Thursday 13 October 2011

அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்

 
 
பிரபல வக்கீலும் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்தவருமான பிரசாந்த் பூஷன் ராம் சேனாவை சேர்ந்தவர்களால் நேற்று தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்நிலையில் ஸ்ரீராம் சேனா ஆதரவாளர்கள் இன்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திற்கு வெளியே அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதில், ராஜ்குமார் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டார்.
 
உடனடியாக அவர் அருகில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அன்னா ஹசாரே ஆகஸ்ட் மாதம் ராம்லீலா மைதானத்த்தில் தனது 13 நாள் உண்ணாவிரதத்தை ராஜ்குமாரின் பேத்திகள் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger