Friday 3 January 2014

அரசு பள்ளிகளில் 10 வது, பிளஸ் 2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு Government schools in 10th plus two students 100 percent of graduate specialized training organized

- 0 comments
அரசு பள்ளிகளில் 10 வது, பிளஸ் 2 மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு Government schools in 10th plus two students 100 percent of graduate specialized training organized

சென்னை, ஜன.4-

அரையாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று கூறியதாவது:-

கடந்த வருடம் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் எந்த அரசு பள்ளிகளில் 70 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி சதவீதம் உள்ளதோ அப்படிப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்த திட்டமிட்டோம். அதன்படி நேற்று கோவையில் முதல் கட்டமாக தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, பள்ளிகல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உள்பட அனைவரும் கலந்து கொண்டோம். 70 சதவீத தேர்ச்சிக்கு குறைவான தேர்ச்சி உடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டது. அரையாண்டு தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்ற எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தவேண்டும் என்று கூறி உள்ளோம்.

எந்த மாணவர் எந்த பாடத்தில் தேர்வு பெறவில்லை என்பதை கண்டுபிடித்து அந்த பாடத்தில் நன்றாக விளக்கி பயிற்சி அளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளோம். எப்படியும் 100 சதவீத தேர்ச்சியை எட்டவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளோம்.

இது போன்ற கூட்டம் நெல்லையில் 6-ந்தேதி நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் 70 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள். இப்படியாக தமிழ்நாடு முழுவதும் உடனடியாக கூட்டம் நடத்தி தலைமை ஆசிரியர்களுக்கு தக்க அறிவுரை வழங்க உள்ளோம்.

இவ்வாறு வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
...
 
[Continue reading...]

ஜனவரி 6ஆம் தேதி வேட்டி தினம் Dhoti Day on January 6

- 0 comments
வரும் ஜனவரி 6ஆம் தேதி வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து ஆண் அரசு ஊழியர்கள் வேட்டி அணிந்தும், பெண் ஊழியர்கள் கைத்தறி புடவைகள் அணிந்தும் பணிக்கு வர வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.


பொங்கல் திருநாளை முன்னிட்டு கைத்தறி தொழிலாளர்களை சிறப்பிக்கும் விதமாக வருகிற 6ஆம் தேதி 'வேட்டி தினம்' அனுசரிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 'வேட்டி' விற்பனை பிரிவை கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கைத்தறி தொழிலாளர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த தமிழர்களின் கலாச்சார உடையான கைத்தறி வேட்டியை அனைவரும் அணிந்து வரவேண்டும். வருகிற 6ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் விருப்பப்படி வேட்டி அணிந்து பணிக்கு வர வேண்டும். பெண் ஊழியர்கள் கைத்தறி சேலை அணிந்து வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி உமா மகேஸ்வரி, நேர்முக உதவியாளர்கள் துரைராஜன், சுந்தரபாண்டியன், மக்கள் தொடர்பு அதிகாரி மாரியப்பன், மண்டல ஆய்வுக்குழு அதிகாரி தியாகராஜன், கோப்–ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சுப்பிரமணியன், துணை மண்டல மேலாளர் சண்முக சுந்தரம், மேலாளர் கணபதி, அலுவலக மேலாளர் தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். * * * அரசு ஊழியர்கள் வருகிற 6–ந்தேதியன்று வேட்டி தினம் கொண்டாடுகின்றனர். இதற்காக கோ–ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை தொடங்கி உள்ளது. அதில் கலந்து கொண்ட நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் வேட்டி வாங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். 
[Continue reading...]

உலகில் முதலிடம் பெற்ற தேனி மாவட்டம்: எக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல் Theni district is first in the world 120 tons per hectare yield of banana

- 0 comments

Img உலகில் முதலிடம் பெற்ற தேனி மாவட்டம்: எக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல் Theni district is first in the world 120 tons per hectare yield of banana

தேனி, ஜன.3–

தேனி மாவட்டத்தில் தற்போது 8 ஆயிரம் எக்டேரில் வாழை சாகுபடி நடக்கிறது. ஜி 9, நேந்திரன் ரகங்களில் திசு வாழைகள் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. ஜி 9 திசு வாழை சாகுபடியில் தேனி மாவட்ட விவசாயிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.

சராசரியாக 1 எக்டேருக்கு 120 டன் வாழை விளைச்சல் எடுத்துள்ளனர். மிகவும் குறைந்தபட்ச சாகுபடி அளவே 90 டன் என்ற நிலையில் உள்ளது.

இந்தியாவின் சராசரி வாழை சாகுபடி திறன் எக்டேருக்கு 50 டன்கள் ஆகும். மகாராஷ்டிரா மாநிலம் இதுவரை 68 டன் விளைச்சல் எடுத்து இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது. உலக அளவில் பிரேசில், ஈக்வடார், போஸ்டாரிகா ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்திருந்தன. தேனி மாவட்ட விவசாயிகள் சராசரியாக எக்டேருக்கு 120 டன் விளைவித்து உலக நாடுகளின் பழைய சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட தோட்டக்கலை துணைஇயக்குனர் முருகன் கூறியதாவது,

தேனி மாவட்டத்தில் காமையகவுண்டன்பட்டியில் ஏராளமான விவசாயிகள் 120 டன் மேல் வாழை விளைவித்து சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் உலகளவில் வாழை விளைச்சலில் தேனி மாவட்டம்தான் முதலிடம் பெற்றுள்ளது. இந்த சாதனையை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதில் ஒரு விவசாயி 150 டன்–க்கு மேல் விளைச்சல் எடுத்துள்ளார். இது உலகில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத சாதனை. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து அந்த விவசாயி தோட்டத்தில் ஆய்வு நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

...

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger