Monday 21 November 2011

இன்னொரு சர்வதேச விருதை வென்றார் ஏ.ஆர்.ரகுமான்!

- 0 comments
 
 
 
கிராமி, கோல்டன் கோளப் என உலகின் பல சர்வதேச விருதகளை வென்றார் இசைப்புயல் ரகுமான். தற்போது சர்வதே அளவில் அவரது புகழ் கொடி கட்டும் பறக்கும் நிலையில., அவருக்கு துபாய் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கி கௌரவம் செய்ய உள்ளது. ஆண்டுத்தோறும் துபாயில் நடைபெற்று வரும் துபாய் சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த ஆண்டு ஏ.ஆர்.ராகுமானுக்கு விருது வழங்கப்படுகின்றன. இதனையடுத்து '8வது துபாய் சர்வதேச திரைப்பட விருதுகள்' துபாயில் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ராகுமானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது.




[Continue reading...]

Nayanthara speaks about Sri Ramarajyam

- 0 comments
 

Think of the Hindu calendar Gods and you are sure to find Nayanthara's face there. The grace and confidence with which she carried the role of Sita in Sri Ramarajyam is being appreciated by one and all. She not only got the rare distinction of working under veteran director Bapu but share screen space with ANR and Balakrishna in a landmark film that is going to be written in the annals of Telugu cinema.

She is making news for all the right reasons. And if rumours are to be believed, Sri Ramarajyam is her last film before she ties the knot with Prabhu Deva.

In this exclusive chat with Sridevi Sreedhar, Nayanthara opens up.

Did you watch Sri Ramarajyam?
Yes I did watch the film on my birthday (Nov 18) evening at Four Frames preview theatre in Chennai. The producer of the film Yalamanchali Sai Babu was kind enough to arrange this special show for me, my staff and close friends. As I said earlier, it was my best birthday gift.

How did you get into the skin of Sita, the most revered character in Hindu Mythology?
(Smiles) First and foremost, I was very happy when this offer came my way. But soon my excitement turned into fear, as I was scared if I will be able to do the role, which was made memorable by veteran actors like Anjali Devi convincingly. Bapu sir came to my rescue and he guided me- be it my expressions, costume or gait. He gave me complete freedom and asked me not to follow anyone and bring my own style to the character. It was a matter of time and within couple of days, I got into the skin of Sita and I lived the role, enjoyed every bit of it. I could relate so much with Sita who was bearing the pain of being separated from her husband..

How did you prepare yourself for the role?
Nothing much. I completely surrendered to the character. We first shot the ashram scenes after Lashmana drops me in the forest. I became a complete vegetarian, used to visit temple almost every day, do pooja and stopped meeting friends and people outside the unit. I was doing only this film and so my entire focus was on it.

What about the costumes?
Anu Vardhan was my designer. Bapu sir was very clear be it my costume or accessories. He is a perfectionist.

Tell us about Balakrishna who played Ram in the film?
I had worked with him earlier in Simha. He is the main reason for me to be a part of Sri Ramarajyam. I thank him from the bottom of my heart for believing in me and having the confidence that only I could do this role to perfection, more than me. And he is so convincing as Lord Rama in the film, that I cannot imagine any other actor in that role.

When your name was announced as the heroine, Tollywood was doubtful on how the glamourous diva could play one of the most sacred women personalities in the Hindu mythology?
Well, you should be asking Bapu sir this question. All I can say is that I am proud that I became a part of history by doing the role of Sita. I did my role with lot of dedication and sincerity. And today when I read all the positive reviews and feedback from audiences, I feel that I am blessed (Smiles).

How was it working with Bapu sir?
He is like a father figure to me. I am so lucky to have worked with him. He is a genius, a living legend who made each and every frame of Sri Ramarajyamlook like a painting. Bapu sir used to generate so much positive vibes around all of us. We used to shoot on a set erected outside city limits and it used to be a world of its own. Right from the director, cameraman Raju, Srikanth, other artists, assistant directors, managers to technicians were so dedicated and cool. Everything went on perfectly. No confusion or re-takes. After the movie was complete, Bapu sir gifted me a beautiful painting from Ramayana, which I will treasure for the rest of my life. He had a story board and knew exactly the schedule for the day.

The producer of Sri Ramarajyam is all praise for you and your dedication. Please comment
Yalamanchali Sai Babu garu is a gem of a person. If not for his conviction,Sri Ramarajyam would not have been made. Today, when producers do not want to burn their hands doing mythologies, he not only spend crores but had so much of faith in the project. He was there always on the sets and saw to it personally that everyone was happy.

Everyone is unanimous that you have saved your best performance in this film where you not only looked like an oil painting but your lip sync was perfect?
All credits goes to cameraman Raju who has made me look good. I was so happy to see myself on screen especially in the tight close up scenes. And for all my Telugu films, I take care to get the lip sync correct, but probably everyone noticed it here because there were far too many close up shots (smiles). Dubbing of Savitha too helped a lot.

What next?

(Smiles)..As of now, I am extremely happy and thankful to God.

[Continue reading...]

ஒரு மொழிபெயர்ப்��ாளரின் சவால்கள்

- 0 comments


மொழியாக்கத்தில் உள்ள முதலும் பெரியதுமான சவால், ஒரு மொழியிலுள்ள ஒரு படைப்பைத் திருப்திகரமான முறையில் இன்னொரு மொழிக்குக் கொண்டு செல்வது. சுனில் கில்நானியின் Idea of India புத்தகத்தை மொழிபெயர்த்தபிறகு முழுவதுமாக ஒருமுறை படித்துப் பார்த்தேன். முந்தைய நூல்களோடு ஒப்பிடும்போது இதை நன்றாகச் செய்திருப்பதாகவே தோன்றியது என்றாலும், இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்னும் தவிப்பும் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.  முழு நேரத்தையும் மொழிபெயர்ப்புக்காக அர்ப்பணிப்பவர்களே திணறும்போது, ஆர்வத்தால் நேரம் ஒதுக்கி செய்பவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அந்த வகையில், ஒரு [...]


http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    விலை உயர்வு : வரு��்தப்பட்டு பாரம் சுமக்கப்போவது ய��ர்?

    - 0 comments


    ஆவின் பால் விலை உயர்வும், பேருந்து கட்டண உயர்வும், மின்கட்டண உயர்வு பற்றிய முன்னறிவிப்பும் ஏற்படுத்தாத பேரதிர்ச்சியை, இவற்றையெல்லாம் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சில தேசாபிமானிகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஜெயலலிதாவின் அபிமானிகளாக மட்டும் இருந்திருந்தால் இவர்களுடைய நியாயவாதத்தைப் புறந்தள்ளியிருக்கலாம். ஆனால், இவர்கள் தங்களை கட்சி சார்பற்றவர்களாகவும், நடுநிலைமையாளர்களாகவும், தேச நலனில் ஆர்வம் உள்ளவர்களாகவும், பொருளாதாரம் அறிந்தவர்களாகவும், பொதுமக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவர்களாகவும், படித்தவர்களாகவும், சிந்திப்பவர்களாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்வதால், இவர்களுடைய வாதங்களை நாம் பொதுவில் வைத்து ஆராயவேண்டியிருக்கிறது. கட்டண அதிகரிப்புக்கு [...]


    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    சிங்கம்பட்டி கொ��ை வழக்கு

    - 0 comments


    ‘தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்று சொன்ன அந்த துரைய கொன்னுடணும் என்று கடம்பூர் சொன்னான். என்னையும் கட்டாயப்படுத்தி ஒரு துப்பாக்கி எடுத்துக்கச் சொன்னான். நான் சுட்டு குறி தப்பிடுச்சுனா நீ துரைய சுடணும். நாம துரைய சுடறதுக்குள்ள, துரையோட மனைவி முழிச்சுட்டாங்கன்னாஅவங்களையும் சுட்டுக் கொன்னுடணும். நம்மள தடுக்க யாராவது வந்தா அவங்களையும் சுட்டுறனும். இதை நீ செய்ய மறுத்தால் உன்னையும் கொன்னுடுவேன் என்று என்னை கடம்பூர் மிரட்டினான். இவ்வாறு என்னிடம் சொல்லி விட்டு, துரை தூங்கிக் கொண்டிருந்த படுக்கை [...]


    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-kurippugal.blogspot.com

  • [Continue reading...]

    Asin, Trisha , Anushka – pay list

    - 0 comments
     

    sin, Trisha and now Anushka Shetty tops ranking in Advertisements and they earn quick bucks in lakhs for the small duration they appear. For a single day's shoot, the maximum that the topmost actress pay ranges from 8 lakh. But male one's like Surya, earn almost 10 times as much or more for a day's work as opposed to these top heroines.

    Heroines often stay in a dilemma. They don't really stick to one industry. They want to try their luck across different states and also wishes to shine in Bollywood. So that is the one major reason for earning less amounts than the male celebs.

    Pay of the Top 5 actress in tamil

    Trisha Krishnan 7-8 Lakh
    Anushka 7-8 Lakh
    Shriya Saran 5-6 Lakh
    Sneha 5-6 Lakh
    Nayanthara 6 Lakh

    [Continue reading...]

    சினிமாவில் பின்னணி பாடும் 'சில்மிஷ' அமைச்சர்

    - 0 comments
     
     
     
    கேரள நீர் ஆதாரதுறை மந்திரியாக இருப்பவர் பி.ஜே. ஜோசப். இவர் புதிதாக படமாகும் மலையாள படமான ஹவுபாய் என்ற படத்தில் தமிழில் பின்னணி பாடல் ஒன்றை பாடுகிறார்.
     
    இவருடன் இணைந்து பிரபல பின்னணி பாடகியான அனுராதா ஸ்ரீராமும் பாடுகிறார். மந்திரி பி.ஜே. ஜோசப் சிறு வயதிலேயே சங்கீதம் முறைப்படி கற்றவர். கல்லூரியில் படிக்கும்போது ஏராளமான பாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறார்.
     
    1984ம் வருடம் சபரிமலை பாசம் என்ற மலையாள படத்தில் ஜேசுதாசுடன் இணைந்து பின்னணி பாடி உள்ளார். அதன்பின்பு முழு நேர அரசியல்வாதியாகி மந்திரி ஆகிவிட்டார். ஆனாலும் இசையின் மீதான ஆர்வம் தணியவில்லை. அவ்வப்போது மேடை கச்சேரியில் பாடி வந்தார். இப்போது 27 ஆண்டுகளுக்கு பின்பு சினிமாவில் பின்னணி பாடுகிறார். ஹவுபாய் படத்தில் மலேசிய தமிழர்களின் பண்பாட்டை விளக்கும் பாடலைதான் மந்திரி பி.ஜே. ஜோசப் பாட உள்ளார்.
     
    சில வருடங்களுக்கு முன்பு ஓடும் விமானத்தில் டி.வி. தொடர் நடிகை லட்சுமியை சில்மிஷம் செய்த வழக்கில் சிக்கியவர்தான் மந்திரி பி.ஜே.ஜோசப் என்பது குறிப்பிடத்தக்கது.



    [Continue reading...]

    பஞ்ச் டயலாக் பேச மாட்டேன்! நடிகரின் அதிரடி முடிவு!

    - 0 comments
     
     
     
    என்னுடைய படத்தில் பஞ்ச் டயலாக் பேச மாட்டேன் என்று ஹீரோ அவதாரம் எடுத்திருக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்த விஜய் ஆண்டனி, நான் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
     
    ஹீரோ அவதாரம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இசையமைப்பாளர் என்ற இந்த இடத்துக்கு வருவதற்காக நிறைய உழைத்திருக்கிறேன். நிறைய இழந்திருக்கிறேன்.. லாபம், நஷ்டம் எல்லாமும் பார்த்து வந்ததுதான் என் பயணமும். இந்த இடத்தை மதிக்கிறேன், ஆராதிக்கிறேன். இப்போ ஹீரோ என்பதும் அப்படி ஒரு முயற்சிதான். ஒளிப்பதிவாளராவும், இயக்குனராவும் திரும்பிப் பார்க்க வைச்ச ஜீவா சாரின், அசிஸ்டெண்ட் ஜீவா சங்கர்தான் படத்தை இயக்குகிறார். இந்த கதையை அவர் என்கிட்ட சொன்னப்போ "இந்த கதை எல்லோருக்கும் கிடைக்காது. எந்தக் காரணத்தைக் கொண்டும் மிஸ் பண்ணக் கூடாதுனு மனசு சொல்லுச்சு. மியூசிக், மியூசிக்னு ஓடிட்டிருக்க எனக்கும் ஒரு ரிலாக்ஸ் தேவைப்பட்டது. இப்போ முதல்கட்டப் படப்பிடிப்பு முடிஞ்சு அடுத்த கட்டத்துக்கு போயிருக்கு படம். மியூசிக்கும் நானே போட்டுருக்கேன். திருப்தியா இருக்குன்னு எல்லோரும் சொல்லிருக்காங்க. நான் நல்ல உழைப்பாளியான்னு படம் பார்த்துட்டு நீங்கதான் சொல்லணும், என்று கூறியுள்ளார்.
     
    நான் படம் பற்றி கூறுகையில், இந்த படத்தில் வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கையில் எல்லாமும் இருந்தா ஒருத்தன் வேற என்ன பெரிசா தேடிடப் போறான்? யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாம அமைதியா வாழ ஆரம்பிச்சுடுவான். எதுவுமே கிடைக்காதபோதுதான் எல்லோருக்கும் பிரச்னை ஆரம்பிக்குது. ஏதாவது அடையுணுமேங்கிற ஆசையில, பதற்றத்தில எல்லாத் தப்புகளையும் செய்ய ஆரம்பிப்பான். அப்படி, வாழ்க்கைக்குள்ள சிக்கி கெட்டவனாகிற ஒருவன்தான் "நான். என்னை ஒரு மியூசிக் டைரக்டரா நினைச்சு படத்துக்கு வராதீங்க. படத்தில நான் அந்தக் கேரக்டராவேதான் தெரிவேன். பஞ்ச் டயலாக் பேச மாட்டேன், ஓபனிங் சாங் எல்லாம் ஆட மாட்டேன். என் பயணத்துக்கான அடுத்த எரிபொருள் இது, என்று கூறியிருக்கிறார்.



    [Continue reading...]

    மின் கட்டண உயர்வு எப்போது?

    - 0 comments
     
     
     
    தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருக்கும் கபிலனின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், இப்போதைக்கு மின் கட்டண உயர்வை ஆணையம் அறிவிக்காது என்று தெரிகிறது.
     
    பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு பால்விலை, பேருந்து கட்டணம் ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டன. பஸ் கட்டண உயர்வை ராவோடு ராவாக போக்குவரத்துக் கழகங்கள் அமல்படுத்தின. பால் விலை உயர்வும் அமலுக்கு வந்து விட்டது.
     
    இந்த நிலையில், மின்சாரக் கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். மின்சாரக் கட்டணம் 2 மடங்காக அதிகரிக்கும் என்று மக்களிடையே பீதி நிலவிக் கிடக்கிறது.
     
    ஏற்கனவே பேருந்து கட்டணம், உயர்த்தப்பட்டதற்கும், பால் விலை உயர்வுக்கும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியும் எதிர்ப்பு வலுத்துள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் இந்த கட்டண, விலை உயர்வு குறித்துதான் பேசிக் கொண்டுள்ளன். அதிமுக அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.
     
    இந்த நிலையில், மின்கட்டண உயர்வு எந்தளவிற்கு 'ஷாக்' அடிக்குமோ என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆனால் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் தற்போதைய தலைவர் கபிலனின் பதவிக்காலம் 2012, ஜனவரி மாதத்தில் முடிவடைகிறது. மின்கட்டணத்தை திருத்துவதாக இருந்தால் குறைந்தது 4 மாத கால அவகாசம் ஆணையத்திற்குத் தரப்பட வேண்டும்.
     
    ஆனால் தற்போது கபிலன் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதால், மின் கட்டணம் இப்போதைக்குத் திருத்தப்பட வாய்ப்பில்லை. மேலும் நான்கு மாத கால அவகாசம் தேவை என்பதால் குறைந்தது ஏப்ரல் மாதம் வரை மின் கட்டண உயர்வு இருக்காது என்றும் நம்பலாம்.
     
    கபிலனுக்குப் பதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக் கமிட்டி இதுவரை அமைக்கப்படவில்லை. மின்சாரச் சட்டம்-2003ன் படி, ஒழுங்கு முறை ஆணையத் தலைவரை தேர்வு செய்ய மாநில அரசு ஒரு தேர்வுக் கமிட்டியை அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இந்த கமிட்டி அமைக்கப்படும்.அந்தக் குழு புதிய தலைவரின் பெயரை அரசுக்குப் பரிந்துரைக்கும்.
     
    ஆனால் கபிலனுக்குப் பதில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கமிட்டியை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. எனவே இப்போதைக்கு மின் கட்டண திருத்தம் இருக்காது என்று நம்பப்படுகிறது.



    [Continue reading...]

    100வது சதமடிக்க சச்சினுக்கு மகன் கொடுத்த அட்வைஸ்

    - 0 comments
     
     
     
    சதமடிக்கும் போது ஏற்படும் படபடப்பை போக்க, 90 ரன்களை தாண்டிய உடன் அதிரடியாக சிக்ஸர் அடித்து விட வேண்டும் என்று சச்சினின் மகன் அர்ஜூன் அவரிடம் தெரிவித்துள்ளாராம்.
     
    இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தனது சர்வதேச 100வது சதம் என்ற மைல் கல்லை கடக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களின் காத்திருப்பு தொடர்கிறது. ஆனால் அதை எட்ட முடியாமல் சச்சின் தவித்து வரும் நிலையில் நாளை மும்பையில் தொடங்கும் 3வது டெஸ்ட் போட்டியின் போதாவது சச்சின் 100வது சதத்தைப் போடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
     
    எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சச்சின் கிரிக்கெட் ஆடி வருகிறார் என்று பலரும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவுக்கு கடந்த 22 வருடங்களாக இந்திய அணிக்காக ஆடி வருகிறார் சச்சின். பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். உலகக் கோப்பையைப் பெறும் இந்திய அணியில் தானும் இடம் பெற வேண்டும் என்று சச்சின் ஆசைப்பட்டார். கடந்த உலக கோப்பையை இந்திய அணி வென்றதன் மூலம் சச்சினின் அந்த ஆசை நிறைவேறியது.
     
    கிரிக்கெட் உலகில் முறியடிக்க முடியாத பல சாதனைகளை படைத்துள்ள சச்சின், மற்றொரு முக்கியமான சாதனை மைல்கல் ஒன்றை கடக்க தற்போது திணறி வருகிறார். கிரிக்கெட் போட்டிகளில் 100வது சதம் அடிக்கும் முதல் கிரிக்கெட் வீரர் என்பதே அந்த சாதனை மைல்கல். கடந்த மார்ச் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் 99வது சதத்தை அடித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தார்.
     
    ஆனால் அதன்பிறகு அவர் விளையாடிய 15 போட்டிகளில் சதமடிக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொரு போட்டியை காணவும், பலத்த எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இங்கிலாந்துடனான போட்டியின்போது 91 ரன்கள் வரை வந்து ஏமாற்றம் அளித்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.
     
    இந்த நிலையில் சச்சினின் சொந்த ஊரான மும்பையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. ஆனால் இந்த மைதானத்தில் கடந்த 1997ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஒரே ஒரு சதம் மட்டுமே சச்சின் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த முறையாவது சச்சின் சதமடித்து, ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்வாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
     
    சதமடிக்கும் போது ஏற்படும் படபடப்பை போக்க, 90 ரன்களை தாண்டிய உடன் அதிரடியாக சிக்ஸர் அடித்து விட வேண்டும் என்று சச்சினின் மகன் அர்ஜூன் அவரிடம் தெரிவித்துள்ளார். இந்த முறை சச்சின் 100வது சதம் அடிப்பாரா அல்லது வழக்கம் போல ஏமாற்றத்தை தருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



    [Continue reading...]

    மீண்டும் வருகிறார் நயன்தாரா?

    - 0 comments
     
     
     
    பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நயன்தாரா, திருமணத்துக்குப்பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றி முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார். தமிழில், ஹரி இயக்கிய ஐயா படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. அந்த படத்தின் வெற்றி காரணமாக சந்திரமுகி, குசேலன் என்று ரஜினி படங்களிலேயே நடிக்கும் அளவுக்கு ஜெட் வேகத்தில் முன்னேறினார். இந்த நிலையில் விஜய்க்கு ஜோடியாக வில்லு என்ற படத்தில் நடித்தபோது அப்படத்தை இயக்கிய பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், புதிய பட வாய்ப்புகளை தவிர்த்தார் நயன்தாரா. கடைசியாக தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராமஜெயம் என்ற படம் கடந்த 18-ம் தேதி வெளியானது. இதில் சீதை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நயன்.
     
    இந்தநிலையில், மீண்டும் நயன்தாரா சினிமாவில் நடிப்பாரா? மாட்டாரா? என்று எழுந்த கேள்விகளுக்கு, நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளும்வரை நடிக்கும் எண்ணம் இல்லை. அதன்பிறகு நல்ல வாய்ப்புகள் வந்தால் மீண்டும் நடிப்பது பற்றி யோசித்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார் நயன்தாரா.



    [Continue reading...]

    தமிழ்ப்பெண்கள் - காதலர்களைப்பற்றிய இழிவான பேச்சு : சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சிவக்குமார்

    - 0 comments
     
     
     
    நடிகர் சிவகுமார் சில ஆண்டுகளாக இலக்கிய சொற்பொழிவு ஆற்றிவருகிறார். இவரி பல சொற்பொழிவுகள் பல சர்ச்சைகளை ஏற்படுதியிருக்கிறது என்கிறது ஒரு இணையதளம். அதை அப்படியே வாசகர்களின் பார்வைக்கு வைத்திருக்கிறோம்.
     
     
    திரு. சிவக்குமார் அவர்களே!
     
    சமீப காலமாக உங்களின் ஆக்ரோஷமான மேடைப் பேச்சை கேட்கையில் எங்களுடைய நாடி நரம்புகளெல்லாம் புடைக்கிறது; தமிழ் மணக்கிறது; உணர்ச்சி பீறிட்டு வருகிறது.
     
     
    இளைய சமுதாயம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் தொடங்கும் உங்கள் மேடைப்பேச்சு, உணர்ச்சிகரமாக உள்ளத்தைத் தொட வேண்டும் என்ற பாவனையில் தொடர்ந்து, தமிழனத்தையும் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தும் ரீதியில் வெளிப்படுவது கடுமையான கண்டனத்துக்குரியது.
     
     
     
    பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை நீங்கள் பக்கம் பக்கமாக மனனம் செய்து உணர்ச்சிகரமாக மேடையில் பேசுகையில் உங்களிடம் உள்ளத்தை பறிகொடுத்த எங்களுக்கு இதுபோன்ற உங்களின் கருத்து எங்கள் முகத்தைச் சுளிக்க வைக்கின்றது.
     
    "பிளவுபடாத சென்னை ராஜதானியிலே ஒரு பெரிய நடிகர் இருந்தாரு. அவரு நல்ல பாடுவாரு, ஆடுவாரு. நல்ல தேஜஸ். அவர் ஒரு கச்சேரி பண்ணுனா, முடியும்போது குடும்பப் பெண்கள் கேட்பாங்க அவுங்க புருஷன்கிட்ட. ஐயா உங்களுக்கு 3 குழந்தை பெத்தேன். அது வேஸ்ட். இவரு மகா புருஷன். இவருக்கிட்ட போயி ஒரு குழந்தையை பெத்துக்கிறேன். நம்ம வீட்டுலே ஒரு மகா புருஷன் இருக்கோணும்" என்று கூறி தாகத்தை தணிப்பதற்கு தமிழ்ப் பெண்கள் தயாராக இருந்தார்கள் என்ற தீராத பழியை சுமத்தியிருக்கிறீர்கள்.
     
     
    உங்களுடைய இந்த ஆதாரமில்லாத அபாண்டமான குற்றச்சாட்டு எந்த அளவுக்கு தமிழ்ச் சமுதாயத்தை பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா? இப்படிச் சொல்வதற்கு உங்களுக்கு நா கூசவில்லையா? தமிழ்க் கலாச்சாரம், தமிழர் பண்பாடு என்று வீர வசனம் பேசும் நீங்களா இப்படி பேசுவது? குடும்பப்பெண்கள் தங்கள் கணவன்மார்களிடம் இப்படிப்பட்ட கேவலமான செயலுக்கு அனுமதி கேட்டதை நீங்கள் காது கொடுத்து கேட்டீர்களா சிவக்குமார்?
     
     
    மனைவி கணவனிடத்தில் அந்தரமாக பேசியதை எப்படி நீங்கள் உளவு பார்த்தீர்கள்? அப்படியே யாரவது ஒருத்தி உங்கள் காதுபட பேசியிருந்தால் அவள் நிச்சயம் குடும்பப் பெண்ணாக இருக்க முடியாது. அவளுக்கு அகராதியில் வேறு பெயர். ஒருவேளை சினிமாத் துறையில் நீங்கள் பழகிய பெண்கள் உங்களிடம் இவ்வாறு பேசினார்களோ?
     
     
    தமிழ்ப் பெண்களை இதைவிட வேறு யாரும் கொச்சைப்படுத்தி பேச முடியாது என்பது என் கணிப்பு. நடிகை குஷ்பு "தமிழ் நாட்டிலே எந்தப் பெண்களும் கற்புடையவளாக இல்லை" என்று சொன்னதற்காக தமிழகமே கொந்தளித்தது. உங்களை முச்சந்தியில் நிறுத்தி வைத்து கேள்விக் கேட்க ஏன் இன்னும் யாருக்கும் துணிவில்லை?
     
    தமிழகத்தில் இருக்கும் மாதர் சங்கங்களுக்கு இந்த செய்தி எட்டவில்லையா? நடிகை குஷ்பு தமிழ்ப்பெண்களை இழிவு படுத்தியபோது வரிந்துக் கட்டிக் கொண்டு வழக்குகள் தொடர்ந்த அரசியல் கட்சிகள் உங்கள் விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?
     
     
    உங்களின் இந்தச் செயலுக்கு வருந்தி மானமுள்ள மறத் தமிழர்களிடம் நீங்கள் மண்டியிடுவது எப்போது?'' என்று கேள்வி எழுப்பியுள்ளது அந்த இணையதளம்.
     
     
    மேலும், ''சிவக்குமாரின் எண்ணங்கள் வேண்டுமானால் செத்து ஒழிந்துக் கொண்டிருக்கும் நமது கலாச்சாரத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியாக இருக்கலாம். அதற்காக ஆதாரங்கள் இல்லாத, பீதி கிளப்பக்கூடிய, உண்மைக்கு புறம்பான, அருவருக்கத்தக்க விஷயங்களை மேடையில் வாதங்களாக வைப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
     
     
    சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெண்கள் கல்லூரியில் (கல்லூரியின் பெயரை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறேன்) நமது இலக்கியச் செல்வர் சிவக்குமார் ஆற்றிய சொற்பொழிவு முன்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
     
    பெங்களுரில் ஏதோ ஒரு கல்லூரி வளாகத்தின் உள்ளேயே PUB (ஒயின் ஷாப்) திறந்து வைத்திருக்கிறார்களாம், ஏனென்றால் கல்லூரி மாணவ மாணவிகள் வெளியில் சென்று குடித்து வந்து கல்லூரியின் பெயர் கெட்டுப் போவதால் அதைத் தடுக்கும் விதத்தில் கல்லூரி வளாகத்தினுள்ளேயே இந்த ஏற்பாடாம். ஆளாளுக்கு அவரைப் பிடித்து "அது எந்தக் கல்லூரி? பெயரைச் சொல்லுங்கள்" என்று கூச்சலிட்டு பிரச்சினை செய்ய திக்குமுக்காடிப்போய் எதோ சொல்லி சமாளித்திருக்கிறார்.
     
     
    மேடையில் உணர்ச்சிகரமாக பேசி 'திரில்' ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையில் உண்மைக்குப் புறம்பான இது போன்ற செய்திகளை அவர் பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
     
     
    அதே மேடையில் அவர் கூறிய இன்னொரு செய்தி. ஹைதராபாத்தில் வசிக்கின்ற காதலித்துத் திருமணம் செய்துக்கொண்ட சென்னையைச் சேர்ந்த இளந்தம்பதியரின் வாழ்க்கை முறையை விவரித்திருக்கிறார்.
     
    கணவனுடைய நண்பனோடு மனைவியும், மனைவியின் தோழியோடு கணவனும் உறவு வைத்திருந்தார்களாம். இரு ஜோடிகளுக்கும் இந்த விஷயம் தெரிய வர அவர்கள் இதனைக் கண்டுக் கொள்ளாமல் பரஸ்பர உறவுகொண்டு வாழ்ந்து வருகிறார்களாம்.
     
    இதுதான் காதல் திருமணம் செய்துக் கொண்டவர்களுடைய இன்றைய பரிதாப நிலைமை என்று கூறியிருக்கிறார்.
     
     
    சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யாவும் காதலித்துத்தான் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். அப்படியென்றால் காதலித்து திருமனம் செய்துக் கொண்டவர்கள் எல்லாம் இப்படித்தான் வாழ்க்கை நடத்துகின்றார்கள் என்று சொல்ல வருகிறாரா சிவக்குமார்?'' என்றும் கேள்வி எழுப்பியுள்ளது அந்த இணையதளம்.



    [Continue reading...]

    கூடங்குளத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் கொடுக்க துடிக்கிறது-வைகோ

    - 0 comments
     
     
     
    இலங்கைக்கு கடல் வாயிலாக மின்சாரம் வழங்குவதற்காகத் தான் இந்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்திட்டத்தில் இந்த அளவு ஈடுபாடு காட்டுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
     
    இது குறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
     
    கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக இந்த அளவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள போதிலும், கடல் வாயிலாக இலங்கைக்கு மின்சாரம் கொடுக்கத் தான் இந்திய அரசு இந்த திட்டத்தில் இவ்வளவு முனைப்பாக உள்ளது.
     
    9-6-2010 அன்று இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசும், இலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் பாதிக்கும் குறைவாகத் தான் தமிழகத்திற்கு கிடைக்கும். ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கையிலேயே நான் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.
     
    ஈழத் தமிழர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கைக்கு மின்சாரம் கொடுப்பதற்காக தமிழக மக்கள் ஏன் தங்கள் உயிர்களை பணையம் வைக்க வேண்டும்? ஈழத் தமிழர் விவகாரம் மற்றும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை ஆகியவற்றில் பாராமுகமாக இருக்கும் மத்திய அரசு கூடங்குளம் விவகாரத்தில் மட்டும் அதிக ஆர்வம் காட்டுவது தமிழக மக்களின் நன்மைக்காக அல்ல என்றார்.



    [Continue reading...]

    மனைவி குறித்து அவதூறு-நித்தியானந்தா, ரஞ்சிதா மீது இ.ம.க. தலைவர் வழக்கு

    - 0 comments
     
     
     
    தனது மனைவி மதம் மாறி விட்டதாகவும, மனைவியைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாதவர் என்றும் கூறி தன்னையும், தனது மனைவியையும் குறித்து அவதூறாகப் பேசிய சாமியார் நித்தியானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் மீது இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளார்.
     
    கோவை கோர்ட்டில் இந்த வழக்கை அர்ஜூன் சம்பத் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அர்ஜூன் சம்பத்தின் வழக்கறிஞர் கூறுகையில், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மனைவி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும், தனது மனைவியையே கட்டுப்படுத்த முடியாத அர்ஜூன் சம்பத் மற்றவர்களைக் குறை கூறிப் பேசலாமா என்று பேசியுள்ளார் நித்தியானந்தா. அந்தப் பேச்சை ஆமோதிக்கும் வகையில் நடிகை ரஞ்சிதாவும் அப்போது உடன் இருந்துள்ளார்.
     
    இதையடுத்து நித்தியானந்தாவின் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், மன்னிப்பு கேட்கக் கோரியும் கடந்த 8.8.11 அன்று நித்தியானந்தாவுக்கும், நடிகை ரஞ்சிதாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. இதையடுத்து தற்போது கோவை கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.
     
    முதலாவது நீதித்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் தன்னைப் பற்றியும், தனது மனைவி குறித்தும் அவதூறாகப் பேசிய நித்தியான்தா, ரஞ்சிதா ஆகியோர் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது என்றார்.
     
    இந்த வழக்கு வருகிற 23ம் தேதி விசாரணைக்கு வரும் என மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.



    [Continue reading...]

    "பல நடிகைகளுடன் ஹாட் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருக்கேன்" - வாலி

    - 0 comments
     
     
     
    81வயதிலும் 16வயது ஹீரோக்களுக்காக பாடல்கள் எழுதிகொண்டிருப்பவர் கவிஞர் வாலி. எம்ஜிஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, விஜய்-அஜீத், சிம்பு-தனுஷ் என்று பல தலைமுறைகளை தமிழ் சினிமாவில் கடந்து வந்த இவருடைய வாழ்க்கையில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்திருக்கும் எனபது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், அதை கவிஞரே மனம் திறந்து சொல்லப்போகிறார். அவருடைய மன வாயை திறக்கும் புது நிகழ்ச்சி ஒன்றை வசந்த் டிவி உருவாக்கியிருக்கிறது.
     
    வாலி இதுவரை எழுதியிருக்கும் மொத்தப் பாடல்களில் இருந்து ஆயிரம் பாடல்களை இந்த நிகழ்ச்சியில் இசைக்கப்போகிறார்கள். அதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வாலி 1000 என்று தலைப்பு வைத்திருந்தாலும், பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் இந்த நிகழ்ச்சி தயாராகியிருக்கிறது. ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் கோலிவுட் டூ வாலிவுட் என்ற பிரிவில் நம்ம கோலிவுட் பிரமுகர்கள் பலர் கவிஞரை பேட்டி எடுத்திருக்கிறார்கள். இந்த பேட்டியில் கவிஞர் பல சுவாரஸ்யமான அதே சமயம் பரபரப்பான கேள்விகளுக்கு தனது மன வாயை திறந்து பதிலளித்திருக்கிறார்.
     
    குறிப்பாக கார்டூன் மதன் கவிஞரை பேட்டியெடுக்கும் போது நீங்கள் நடிகைகளுடன் பழகியிருக்கிறீர்களா? என்று கேட்டாராம். அதற்கு வாலி, "நான் பல நடிகைகளுடன் ஹாட் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருக்கேன்." என்று வெளிப்படையாக பதில் சொன்னாராம். அதே போல இந்த கவிஞர்கள் என்ன ஏதாவது அரசியல் தலைவர்களை துதி பாடியே காலத்தை ஓட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு, "நீங்கள் கலைஞரைத்தானே சொல்கீறீர்கள். கவிஞரையும், கவிதையையும் திமுக வை தவிர வேறு எந்த அரசியல் கட்சி மதித்திருக்கிறது. அதனால்தான் நான் கலைஞரை துதிபாடுகிறேன்." என்றாரம். அப்போது குறிக்கிட்ட நிருபர் ஒருவர், எம்.ஜி.ஆர். உங்களை ஆதரிக்கவில்லையா? என்று கேட்க, "அவரும் திமுக வில் இருந்தவர் தானே. அதனால் தான் சொன்னேன். நான் தனிப்பட்ட நபரை சொல்லவில்லை கட்சியைதான் சொன்னேன்." என்றார்.
     
    இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த தகவல்களை பகிர்ந்துகொண்ட வாலியிடம், இந்த நிகழ்ச்சியில் உங்களை பேட்டி எடுக்க கலைஞரை அழைத்தால் வருவாரா? என்ற கேள்விக்கு, கண்டிப்பாக வருவார். இப்போது என்னை பேட்டி எடுத்தவர்கள் யாரையும் நான் அழைக்கவில்லை. நிகழ்ச்சி குழுவினர் அழைத்தார்கள் அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் உடனே வந்தார்கள். கலைஞரை நான் அழைத்தால் அவர் கண்டிப்பாக வருவார்." என்றார்.
     
    ஒருவருடைய கேள்விகளே இப்படி என்றால் மற்றவர்களின் கேள்வி எப்படி இருக்குமோ! எது எப்படியோ ஜனவரி மாதத்தில் இருந்து ஒளிபரப்பாக இருக்கும் "வாலி 1000" நிகழ்ச்சியின் மூலம் வசந்த் டிவியின் டிஆர்பி ரேட்டிங் வேகமாக உயரும் என்பது உறுதியாகிவிட்டது.



    [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger