Sunday 10 November 2013

இலங்கையில் தமிழ் ஈழம் அமைய அனைவரும் பாடுபட வேண்டும்: இயக்குனர் பாரதிராஜா பேச்சு bharathiraja speech in Tanjore mullivaikkal festival

- 0 comments

இலங்கையில் தமிழ் ஈழம் அமைய அனைவரும் பாடுபட வேண்டும்: இயக்குனர் பாரதிராஜா பேச்சு bharathiraja speech in Tanjore mullivaikkal festival

தஞ்சாவூர், நவ.11–

தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகில் அமைக்கப்பட்டு உள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தின் திறப்பு விழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இரவு திரைத்துறை அரங்கம் நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமை வகித்து பேசியதாவது:

இங்கு அமைக்கப்பட்டு உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை பார்த்தது முதல் என் இதயம் கனத்த இதயமாக உள்ளது.

கடந்த 2009–ம் ஆண்டு இலங்கையில் நடந்த உச்சக்கட்ட போரில் நம் இன மக்கள் கொலை செய்யப்பட்ட போது நம்மால் எதுவும் செய்ய முடியாமல் வேதனைப்பட்டோம்.

திரைப்படத் துறையினராலும் எதுவும் செய்ய முடியவில்லை. தமிழ் மக்கள் உணர்ச்சி அற்றவர்களாக மாறி வருகிறோம்.

தமிழகத்தில் தற்போது 40 விழுக்காடு மட்டும் தான் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை பார்க்கும் போது ஒவ்வொரு தமிழனுக்கும் கோபம் வரவேண்டும்.

சிங்கள வெறியர்களை எதிர்த்து அங்கு தமிழ் ஈழம் அமைய அனைவரும் பாடுபடவேண்டும். அந்த உணர்வு அனைவருக்கும் வரவேண்டும்.

இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாருமே கலந்து கொள்ள கூடாது. இதனை நாம் சொன்னால் இந்த பிரச்சினை தனிப்பட்ட ஒரு மாநிலத்தின் பிரச்சினை என்று சொல்கிறார்கள்.

இது பற்றி எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று கூறுகின்றனர். அப்போது நாம் இந்தியாவில் இல்லையா, இந்தியாவில் இருந்து தமிழ்நாடு பிரிக்கப்பட்டு விட்டதா. ஏன் தமிழ்நாட்டை மத்திய அரசு ஒதுக்குகிறது.

இதற்கு எங்களை இந்தியாவில் இருந்தே ஒதுக்கி விடலாம்.

தமிழ் மொழி, தமிழன் காப்பாற்றப்பட வேண்டும். இதற்கு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். அப்போது தான் தனித் தமிழ் ஈழம் மலருவதை நாம் வென்று எடுக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இயக்குனர் ஆர்.கே. செல்வமணி பேசியதாவது:

பெரியகோவிலை பார்க்கும் போது தமிழனின் வெற்றி அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. முள்ளிவாய்க்காலை பார்க்கும் போது தமிழ் இனத்தின் அழிவு தெரிகிறது.

தமிழ் இனம் அடிமையாக இருக்க கூடாது. அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் போராட வேண்டும். இந்த முள்ளிவாய்க்காலில் இடம் பெற்று உள்ள தலைவர்களின் படமும், சிலைகளும் சாதி, மதம் அடிப்படையில் அமைக்கப்பட வில்லை.

தமிழன் தமிழ் இனம் என்ற அடிப்படையில் தான் அமைக்கப்பட்டு உள்ளது. ஈழ மக்களுக்காக தமிழ் திரைப்படத் துறையினர் நிறைய காரியங்களை செய்து வருகின்றனர். தமிழ் மக்கள் அனைவரும் சாதி மதங்களை கடந்து, மறந்து ஒரே இனமாக ஒன்றுப்பட்டு போராடினால் தான் தனித் தமிழ் ஈழம் அமையும்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் பிரிந்து இருப்பதால் தான் இது போன்ற துயர சம்பவங்கள் நடக்கிறது.

தமிழ் இனத்திற்காக தமிழனாகிய நாம் பாடுபடுவோம். அப்போது தான் வெற்றி கிடைக்கும். இலங்கையில் தமிழ் இனம் அழிந்து வருகிறது.

இலங்கையில் தமிழ் ஈழம் உருவாக வேண்டும் என்றால் தமிழகத்தில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இயக்குனர்கள் மு. களஞ்சியம், வெ. சேகர், புகழேந்தி தங்கராசு, நடிகர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

முன்னதாக கவிஞர் காசி ஆனந்தன் இயற்றி தமிழ் இசை வேங்கை மகராசன் பாடிய முள்ளிவாய்க்கால் மண்ணே என்ற தலைப்பிலான சி.டி.யை பழ. நெடுமாறன் வெளியிட்டார். அதனை இயக்குனர் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். இதையடுத்து பொது அரங்கம் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.

...

shared via

[Continue reading...]

கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம்: சினிமா டைரக்டர் கைது kerala kanyakumari district 5 woman cheating marriage cinema director

- 0 comments

கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம்: சினிமா டைரக்டர் கைது kerala kanyakumari district 5 woman cheating marriage cinema director

மேல்புறம், நவ. 10–

குமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெவிதம்பி என்ற ஜஸ்டின் ரவி. சினிமா டைரக்டர். சமீபத்தில் வாச்சாத்தி என்ற படத்தை இயக்கி பிரபலமானார். இவருக்கும், வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்த ஷிபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ஜஸ்டின் ரவி சென்னை சென்று விட்டார்.

மேலும் ஷிபாவிடமிருந்து நகை, பணத்தை வாங்கி சென்றதாகவும், அதன் பிறகு அவர், ஷிபாவின் குடும்பத் தேவைகளுக்கு பணம் கொடுக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இது தொடர்பாக ஷிபா ஜஸ்டின் ரவியிடம் கேட்ட போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே ஷிபா ஜஸ்டின் ரவியின் பின்னணி குறித்து விசாரித்தார்.

அப்போது ஜஸ்டின் ரவி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களிடமிருந்து நகை, பணத்தை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. எனவே அவர், இதுபற்றி குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில், கூறி இருப்பதாவது:–

சென்னையில் சினிமா இயக்குனராக இருக்கும் ஜஸ்டின் ரவிக்கும், எனக்கும் திருமணம் நடந்தது. எங்களுக்கு 7 வயதில் குழந்தை உள்ளது. குடும்பச் செலவுக்கு ஜஸ்டின் ரவி பணம் தருவதில்லை. இதற்கான காரணம் பற்றி விசாரித்தப்போது அவர் ஏற்கனவே பாறசாலையைச் சேர்ந்த ஷைலஜா என்ற பெண்ணை திருமணம் செய்து அவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் இருப்பது தெரிய வந்தது.

மேலும் மார்த்தாண்டத்தை அடுத்த சித்திரங்கோட்டையைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணை 2–வது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

3–வதாக திருவனந்தபுரம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த பிந்து என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

4–வதாக திருவனந்தபுரம் புஜபுரையைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார்.

5–வதாக என்னை மணம் முடித்து ஏமாற்றி விட்டார். திருமணம் செய்த அனைவரிடமிருந்தும் நகை, பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து இருக்கிறார்.

இப்போது மீண்டும் ஒரு புதிய சினிமா கம்பெனி தொடங்கி சினிமாவில் நடிக்க புதுமுக பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். அவரிடம் பெண்கள் ஏமாந்து விடாமல் இருக்க அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறி இருந்தார்.

போலீசார் மனு மீது விசாரணை நடத்தியதில் ஜஸ்டின் ரவி ஏற்கனவே திருமணம் செய்த ஷைலஜா, அனிதா ஆகியோரின் புகைப் படங்கள் கிடைத்தது.

மேலும் அனிதாவும், தான் ஏமாற்றப்பட்டது பற்றி தனியாக குழித்துறை போலீசில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து ஜஸ்டின் ரவியை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்கான நடவடிக்கைகளில் போலீசார் இறங்கியபோது, ஜஸ்டின் ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து இன்று அதிகாலை குழித்துறைக்கு காரில் வருவது தெரிய வந்தது.

உடனே உஷாரான போலீசார் குமரி மாவட்ட எல்லையான களியக்கா விளை சோதனை சாவடியில் ஜஸ்டின் ரவி வந்த காரை தடுத்து நிறுத்தி அவரை பிடித்தனர்.

பின்னர் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

...

shared via

[Continue reading...]

ராஜபக்சேவுக்கு பிரதமர் மன்னிப்பு கடிதம் PM writes to Sri Lankan President on CHOGM Summit

- 0 comments

காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்தி ராஜபக்சேவுக்கு பிரதமர் கடிதம் PM writes to Sri Lankan President on CHOGM Summit

புதுடெல்லி, நவ. 10-

இலங்கை தலைநகர் கொழும்புவில் 53 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் மாநாடு இன்று தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக உள்நாட்டு போர் நடந்தது. இந்த போரில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்து ராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளதால், அந்த மாநாட்டுக்கு செல்லக்கூடாது என்று தமிழகம் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் நடக்கும் இந்த காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் அனைத்தும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்வாரா என்பது உறுதிசெய்யப்படாமல் இருந்தது. தற்போது, வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் வரும் 15-ம் தேதி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், காமன்வெல்த் மாநாட்டில் தான் கலந்துகொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமானது இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் ராஜபக்சேவுக்கு அனுப்பிவைக்கப்படும். இந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பிரதமர் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் எடுத்த முடிவையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த்தில் கலந்துகொள்ளும் முடிவை மாற்றியுள்ளார்.  

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger