Friday 25 October 2013

ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு ஜெயில் Jail for youth man threats Obama

- 0 comments

ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபருக்கு ஜெயில் Jail for youth man threats Obama

கசபிளான்கா, அக். 26–

மொராக்கோ நாட்டில் உள்ள கசபிளான்கா நகரை சேர்ந்தவர் சவுபியான் (வயது 18). அவர் டூவிட்டர் இணைய தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். அதில், உங்கள் (அமெரிக்கா) அதிபரையும், அவரை சார்ந்தவர்களையும் கொலை செய்வேன்.

அதற்காக அடுத்த மாதம் அமெரிக்கா வருகிறேன் என கூறி இருந்தார். அதை தொடர்ந்து கசபிளான்கா நகரில் நடந்த 2 மாதத்திற்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

அதை தொடர்ந்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு வாலிபர் சவுபியானுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதித்தது.

...

shared via

[Continue reading...]

சாலைகள் சீரமைக்கப்படும் வரை உடலுறவுக்கு தடா : கொலம்பியா மனைவிகளின் நூதன போராட்டம் columbian women follow crossed legs movement for relaying roads

- 0 comments

சாலைகள் சீரமைக்கப்படும் வரை உடலுறவுக்கு தடா : கொலம்பியா மனைவிகளின் நூதன போராட்டம் columbian women follow crossed legs movement for relaying roads

லண்டன், அக். 26-

அர்ஜெண்டினா நாட்டில் உள்ள கொல்பியா மாகாணத்தின் பார்பகோஸ் பகுதியில் உள்ள சாலைகள், வாகனங்கள் செல்ல லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால், சாலை விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவசரத் தேவைக்காக நகரில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்றடைய சுமார் 14 மணி நேரம் ஆகிவிடுகின்றது. போகும் வழியிலேயே பல நோயாளிகள் இறந்துப் போகவும் நேரிடுகிறது.

இந்த அவலநிலையை போக்கி சாலைகளை சீரமைத்து தரும்படி பார்பகோஸ் வாசிகள் அரசு நிர்வாகத்திற்கு மனுக்களின் மூலமாகவும் போராட்டங்களின் வாயிலாகவும் இதுவரை நடத்திய அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன.

இதனால், கொதித்துப் போன இப்பகுதியில் வசிக்கும் பெண்கள், நீங்கள் என்ன செய்வீர்களோ.... ஏது செய்வீர்களோ..? எங்களுக்கு தெரியாது. நம் ஊரில் உள்ள சாலைகள் சீர் செய்யப்படும் வரை படுக்கையில் கிட்ட சேர்க்க மாட்டோம் என கணவன்மார்களுக்கு தடை விதித்துள்ளனர்.

கிராஸ்ட் லெக்ஸ் மூவ்மெண்ட் (பின்னிய கால்கள் போராட்டம்) எனப்படும் இதுபோன்ற போராட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டும் இப்பகுதி பெண்கள் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

...

shared via

[Continue reading...]

கற்பழிப்பு வழக்கில் ராஜஸ்தான் முன்னாள் மந்திரி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை Rajasthan ex minister arrested in harassment case CBI action

- 0 comments

கற்பழிப்பு வழக்கில் ராஜஸ்தான் முன்னாள் மந்திரி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை Rajasthan ex minister arrested in harassment case CBI action

ஜெய்ப்பூர், அக். 25-

ராஜஸ்தான் மாநிலத்தல் பால்வளம் மற்றும் கதர்துறை மந்திரியாக இருந்தவர் பாபுலால் நாகர். இவர் 35 வயதுபெண் ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த செப்டம்பர் மாதம் அந்த பெண்ணை தனது பங்களாவுக்கு அழைத்து கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பாபுலால் நாகர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பின்னர் இவ்வழக்கு கடந்த 9-ம் தேதி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் கற்பழிப்பு புகார் தொடர்பாக பாபுலால் நாகரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். தடயவியல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. பின்னர் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.

...

shared via

[Continue reading...]

அமெரிக்காவில் 75 இடங்களில் ரிலீஸாகும் முதல் தமிழ் படம் அஜீத்தின் ஆரம்பம்! Aarambam in america

- 0 comments

அமெரிக்காவில் 75 இடங்களில் ரிலீஸாகும் முதல் தமிழ் படம் அஜீத்தின் ஆரம்பம்!

தமிழ்ப் படங்களுக்கு வெளிநாட்டுகளில் அந்த அளவுக்கு வியாபாரம் இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாய் அங்கும் மார்க்கெட் உருவாகிக்கொண்டு வருகிறது. சிவாஜி, எந்திரன் போன்ற படங்கள் இங்கிலாந்தில் நல்ல கலெக்சனைப் பெற்றன.

அமெரிக்காவில் தமிழ் படங்கள் ரிலீஸாகும் இடங்கள் 20-30 ஆகத்தான் இருக்கும். அதுவும் பெரிய நட்சத்திரங்களின் படம் மட்டுமளே ரிலீஸாகும். தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் நகரங்களில் உள்ள தியேட்டர்களை தேர்ந்தெடுத்து ரிலீஸ் செய்வார்கள்.

சமீப காலமாய் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது ரிலீஸாகவிருக்கும் ஆரம்பம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 75 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யவிருப்பதாக வட அமெரிக்க பகுதியின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முந்தைய சாதனை எந்திரன் படமாகும். தமிழ் – இந்தி இரண்டு மொழிகளிலும் சேர்த்து 85 திரையரங்குகளில் ரிலீஸானாலும் தமிழில் மட்டும் 63 இடங்களில் ரிலீஸாகியிருந்தது. அதைத் தாண்டி இப்போது ஆரம்பம் 75 இடங்களில் ரிலீஸாகவிருக்கிறது.

விஜய் நடித்த தலைவா படம் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 54 இடங்களில் ரிலீஸானது.

The post

[Continue reading...]

தீபாவளிக்கு துணி–நகைகள் வாங்க போறீங்களா?: போலீசார் சொல்வதை கொஞ்சம் கேளுங்க Diwali clothes jewelry buy Are going to

- 0 comments

தீபாவளிக்கு துணி–நகைகள் வாங்க போறீங்களா?: போலீசார் சொல்வதை கொஞ்சம் கேளுங்க Diwali clothes jewelry buy Are going to

இதோ..தீபாவளி நெருங்கி வந்து விட்டது. இன்னும் சரியாக ஒரு வாரம்தான். ஜாலிதான்... புத்தாடைகள் தான், பலகாரம் தான்..படார்.. படார்... பட்டாசுகளை கொளுத்த வேண்டியது தான்.

தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே பொதுமக்கள் பலர் புத்தாடைகள், நகைகள் வாங்கி தயாராக வைத்திருந்தாலும், இன்னும் மீ(பா)திபேர் இந்த ஒரு வாரத்தில் தான் கடைகளுக்கு படையெடுப்பாங்க!

பெரிய...பெரிய ஜவுளிக் கடைகள் நிரம்பி உள்ள ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் காலையில் இருந்து இரவு 10 மணி வரை மக்கள் தலைகளாகத்தான் தென்படுகிறது. ஜனங்க நடந்து போகக்கூட முடியாத அளவுக்கு நெருக்கடி.

ஈரோடு மாநகர் பகுதி மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் மக்கள் அலை..அலையா... வந்த வண்ணம் உள்ளனர். தங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்ட துணிமணிகளை உவகையுடன் செலக்ட் செய்து எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி கூட்டத்தோடு புகுந்து திருட்டு ஆசாமிகளும் தங்கள் கைக்கு கிடைச்சதை சுருட்டிக்கிட்டு போக தயாராக இருக்காங்க. மக்கள் அசந்த நேரமா... பார்த்து நகை–பணம் மற்றும் பொருட்களை அபேஸ் செய்திடுவாங்க.

இதனால் பொதுமக்கள் நலன் மீதும் அவர்களின் பொருட்கள் களவு போகாமல் இருக்க அக்கறையின் பேரிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் பகலும்–இரவிலும் ஈடுபட்டு உள்ளார்கள்.

மேலும் பொதுமக்கள் பொருட்கள் வாங்க வரும் போது விழிப்புணர்வுடன் இருக்க எச்சரிக்கை நோட்டீசுகளையும் போலீசார் பொது மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறார்கள்.

புது துணிகள், நகைகள் வாங்க வரும் மக்கள் தங்களின் நகை–பணத்தை பார்த்து கொள்ள வேண்டும். பஸ்சில் வரும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி உங்கள் கவனத்தை திசை திருப்பி திருட வாய்ப்புள்ளது, கவனமாக இருக்கணும்.

திருடர்கள் உங்கள் அருகிலேயே இருந்து கொண்டு அசுத்தமான பொருட்களை தடவி கவனத்தை திசை திருப்புவார்கள் ரொம்ப கவனம்.... என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் திருட்டு ஆசாமிகள் 'டிப்–டாப்பாக' உடையணிந்து கொண்டு போலீஸ் என கூறி திருடர்கள் வர இருப்பாங்க, உங்கள் நகையினை கழற்றி கொடுங்க... காகிதத்தில் மடித்து தருகிறேன்.. என கூறி பாதுகாப்பு செய்வது போல நடிப்பாங்க...ரொம்ப உஷாராக இருக்கனும். அதே போல் திருட்டு பொம்பளைங்க பஸ்சில் கையில் குழந்தையை வைத்து கொண்டு, குழந்தைக்கு உட்கார இடம் கேட்பது போல் கவனத்தை திசை திருப்பி நகை– பணத்தை திருடிக்கிட்டு போயிடுவாங்க... கவனம் தேவை.

பணத்தை கீழே போட்டு இதோ..பாருங்க உங்கள் பணம் கீழே கிடக்கிறது என்பார்கள்.. அந்த பணத்துக்கு ஆசைப்பட்டு உங்கள் பணத்தை பறி கொடுத்து விடாதீங்க... என்றும் போலீசார் அறிவுரை கூறி உள்ளனர்.

என்ன...நீங்க இன்னிக்கு தீபாவளி துணிகள்–நகைகள் வாங்க போறீங்களா...? போலீசார் சொல்வதை கொஞ்சம் கேளுங்க!

...

shared via

[Continue reading...]

இந்திய கோடீசுவரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம் india rich man list mukesh ambani first place

- 0 comments

இந்திய கோடீசுவரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம் india rich man list mukesh ambani first place

மும்பை, அக். 25–

இந்திய கோடீசுவரர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த ஹரூன் இந்தியா ரிச் லிஸ்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பண வீக்கம் அதிகரிப்பு காரணமாக இந்திய கோடீசுவரர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது அந்த பட்டியல் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்திய கோடீசுவரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வரும் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானிக்கு கடந்த ஆண்டு 2 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. என்றாலும் அவர் 18.9 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் இருக்கிறார்.

லண்டனில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் 15.9 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 2–வது இடத்தில் உள்ளார். திலீப் சங்வி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

விப்ரோ நிறுவனத்தின் அஜீம் பிரேம்ஜி 12 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 4–வது இடத்திலும், எச்.சி.எல். நிறுவனத் தலைவர் சிவ் நாடார் 8.6 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 5–வது இடத்திலும் உள்ளனர். தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா 8.4 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 6–வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆதிகோத்ரேஜ் (8.1 பில்லியன் டாலர் சொத்து) 7–வது இடம், பலோன் ஜி மிஸ்திரி (8 பில்லியன் டாலர்) 8–வது இடம், ரவி ரூயா (7.6 பில்லியன் டாலர்) 9–வது இடம், சுனீல் மிட்டல் (7.3 பில்லியன் டாலர்) 10–வது இடத்திலும் இருக்கிறார்கள்.

நம்பர்–ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி பட்டியலில் பின்தங்கி விட்டார். அவருக்கு 11–வது இடமே கிடைத்துள்ளது.

...

shared via

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger