Monday 12 September 2011

தமிழீழ அரசாங்கத��தின் ஏற்பாட்டில��� ஜேர்மன், சுவிஸ் நாடுகளில் தோழர் ���ெங்கொடிக்கு வணக்க நிகழ்வுகள்

- 0 comments


கருணை மனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது உயிர்காக்க தன்னுயிரை தீக்கு இரையாக்கிய தியாகச்சுடர்.தோழர் செங்கொடிக்கு வணக்க நிகழ்வுகள் ஜேர்மனியின் மூன்று நகரங்களிலும் சுவிசின் சூரிச்சிலும் இடம்பெற்றுள்ளன.

சுவிஸ்:

சூரிச் சிவன் கோவிலில் இடம்பெற்ற வணக்க நிகழ்வில் நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஜெயம் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றலுடன் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

ஜேர்மனி:

பிறீமன், கானோவர், ஸ்ருட்காட் ஆகிய இடங்களில் இடம்பெற்ற வணக்க நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர்.

பிறீமன், கானோவர் ஆகிய நகரங்களில் இடம்பெற்ற வணக்கம் நிகழ்வினை நா.த.அசராங்கத்தின் கல்வி, கலாச்சார, விளையாட்டு, உடல்நலத்துறை துணை அமைச்சர் ராஜரட்ணம் ஜெயசந்திரன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.

நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா ராஜேந்திரா தலைமையில் ஸ்ருட்காட் வணக்க நிகழ்வு இடம்பெற்றிருந்தன.

இதேவேளை, பிறீமன் நகரில் தோழர்.செங்கொடியின் வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து நா.த.அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கும் மக்கள் அரங்கம் நிகழ்வு இடம்பெற்றது.

உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களும் மக்கள் அரங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.

சுதந்திர தமிழீழத்தை நோக்கிய, தமிழின அழிப்பை - சுயநிர்ணய உரிமையை மையப்படுத்திய, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உலகளாவிய வேலை திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதோடு இதற்கான ஜேர்மனியின் செயற்திட்ட அணியும் உருவாக்கப்பட்டது.

நாதம் ஊடகசேவை

http://smsgalatta.blogspot.com



  • http://smsgalatta.blogspot.com

  • [Continue reading...]

    NDTV இல் ஈழத் தமிழர��கள் குறித்த ஆவணப்படம் வெளியாகிய��ள்ளது! (காணொளி இண���ப்பு)

    - 0 comments


    இந்தியாவின் தலைநகரம் நியூ டெல்லியை தலைமையகமாக கொண்டு இயங்கும் பிரதான ஆங்கில தொலைக்காட்சியில் இறுதி யுத்தம் தொடர்பான அவலங்கள் ஆவணமாக வெளியிடபட்டுள்ளது.

    பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியை தொடர்ந்து, இந்திய தொலைக்காட்சிகளும் இலங்கை தமிழர்கள் தொடர்பான இறுதி யுத்த அவலங்களை வெளியிட்டு வருகின்றன.





    http://smsgalatta.blogspot.com



  • http://smsgalatta.blogspot.com

  • [Continue reading...]

    கிறீஸ் பூதங்களை ���ார் இயக்குகிறார்கள்?

    - 0 comments


    தமிழ் பேசும் மக்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்பவர்களால் இயக்கப்படும் சக்தியே "கிறீஸ் பூதம்" என்றழைக்கப்படும் மர்ம மனிதர்கள். நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுற்று இரண்டாண்டுகள் உருண்டோடிப் போய்விட்டன.

    போரின்போது அரங்கேற்றிய போர்க்குற்றங்களுக்காக சிறிலங்கா அரசு பதில் சொல்ல வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கைகளை தொடர்ந்தும் முன்வைக்கும் இவ்வேளையில், தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி ஒரு கல்லில் பல கனிகளை பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளது மகிந்தவின் அரசு.

    கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழர் பகுதிகளில் வன்முறையில் இறங்கியுள்ள கிறீஸ் பூதங்கள் பெண்களிடமே அதிகளவில் தமது சேஷ்டைகளை செய்கிறார்கள். குறித்த மர்ம மனிதர்களின் நடமாட்டம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    தமது அடையாளத்தை மறைப்பதற்காக கறுப்பு களியை உடலெங்கும் பூசியுள்ளதாலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்குவதாலும் அங்குள்ள மக்கள் கிறீஸ் பூதங்கள் என்று அந்த மர்ம மனிதர்களை அழைக்கிறார்கள்.

    குறித்த மனிதர்களின் இலக்கு பெண்களிடம் திருடுவதோ, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வோ இல்லை. மாறாக, குறித்த மனிதர்கள் பெண்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிடூம் அளவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயப்படுத்தப்படுகிறார்கள். குறிப்பாக, அவர்களது முலைப்பகுதிகளை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பல இடங்களில் பதிவாகியிருக்கிறது.

    இந்த மர்ம மனிதர்களை பொதுமக்கள் சிறைப்பிடிக்க முற்பட்டபோது அவர்களை சிங்கள அரச படையினர் காப்பாற்றி தம்மோடு அழைத்துச் செல்வது தினமும் நடந்து வருகிறது. இதனைக் கண்டு பல ஊர் மக்கள் திரண்டு குறித்த இராணுவ காவலரண்களைத் தாக்கிய சம்பவங்களும் உண்டு.

    இதிலிருந்து சிங்கள அரச படையினரோ அல்லது அவர்களின் அடிவருடிகளோதான் குறித்த கிறீஸ் பூதங்கள் என்பது எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாமல் புலப்படுகிறது.

    உண்மையான காரணங்கள் என்ன?

    பல காரணங்களை முன்வைத்தாலும், அவைகளில் முக்கியமான காரணங்களை அலசுவது சாலச்சிறந்ததாக இருக்கும். மே 2009-இல் முடிவுக்கு கொண்டுவந்த நான்காம் கட்ட ஈழப்போரின் போது ஏற்படுத்திய மனிதப்பேரவலத்தை மூடி மறைத்து, உலக நாடுகளைத் திசை திருப்ப இப்படியான சம்பவங்கள் சிறிலங்கா அரசுக்கு உதவும்.

    சிறிலங்கா அரசிற்கு இந்தியா உட்பட பல உலக நாடுகள் தமிழருக்கு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று அழுத்தங்களைப் பிரயோகிக்கிறார்கள். அத்துடன், தமிழர் பிரதேசங்களில் தரித்து நிற்கும் படையினரை அப்புறப்படுத்த வேண்டுமென்கிற குரல் பரவலாக ஓங்கி ஒலிக்கிறது.

    விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இப்போது இல்லை என்கிற காரணத்தினால், குறிப்பாக சிறிலங்காவில் கடந்த இரு வருடங்களாக எவ்வித தாக்குதலையும் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளவில்லை என்ற காரணத்தினால் படையினர் தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்தும் இருக்க வேண்டிய நிலை இல்லை என்கிற வாதம் எழுகிறது.

    அதி உயர் பாதுகாப்பு வலயம் என்று பிரகடனப்படுத்தப்பட்டு படையினர் தம் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பொது மக்களின் காணிகளை உரிமையாளர்களிடமே மீண்டும் கொடுக்க வேண்டுமென்கிற குரல் பரவலாக பல நாடுகளினால் கோரப்படுகிறது.

    தமிழ் மக்கள் தமது பிரதேசங்களில் படையினரின் தொல்லைகளின்றி சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டுமென்கிற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இப்படியாக சிங்களப் படையினருக்கு எதிராக அழுத்தங்கள் ஏற்பட்டிருக்கும் இவ்வேளையில் சிங்கள அரசிற்கு தேவைப்பட்ட கருவியே கிறீஸ் பூதங்கள்.

    படையினரை வாபஸ் வாங்குவதை விடுத்து, இன்னும் பல அரச படை முகாம்களை நிறுவவும் தேவைப்பட்ட ஆயுதமே கிறீஸ் பூதங்கள். தமிழரின் நிலங்களை அபகரித்துக்கொண்ட சிங்கள இராணுவம், அவற்றை சிங்கள மக்களுக்கு தாரை வார்க்கவும் மற்றும் புத்த விகாரைகளை அமைக்கவும் உதவ தேவைப்பட்ட கருவியே கிறீஸ் பூதங்கள்.

    தமிழரின் பிரதேசங்களில் அமைதி இன்னும் திரும்பவில்லை என்பதை உலகத்திற்கு காட்டி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீடிக்க தேவைப்பட்ட பூதங்களே குறித்த மர்ம மனிதர்கள்.
    உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு பின்னர் ஏதோ தனது அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப்போவதாக அறிக்கை விட்டார் மகிந்த ராஜபக்ச.

    குறித்த தடையை நீக்குவதற்கு முதலிரவே குறித்த சட்டத்திற்கு மாற்றுச் சட்டத்தை அமுல் படுத்தினார். அமுலப்;படுத்திய சட்டத்திற்கும், முன்னிருந்த சட்டத்திற்கு அதிக வேறுபாடுகள் இருக்கவில்லை. உலக நாடுகளை ஏமாற்ற வேண்டுமென்கிற வகையிலேயே செயற்பட்டார் ராஜபக்ச.

    புதிதாக அமுலுக்கு வந்த சட்டத்திற்கு நியாயம் கற்பிக்கவே உருவாக்கப்பட்ட சிறப்பு படையணியே குறித்த கிறீஸ் பூதங்கள் என்று தமது ஆதங்கங்களை தெரிவிக்கிறார்கள் தமிழ் மக்கள்.

    யுத்த காலத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்குச் சட்டம் மறைமுகமாக அமுல்படுத்தப்பட்டுள்ள நிலை தோன்றியுள்ளது. வீடுகளில் விளக்குகளை அணைத்துவிட்டு விழித்துக் கொண்டிருக்க வேண்டிய அவலநிலை உருவாகியுள்ளது. இவைகள் அனைத்தையும் வெற்றிகரமாகச் செய்துமுடிக்க தேவைப்பட்ட ஆயதமே கிறீஸ் பூதங்கள்.

    ஒரு ஜோதிடரின் பரிகாரமாகவே சிறுபான்மை இனப் பெண்கள் தாக்குதலுக்குள்ளாகிறார்கள் என சில உள்ளூர் ஊடகவியலாளர்கள், பொதுமக்களின் கருத்து என யாழ்ப்பாணத்தில் வெளியாகும் இன்னுமொரு தகவல். எது என்னவாக இருந்தாலும், மகிந்தா அரசின் ஈழத் தமிழர் மீதான போருக்கு ஒத்ததான இன்னொரு வடிவமே கிறீஸ் பூதங்கள்.

    தமிழர் பிரதேசங்களில் நிம்மதியைக் குலைத்து அவர்களின் இயல்பு வாழ்க்கையை அழிப்பதே சிங்கள அரசின் நோக்கம். இதனையே கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக சிங்கள அரசு செய்து வருகிறது. தான் செய்யும் இனச்சுத்திகரிப்பை மறைத்து, பயங்கரவாதம் மட்டுமே சிறிலங்காவில் இருந்தது என்று விடுதலைப்புலிகள் மீது பழியை போட்டுவிட்டு போரை ஏவி தமிழ் மக்களை அழித்தது சிங்களம்.

    விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக பறைசாற்றிக் கொண்ட சிங்களம், வேறு ஏதாவதொரு காரணத்தைக் காட்டி தமிழ் மக்களை அழிக்க திட்டம் தீட்டியது. இதுவே கிறீஸ் பூதங்கள் என்கிற சிறிலங்காப் படையினரின் சிறப்புப் படையினர்.

    ஒன்றும் தெரியாத பாப்பாக்கள்

    தமிழீழப் பகுதிகளில் ஏவப்பட்ட இராணுவத் தாக்குதல்களை பல ஆண்டுகளாக கருத்தில் கொள்ளாது செயற்பட்டார்கள் அரச சார்பற்ற நிறுவத்தினர். சிங்கள அரசுகள் தமக்கு எதிராக செயற்பட்டு விடுவார்களோ என்கின்ற அச்சத்தில் அமைதியைக் கடைப்பிடித்தார்கள் பல அரச சார்பற்ற நிறுவனங்கள்.

    நான்காம் கட்ட ஈழப்போரின் போது உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் சிங்கள அரச படையினரின் அராஜகங்களை அம்பலப்படுத்தினர். இதன் பலனாகவே இன்று உலக நாடுகளினால் வேண்டப்பட்டு வரும் போர் விசாரணை. பல ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த தொண்டர் நிறுவனங்கள் திறம்பட செயற்பட்டிருந்தால், இன்று பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பதுடன், தமிழர்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

    ஒன்றும் தெரியாத பாப்பாக்களாக செயற்பட்டார்கள் தொண்டு நிறுவனங்கள் அன்று. அதைப்போலவேதான், கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பெண்களுக்கு எதிராக செயற்படுத்தப்படும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வெளிக்கொண்டுவராமல் மௌனம் காக்கிறார்கள் பல உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள்.

    மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை உலக மயப்படுத்தினால், சிங்கள காடையர்களுக்கெதிராக பலமான ஒரு சக்தியை உருவாக்க முடியும். இதன் மூலமாக பாதிக்கப்படும் பெண்களுக்கு நிரந்தரமான தீர்வைப் பெற்றுத்தருவதுடன், தமிழர் பிரதேசங்களில் அமைதி வாழ்வை உண்டுபண்ண முடியும். போரின்போது அவலப்பட்ட மக்கள், இப்படியான பயங்கரமான செயற்பாடுகள் மூலமாக உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.

    மகிந்தா அரசின் செயற்பாடுகளுக்கு மறைமுகமாக ஆதரவளித்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் ஏதோ தமிழ் மக்கள் மீது தான் அன்பு கொண்டுள்ளவர் போல் நாடகமாட முற்பட்டுள்ளார். குறித்த மர்ம மனிதர்களின் அனைத்து விபரங்களையும் ரணில் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. இவரின் விசுவாசமான இராணுவப் படை அதிகாரிகள் மூலமாகவே அனைத்து விடயங்களையும் அறிந்து வைத்துள்ளார் ரணில்.

    அப்படியிருக்க, வெறும் கண்துடைப்புக்காக பாராளுமன்றத்தில் குறித்த தாக்குதல் சம்பவங்கள் பற்றி பேசியுள்ளார். ரணில் பாராளுமன்றத்தில் கூறியதாவது: "மர்ம மனிதர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. யாழ் குடாநாடு முழுவதும் ஒருவித பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

    இதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் இதுவரை எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஆகஸ்ட் 30-ஆம் தேதி கோண்டாவில் பிரதேசத்தில் பல சம்பவங்கள் இடம்பெற்றன. அதே தினத்தன்று இரவு 8.30 மணியளவில் திருநெல்வேலி பிரதேசத்தில் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

    அத்துடன் கொக்குவில் யாழ். மருத்துவ பீடத்திற்கு அருகாமையிலும், செப்டெம்பர் 01 ஆம் திகதி உரும்பிராய், குருநகர் போன்ற பிரதேசங்களிலும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் ஒரு சடுதியான செயலாகவே இதை மக்கள் கருதுகின்றனர்."

    அவர் மேலும் கூறுகையில், "தற்போது 50,000-ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் யாழில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 20-30 பிரதேசம் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலேயே காணப்படுகிறது.

    வீதித்தடைகளும் 24 மணிநேர பாதுகாப்பு ரோந்துச் சேவையும் காணப்படுகிறது. இந்தநிலையில் அத்துமீறல் விடயங்களை தடுப்பதற்கு படையினரால் முடியும். ஆயினும், இது நடைபெறாமையின் மூலம் தெளிவாகும் விடயம் என்னவெனில் இதைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு எதுவித தேவையும் இல்லை என்பதும், அரசாங்கத்திற்கு மர்ம மனிதனின் மர்மம் புரியும் என்பதுமாகும்."

    வேலியே பயிரைத் தின்னும் கதை போல, குறித்த கிறீஸ் பூதங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் விசேட உயர்மட்டக் செயற்குழு ஒன்று வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தலைமையில் இயங்கும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

    2006-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டுவரை யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக கடமையாற்றியவரே மேஜர் ஜெனரல் சந்திரசிறி என்பது குறிப்பிடத்தக்கது. இவரினால் ஒருபோதும் தமிழர்களுக்கு நீதியைப்பெற்றுத் தர முடியாது என்தே உண்மை.

    நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் பகுதிகளில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. படுதோல்வியடைந்தது. இக்குழுவும், சிங்கள அரச படையினருமே வடக்கின் பல பகுதிகளில் சேர்ந்து இயங்குகிறார்கள். இப்படியிருக்க, தேவானந்தா தனக்கு குறித்த கிறீஸ் பூதங்கள் பற்றிய எதுவித தகவலும் தெரியாது போன்ற நாடகத்தை நடத்துகிறார்.

    சிங்கள அரசு நியமிக்க இருக்கும் குழுவில் ஈ.பி.டி.பி.யினரும் அங்கம் வகிப்பார்கள் என்று அறியப்படுகிறது. ஆக, சிங்கள அரசு நியமிக்கும் அனைத்து குழுக்களும் வெறும் கண்துடைப்புக்காகவே நியமிக்கபடுகிறார்கள் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

    கிறீஸ் பூதங்களின் நடமாட்டத்தால் பதற்ற சூழல், அமைதியின்மை போன்ற சாதாரண வாழ்வியல் தமிழர் பிரதேசங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்தும்போது அவர்களுக்கு சிங்களப் படையினர் பாதுகாப்பு வழங்குவதுடன், காவல்துறையினர் மக்களைத் தாக்கி கைது செய்வது, அச்சுறுத்துவது போன்ற நிகழ்வுகள் அன்றாடம் நடைபெற்று வருவது ஆழ்ந்த வருத்தத்தை தமிழ் மக்களிடையே உருவாக்கியுள்ளது.

    தமிழ் மக்கள் மீது விரக்தி கொண்டுள்ள எட்டப்பன் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களின் தலைமையில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டு குறித்த மர்ம மனிதர்களின் விவகாரத்தைக் கையாள்வதென்பது வேடிக்கையான விடயமே. ஆட்சியாளர்களே நேரடியாக குறித்த மர்ம மனிதர்களை இயக்கும்போது எப்படி அவர்களுடைய செயற்பாடுகளை நிறுத்த முடியும் என்பதே அனைவருடைய கேள்வியாக உள்ளது.

    nithiskumaaran@yahoo.com
    அனலை நிதிஸ் ச. குமாரன்

    http://smsgalatta.blogspot.com



  • http://smsgalatta.blogspot.com

  • [Continue reading...]

    இன்னும் 10 நாட்கள��ல் லிபியாவில் புதிய அரசு

    - 0 comments


    லிபியாவின் இன்னும் 10 நாட்களுக்குள் புதிய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இடைக்‌கால அரசின் பிரதமர் கூறினார். லிபியாவின் அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 6 மாதங்களாக கிளர்ச்சி நடந்துவருகிறது. கடாபியின் ஆதிக்கத்திலிருந்த பெரும்பாலான நகரங்கள் கிளர்ச்சியாளர்களின் வசம் வீழ்ந்தன.

    கடாபியும் தற்போது ஆட்சியைவிட்டு நைஜர் நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிலையில் நேற்று டிரிபோலி வந்த இடைக்கால அரசின் தலைவருக்கு கிளர்ச்சியாளர்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். இது குறித்து லிபியா இடைக்கால அரசின் தேசிய கவுன்சில் பிரதமர் முகமது ஜப்ரில் கூறுகையில், தற்போது அதிபர் கடாபியின் ஆட்சி முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது. இன்னும் 10 நாட்களில் லிபியாவில் புதிய அரசு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதைத்‌தொடர்ந்து லிபியாவின் பல்வேறு மண்டலங்களுக்கும் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் என்றார்.

    http://smsgalatta.blogspot.com



  • http://smsgalatta.blogspot.com

  • [Continue reading...]

    தூக்கு தண்டனையை ���த்து செய்வதற்கான தீர்மானத்தை நி���ைவேற்றவேண்டும்: கருணாநிதி

    - 0 comments


    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் மீண்டும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது தம்முடைய ஆசைகளில் ஒன்றாக இருந்த போதிலும் அந்த ஆசை உரிய நேரத்தில் நிறைவேற முடியாமல் போனதற்கான காரணத்தை அனுபவ ரீதியாக தமிழர்கள் அனைவரும் அறிவார்கள்.

    டெல்லியிலேயே ராஜீவ்காந்தியை தாமும், முரசொலி மாறனும் சந்தித்தப்போது ஈழத்தமிழர் பிரச்சனை குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு மாறனையும், வைகோவையும் அனுப்பி வைப்பதாக ராஜீவ் கூறினார்.

    நளினிக்கு தூக்குத் தண்டனையை திமுக அரசு ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளை திமுக அரசு செய்தது மன ஆறுதலை தருகிறது.

    நளினிக்கு கிடைத்துள்ள அந்தச் சலுகை விரிவுப்படுத்தப்பட்டு இருபதாண்டு காலத்திற்கு மேலாக சிறையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கும் கிடைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

    அவர்கள் மீதான குற்றம் மிகப் பெரியது என்றபோதிலும், அவர்கள் அனுபவித்த தண்டனை காலத்தைக் கருத்தில் கொண்டு மனிதாபிமானத்தோடு இரக்கம் காட்ட முன்வர வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தேன். தற்போதும் அதையே கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளேன். தியாகு, கலியபெருமாள் ஆகியோரின் மரண தண்டனை திமுக ஆட்சியின்போது திமுக ஆட்சியின் போது மாற்றியமைக்கப்பட்டது.

    இன்றைய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, கடமை முடிந்துவிட்டதாக கருதக்கூடாது. திமுக ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைப்படி உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    http://smsgalatta.blogspot.com



  • http://smsgalatta.blogspot.com

  • [Continue reading...]

    யேர்மன் வடமாநில ���மிழாலயங்களுக்க���ன மாவீரர் வெற்ற��க்கிண்ண மெய்வல்���ுனர் விளையாட்டுப்போட்டி (படங்கள��� இணைப்பு)

    - 0 comments


    வடமாநிலம் தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 10.09.2011 சனிக்கிழமை அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தேசியக் கொடியேற்று வைபவத்தைத் தொடர்ந்து தமிழாலய அணிவகுப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல தமிழாலயங்களின் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்குபற்றியமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வெற்றிப் பதக்கங்களும், வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

    Osnabrück தமிழாலயம் 788 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், Göttingen தமிழாலயம் 247 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், Bremen தமிழாலயம் 128 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தினர். மாணவர்களோடு பெற்றோர்களும் மிகவும் ஆர்வமாகக் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

    விளையாட்டுப்போட்டி ஆரம்பமாகும் முன்னர் வீரமங்கை செங்கொடியின் வணக்க நிகழ்வு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், ஈகைச்சுடரேற்றி செங்கொடிக்கு அகவணக்கம் செலுத்தினார்கள்.







    http://smsgalatta.blogspot.com



  • http://smsgalatta.blogspot.com

  • [Continue reading...]

    மாறிவரும் தமிழக��்! மனிதாபிமானத்தை முன்னிறுத்துக��றது

    - 0 comments


    தமிழகத்தில் தற்போது ஒரு மென்புரட்சி மௌனமான கட்சி, இன, மத பேதமின்றி அரங்கேறி வருவதற்கான காரணிகளாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் உள்ளதை தற்போதைய கள நிலைமைகள் எடுத்துக் காட்டுகின்றன.

    தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவு என்று நோக்காமலோ, ராஜீவ் காந்தியின் கொலை என்று நோக்காமலோ ஏன் இந்த மூவரும் தூக்கிலிட்டு அநியாயமாகக் கொல்லப்பட வேண்டும் என்ற கருத்துக் களம் ஆழமாக தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரிடையேயும் எழுந்துள்ளதாக தமிழகத்தின் மிகவும் பிரபல்யமான நாளிதழ் ஒன்று நாடிபிடித்து அறிந்துள்ளது.

    குறிப்பாக சாந்தன் வெளிநாடு செல்வதற்காக தனது குடும்பச் சொத்தான காணியை ஈடு வைத்து சென்னை வந்தவர் என்பதையும், அவர் ஒரு தீவிர இந்துமதப் பற்றாளர் என்பதையும்,
    அவர் கைது செய்யப்பட்டு இன்று வரையான 21 வருடங்களாக அவரைப் பார்ப்பதற்கு வருவதற்கு பண வசதியில்லாத அவரின் பெற்றோரால் முடியவில்லை என்பதையும் அண்மையில் ஜூனியர் விகடன் பத்திரிகை மிகவும் உருக்கமான முறையில் வெளிக் கொணர்ந்திருந்தது.

    இது இவர்கள் நிரபராதிகள் தான் என்ற கருத்தை அல்லது சிந்தனை மாற்றத்தைத் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிராமணர் சமூகத்தின் இக் கொலைத் தண்டனை தொடர்பான பார்வையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஒரு தமிழக மூத்த பத்திரிகையாளர், ஒரு வயதான பிராமணர் புத்தகக் கடையொன்றில் "இவாளுக்கும் (பேரறிவாளன், முருகன், சாந்தன்) ராஜீவ் காந்தி கொலைக்கும் சம்பந்தமேயில்லையாமே, அப்படின்னா எதுக்கு இவாளைத் தூக்கிலிடணும்?" என தனது அதிருப்தியை அக் கடையிலிருந்தோருடன் பகிர்ந்தது தமிழகத்திற்கு புதியதொரு விடயம் எனவும் தனக்கே இந்த மாற்றம் ஆச்சரியமானதாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

    அத்தோடு தமிழர்களின் தலைவி என தன்னை செயற்பாடுகளின் மூலம் நிலைநிறுத்தி வரும் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் கூட மிகவும் அரசியல் முதிர்ச்சியைக் காட்டும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார் என்பதையும் இவரது அரசு தற்போதைய வழக்கிற்கு பதில் வழங்கும் காலக்கெடுவை நீட்டி நீதிமன்றத்தின் மூலமே இந்த வழக்கை நியாயமற்றது என்பதை நிரூபிக்க முயலும் என்றும் தெரிவித்தார்.

    ஒட்டுமொத்தமாக தமிழகம் ஜீவகாருண்யம், மனிதாபிமானம் என்பவற்றை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தாமல் இவை தொடர்பான விடயங்களில் உலகோடு ஒத்துச் செயற்படும் நிலைக்கு தன்னை ஒரு மௌனப் புரட்சி மூலம் உயர்த்தியுள்ளது என்றும் மேற்படி பத்திரிகையாளர் தெரிவித்தார்.

    http://smsgalatta.blogspot.com



  • http://smsgalatta.blogspot.com

  • [Continue reading...]

    ஆ.ராசா, கனிமொழி, த���ாநிதியை தப்ப வி��ும் சி.பி.ஐ..!

    - 0 comments



    05-09-2011

     
    என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

    ஸ்பெக்ட்ரம் புயல்மீண்டும் டெல்லியில் மையம் கொண்டு, பெரும் அதிர்வுகளை உருவாக்கக் காத்திருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி என அதற்குத் தேதியும் குறிக்கப்​பட்டுள்ளது!




    ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு முன்னோட்டங்கள் தேவை இல்லை. டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்பாக நடந்துவரும் இந்த ஸ்பெக்ட்ரம்வழக்கில், இதுவரை இரண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 'மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும்வரை கைது செய்யப்​பட்டயாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது!' என்று சி.பி.ஐ.தரப்பு இந்தச் சிறப்பு நீதிமன்றத்தில் வாதங்களை வைத்ததால், கைதான யாரும் இதுவரை வெளியில் வர முடியவில்லை.

    '
    இவர்களை வெளியில்விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளேயே வைத்திருக்கப் போகிறீர்கள்..?' என்று நீதிபதி ஷைனியே சி.பி.ஐ. தரப்பு வக்கீல்களிடம் கோபமாகக் கேட்டார். இதைத் தொடர்ந்து இதுவரைபதிவான இரண்டு குற்றப்பத்திரிகைகளை அடிப்படையாக​வைத்துக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

    ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. சரத்குமார் உள்ளிட்ட அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதி ஷைனி முன்னால் தொடர்ந்துமுன்வைத்து வருகிறார்கள்.

    கடந்த 25-ம் தேதி ஆ.ராசா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில்குமார், சில அதிர்ச்சியான தகவல்களைச் சொல்லி நீதிமன்றத்தின் கவனத்தை முழுமையாகத் தங்கள் பக்கம் திருப்பினார்.

    ''
    ஸ்பெக்ட்ரம்ஒதுக்கீட்டில் சதி மற்றும் மோசடி நடந்துள்ளதாக இந்த வழக்கு நடந்து வருகிறது. ஆனால், இதில் அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல்ஆகிய மூவரும் தெரிவித்துஇருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் பதிவாகி உள்ளது. எனவே, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில்சிபல் ஆகிய மூவரையும் இந்த நீதிமன்றத்துக்கு அழைத்து, சாட்சிகளாக விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும்!'' என்று வழக்கறிஞர் சுஷில்குமார் சொன்ன தகவல், அங்கே இருந்த சி.பி.ஐ. தரப்பை மட்டும் அல்ல... செய்தி பரவியதும் பிரதமரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    ''
    ஸ்பெக்ட்ரம்உரிமங்களைப் பெற்ற உடனேயே அதை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்த​தாகப் புகார் சொல்லப்​பட்டுள்ளது. ஆனால், உரிமங்கள் விற்கப்​படவில்லை. அதிகபட்ச உச்சவரம்பான 74 சதவிகிதத்துக்கு உட்பட்டு சில நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்றுள்ளன. அந்தப்பரிவர்த்தனைக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தந்துள்ளது!'' என்று சொன்ன சுஷில்குமாரின் வாதங்கள், ப.சிதம்பரத்துக்கும் சிக்கலைக் கொடுத்துள்ளன.

    அடுத்து தயாநிதிமாறன் மற்றும் அருண்ஷோரி​யையும் அவர் விட்டுவைக்கவில்லை. ''2003-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை நிறைவேற்றிய விதிமுறைகளைத்தான்ராசா பின்பற்றினார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்த அருண்ஷோரி மற்றும் தயாநிதி மாறனை இதுவரை ஏன் கேள்விகேட்கவில்லை? 2007-ம் ஆண்டு தயாநிதி மாறன் பதவி விலகும் முன்பு ஸ்வான் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார்.அதை ராசா பதவிக்கு வந்ததும் வெளியில் சுட்டிக் காட்டி இருக்கிறார்!'' என்று சுஷில்குமார் சொல்வது, தயாநிதி மாறனை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது.



    ''சி.பி.ஐ. தனது ஆவணங்களை இந்த கோர்ட்டில் இன்னமும் தாக்கல் செய்யவில்லை. இந்த ஆதாரங்​களை உடனடியாகத் தாக்கல் செய்து... அதை எங்களுக்கும் தந்தால்தானே வழக்கைஎதிர்கொள்ள முடியும்?'' என்றும் சுஷில்குமார் கேள்வி எழுப்பினார். இந்த ஆவணங்கள் அனைத்தையும் கேட்டு ராசா, ஒரு அவசர மனுவையும் தாக்கல் செய்தார். இது சி.பி.ஐ-க்கு ஒரு விதமான நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அவசர ஆலோசனை சி.பி.ஐ.அதிகாரிகள் மட்டத்தில் நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி தங்களது மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யலாம் என்று அவர்கள் முடிவு எடுத்ததாகவும்சொல்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்துநீதிபதி ஷைனி முன் ஆஜரானார், சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணு​கோபால். ''இந்த வழக்கில்சி.பி.ஐ. தனது விசாரணையை முடித்துவிட்டது. தனது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்யும்!'' என்று அறிவித்து, புயல் சின்னத்தைக்காட்டி உள்ளார். அதற்கு முன்னதாக வருவாய்த் துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் தங்களது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வார்கள் என்றும் வேணுகோபால்சொன்னார்.

    ''
    இந்தக் குற்றப்பத்திரிகையில் கைது செய்யப்பட்ட அனை​வரும் என்ன குற்றம் செய்தார்கள் என்பதை முழுமையாகக் கொண்டுவருவோம். இந்தமொத்த சதியிலும் ஒவ்வொருவருக்கும்என்ன பங்கு என்பதையும் சொல்வோம். இதற்காகச் செய்யப்பட பணப் பரிவர்த்தனைகள், எங்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பதையும் கொண்டு​​வருவோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் குறித்த முழுமையான குற்றச்சாட்டுகள் வெளியில் வரலாம். மேலும், தயாநிதி மாறன் குறித்து ஏற்கெனவே தனது அறிக்கையில் சி.பி.ஐ. சில தகவல்களைச் சொல்லி இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் தனதுமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்தார். தொழில் அதிபர் சிவசங்கரன் இது தொடர்பாக விரிவான வாக்கு​மூலத்தை சி.பி.ஐ-யின் முன்பு பதிவுசெய்துள்ளார். ''என்னுடைய ஏர்செல் நிறுவனம், தயாநிதி மாறனின் வற்புறுத்தலால்தான் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்குவிற்கப்பட்டது!'' என்பது இவரது குற்றச்சாட்டாக உள்ளது. இந்தப் புகாரை செப்டம்பர் 15-ம் தேதிய குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்போகிறார்களா அல்லது அது தனியாக வருமா என்பது தெரியவில்லை!

    இப்படி மொத்தமும்தி.மு.க. பிரமுகர்களை மையம்கொண்டதாக அந்தக் குற்றப் பத்திரிகை இருக்கப்​ போகிறது. பொதுவாக தி.மு.க.செப்டம்பர் 15-ம் தேதியை முப்​பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடும். இந்த ஆண்டு சி.பி.ஐ-யும் சேர்ந்து 'கொண்டாடப்' போகிறது?!

    -
    சரோஜ் கண்பத்

    தப்பியது கலைஞர்டி.வி.?

    2-
    ஜி வழக்கின்விசாரணை குறித்து அவ்வப்போது சி.பி.ஐ. தரப்பிலும் அமலாக்கப் பிரிவு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணை நிலவரஅறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 1-ம் தேதி மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அளித்தஅறிக்கையில், '2-ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுவருகிறது. சுமார் 200 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளைஆய்வு செய்துவருகிறோம். இதில் சுமார் 7,800 கோடி முதல் 9,000 கோடி வரை பணப்பட்டுவாடாநடந்திருக்கலாம்' என்று அமலாக்கப் பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சைப்ரஸ், சேனல் ஐலேண்ட் போன்ற தீவுகளில் இருந்து பெரும்பாலான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டது.

    அதன் பிறகு 2000 முதல் 2004-ம் ஆண்டு வரையிலான பி.ஜே.பி. ஆட்சியில் பிரமோத் மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்திலும் பின்னர்தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தகாலத்தில் நடந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

    இதில், 'மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்தில் அரசின் கொள்கைக்குமாறாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சில கம்பெனிகளுக்கு அதிகப்படியாகஒதுக்கப்பட்டது. அதனால் முழுமையாகவிசாரணை நடத்த வேண்டும். தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு கால தாமதம் செய்துஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம், அவர் கால தாமதம் செய்து ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்துள்ளாரே தவிர, ஏர்செல் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி தனக்கு சாதகமான ஆதாயம் பெற்றதற்கான சாட்சியம் எங்களுக்கு கிடைக்கவில்லை' என்று தெரிவிக்கப்பட்டது.

    கலைஞர் டி.வி.பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுத்ததாகக் கூறுவதை சி.பி.ஐ. தரப்பு ஏற்றுக் கொள்கிறது என்றும் அதனால் கலைஞர்டி.வி-க்கு உடனடியாக பிரச்னை ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.ஆனால் ஷாகித் பால்வாவின் ஐந்துநிறுவனங்களின் சொத்துகளும், சில வீடுகள், நிலம், வணிகக் கட்டடங்கள் ஆகியவைகளோடு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு2-ஜி வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான், வரும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கும் குற்றப் பத்திரிகை மேலும் சில புயல்களைக் கிளப்பும் என்றே தெரிகிறது.

    ''200
    கோடி வந்ததுகனிமொழிக்குச் சொல்லப்படவில்லை!''

    கடந்த மே 20-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்ந்துசிறையில் இருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆவேசம், அவரது வழக்கறிஞர் மூலமாக வெடித்தது. ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார்தான் கனிமொழிக்கும்வழக்கறிஞர்.

    '
    கனிமொழி மீதுவழக்குத் தொடர்ந்து நடைபெறுமானால், பிரதமரையும் சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும்' என்று எச்சரிக்கை விடுத்துப் பேசினார் சுஷில்குமார்.

    '
    கனிமொழியை இந்தவழக்கில் சேர்த்த சி.பி.ஐ., முறைப்படி அனுமதி பெறவில்லை. அவர் மாநிலங்களவை எம்.பி. ஆனால், அவரை சி.பி.ஐ. ஒரு தனிப்பட்ட நபராகவே கருதிக் கைது செய்துள்ளது. அவரைக் கைது செய்தது குறித்துமுறைப்படி மாநிலங்களவைத் தலைவரிடம் அனுமதிகூட பெறவில்லை. கலைஞர்டி.வி-யில் 20 சதவிகிதப் பங்கு இருப்பது மட்டுமே அவர் செய்த குற்றம் தவிர, வேறு எந்தத் தவறும் அவர் செய்யவில்லை. ஆனால், அவர்தான் கலைஞர் டி.வி-க்கு மூளையாக இருந்தார் என்று சொல்லப்​படுவது தவறு. அந்த டி.வி. 10 சதவிகித வட்டிக்கு 200 கோடியைக் கடன் வாங்கிய விவகாரத்துக்கும் கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை. அந்த விஷயம் அவருடைய கவனத்துக்கும் கொண்டுவரப்படவில்லை. இரண்டு பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. ஆனால், ஆவண சாட்சியங்கள்எதுவும் கனிமொழிக்கு எதிராக இல்லை!'' என்று சுஷில்குமார் வாதிட்டார்.

    இந்த வாதங்களைஉன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே இருந்தார் கனிமொழி!

    நன்றி :ஜூனியர்விகடன்




    http://video-news-tamil.blogspot.com



  • http://video-news-tamil.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger