Tuesday 15 November 2011

26 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்து சிக்கிய கிரிக்கெட் வீரர் தற்கொலை!

- 0 comments
 
 
 
இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் எழுத்தாளருமான பீட்டர் ரோபக் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. ஹோமோ செக்ஸ் பழக்கம் கொண்ட ரோபக், ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 26 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்து கைது செய்ய போலீஸார் வந்ததால் பயந்து போய் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பீட்டர் ரோபக். இவர் பிரபலமான கிரிக்கெட் எழுத்தாளர் மற்றும் டிவி வர்னணையாளர் ஆவார். ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர். இங்கிலாந்தின் சோமர்செட் அணியில் விளையாடியுள்ளார். அப்போது மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸ்குக்கு எதிராக இனவெறியுடன் இவர் செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன.
 
கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் எழுத்தாளராக மாறினார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் தங்கியிருந்தபோது அங்குள்ள ஹோட்டலின் 6வது மாடியிலிருந்து கீழே குதித்து விட்டார். இதில் அவர் உயிரிழந்தார்.
 
அவரது மரணம் குறித்த மர்மம் தற்போது விலகியுள்ளது. பீட்டர் ரோபக் ஒரு ஹோமோ செக்ஸ் பேர்வழி ஆவார். ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 26 வயது மாணவனிடம் அவர் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாணவன் போலீஸில் புகார் கூறியிருந்தார். இதையடுத்து பீட்டர் ரோபக்கை விசாரிப்பதற்காக போலீஸார் ஹோட்டலுக்குச் சென்றனர். இதனால் அச்சமடைந்த அவர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து விட்டதாக அவரது நண்பரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வர்னணையாளருமான ஜிம் மாக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
 
கைது நடவடிக்கையிலிருந்து தப்பும் வகையில் தற்கொலை முடிவை பீட்டர் எடுத்து விட்டதாக மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். இத்தகவலை போலீஸார் தன்னிடம் கூறியதாக மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில், ஜிம்பாப்வேயைச் சேர்ந்த 26 வயது மாணவருடன் தகாத முறையில் நடந்து கொண்டார் பீட்டர் ரோபக். இதையடுத்து நாங்கள் அங்கு சென்று அவரைக் கைது செய்ய முயன்றோம். ஆனால் எங்களிடமிருந்து தப்ப பீட்டர் ரோபக் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவத்திற்கு முன்புதான் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் ரோபக். தான் ஒரு இக்கட்டான நிலையில் இருப்பதாகவும், ஒரு வக்கீலின் உதவி தேவை என்றும் என்னிடம் அவர் கூறினார்.அவரது குரல் மிகவும் பதட்டமாக இருந்தது என்றார் மேக்ஸ்வெல்.
 
55 வயதான ரோபக், சோமர்செட் அணியின் நீண்ட கால தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர். 80களில் இந்த அணிக்காக அவர் ஆடிக் கொண்டிருந்தார். தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டிகளைக் கவர் செய்வதற்காக அவர் கேப்டவுன் வந்திருந்தார்.
 
மேக்ஸ்வெல் மேலும் கூறுகையில்,எனக்குப் போன் செய்தவுடன் நான் ஹோட்டலுக்கு விரைந்தேன். ஆனால் அங்கு அதற்குள் போலீஸார் வந்திருந்தனர்.அவர்கள் என்னை ரோபக்கை சந்திப்பதற்கு ஆரம்பத்தில் அனுமதிக்கவில்லை. பின்னர்தான் அனுமதித்தனர். பிறகு நான் போய் ரோபக்கைப் பார்த்து விட்டு வெளியேறினேன். அதற்கு அடுத்த ஒரு நிமிடத்தில்தான் அவர் மாடியிலிருந்து குதித்து விட்டார்.
 
ரோபக்கின் தற்கொலைக்கு வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை. கைது நடவடிக்கையிலிருந்து தப்பவே அவர் தற்கொலைக்குப் போய் விட்டார். மிகவும் பயந்த நிலையில் இருந்தார் ரோபக்.
 
அவர் மிகத் திறமையானவர். நல்ல எழுத்தாளர். நினைத்தவுடன் அவரால் 1000 வார்த்தைகளை எழுத முடியும். நல்ல வர்னணையாளராகவும் அவர் விளங்கினார். ஏபிசி நிறுவனத்திற்காக சிறப்பாக செயல்பட்டார். பாசத்தையும் வெளிக்காட்டக் கூடியவர். ஆனால் அவருக்குள் இப்படி ஒரு சிக்கல் இருந்திருக்கிறது என்றார் மேக்ஸ்வெல்.



[Continue reading...]

22 ஆண்டுகளை நிறைவு செய்த சச்சின் (வீடியோ)

- 0 comments
 
 


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், தனது 22வது ஆண்டை இன்று நிறைவு செய்தார் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்.

சர்வதேச போட்டிகளில் விளையாட வந்து 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் சச்சின். கடந்த 1989ம் ஆண்டு இதே நாளில் 16 வயது இளம் பாலகனாக கராச்சி தேசிய ஸ்டேடியத்திலும், தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையிலும் அடியெடுத்து வைத்தார் சச்சின். தற்போது தனது 38வது வயதில் 182 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15 ஆயிரத்து 48 ரன்களும், 453 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 ஆயிரத்து 111 ரன்களும் எடுத்துள்ளார்.


சாதனை நாயகன் சச்சின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்சமயம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக நாட்கள் விளையாடியவர்கள் வரிசையில் 9வது இடத்தில் உள்ளார் சச்சின்.







[Continue reading...]

போதி தர்மரும், நாராயண் குருக்களும்… -யாரை யார் சுட்டது?

- 0 comments
 
 

அவங்களை பார்த்து இவங்களா? இல்ல, இவங்களை பார்த்து அவங்களா? என்று குழம்ப போவது ரசிகன்தான். இப்படி ரசிகர்களை குழப்பப் போகிற படம் செப்டம்பர் 19. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து சில ஆல்பங்களை இயக்கியிருக்கும் பரத் பாலாவின் அடுத்த படம்தான் இந்த செப்டம்பர் 19. (செம்மொழியான தமிழ் மொழியாம் ஆல்பமும் அண்ணாத்தே கைவண்ணம்தான்) தென்னக மொழிகள் எல்லாவற்றிலும் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் பரத் பாலா.

சரி. முதல் வரிக்கு வருவோம். இந்த படத்தின் கதையிலும் போதி தர்மர் போல ஒரு கேரக்டர் வருகிறது. இதில் நடிக்கதான் முதலில் கமல்ஹாசனை அணுகியிருந்தாராம் இந்த பரத் பாலா. கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் எழுத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் முதலில் நடிக்க சம்மதித்த கமல், ஆங்காங்கே சில திருத்தங்களை கூற, முதல் திருத்தமாக கமலையே தூக்கிவிட்டார்கள் படத்திலிருந்து.

இப்போது அஜய் தேவ்கான் நடிப்பில் இந்த படத்தை தொடர திட்டமிட்டிருக்கிறார்கள். இவருடன் அசினும் நடிக்கிறார். இந்த கதையின் 'நாட்'டைதான் அரைகுறையாக சுட்டு முருகதாஸ் 7 ஆம் அறிவை உருவாக்கிவிட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது கோடம்பாக்கத்தில். இந்த படத்தில் சூர்யாவுக்கு போதி தர்மர் வேடம். செப்டம்பர் 19 ல் அஜய் தேவ்கானுக்கு நாராயண் குருக்கள் வேடமாம்.

இந்தியாவின் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியரான எம்.டி.வாசுதேவ நாயரின் இந்த படைப்புக்கு தமிழில் வசனம் எழுதவிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இப்படம் வெளிவந்த பின் குறையில்லாத 7 ஆம் அறிவை பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு ஏற்படுமோ என்னவோ?

[Continue reading...]

தம்பி வெட்டோத்தி சுந்தரம்-திரை விமர்சனம்

- 0 comments
 
 

டைட்டில் போட துவங்கியதுமே படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களையும் அறிமுகப்படுத்த ஆரம்பிக்கிறார் டைரக்டர் வடிவுடையான். 'அதோ, டி- ரோவுல நீல சட்டையுடன் உட்கார்ந்திருக்கிறாரே, அவர்தான் அந்தணன்' என்று அறிமுகப்படுத்துவாரோ என்கிற அளவுக்கு அச்சம் வருகிறது. நல்லவேளையாக எடுத்த எடுப்பிலேயே அரிவாள், ரத்தம், வெடிகுண்டு என்று கதைக்குள் போய்விடுகிறார் மனுஷன். அந்த வகையில் நன்றி தோழா…

போலீசும் குற்றவாளிகளும் சேர்ந்து கொண்டு உயிர் பலியாட்டம் நடத்துகிற அந்த முதல் பத்து நிமிடங்கள் முடிந்ததுமே ஜிவ்வென்ற பனிக்காற்றுடன் ஆரம்பிக்கிறது காதல் எபிசோட். அஞ்சலியின் கதை பேசும் கண்களும், கரணின் ரவைப் பல் சிரிப்புமாக அலாதியான நிமிடங்கள்தான் அது. பஸ்சில் டிக்கெட்டுக்கு பணம் எடுக்கும் கரண் தனது ஸ்பெஷல் ஒரு ரூபாய் நாணயத்தை தவறவிட, அது கரெக்டாக அஞ்சலியின் ஜாக்கெட்டுக்குள் தஞ்சம் புகுகிறது. அது போதாதா காதல் பற்றிக் கொள்ள? ஒரு கட்டத்தில் இந்த அஞ்சலி யாருடைய மகள் என்பதை காட்டுகிறார்கள். நமக்கு ஜிவ்வென்கிறது. தேன் கூட்டுக்குள் கையை விட்ட கரணும், அதுவரை தேனாகவே வழிந்த அஞ்சலியும் என்னவானார்கள்? விறுவிறுப்பான இரண்டாம் பாதி.

வெற்றிலைச்சாறை வேட்டியெல்லாம் துடைத்த மாதிரி ஆங்காங்கே ரத்தக் கறையுடன் நகர்கிறது படம். முடிவில் 'உன்னை ராணி மாதிரி பார்த்துக்கிறேன்' என்று வாக்குறுதி கொடுத்த கரண் என்ன முடிவெடுத்தார் என்பதுதான் கண்ணீர் வரவழைக்கும் க்ளைமாக்ஸ்.

கரணின் கேரியரில் இது முக்கியமான படம். எவ்வளவு திணித்தாலும் சுமக்கிற அளவுக்கு தோள் பலமும் கொண்டவராச்சே! பல காட்சிகளில் அநாயசம் தெரிகிறது. அதிலும் சிலுவையிடம் பேச வருகிற அந்த காட்சியில் அவரது சாதுர்யமான டயலாக்கும், யதார்த்தமான பாடி லாங்குவேஜும் அருமை. தன்னையறியாமல் தவறுக்கு பிள்ளையார் சுழி போடும் அந்த லாரி சேசிங் காட்சிக்கு தியேட்டரே ஸ்பீடா மீட்டராகிறது. அவ்வப்போது எம்ஜிஆர் மாதிரி இமிடேட் பண்ணுவதுதான் பொருந்தலேங்க பிரதர்.

அஞ்சலியின் ரசிகர் மன்ற எண்ணிக்கை இந்த படத்திற்கு பிறகு இன்னும் கூடலாம். 'ஹோய்… அந்த குட்டி சுவத்துல உட்காருவதை விட்டுட்டு என்னை லவ் பண்ணலாம்ல' என்று ஒரு மின்னலை வீசிவிட்டு எஸ்கேப் ஆகிற அழகுக்கு பஞ்சுமிட்டாயாக உருகுவான் ஒவ்வொரு ரசிகனும். நடிக்கவும் நிறைய ஹோப் தருகிறார்கள் இவருக்கு. கூடவே ஒட்டி திரிந்த அந்த தோழி (யாருங்க அது, தனியா ஒரு படமே கொடுக்கலாம் போலிருக்கு) அவரது அப்பாவாலேயே வெட்டிக் கொல்லப்படுவதை கண்டு பொங்குகிறாரே, அந்த கோழிமுட்டை கண்களில் அப்படியொரு கொள்ளிக்கட்டை அனல்.

அப்புறம் நமது கவனத்தை ஈர்ப்பது இருவர். ஒருவர் படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ். இன்னொருவர் 'சித்தப்பு' சரவணன். பருத்தி வீரனுக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம் இது. உடம்பெல்லாம் கவரிங் நகையோடு பில்டப் கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். காமெடி அநாயசமாக வருகிறது இவருக்கு. இனிமேலாவது ஒரு கை பார்க்கலாமே தலைவா?

சிலுவை(யை) என்ற மிகப்பெரிய கேரக்டரை சுமந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ். அந்த வட்டாரத்துக்கேயுரிய கோபத்தையும், கூர்மையையும் அப்படியொரு வேகத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார் மனுஷன். ஏதோ வில்லன் என்பதற்காகவே இவரை கத்தி வீச வைக்காமல், காரண காரியத்தோடு உலவ விட்டிருக்கிறார் டைரக்டரும். இந்த புதிய வில்லனுக்கு இனிமேல் நிறைய படங்கள் கிடைக்கலாம்.

ஒரு அழுத்தமான படத்தில் வசனத்தின் வேலை அபாரமானது. அதை உணர்ந்து முழங்கியிருக்கிறார் பா.ராகவன். படித்தவனுக்கு வேலை கிடைக்கலைன்னா இந்த சமுதாயம் பாழாப் போயிடும் என்று அனல் கக்குகிற அவரது பேனா, ரொமான்ஸ் காட்சிகளில் ஐஸ்கிரீமை வழிய விடுகிற அழகையும் சொல்லியாக வேண்டும்!

இசை- வித்யாசாகர். இப்படி ஒரு டைட்டிலை பார்த்து எத்தனை நாளாச்சு? ஆனால் இந்த ஆவலை ஓரளவுதான் நிறைவேற்றியிருக்கிறார் வித்யா. பச்…

அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் இந்நாளில் அது கிடைக்காமல் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்பதே அபத்தம். அந்த வகையில் அவர் சரவண சுப்பையா அல்ல, 'சறுக்குன' சுப்பையா!

ஒளிப்பதிவாளர், எடிட்டர் என்று அவரவர் வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள். அடங்காத ரவுடிகளை கூட போட்டுத்தள்ளுகிற ஒரே ஆயுதம் காதல்தான்! அதை 'வடிவம்' தப்பாமல் சொல்லியிருக்கிறார் வடிவுடையான்.

தம்பி 'ஹிட்'டோத்தி சுந்தரம்!

[Continue reading...]

‘வின்டர்’ வந்தாச்சு- ‘மார்னிங் ஷோ’வுக்கு முயற்சிக்கலாமே!

- 0 comments
 
 

எதுக்கும் ஒரு கால நேரம் வேண்டாமா என்பார்கள். செக்ஸ் உறவுகளுக்கும் கூட கால நேரம் பார்ப்பவர்கள் உண்டு. சிலருக்கு அதுகுறித்தெல்லாம் கவலையில்லாமல் இருக்கும். எப்போது தோன்றுகிறதோ அப்போது தேவை என்ற மன நிலையில் இருப்பவர்கள் அவர்கள்.

அது ஒருபுறம் இருக்கட்டு்ம். அருமையான 'வின்டர்' நேரத்தில் அதிகாலையில் எழுந்து உறவுக்கு தயாராவது போல ஒரு அருமையான விஷயம் இல்லை என்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள். மிக மிக ரம்மியமான அனுபவமாக இது இருக்கும் என்பது அவர்களின் கூற்று.

வின்டர் எனப்படும் குளிர்காலம்தான் செக்ஸ் உறவுகளுக்கு சரியான காலம் என்கிறார்கள் இவர்கள். அதுவும் காலையிலேயே செக்ஸ் உறவை மேற்கொள்வது மிக மிக சிறப்பான ரொமான்டிக் விஷயம் என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உங்களுக்குள் உறைந்து கிடக்கும் ரொமான்ஸ் மனோ பாவத்தையு அகழ்ந்தெடுத்து அருமையான அனுபவத்தைக் கொடுக்கிறதாம் இந்த குளிர்கால உறவுகள். மேலும் எப்போதும் ஒரே மாதிரியான சூழலிலேயே உறுவு கொண்டு போரடித்துப் போயிருப்பவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பது அவர்களின் கருத்து.

அடுத்த நாள் அதிகாலையில் நடக்கப் போகும் ஆட்டத்துக்காக இரவெல்லாம் கற்பனை செய்து, குதூகலிப்புடன் தூங்கப் போய்,அலாரம் வைத்து அதிகாலையில் எழுந்து உறவுக்குள் நுழைவது நிச்சயம் சிலிர்ப்பான ஒன்றுதான்.

குளிர்காலம் என்றில்லாமல், பிற சமயங்களிலும் கூட அதிகாலை செக்ஸ் உறவு என்பது மனதுக்கும், உடலுக்கும் மிகவும் புத்துணர்ச்சியை அளிக்கும் என்பது செக்ஸாலஜிஸ்ட்டுகளின் கருத்தாகும். அதிகாலையில் நமது மனமும், உடலும் புத்துணர்வுடன் இருக்கும், புதுப் பொலிவுடன் இருக்கும். சிந்தனை தெளிவாக இருக்கும். இந்த சமயத்தில் உறவு கொள்ளும்போது இருவருக்குமே அது இனிமையைக் கூடுதலாக கொடுக்குமாம்.

மேலும் நல்லதொரு தூக்கத்திற்குப் பின்னர் உடல் புதுத் தெம்புடன் இருக்கும் என்பதால் அதிகாலை உறவின் சுகமே அலாதியானது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

அதிகாலையில் உறவு கொள்வதை விட இன்னும் சிறப்பான விஷயம், போர்வைக்குள் இருவரும் செய்யும் முன்விளையாட்டுகள்தான். இந்த முன்விளையாட்டுக்கள் அதிகாலை உறவுக்கு மேலும் வலு சேர்க்கிறதாம்.இரவு நேரங்களில் இருப்பதை அதிகாலையில்தான் இந்த முன்விளையாட்டுக்களுக்கு கூடுதல் 'கிக்' கிடைக்கிறதாம்.

சின்னச் சின்ன தொடுதல்கள், உரசல்களுடன் அதிகாலை விளையாட்டில் இறங்கும்போது அந்த இன்ப உணர்வுகள் நாள் முழுமைக்கும் உங்களை வேகமாக வழி நடத்திச் செல்ல உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அதிகாலையில்தான் பிரம்மன் தனது படைப்புத் தொழிலை மேற்கொள்கிறான் என்பது இந்து மதத்தில் உள்ள ஒரு நம்பிக்கை. அதற்கும், அதிகாலை உறவுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், அதிகாலை உறவுகளுக்கும், மற்ற நேரத்து உறவுகளுக்கும் நிச்சயம் பெரிய வித்தியாசம் உண்டு என்பது செக்ஸ் துறை நிபுணர்களின் கருத்தாகும்.

என்னதான் இன்ஸ்டன்ட் காபி சுவையாக இருந்தாலும் பில்டர் காபி போல வராது இல்லையா, அது போல இதை நினைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

[Continue reading...]

கல்பாக்கம் அணு மின் நிலையமும் வேண்டாம்.. அடுத்த பிரச்சனையை கிளப்பும் பாமக!

- 0 comments
 
 
 
 
உலகிலேயே மிகவும் பழமையான தொழில்நுட்பத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தின் சுற்றுப்புறங்களில் அணுக் கதிர் வீச்சால் எத்தனை பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது. எத்தனை பேர் வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இல்லையேல் இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்து விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.
 
புதிய அரசியல், புதிய நம்பிக்கை, புதிய பாதையில் பாமக என்ற தலைப்பில் பாமம சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள இளைஞர்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் தொடங்கியது. இதில் பேசிய பாமக இளைஞர் சங்கத் தலைவர் டாக்டர் அன்புமணி கூறுகையில்,
 
தமிழகத்தில் உள்ள கட்சிகளில் வித்தியாசமான கட்சியாக பாமக திகழ்கிறது. 44 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை. திராவிட கட்சிகளுக்கு ஒரே மாற்று பாமகதான். மாற்றம் விரைவில் வரும், தமிழகத்தில் பாமக ஆட்சி விரைவில் மலரும்.
 
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாமக உண்மையான வெற்றியை பெற்றுள்ளது. 15 வட மாவட்டங்களில் பாமக பெரும் செல்வாக்கினைப் பெற்ற கட்சியாக உள்ளது. தனித்துப் போட்டி என்று பாமக முதலில் அறிவித்து, அதனை செயல்படுத்தி தனது தனிப் பெரும் செல்வாக்கை நிரூபித்துள்ளது.
 
சினிமா, சாராயம் உள்ளிட்ட போதையில் தமிழக மக்கள் மூழ்கி உள்ளனர். புதிய பாதை, புதிய நம்பிக்கை என்ற வழியில் தமிழக மக்களை பாமக அழைத்துச் செல்லும். தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வி இல்லை. மது விற்பனையை அரசாங்கம் நடத்துகின்றது. ஆனால் அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக தர வேண்டிய கல்வி தனியார் வசம் அளிக்கப்பட்டு தனியார்கள் கொள்ளையடிக்கிறார்கள்.
 
கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியே வளமாகிவிடும் என்று மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி கூறி வருகிறார். ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் கல்பாக்கத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு என்ன வளம் ஏற்பட்டு விட்டது?.
 
உலகிலேயே மிகவும் பழமையான தொழில்நுட்பத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தை பற்றி அப்துல் கலாம் போன்றவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் கல்பாக்கம் அணு மின் நிலையத்தை பற்றி யாரும் கருத்து தெரிவிப்பதில்லை.
 
இந்த அணு மின் நிலையத்தை பார்த்து வெள்ளைக்காரர்களே பயப்படுகின்றனர். கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் சுற்றுப்புறங்களில் அணுக் கதிர் வீச்சால் எத்தனை பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது. எத்தனை பேர் வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
 
இல்லையேல் இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்து விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
 
உர விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியே காரணம். உர விலை உயர்வைக் கண்டித்து வருகிற 21ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
 
பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவ வசதி மற்றும் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இது தீவிர மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.
 
இனிவரும் தேர்தலில் பாமக தனித்து தான் போட்டியிடும். திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. தமிழகத்தில் புதிய அரசியலையும், புதிய மாற்றத்தையும் பாமக ஏற்படுத்தும். தமிழகத்தை பாமகசிங்கப்பூராக மாற்றப் போவதில்லை. தமிழகத்தை போல் நமது ஊர் மாற வேண்டும் என்று சிங்கப்பூர் மக்கள் நினைக்கும் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
 
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் எவ்வளவு நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களில் 50 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கும், 40 சதவீதம் தொழிற்சாலை தொடங்கப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மீதமுள்ள 10 சதவீதம் மற்றவர்களுக்கு வழங்கலாம் என்றார் அன்புமணி.



[Continue reading...]

போதி தர்மரும், நாராயண் குருக்களும்... -யாரை யார் சுட்டது?

- 0 comments
 
 
அவங்களை பார்த்து இவங்களா? இல்ல, இவங்களை பார்த்து அவங்களா? என்று குழம்ப போவது ரசிகன்தான். இப்படி ரசிகர்களை குழப்பப் போகிற படம் செப்டம்பர் 19. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து சில ஆல்பங்களை இயக்கியிருக்கும் பரத் பாலாவின் அடுத்த படம்தான் இந்த செப்டம்பர் 19. (செம்மொழியான தமிழ் மொழியாம் ஆல்பமும் அண்ணாத்தே கைவண்ணம்தான்) தென்னக மொழிகள் எல்லாவற்றிலும் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் பரத் பாலா.
 
சரி. முதல் வரிக்கு வருவோம். இந்த படத்தின் கதையிலும் போதி தர்மர் போல ஒரு கேரக்டர் வருகிறது. இதில் நடிக்கதான் முதலில் கமல்ஹாசனை அணுகியிருந்தாராம் இந்த பரத் பாலா. கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரின் எழுத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் முதலில் நடிக்க சம்மதித்த கமல், ஆங்காங்கே சில திருத்தங்களை கூற, முதல் திருத்தமாக கமலையே தூக்கிவிட்டார்கள் படத்திலிருந்து.
 
இப்போது அஜய் தேவ்கான் நடிப்பில் இந்த படத்தை தொடர திட்டமிட்டிருக்கிறார்கள். இவருடன் அசினும் நடிக்கிறார். இந்த கதையின் 'நாட்'டைதான் அரைகுறையாக சுட்டு முருகதாஸ் 7 ஆம் அறிவை உருவாக்கிவிட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது கோடம்பாக்கத்தில். இந்த படத்தில் சூர்யாவுக்கு போதி தர்மர் வேடம். செப்டம்பர் 19 ல் அஜய் தேவ்கானுக்கு நாராயண் குருக்கள் வேடமாம்.
 
இந்தியாவின் மிக சிறந்த திரைக்கதை ஆசிரியரான எம்.டி.வாசுதேவ நாயரின் இந்த படைப்புக்கு தமிழில் வசனம் எழுதவிருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இப்படம் வெளிவந்த பின் குறையில்லாத 7 ஆம் அறிவை பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு ஏற்படுமோ என்னவோ?

 


[Continue reading...]

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு

- 0 comments
 
 
 
உயிர் கொல்லி நோயான புற்று நோய் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு புற்று நோயை முற்றிலும் அழிக்க கூடிய வீரியமான மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
 
"கேஜி 5" என்றழைக்கப்படும் இந்த அதிசய மருந்து புற்று நோய் பாதித்துள்ள "செல்"களை முற்றிலும் அழிக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து புற்றுநோய் செல்களை தற்கொலை செய்து கொள்ள செய்து அது மேலும் பரவாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது. இந்த மருந்து இன்னும் 5 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
 
இதுகுறித்து விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் செரேஷ் கூறும்போது, இந்த அதிசய மருந்து மாத்திரைகள் வடிவில் வழங்கப்பட உள்ளது. இது மிக சிறிதளவில் மட்டுமே பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் புற்று நோய் மேலும் பரவாமல் முற்றிலும் குணமாக்கும் என்றார்.



[Continue reading...]

தமிழகம் முழுவதும் இனி டீச்சர்களுக்கு 'எஸ்.எம்.எஸ். அட்டென்டன்ஸ்'!

- 0 comments
 
 
 
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் சோதனை ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்எம்எஸ் வருகைப் பதிவு திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
நேற்று நடந்த கலெக்டர்கள் மாநாட்டின்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
 
நேற்று நடந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியின்போது முதல்வர் ஜெயலலிதா 43 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இதுவும் ஒன்று.
 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்,கடலூர் மாவட்டத்தில் எஸ்எம்எஸ் மூலம் ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்யும் முறை சோதனை ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், தங்களது வருகையை தலைமை ஆசிரியருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும். அவர்அதைப் பெற்று யார் யார் வந்துள்ளனர், யார் வரவில்லை என்பதை காலை 9. 30 மணிக்கு (பள்ளி தொடங்கும் நேரம்) உதவித் தொடகக் கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். அவர் அதைப் பெற்று கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்புவார்.
 
மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து இதுபோல வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டு கலெக்டரின் பார்வைக்கு வைக்கப்படும். அவர் அந்தப் பட்டியலைப் பார்வையிட்டு எத்தனை பள்ளிகளில் ஆசிரியர்வருகை முழுமையாக உள்ளது, எங்கு ஆசிரியர்கள் வருகை குறைவாக உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு பள்ளிகளில் ஆசிரியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பார்.
 
இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, ஆசிரியர்களும் உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு வருவது அதிகரித்தது. இதையடுத்து தற்போது இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.



[Continue reading...]

சிம்பிளா பதிவுத் திருமணம்! டாப்ஸி அதிரடி முடிவு!!

- 0 comments
 
 
 
ஆடம்பரமாக திருமணம் செய்வது எனக்குப் பிடிக்காது. சிம்பிளா பதிவுத் திருமணம் செய்து கொள்ளவே நான் விரும்புகிறேன் என்று நடிகை டாப்ஸி கூறியிருக்கிறார். ஆடுகளம், வந்தான் வென்றான் படங்களில் நடித்த டாப்ஸிக்கு விரைவில் திருமணம் என்றும், மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
இதுகுறித்து டாப்ஸி அளித்துள்ள பேட்டியில், "திருமணம் செய்து கொள்வது அப்படியொன்றும் தவறான விஷயமில்லையே. எல்லோருக்கும் இனிமையான ஒன்று. ஒவ்வொருவரும் தங்கள் திருமணம் எப்படி நடக்க வேண்டும் என்று கற்பனை செய்து பார்ப்பது உண்டு. ஆனால் நான் அப்படி யோசிக்கும் நிலையில் இல்லை. இப்போதைக்கு என் திருமணம் நடக்காது. ஆனால் எனக்கு கணவராக வரப்போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வைத்துள்ளேன். அவர் என்னை மட்டுமில்லாமல் என் குடும்பத்தில் உள்ளவர்களையும் புரிந்து செயல்பட வேண்டும். சினிமாவை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை. அதை எதிர்ப்பவராக இருக்கக் கூடாது. திருமணங்கள் ஆடம்பரமாக நடப்பதும் எனக்குப் பிடிக்காது. மணப்பெண்ணுக்கு உடம்பு நிறைய நகைகள் போட்டு பட்டுச்சேலை உடுத்தி மணமேடையில் பல மணி நேரம் உட்கார வைக்கிறார்கள். திருமண மண்டபங்களில் நிறைய கூட்டத்தை அழைத்து வைத்து முகூர்த்தத்தை நடத்துகின்றனர். மணப்பெண் அவ்வளவு நேரம் எப்படித்தான் பொறுமையாக இருக்கிறாளோ புரியவில்லை. என்னை பொறுத்தவரை சிம்பிளாக பதிவு திருமணம் செய்து கொள்ளவே விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.



[Continue reading...]

இன்றைய முக்கிய செய்திகள்

- 0 comments
 
தி.மு.க எம்.பியும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். DMK MP arrested in land grabbing case  தி.மு.க எம்.பியும் நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நில அபகரிப்பு புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் போலீசார்

இன்று பதவி ஏற்கிறார் ஞானதேசிகன்  இன்று பதவி ஏற்கிறார் ஞானதேசிகன்
தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் ஞானதேசிகன் இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். தமிழக காங்கிரஸ்

 கூடங்குளம்-2-ம் கட்ட ஆய்வு தொடங்கியது
கூடங்குளம் அணுஉலை குறித்த‌ மக்களின் சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர்
 உ.பி.யை 4 மாநிலங்களாகப் பிரிக்க மாயாவதி கோரிக்கை
உத்திரபிரதேசத்தை நான்கு மாநிலங்களாக பிரிக்க முதலமைச்சர் மாயாவதி முடிவு செய்துள்ளார்.
 அக்னி - 4 சோதனை வெற்றி
அணு குண்டுகளை 3 ஆயிரம் கி.மீட்டர் தூரம் வரை சுமந்து சென்று தாக்கும்
 புற்றுநோய்க்கு புதிய மருந்து
லட்சக்கணக்கான மனிதர்களுக்கு எமனாக இருப்பது புற்றுநோய் தான். இந்த நோய்க்கு அமெரிக்க விஞ்ஞானிகள்
 இந்தியாவுக்கு யுரேனியம் தர ஆஸ்திரேலியா முடிவு
இந்தியாவுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது. அணு ஆயுத பரவல் தடை
 தினம் 5 பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து இருந்த கடாபி
லிபியா அதிபர் கடாபி செக்ஸ் வெறியராக இருந்தார். அவர் ஆட்சியில் இருந்தபோது தினம்
 `சென்செக்ஸ்' 236 புள்ளிகள் வீழ்ச்சி
நாட்டின் பங்கு வர்த்தகம் தொடர்ந்து நான்காவது தினமாக செவ்வாய்க்கிழமை அன்றும் மந்தமாக இருந்தது.
 பெட்ரோல் விலை குறைப்பு
பெட்ரோல் விலை 2 ரூபாய் 35 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
 தங்கம் விலை மீண்டும் சரிவு
தங்கம் விலை மீண்டும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு
 டிக்ளெர் செய்தது இந்தியா
இந்தியா,மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்
 இந்திய பந்துவீச்சில் சிதறியது மேற்க்கு இந்தியத் தீவுகள்
இந்தியா,மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்
 ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது
பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய்க்கு, மும்பை செவன்

     

www.tamilkurinji.com

[Continue reading...]

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger