Sunday 18 September 2011

அணு உலைகள்... அவசி���மா? ஆபத்தா?

- 0 comments


மறியல், கடையடைப்பு, உண்ணாவிரதம், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என சத்யாகிரகம் செய்து வருகின்றனர் பொதுமக்கள். கடந்த 2 மாதங்களாக கொந்தளித்து கிடக்கின்றன தென் மாவட்ட கடற்கரையோர கிராமங்கள்.


ஏதோ குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளுக்காகவோ, சாலை, பஸ் வசதி கேட்டோ இந்த போராட்டம் இல்லை. மனித உயிருக்கு உலை வைக்கும் அணு உலையை எதிர்த்து ஒட்டு மொத்தமாகக் குரல் கொடுத்து வருகின்றனர் கூடங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள். இந்தியாவில் 1948ல் பாபா அணு ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டது. 1969ம் ஆண்டில் இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் தாராப்பூரில் இயக்கத்தை தொடங்கியது. தற்போதைய நிலையில் இந்தியாவில் 20 அணு உலைகள் மூலம் 4 ஆயிரத¢து 780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 7 அணு உலைகள் கட்டுமான நிலையில் உள்ளன. யுரேனியம், புளூட்டோனியம் அணுக்களின் கருவில் உள்ள சக்தியே அணுசக்தி ஆகும். அணு உலைக்குள் அணு எரிபொருள் பிளவுறுதல் மூலம் வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பத்தின் மூலமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.


இந்தியாவில் 1947ல் மின்சார உற்பத்தி 1,300 மெகாவாட்டாக இருந்தது. தற்போது ஒரு லட்சத்து 73 ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப் படுகிறது. எனினும் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது. 2030ம் ஆண்டில் மின்சாரத்தின் தேவை 4 லட்சம் மெகாவாட்டாக இருக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக் கின்றன. இந்தியாவில் அடிப்படை தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை மின்சாரம், சூரிய சக்தி என ஆகியவற்றையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அடுத்த 20 ஆண்டுக ளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இந்தியாவிடம் நிலக்கரி, எண்ணெய் போன்ற எரிபொருட் களின் இருப்பு குறைவாக உள்ளது. 1000 மெகாவாட் அணு மின் உற்பத்திக்கு ஒரு ஆண்டிற்கு 30 டன் எரிபொருள் (யுரேனியம்) தேவை. ஆனால் 1000 மெகாவாட் அனல் மின் உற்பத்திக்கு ஒரு ஆண்டுக்கு 43 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி அல்லது 20 லட்சம் டன் எண்ணெய் தேவைப்படுகிறது. நீர் மின்சார உற்பத்திக்கு போதிய நீர் ஆதாரங்கள், அணைகள் இல்லை. சூரிய சக்தி ஆதாரம் ஒரு சில மண்டலங்களில் மட்டுமே கிடைக்கிறது. காற்றாலை மின்சாரம் சில கால கட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது. எதிர்கால மின்சார தேவையை சமாளிக்க அணுசக்தியால் மட்டுமே முடியும். இதற்காக தான் அணு மின் நிலையங்கள் அமைக்கப்படுகிறது என அணு மின் நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.


ஆனால் கோடிகளை கொட்டி மனித சமுதாயத் துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சூழலில் அணு மின்சாரம் தயாரிக்க வேண்டுமா என்பது தான் பொதுமக்களின் ஒரே கேள்வி. அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை மின்சாரம் என எத்தனையோ வழிகள் இருக்கும் போது கதிர்வீச்சு ஏற்பட்டால் மக்களைக் கொல்லும் பேராபத்து கொண்ட அணு உலைகள் தேவை தானா என கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.


நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் 13 ஆயிரத்து 171 கோடி மதிப்பீட்டில் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 1, 2 அணு உலைகள் அமைக்கப் படுகின்றன. இவை தவிர 3, 4, 5, 6 என தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறனுள்ள நான்கு அணு உலைகள் அமைக்கப்பட உள்ளன.
இந்தியாவிலேயே முதன்முதலாக இங்கு தான் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. அணு உலைகளில் பயன்படுத்தும் எரிபொருளான செறிவூட்டப் பட்ட யுரேனியம் ரஷ்யாவில் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் மீன்பிடி தொழில் செய்யக் கூடாது. 2 கி.மீ., சுற்றளவிற்குள் அணுமின் நிலைய கட்டடிங்களை தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது. 5 கி.மீ., சுற்றளவிற்குள் 'ஸ்டெரிலைஷேசன் ஷோன்' எனவும் அறிவித்துள்ளனர். அப்படியானால் மனிதர்கள் வசிக்கக் கூடாது எனவும் கூறப்படுகிறது. 5 கி.மீ., முதல் 16 கி.மீ.,க்குள் 10 ஆயிரம் மக்களுக்கு மேல் வசிக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளது. இதனால் அணு மின் நிலையம் செயல்படத் தொடங்கும் போது தங்கள் வாழ்வாதாரமே பாழாகி விடும் என்கின்றனர் கூடங்குளம் பகுதி மக்கள்.
அணு உலைகளை குளிர்விக்க கடல் தண்ணீர் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீர் பின்னர் அப்படியே கடலுக்கு செல்கிறது. இதனால் கடல் தண்ணீரில் கதிர்வீச்சு ஏற்பட்டு கடல் வாழ் இனங்கள் பாதிக்கப்படும். கடல் மீன்களை சாப்பிடும் மனிதர்களும் கத¤ர்வீச்சால் பாதிக்கப்படுவர். மீன் இனங்களே இருக்காது. பொதுமக்களின் உணவே கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர் அணு உலை எதிர்ப்பாளர்கள்.


இதுகுறித்து அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் உதயகுமார் கூறுகையில், மக்களுக்கு மின்சாரம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமைகளை பாதிக்காத வகையில் மின்சாரம் தயாரிக்க வேண்டும்.


அணு மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் காற்று, தண்ணீரில் கதிர்வீச்சு தன்மை இருக்கும். உணவு, பழங்கள், காற்று அனைத்திலும் கதிர்வீச்சு பாதிப்பு உணரப்படும். இதனால் கருச்சிதைவு, குழந்தை இன்மை, புற்றுநோய், மன வளர்ச்சி இல்லாத குழந்தைகள் என எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர். ஜப்பான் நாட்டில் அமெரிக்க தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தான் அணு உலை அமைக்கப்பட்டது. அங்கு சுனாமி வந்த போது என்ன நிகழ்ந்தது? அப்படி இருக்கும் போது ரஷ்ய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் அணு உலைகளுக்கு எந்தவிதத்திலும் பாதுகாப்பில்லை. இது மட்டுமல்லாது தீவிரவாதிகள் அணுமின் நிலையங்களை குறிவைத்துள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சரே கூறியுள்ளார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சுற்று வட்டாரத்தில் மனித உயிரினமே இருக்காது. எனவே அணு உலைகளை மறந்து விட்டு மாற்று வழி மின் சக்தியை மத்திய அரசு யோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் அணு உலைகளுக்கு எதிராக தொடங்கியுள்ள போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசு நிர்வாகம் திணறி வருகிறது. மக்களின் பயன்பாட்டிற்கு தான் மின்சாரம். அந்த மின்சாரம் மனித உயிரையே குடிக்கும் என்றால் மாற்று வழியை யோசிக்கலாமே!

நன்றி:தினகரன்.

(அணு உலையில் யுரேனியம் பிளக்கப்படும்போது வெளியாகும் கதிரியக்கப் பொருள் சிசியம்.செர்னோபில் விபத்தின் போது நூறாயிரம் நூறாயிரங்கோடி செசியம் அணுக்கள் வெளியேறி காற்றில் கலந்தன. சிசியத்தின் தாக்கம் 30 ஆண்டுகளுக்கு இருக்குமாம்.இந்தக் கதிரியிக்கத்தின் விளவாகப் பாதிக்கப்பட்ட,படப்போகும் உயிர்களெத்தனை?இந்தச் சிசியத்தைத் தாவரங்கள் கிரகித்துக் கொள்வதால் ஏற்படும் கோர விளைவுகள் என்ன?இதெல்லாம் நினைத்தால் உறக்கம் வருமா?)



http://tamilfashionshow.blogspot.com



  • http://tamilfashionshow.blogspot.com

  • [Continue reading...]

    Service Unavailable - ஆபாயில் (அப்படியே சாப்பி��ுங்க)

    - 0 comments




    "Service Unavailable" இந்த மெசேஜ் நம்மில் நிறைய பேருக்கு பரிச்சயமாக இருக்கும். ரயில் டிக்கெட்டை, IRCTC வெப் சைட்டின் மூலம் புக் செய்ய பழகி இருக்கும் எந்த ஒரு தத்தா பாட்டியும், இந்த Error மெசேஜை அவர்கள் வாழ்கையில் பார்த்திராமல் சாக முடியாது.

    சரி. ஏன் இந்த மெசேஜ் வருகின்றது? 

    "120 கோடி மக்கள் தொகை உள்ள இந்திய திருநாட்டில் வாழும் மக்கள் எல்லாருடைய தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது" என்று நம்மூர் அரசியல்வாதிகள் சொல்வதை தான், IRCTC சைட்டும் நமக்கு எடுத்துரைக்கிறது.

    நான் மாதம் ஒரு முறை ஊருக்கு செல்லும் போதும், பல் விலக்காமல் கண் துடைக்காமல், காலையில் 7 :55 -க்கு அவசர அவசரமாய் எழுந்து, டிக்கெட் Tatkal -லில் ரிசர்வ் செய்ய கணினி முன் உட்கார்ந்தால், என்னை போல ஊருக்கு செல்லும் கணினி துறை கண்மணிகளும், மற்ற ஏனையவர்களும் பல்துலக்கி காலை கடன் முடித்து எக்ஸாமுக்கு செல்வது போல, பயங்கர prepared -ஆக உட்கார்ந்து, IRCTC சைட்டில் Login ஆகி, Refresh பட்டனை அமுக்கி கொண்டு உள்ளார்கள்.

    சரியாக எட்டு மணி ஆனதும், பயணம் செய்யும் விபரம் டைப் செய்து, Submit பட்டனை அமுக்கியதும், சர்வருக்கு சென்றடையும் லட்சக் கணக்கான HTTP request -களில், சீக்கிரம் வரும் Requests -களின் தேவைகள் மட்டுமே சர்வர்கள் பூர்த்தி செய்கின்றன. Slow நெட்வொர்க் கனெக்சனில் திருவாரூர் தேர் போல மெதுவாய் ஆடி அசைந்து செல்லும் HTTP requests -கள் அப்படியே வந்த வழியே திருப்பி அனுப்பப் படுகின்றன.

    இது என்ன திருப்பதி லட்டா? வருகின்ற எல்லோருக்கும் கொடுப்பதற்கு.

    பொங்கல், தீபாவளி நாட்களில் இது இன்னும் பெரும் பிரச்சினை.

    டிக்கெட் கிடைத்தால் தீபாவளி.
    இல்லையென்றால் முதுகு வலி.

    தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், நெடுஞ்சாலை குழியில், "சுறா" "ஏகன்" படங்களை பார்த்து கொண்டே சென்றால், முதுகு வலியோடு "தல" வழியும் சேர்ந்து கொள்ளும். கொல்லும்.

    ஹை ஸ்பீட் நெட்வொர்க் கனெக்சன்களில் இந்த பிரச்சினை மிக குறைவு. கோயில்களில் அதிக காசு கொடுத்து சிறப்பு கட்டண வழியில் சென்று எளிதாய் கடவுள் தரிசனத்தை பெறுவது போலதான்.

    அதனால், ஆன் சைட்டில் வேலை செய்யும் நம் நண்பர்களிடம் சொல்லி டிக்கெட் புக் செய்ய சொல்ல வேண்டும். அங்கெல்லாம் நெட் ஸ்பீட், அதி வேகம் தான். அதுவும் சரியான விலையிலே கிடைக்கும்.

    அங்கெல்லாம் எப்போதே 3G -யை தாண்டி, 4G -க்கு சென்று விட்டார்கள். 5G -யில் research செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொஞ்ச வருடங்களில் வந்து விடும் என்கிறார்கள். ஆனால் இங்கு 3G -க்கே இன்னும் அடிதடி. அதிக விலையில்.

    நம் நாட்டில் மொபைல் சர்வீஸ் நிறுவனங்களைப் போல, பிராட் பேண்ட் சர்வீஸ் நிறுவனங்களும் நம்மை வெகுவாய் ஏமாற்றி கொண்டு உள்ளன.




    வார இறுதிகளில், ரயிலில் செல்லும் முக்கால்வாசி பேர்கள் இந்த ஐ.டி துறையினர்கள் தான். இவர்கள் விடும் சீன்கள் அளப்பற்றது. எங்கே பார்த்தாலும்,

    "பிராஜெக்டில் போட்டுட்டாங்களா இல்லையா?",
    "எவ்வளவு pay?"
    "அந்த மேனேஜர் அப்படி பண்றார்."
    "ஆன் சைட் கிடைச்சிடுச்சா? விசா வாங்கிட்டியா?"

    இப்படி தொனந்தொனன்னு கண்டது பேசிகிட்டே வர்றாங்க. என்னாலேயே சகிக்க முடியல. இந்த ரயிலுக்கு கூட இனி "சேரன் எக்ஸ்பிரஸ்", "பாண்டியன் எக்ஸ்பிரஸ்" ங்கறதை மாற்றி, "ஜாவா எக்ஸ்பிரஸ்", "டாட் நெட் எக்ஸ்பிரஸ்" ன்னு வச்சிடுங்கப்பா!


    ற்போது ரிலையன்ஸ்  3G -க்கு டிவியில் விளம்பரம் சில போட்டு கொண்டு இருக்கிறார்கள். ரயில் தண்டவாளத்தின் மேல் நின்றிருக்கும் வாகனத்தில் ஒருத்தன் கையிற்றால் கட்டி வைக்கப் பட்டிருப்பான். ரயிலும் தூரத்தில் வந்து கொண்டிருக்கும். பக்கத்தில் ரிலைன்ஸ் நெட் கனேக்சனுடன் ஒரு லேப்டாப் இருக்கும். கட்டப்பட்ட கையுடன், முடிச்சை எப்படி அவிழ்பதென்று, அவர் நெட்டில் ப்ரௌஸ் செய்து கண்டுபிடித்து ரயில் வந்து மோதுவதற்குள் தப்பிப்பாராம்.

    என்ன ஒரு மூளை!! இந்த விளம்பரத்தை யோசித்தவனுக்கு. அவனை இதே மாதிரி தண்டவாளத்தில் கட்டிவச்சிட்டு, முடிஞ்சா தப்பிச்சுக்கோ அப்படின்னு சொல்லிட்டு போயிடனும்.

    இதே டைப்பில் இன்னும் சில ரிலைன்ஸ் 3G விளம்பரங்கள் உள்ளன.

    அந்த வீடியோவை பார்த்து வியப்படையுங்கள்.


      
    பிசில் உட்கார்ந்து மிகவும் பயந்து பயந்து, பேஸ்புக் பார்க்க வேண்டி இருக்கா? கவலையே படாதிங்க.

    இந்த மாதிரி கஷ்டப் பட்டு, பேஸ்புக் பார்ப்பவர்களின் நலன் கருதி, சில மாதங்களுக்கு முன்பே உங்களுக்காகவே உருவாக்கி, ஒரு வெப்சைட்டை வெளியீட்டு இருக்காங்க .

    http://www.hardlywork.in/

    வெப்சைட் பெயரே கலக்கலாக இருக்குல்ல. உள்ளே போகும் முன், ஒரு மெசேஜ் காண்பிக்கிறது. 

    "Okay hang in there you little corporate warrior you"

    இதை விட உங்களை யாராவது கலாய்க்க முடியுமா?

    இந்த வசதி தற்போது ட்விட்டருக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

    என்ன, ஒரே ஒரு பிரச்சினை! நீங்கள் எல்லா அப்டேட்களையும், பார்க்க மட்டுமே முடியும். Reply பண்ணவோ, கமெண்ட் பண்ணவோ முடியாது.

    கூடிய சீக்கிரம் கூகிள் பிளாகுக்கு இந்த வசதியை கொண்டு வந்து விட்டால் பரவாயில்லை. ஹீ! ஹீ!




    ங்காத்தாவை எனக்கு நிஜமாய் பிடிக்கவில்லை. சும்மா வெட்டி பந்தாவுக்காக எல்லாம் சொல்லவில்லை. பிளாக்கிலும் மங்காத்தாவை இதுவரை யாரும் கடுமையாய் விமர்சித்து, நான் பார்க்கவில்லை.

    எல்லோருக்கும் அஜீத் ரசிகர்களின் மேல், அவ்வளவு "பய" பக்தியா? எனக்கும்தான்.

    படத்தை விட, படத்தில் அஜீத் கெட்டவனாய் நடித்தது பயங்கரமாய் பேசப் படுகிறது. என் ஆபிசில் அருகில் உட்கார்ந்திருக்கிற பெண் "கடைசியில் அட்லீஸ்ட் த்ரிஷாவுடன் சேர்ந்து சந்தோசமாய் வாழ்வது போல யாவது முடித்திருக்கலாம்." என்றார்.

    நம் தமிழ் மக்கள் எல்லோரும் அவ்வளவு நல்லவர்களா?
    நம்மை சுற்றி நல்லது மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறதா?

    நடிகர்களை எல்லாம் தெய்வங்களாக நினைக்கும் நாட்டில், இதை விட வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? நம் மக்கள் உண்மையை ஏற்று கொள்ளவே மறுக்கிறார்கள். ஹாலிவுட்டை அரைத்து மசாலா போல, மொக்கையாய் பண்ணிய இதுக்கே இப்படி என்றால்? கஷ்டம்! தமிழ் சினிமாவின் எதிர்காலம்.

    "மங்காத்தா, ஹாலிவுட்டுகே சவால் விடும் படம்". 
    "வெங்கட் பிரபு ஒரு சினிமா மாமேதை" 

    அப்படின்னு சும்மா ஹிட்ஸ் வர்றதுக்காக, என்னாலும் அட்டகாசமாய் ஒரு விமர்சனம் எழுத முடியும்.

    அதிலும் இந்த வெங்கட் பிரபுவும், வெற்றி மாறனும், எதோ ரொம்ப நாளாய் கஷ்டப் பட்டு சாப்பிடாமல் சிலை செதுக்கியது போல், தாடி வளர்த்து கொண்டு விடும் சீன்கள் ஓவர். அடிக்கடி தாடியை வேற, தடவிகிட்டே பேசுறது அலம்பலின் உச்சக்கட்டம்.

    நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது!!!


    http://tamil-vaanam.blogspot.com



  • http://tamil-vaanam.blogspot.com

  • [Continue reading...]

    கத்துக்குட்டிகளின்அட்டகாசம்-1. த��ஷ்யந்தி,நிவேதா,காவியப்பிரியா.

    - 0 comments





    இயந்திர வாழ்க்கை - துஷ்யந்தி.

    உழைத்து வாழ்பவன் மனிதன்,
    பிறர் ஆணையிட வாழ்பவன் இயந்திரம்,

    ரசித்து வாழ்பவன் மனிதன்,
    ரசனையைத் தொலைத்து இயங்குவது இயந்திரன்,

    சோர்ந்து, மீண்டும் கிளர்வது மனிதன்,
    சோர்வுறாமல் சொன்ன வேலையைச் செய்வது இயந்திரம்,

    பணம் சம்பாதிப்பதாற்காக இயந்திரமாய்
    மாறிக்கொண்டு இருக்கும் மனிதா...
    கொஞ்சம் ரசனையோடு இளைப்பாறு..,

    ஆறாம் அறிவு எனபது பணம் சேர்ப்பதற்கு மட்டுமல்ல..

      - துஷ்யந்தி
       (பதினொன்றாம் வகுப்பு மாணவி)

    இன்றைய ஸ்டார்:

    "இன்னிக்கு பெரியார் பிறந்த நாள். சாக்லேட் எடுத்துக்குங்க..." என தனக்கு பிடித்த பெரியாருக்காக எமக்கு இனிப்பு வழங்கிய
    நிவேதா. சி (பன்னிரெண்டாம் வகுப்பு)


    வெற்றி.
    பயத்தை செலவளித்தால் பலம் வரவு.
    வேகத்தை செலவளித்தால் விவேகம் வரவு.
    கோபத்தை செலவளித்தால் கோலாகலம் வரவு.
    தோல்வியை செலவளித்தால் வெற்றி வரவு.
      -காவியப்பிரியா.ர.



    http://tamil-shortnews.blogspot.com



  • http://tamil-shortnews.blogspot.com

  • [Continue reading...]

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger