Monday 8 December 2014

டிசம்பர் 12ல் ரஜினி ரசிகர்கள் அரசியல் கட்சி பெயர், கட்சிக் கொடி

- 0 comments


திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு, டிசம்பர் 12-ம் தேதி அரசியல் கட்சியை தொடங்க உள்ளனர் ரஜினி ரசிகர்கள். இதற்கான இறுதிகட்ட பணிகள், 14 மாவட்டங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ரஜினியை அரசியலுக்கு இழுக்க தேசியக் கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவும் சூழலில், ரசிகர்களே அரசியல் கட்சி தொடங் குவது குறித்து விசாரித்த போது, பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்தன.

செயற்குழு, பொதுக்குழு

திருப்பூரிலுள்ள தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம் மற்றும் மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம் என்பது தமிழக ரஜினி ரசிகர் மன்ற அளவில் குறிப்பிடத்தக்க பெயர்கள். தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவராக எஸ்.எஸ்.முருகேஷ் உள்ளார். இவரது தலைமையில், 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி, செயற் குழு, பொதுக்குழுவைக் கூட்டி அரசியல் கட்சி தொடங்கும் அறிவிப்பை, டிசம்பர் 12-ம் தேதி திருப்பூரில் வெளியிட உள்ளனர்.

நலத்திட்டங்களில் வித்தியாசம்

படையப்பா நகர், முத்து நகர், ரஜினிகாந்த் யாத்ரா நகர், எந்திரன் நகர் உள்ளிட்ட ரஜினிகாந்தின் திரைப்படங்கள் பெயர்களில் திருப்பூரில் நகர்கள் உண்டு. அதேபோல், தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில், 100-க்கும் மேற் பட்டோருக்கு வீடு கட்ட காலி இடம் வழங்கப்பட்டுள்ளது. ரஜினி காந்த் பிறந்தநாளையொட்டி, குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குவது, முதியோர் களுக்கு உதவித்தொகை, அரிசி உட்பட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

கட்சி பெயர், சின்னம் அறிவிப்பு

இந்நிலையில், இளைஞர் அணி, தொழிற்சங்கம், மகளிர் அணி உட்பட 5 உட்பிரிவினரும், அரசியல் கட்சி அறிவிப்புக்கு ஆயத்தமாகி வருகின்றனர். கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட 14 மாவட்ட ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கப் பொறுப்பாளர்கள், திருப்பூரில் கூடி கட்சி மற்றும் சின்னத்தை அறிவிக்க இருக்கின்றனர். இதுதொடர்பாக, தங்களின் விளக்கக் கடிதத்தையும் தலைமைக்கு அனுப்பியுள்ளதாக கூறுகின்றனர்.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் கூறியது:

ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி பொதுத் தொழிலாளர் சங்கத்தை, கட்சியாக அறிவிக்க உள்ளோம்; இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ரஜினிகாந்தின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளமாட்டோம். கட்சி ஆரம்பிப்பது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படியான அனைத்து சான்றுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஜினியின் படத்தையும், பெயரையும் பயன் படுத்தமாட்டோம் என்றார்.

கடந்த 6 மாதமாக தொடர்ந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திதான் இந்த முடிவு எடுக்கப் பட்டது. கடந்த 30 ஆண்டு களாக செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்களை வெளிப்படுத்தும் வகையில், திருப்பூரில் கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல், 32 மாவட்டங் களிலும் கட்சியை விரிவுப்படுத்தும் முனைப்புதான், நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள முதல் பணி. அதை முடித்துவிட்டு, அடுத்த 3 மாதத்துக்குள் முதல் மாநாட்டை, மதுரை அல்லது கோவையில் நடத்தும் திட்டமும் உள்ளது. குறிப்பாக, ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென ஏங்கிக் கிடக்கும், ரசிகர்களுக்கு, அரசியல் இயக்கத்தில் தனி பிரதிநிதித்துவம் அளிக்க வாய்ப்புள்ளது என எஸ்.எஸ்.முருகேஷுக்கு நெருக்கமான வர்கள் கூறுகின்றனர்.

Keywords: திருப்பூர் தலைமையிடம், ரஜினி ரசிகர்கள், அரசியல் கட்சி, டிசம்பர் 12ல் பெயர், கட்சிக் கொடி அறிவிப்பு

[Continue reading...]

நடிகர் விஷாலுக்கு எதிர்ப்பு முற்றுகிறது

- 0 comments


திருச்சி நாடக நடிகர்கள் சங்க விழாவில் நடிகர் நாசர், விஷால் குறித்து விமர்சனம் செய்த பிரச்சினை முடிவதற்குள் மதுரையிலும் விஷால், மன்சூர் அலிகானுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டது.

மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை உட்பட 16 இடங்களில் நாடக நடிகர் சங்கங்கள் உள்ளன. இவை தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட அமைப்புகள் என்பதால், நடிகர் சங்கத் தேர்தலில் நாடக நடிகர்களும் வாக்களிப் பார்கள். பதிலுக்கு செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட சில பதவிகள் இவர்களுக்கு வழங் கப்படும். அடுத்த ஆண்டு ஜூலையில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

கடந்த தீபாவளியையொட்டி திருச்சியில் நடந்த நலிந்த கலைஞர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியும், துணைத் தலைவர் கே.என்.காளையும் நடிகர் நாசர், விஷால் ஆகியோரை மோசமாக விமர்சித்ததாக சர்ச்சை கிளம்பியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஷால், நாசர் ஆகியோர் தனித்தனியாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட இருவரும் சங்கத்தில் மன்னிப்பு கேட்ட பிறகும், இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத சூழலில், மதுரையில் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த சங்கரதாஸ் சுவாமி களின் குருபூஜை விழாவில், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் கே.என்.காளை, செயற்குழு உறுப் பினர் பிரசாத் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழ் நாடு நாடக நடிகர் சங்க துணைத் தலைவர் கலைமணி பேசும்போது, "நாடக நடிகர்களுக்காக போராடி வருகிற சரத்குமார், ராதாரவி போன்றவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்தே ஒதுக்க விஷால் போன்ற இளைய நடிகர்கள் முயற்சி செய்கிறார்கள். நாடக நடிகர்களை மன்சூர் அலிகான் இழிவாகப் பேசுகிறார்.

நாடக நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைத்தவர் ராதா ரவி. அவர் இல்லை என்றால், நமக்கு சங்கம் எங்கிருக்கிறது என்றே தெரிந்திருக்காது. சரத்குமார், ராதாரவி ஆகியோரது கரங் களை நாம் வலுப்படுத்த வேண் டும். சங்கத்துக்கு எதிராகப் பேசும் விஷால், மன்சூர் அலிகானை கண்டிக்கிறோம். நாடகக்காரர் களுக்கு நடிக்கவும் தெரியும், அடிக்கவும் தெரியும் என்றார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர் வாகிகள் முன்னிலையில் நடந்த இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Keywords: அடிக்கவும் தெரியும், விஷால், மன்சூர் அலிகான், நாடக நடிகர்கள் மிரட்டல், நாடக நடிகர்கள் சங்க விழா

[Continue reading...]

அவமானம் தமிழ் கதை -Tamil short story

- 0 comments
ரயிலுக்காகக் காத்திருந்தார் மாதவன்.

எடை பார்க்கும் மெஷின் கண்ணில்படவே, ஏறி நின்று ஒரு ரூபாய் காசைப் போட்டார். ஒரு மாற்றமும் இல்லை. மெஷின் அமைதியாக இருந்தது.

'சே..' என்று அலுத்தபடி பக்கத்தில் இருந்த கடைக்குச் சென்று தண்ணீர் பாட்டில் வாங்கினார். "மெஷின் கொஞ்சநாளா ரிப்பேரா இருக்கு சார்.. யாரும் கவனிக்க மாட்டேங் கறாங்க. போடுற காசெல்லாம் வேஸ்ட் ஆயிடுது" என்றார் கடைக்காரர்.

அதே சமயம் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினார் மாதவன். ஒரு கிராமத்து தம்பதி மெஷின் பக்கம் வந்தார்கள். பக்கத்தில் சென்று அவர்களை எச்சரிப்பதற்குள் அவர்களுடைய சின்ன மகள் மெஷினில் ஏறி காசு போட்டாள். சிறிது நேரம் கழித்து, "அப்பா... சீட்டு வரல!" என்று சிணுங்கினாள்.

அவனும் தட்டிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினான். "சரி.. வா, போகலாம்..!" என்று அவன் மனைவி இழுத் தாள். "இரு.." என்று சொல்லிவிட்டு சுற்றிப் பார்த்தான். சாமான் பேக் செய்து வந்த அட்டைப் பெட்டி கிடந்தது.

பாக்கெட்டில் இருந்து பால்பாய்ன்ட் பேனாவை எடுத்து 'ரிப்பேர்' என்று கொட்டை எழுத்தில் எழுதினான். பக்கத்தில் கிடந்த சணல் கயிறை எடுத்து அட்டையை மெஷினில் சேர்த்துக் கட்டிவிட்டு கிளம்பினான். பார்த்துக் கொண்டிருந்த மாதவன் கொஞ்சம் அவமானமாக உணர்ந்தார்!

Keywords: ஒரு நிமிடக் கதை

[Continue reading...]

பத்து பைசா - தமிழ் கதைகள்

- 0 comments
"ஏம்மா, உன்னை சீக்கிரமா கிளம்பத் தானே சொன்னேன்?..."- என்று அம்மாவிடம் சிடுசிடுத்த ராகவன், மனைவியிடம் சென்று, "ஏய்...அம்மாவுக்கு சீக்கிரம் டிபன் வை. நான் ஆபிஸ் போகும்போது அவங்களை பஸ் ஸ்டாண்டுல விட்டுட்டுப் போயிடறேன்" என்றான்.

"ஊருக்கு கிளம்பற அம்மாகிட்ட ஏன் இப்படி எரிஞ்சு விழறீங்க? நீங்க கால்ல சுடு தண்ணி ஊத்திக்கிட்ட மாதிரி படபடக்கறது அவங்களுக்கு சரிப்பட்டு வராது. நீங்க கிளம்புங்க. அவங்க வயசானவங்க. நிதானமா கிளம்பி ஆட்டோவுல போவாங்க. நான் அவங்களை வழி அனுப்பி வைக்கிறேன்!" ரமா சொன்னாள்.

ரமா மாமியாருக்காக பரிந்து பேசுவதைப் பார்த்து ராகவன் ஆனந்தப்பட்டான்.

ஆனால் அவள் அப்படி பேசுவதற்கு அர்த்தம் இருந்தது. ஊரிலிருந்து வந்திருக்கிற அம்மா இன்று கிளம்புகிறாள் என்று காலையில் தெரிந்ததுமே 'செலவுக்கு வச்சுக்கம்மா' என்று ராகவன் பணம் கொடுத்தபோது, ரமா பார்த்துவிட்டாள். அதை எப்படியாவது மாமியாரிடமிருந்து பிடுங்கிவிட வேண்டும் என்றுதான் இந்த கரிசன நாடகம்.

ஆனால் அவள் அப்படி பேசுவதற்கு அர்த்தம் இருந்தது. ஊரிலிருந்து வந்திருக்கிற அம்மா இன்று கிளம்புகிறாள் என்று காலையில் தெரிந்ததுமே 'செலவுக்கு வச்சுக்கம்மா' என்று ராகவன் பணம் கொடுத்தபோது, ரமா பார்த்துவிட்டாள். அதை எப்படியாவது மாமியாரிடமிருந்து பிடுங்கிவிட வேண்டும் என்றுதான் இந்த கரிசன நாடகம்.

மாமியார் கிளம்பி ரமாவிடம் விடைபெறும் போது ரமா கேட்டாள், "அத்தே, உங்கப் பிள்ளை என் செலவுக்குன்னு பணமே தர்றது இல்லை. கேட்டா, 'எல்லாம் நான்தான் வாங்கி வந்து போட்டுடறேனே. அப்புறம் உனக்கு ஏன் தனியாப் பணம்? 'ன்னு கேட்கறார். வீட்ல கைக்குழந்தை இருக்கு. திடீர்னு அதுக்கு ஒண்ணுன்னா டாக்டர்கிட்ட அழைச்சுட்டுப் போகக்கூட அவசர செலவுக்குன்னு வீட்ல பத்து பைசா இல்லை. நீங்க தப்பா எடுத்துக்க லேன்னா உங்ககிட்ட பணம் ஏதாவது இருந்தா கொடுத்துட்டு போங்க அத்தே".

ரமாவின் பேச்சு மிக இயல்பாய் இருந்தது.

மகன் கொடுத்த பணத்துடன் ஆட்டோவுக் கென்று எடுத்து வைத்திருந்த பணத்தையும் சேர்த்து ரமாவிடம் கொடுத்துவிட்டு, மூணு கிலோ மீட்டர் வெயிலில் நடந்தே பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாள் ராகவனின் அம்மா.

"என்ன ராகவ்... காலையில இருந்து சந்தோஷமா இருக்கே? - ராகவனிடம் ஆபிஸ் நண்பன் குமார் கேட்டான்.

"என் மனைவி என்னைக்காவது ஒரு நாள் மனசு மாறி, என் அம்மாகிட்ட அன்பா நடந்துக்க மாட்டாளான்னு எதிர்பார்த்துட்டு இருந்தேண்டா. அவ இவ்வளவு சீக்கிரம் மாறுவாள்னு நினைக்கவே இல்லை"

தாமதமாய் கிளம்பிய அம்மாவிடம் தான் கோபமாய் பேசியதையும், அதற்கு ரமா பரிந்து வந்ததையும் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான் ராகவன்.. உலகம் புரியாத அப்பாவியாய்!

Keywords: ஒரு நிமிட கதை, பரிவு, குடும்பம்
Topics: இலக்கியம்| கதை|
MORE IN: இலக்கியம் | பொது

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger