Thursday 18 July 2013

காவியக் கவிஞர் வாலி எம்ஜிஆரின் ஆஸ்தான கவிஞர்

- 0 comments
தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார்.

வயது 82.

வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

மறைந்தார் காவியக் கவிஞர் வாலி... திரையுலகம் கண்ணீர்
[Continue reading...]

நாகர்கோவில் செல்போன் கோபுரத்தில் ஏறி ஊழியர் தற்கொலை மிரட்டல்

- 0 comments
நாகர்கோவில் வடசேரி, காமராஜர் புரத்தில் டெலிபோன் ஊழியர்களுக்கான பி.எஸ்.என்.எல். குடியிருப்பு உள்ளது. சுமார் 200–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். குடியிருப்பின் மையப்பகுதியில் 150 அடி உயர செல்போன் கோபுரம் உள்ளது.
இன்று அதிகாலை 6 மணியளவில் இங்கு குடியிருக்கும் ஊழியர்கள் சிலர் பால் வாங்கவும், டீ குடிக்கவும் வீட்டை விட்டு வெளியே வந்தனர். குடியிருப்பின் மையப்பகுதி வழியாக சென்ற போது செல்போன் கோபுர உச்சியிலிருந்து ஒருவரின் கூச்சல் சத்தம் கேட்டது.
திடுக்கிட்ட ஊழியர்கள் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தபோது, அங்கு ஒருவர் ‘மழைக்கோட்டு’, தலையில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி கையில் தண்ணீர் பாட்டிலுடன் நிற்பதை கண்டனர்.
[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger