தான். என் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதுக்கு காரணம் ஷமிலாவாக தான் இருக்க வேண்டும். அது என் சாவுக்கும் கூட. என் வாழ்க்கை இப்படித் தான் கடைசி வரைக்கும். சோகம்... சோகம்... நானே முடிக்கிறேன் இந்த கதையை.
 
எங்கள் காதல் உண்மையானதுதான். அது என்றைக்கும் மாறாது. அவளால் தான் இந்த வாழ்க்கை கிடைத்தது. இப்ப அவளே அதை எடுத்துக்கிட்டா. எத்தனையோ நிமிடங்கள் இப்பவே செத்துப்போனாலும் பரவாயில்லைங்கிற அளவுக்கு வாழ்ந்து இருக்கிறோம். அத மனசுல வைச்சு சந்தோஷமா பிரிகிறேன். தயவு செய்து என் கையில் இருக்கிற கடிதத்தை போலீசில் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். இதுதான் என்னுடைய கடைசி ஆசை.
 
ஷமிலாவை சாதாரணமாகவே பிரிய முடியாத என்னால், இப்பொழுது அவள் மண்ணில் இல்லை என்று தெரிந்தும் எப்படி இருக்க முடியும். துக்கமும், அழுகையும் தாங்கமுடியவில்லை. அதுதான் சென்னை போன காரியத்தை பாதில முடிச்சுட்டு, என் உயிர் என் சொந்த ஊர்ல போகனும்னு வந்துட்டேன் என்று அவர் அதில் குறிப்பிட்டு கடித்ததின் கீழ் ஷமிலா மகேஷ் என்று கையெழுத்திட்டுள்ளார்.
 
மனைவியைக் கொன்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிய மகேஷ் அங்குதூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து ஊரை திரண்டு போனது. ஆனால் மகேஷின் பெற்றோரும், தங்கையும் மட்டும் போகவில்லை.
 
ஆனால் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்ததும், தங்கையின் பிரசவத்திற்காக நண்பரிடம் ரூ. 60,000 கொடுத்து வைத்திருந்ததையும் அறிந்ததும் அவர்கள் பதறிப் போனார்கள். பாசம் உந்தித் தள்ள சுமார் 2 மணி நேரம் தாமதமாக போய் அவரது உடலைப் பார்த்து கதறினர்.



[Continue reading...]

சினிமா கீழ்த்தரமாகவும், அசிங்கமாகவும் ஆகிவிட்டது;நான் இனி நடிக்கவே மாட்டேன்: பிரபல நடிகை

- 0 comments
 
 
 
காதலர் தினம் படம் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனாலி பிந்த்ரே. கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்திருந்தார்.
 
 
இந்திப் படங்களில் ஆர்வம் காட்டிய அவர் கடந்த 2002ம் ஆண்டு இந்தி திரைப்பட இயக்குனரும், நடிகருமான கோல்டிபெல்லை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கடந்த 2005ம் ஆண்டு ரன்வீர் என்ற ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
 
 
அவருக்கு பட வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்க மறுத்துவருகிறார்.
 
 
 
 
இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோனாலியிடம் மீண்டும் நடிக்க வருவீ்ர்களா என்று கேட்கப்பட்டது.
 
அதற்கு அவர், ''மீண்டும் நடிக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்து தான் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.
 
 
முன்பு அழகை அழகாகக் காட்டினார்கள். நடிகைகளின் கவர்ச்சியும் ரசிக்கும் வகையில் இருந்தது.
 
ஏன் நானும் கூட கவர்ச்சியாக நடித்துள்ளேன். ஆனால் அதில் ஆபாசம் இல்லை. தற்போதுள்ள நடிகைகள் சகட்டுமேனிக்கு ஆடைகளைக் குறைத்து பார்க்க அறுவறுப்பாகவும், ஆபாசமாகவும் நடித்து சினிமாவின் தரத்தையே சீர்குலைத்துவிட்டனர். சினிமா கீழ்த்தரமாகவும், அசிங்கமாகவும் ஆகிவிட்டது.
 
 
நாளுக்கு நாள் சினிமாவின் தரம் தாழ்ந்துகொண்டே தான் போகிறது. ஆகையால் நான் இனி சினிமாவில் நடிக்கவே மாட்டேன்'' என்றார்.



[Continue reading...]

சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: டாக்டர் ராமதாஸ்

- 0 comments
 
 
சினிமாவில் நடித்த அம்மையார் தான் இன்று தமிழக முதல்வர். சினிமாவில் நடித்த நடிகர் தான் இன்று தமிழக எதிர்கட்சி தலைவர். எனவே, சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
 
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, கம்மாபுரம், விருத்தாசலம், நெய்வேலி, வடலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது, திராவிட கட்சிகளான தி.மு.க.-அ.தி.முக. ஆகிய கட்சிகள் தமிழகத்தை கடந்த 44 ஆண்டுகளாக கொள்ளை கூடாரமாக மாற்றிவிட்டனர். திராவிட கட்சிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், திராவிட கட்சிகளை உதறவிட்டு வெளியில் வந்தோம்.
 
திராவிட கட்சிகள் தான் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், ஆடு, மாடு வழங்குவதால் வறுமையை ஒழித்துவிட முடியாது. சினிமாவில் நடித்த அம்மையார் தான் இன்று முதல்வர். சினிமாவில் நடித்த நடிகர் தான் எதிர்கட்சி தலைவர். எனவே சினிமா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
 
நாட்டின் வளர்ச்சியைத் தடுத்த திராவிட கட்சிகளை வேரறுப்பது தான் பா.ம.க.வின் முக்கிய பணியாகும். 2016 ல் தமிழகத்தில் பா.ம.க.ஆளும் கட்சியாக உயர்த்தி காட்டுவோம். தமிழகத்தை ஆளும் தகுதி பா.ம.க.விற்கு மட்டுமே உள்ளது, என்றார்.



[Continue reading...]

ஜெ. அரசை மக்களே தூக்கி எறிவார்கள்: வைகோ

- 0 comments
 
 
 
தொடர்நது மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களே அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 
புளியங்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு மதிமுக சார்பில் டாக்டர் சதன் திருமலைக்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர்
 
வைகோ புளியங்குடியில் பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசுகையில்,
 
கடந்த 5 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய சதன் திருமலைக்குமார், புளியங்குடி நகராட்சி பகுதியில் விவசாயிகள் பயன்படுத்துவதற்காக பெரும்பாதை, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் மற்றும் கூடுதல் கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளார். இவரை நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெறச் செய்தால் மேலும் பல நல்ல திட்டங்கள் நகராட்சிக்கு கொண்டு வருவார்.
 
பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 7 ஆதி திராவிடர்கள் பரிதாபமாக இறந்தனர். ஒரு வனவிலங்கை கொன்றால் கூட பெரிய அளவில் தண்டனை கொடுக்கப்படும் நிலையில் 7 மனித உயிர்களை சுட்டு வீழ்த்திய போலீசார் யாரையும் அதி்முக அரசு சஸ்பெண்ட் செய்யவில்லை. அதற்கு மாறாக மறியல் போராட்டம் என்றால் இது போன்ற நிகழ்வு நடைபெறத்தான் செய்யும் என தமிழக அரசு சப்பை கட்டு கட்டுகிறது. இது மனித தன்மையற்ற செயலாகும். இதே போல் தொடர் சம்பவங்கள் நடந்தால் அதிமுக அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என்றார்.



[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger