Wednesday 25 September 2013

அனுஷ்காவின் காதல் தோல்வி ரகசியம் anushka love story

- 0 comments

அனுஷ்காவின் காதல் தோல்வி ரகசியம்

by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,

அனுஷ்காவின் காதல் தோல்விக்கான காரணங்களுக்கு பதில் தெரியவந்துள்ளன.

மற்ற நாயகிகளைப் போல் அனுஷ்காவின் காதலை பற்றி அதிகம் செய்திகள் வந்ததில்லை.

ஆரம்பத்தில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் அவர் நெருக்கமாக இருந்தது பற்றி நிறைய தகவல்கள் வந்தது. அந்த காதல் தோற்ற பிறகு அனுஷ்காவுக்கு மேலும் 2 முறை காதல் வந்ததும் அது தோல்வியில் முடிந்ததும் ரகசியமாகவே இருந்தது.

தமிழில் ரெண்டு படத்தில் நடித்த பிறகு தெலுங்கு சினிமாவிலேயே செட்டில் ஆகியிருந்தார் அனுஷ்கா.

அப்போதுதான் அந்த ஒளிப்பதிவாளரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் நெருங்கி பழகியதால காதல் வசப்பட்டார்.

சினிமா உலகை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன் என்றும் அனுஷ்காவே தனக்கு நெருங்கிய சிலரிடம் கூறியிருக்கிறார்.

ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து வானம் பட இயக்குனர் கிரீஷுடன் அவருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

இந்த நெருங்கிய நட்பிலும் சில மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டது.

ஒளிப்பதிவாளருடன் காதல் தோல்விக்கு திருமணத்தை அனுஷ்கா தள்ளிப்போட்டதே காரணமாம்.

கிரிஷுடன் காதல் தோல்விக்கு ஈகோ பிரச்னை காரணமாக கூறப்படுகிறது.

Show commentsOpen link

[Continue reading...]

இன்று திருச்சியில் இளந்தாமரை மாநாடு ilanthamarai Conference happening today

- 0 comments

திருச்சியில் இளந்தாமரை மாநாடு இன்று நடக்கிறது: ராஜ்நாத்சிங் நரேந்திரமோடி பங்கேற்பு ilanthamarai Conference happening today
Tamil NewsYesterday, 05:30

சென்னை, செப். 26-

திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்-மந்திரியுமான நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றுகின்றனர்.

இந்த மாநாட்டிற்கு தமிழக இளைஞர் அணி மாநில தலைவர் பொன்.வி.பாலகணபதி தலைமை தாங்குகிறார். இளைஞர் அணியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.முருகானந்தம் வரவேற்று பேசுகிறார். இளைஞர் அணி அகில இந்திய தலைவர் அனுராக் தாக்கூர் எம்.பி., அகில இந்திய செயலாளர் பி.முரளிதர்ராவ் ஆகியோர் மாநாட்டு தொடக்கவுரை ஆற்றுகின்றனர். பிரசார தொடக்க பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங் எம்.பி. சிறப்புரையாற்றுகிறார். குஜராத் மாநில முதல்-மந்திரியும், பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி எழுச்சியுரையாற்றுகிறார். அகில இந்திய அமைப்பு துணை பொதுச்செயலாளர் வி.சதீஷ், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், அகில இந்திய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், அகில இந்திய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணன், அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, லலிதா குமாரமங்கலம், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு, மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சரவண பெருமாள், மாநில செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் உள்பட பலர் பேசுகின்றனர். மாநில செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் நன்றியுரையாற்றுகிறார்.

இளந்தாமரை மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான விரிவான ஏற்பாடுகளை திருச்சி மாநகர பொறுப்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டிற்கான அழைப்பிதழ்களும் அச்சிடப்பட்டு முக்கிய விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அழைப்பிதழில் முன்பகுதியில் தாமரையில் பாராளுமன்ற வளாகம் மலர்வது போன்று வடிவமைக்கப்பட்டு, அதில் அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழின் பின்பக்கத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

மாநாட்டையொட்டி சென்னையின் பல பகுதிகளில் இருந்து கார், வேன், லாரிகளில் பாரதீய ஜனதா தொண்டர்கள் திருச்சிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த மாநாடு காரணமாக திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது. மாநாடு மேடை டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றிலும் சுழலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

...
Show commentsOpen link

[Continue reading...]

திருவள்ளூரில் நள்ளிரவில் மனைவி கண்முன் கணவர் அடித்து கொலை midnight wife before husband murder near Tiruvallur

- 0 comments

திருவள்ளூரில் நள்ளிரவில் மனைவி கண்முன் கணவர் அடித்து கொலை midnight wife before husband murder near Tiruvallur
Tamil NewsToday, 05:30

திருவள்ளூர், செப். 25–

திருவள்ளூர் ரெயில்வே பாலம் அருகே கூடாரம் அமைத்து தங்கி இருந்தவர் சந்துரு (60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி. இவர்களுக்கு விஜய் என்ற மகன் உள்ளான்.

சந்துருவுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று இரவு மது போதையில் கூடாரத்தின் வெளியே தூங்கினார்.

நள்ளிரவு 1 மணி அளவில் அவ்வழியே வந்த 5 பேர் கும்பல் சந்துருவை எழுப்பி 'சிகரெட்' பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டனர். அவர்களை சந்துரு திட்டினார்.

இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கும்பல் சந்துருவை கட்டையால் தாக்கினர். அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த சாவித்திரி அவர்களை தடுக்க முயன்றார்.

அவரையும் கீழே தள்ளிவிட்டு சந்துருவை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த மர்ம கும்பல் தப்பி ஓடி விட்டனர்.

உடனடியாக சந்துருவை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

சந்துரு தங்கி இருந்த இடம் அருகே சினிமா தியேட்டர் உள்ளது. இரவு காட்சி பார்த்து சென்றவர்கள் அவரை எழுப்பிய போது ஏற்பட்ட மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இரவில் தியேட்டருக்கு வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மனைவி கண்முன் கணவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

...
Show commentsOpen link

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger