Tuesday 15 November 2011

வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்��ு போதைப் பொருள் ��ிநியோகம்!: சரத்



ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இலங்கையிலிருந்து போதைப் பொருள் விநியோகம் செய்யப்படுவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றஞசாட்டியுள்ளார்.

பாதாள உலகக் குழுவின் ஒத்துழைப்பு இன்றி கொழும்பில் அரசியல் நடத்த முடியாது என ஒருவர் தெரிவித்துள்ளார்.

நான் சிறைச்சாலையில் இருந்து கொண்டு அரசியல் செய்தேன், எனது மனைவிதான் பிரசாரங்களை நடத்தினார்.

இவ்வாறு பாதாள உலகக் குழு இன்றி அரசியல் நடத்த முடியாது எனக் கூறுவதற்கு வெட்கமில்லையா, ஆடைகளை உடுத்திக் கொண்டு இந்த மாதிரி கருத்துக்களை வெளியிட முடியுமா?

ஆசியாவின் ஆச்சரியமாவது ஒரு புறமிருக்க ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் போதைப் பொருள் விநியோகம் செய்யும் மையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது.

இதுவே இலங்கையின் ஆச்சரியமாக அமைந்துள்ளது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு அடைக்கலம் வழங்கியதாக தெரிவித்து சரத் பொன்சேகாவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 23ம் திகதி வரையில் இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


http://kathaludan.blogspot.com


  • http://worldnews24by2.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger