Tuesday 15 November 2011

ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறந்தது

 
 
 
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்தது.
 
நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று என்றைக்கு அவரது மாமனார் அமிதாப் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்களின் பார்வை ஐஸ்வர்யா மீது தான். நவம்பர் இரண்டாம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் ரசிகர்களும், மீடியாக்களும் எப்பொழுது குழந்தை பிறக்கும், என்ன குழந்தை பிறக்கும் என்று டென்ஷனாக சுற்றிக் கொண்டிருந்தனர்.
 
இந்நிலையில் ஐஸ்வர்யவை பிரசவத்திற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த 11-11-11ம் தேதி ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என்று ஆளாளுக்கு பந்தயம் கட்டினர். இறுதியில் இன்று காலை அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
 
இது குறித்து அபிஷேக், அமிதாப் ஆகியோர் டுவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
 
அபிஷேக் டுவீட்:
 
எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது!!!!!
 
அமிதாப் டுவீட்:
 
எனக்கு பேத்தி பிறந்திருக்காள் ....
 
வாழ்த்துக்கள் ஐஸ், அபி



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger